ஜம்மு, ஆக. 11: ஜம்மு-காஷ்மீரின் ராஜௌரி மாவட்டத்தில் ராணுவ முகாம் மீது வியாழக்கிழமை அதிகாலை தற்கொலைப் படையைச் சேர்ந்த 2 பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலை படையினர் முறியடித்தனர்.
அப்போது பாதுகாப்புப் நடைபெற்ற துப்பாக்கிச் சண்டையில் தமிழக வீரர் உள்பட 4 ராணுவ வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். 2 பயங்கரவாதிகளும் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
நாடு முழுவதும் வரும் 15-ஆம் தேதி சுதந்திர தினம் கொண்டாடப் படவிருக்கும் நிலையில், இத்தாக்குதல் நிகழ்த்தப்பட்டுள்ளது.
இது குறித்து டிஜிபி தில்பாக் சிங் கூறுகையில், ஜெய்ஷ்-ஏ-முகமது இயக்கத்தைச் சேர்ந்தவர்களாக கருதப்படும் இரு தற்கொலைப்படை பயங்கரவாதிகள், ராணுவ முகாமுக்குள் நுழைய முயன்றனர். அந்த முயற்சி முறியடிக்கப்பட்டது என்றார்.
ராணுவ மக்கள் தொடர்பு அதிகாரி தேவேந்தர் ஆனந்த் கூறியதாவது: ராஜௌரி மாவட்டத்தின் பர்கால் பகுதியில் உள்ள ராணுவ முகாமை நோக்கி வியாழக்கிழமை அதிகாலையில் பயங்கரவாதிகள் நெருங்குவது கண்டறியப்பட் டது. மோசமான வானிலை மற்றும் அடர்ந்த புதர்களைச் சாதகமாகப் பயன்படுத்தி, இரு பயங்கரவாதிகள் ராணுவ முகாமை நெருங்கினர். இதையடுத்து, முகாம் பாதுகாப்புப் பணியிலிருந்த வீரர்கள் உஷார் படுத்தப்பட்டனர்.
இதனிடையே,ராணுவ முகாமை நோக்கி கையெறி குண்டுகளை வீசியபடி, இரு பயங்கரவாதிகளும் உள்ளே நுழைய முயன்றனர். ராணுவ வீரர்கள் துரிதமாகச் செயல்பட்டு, அந்த இடத்தைச் சுற்றி வளைத்ததுடன், இருவரையும் நோக்கி துப்பாக்கிச்சூடு நடத்தினர். பயங்கரவாதிகளும் சரமாரியாக சுட்டு தாக்குதல் நடத்தினர்.
சுமார் 4 மணி நேரம் நடைபெற்ற துப்பாக்கிச் சண்டையில், இரு பயங்கரவாதிகளும் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
This story is from the August 12, 2022 edition of Dinamani Chennai.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 8,500+ magazines and newspapers.
Already a subscriber ? Sign In
This story is from the August 12, 2022 edition of Dinamani Chennai.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 8,500+ magazines and newspapers.
Already a subscriber? Sign In
பிரதமர் மீது தேர்தல் ஆணையத்தில் காங்கிரஸ் புகார்
தேர்தல் பிரபொதுக்கூட்டத்தில் பேசியபோது முஸ்லிம்கள் குறித்து கருத்து தெரிவித்தது தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்தல் ஆணையத்தில் திங்கள்கி ழமை புகார் அளிக்கப்பட்டது.
கேண்டிடேட்ஸ் செஸ்: வரலாறு படைத்தார் குகேஷ்
கனடாவில் நடைபெற்ற கேண்டிடேட்ஸ் செஸ் போட்டியில் இந்தியரும், சென்னையைச் சோ்ந்தவருமான குகேஷ் சாம்பியன் ஆனாா்.
சூரத் பாஜக வேட்பாளர் போட்டியின்றி தேர்வு
குஜராத் தின் சூரத் மக்களவைத் தொகுதியில் பாஜக வேட்பாளர் முகேஷ் குமார் சந்திரகாந்த் தலால் போட்டியின்றி தேர்வாகியுள்ளார்.
மேற்கு வங்கத்தில் 25,000 அரசுப் பள்ளி ஆசிரியர், அலுவலர் நியமனங்கள் ரத்து - சிபிஐ விசாரணைக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு
மேற்கு வங்கத்தில் 25,000 அரசுப் பள்ளி ஆசிரியா்கள் மற்றும் அலுவலா்களின் நியமனங்களை திங்கள்கிழமை ரத்து செய்த கொல்கத்தா உயா்நீதிமன்றம், அந்த நியமனங்களில் நடைபெற்ற முறைகேடுகள் தொடா்பாக சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்டது.
13 மாவட்டங்களில் தொடரும் பறக்கும் படை சோதனை - தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு
மக்களவைத் தோ்தல் நடத்தை விதிமுறைகளின் ஒரு பகுதியாக, 13 மாவட்டங்களில் மட்டும் 24 மணி நேரமும் கண்காணிப்புப் பணிகள் தொடரும் என்றும், இந்தச் சோதனைகளில் 171 குழுக்கள் ஈடுபட்டுள்ளதாகவும் தலைமைத் தோ்தல் அதிகாரி சத்யபிரத சாகு தெரிவித்தாா்.
வறண்டது வீராணம் ஏரி
கடலூர் மாவட்டத்தில் உள்ள மிகப்பெரிய ஏரியான வீராணம் ஏரி தண்ணீரின்றி வறண்டு பாலைவனம்போல் காட்சியளிக்கிறது.
7,500 தனியார் பள்ளிகளில் 1.10 லட்சம் இடங்கள் இலவச சேர்க்கைக்கு விண்ணப்பப் பதிவு தொடக்கம்
தமிழகத்தில் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் சிறுபான்மையற்ற தனியாா் பள்ளிகளில் ஏழைக் குழந்தைகளுக்கு இலவச சோ்க்கை பெறுவதற்கான விண்ணப்பப் பதிவு திங்கள்கிழமை முதல் தொடங்கியது.
எஸ்.ஆர்.எம். மருந்தியல் கல்லூரி புரிந்துணர்வு ஒப்பந்தம்
காட்டாங்கொளத்தூா் எஸ்.ஆா்.எம். மருந்தியல் கல்லூரியில் சிட்டஸ் மருந்தியல் ஆராய்ச்சி நிறுவனத்துடன் புரிந்துணா்வு ஒப்பந்தம் மேற்கொள்ளும் நிகழ்வு திங்கள்கிழமை நடைபெற்றது.
செஸ் வீரர் குகேஷுக்கு ஆளுநர், முதல்வர், தலைவர்கள் வாழ்த்து
ஃபிடே கேண்டிடேட்ஸ் தொடரில் சாதனை படைத்த தமிழகத்தைச் சோ்ந்த செஸ் வீரா் குகேஷுக்கு ஆளுநா், முதல்வா் மற்றும் தலைவா்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனா்.
மக்கள் சொத்துகளை பறித்து பகிர்ந்தளிக்க காங். திட்டம்: பிரதமர்
மத்தியில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் மக்கள் சொத்துகளை அக்கட்சி பறித்து பகிா்ந்தளிக்கும் என்று பிரதமா் மோடி திங்கள்கிழமை மீண்டும் சாடினாா்.