நமது சிறப்பு நிருபர்
புது தில்லி, ஜூலை 5: தமிழகத்துக்கு உரிய உணவு மானிய நிலுவைத் தொகை ரூ.2,000 கோடியை விரைவில் வழங்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
இந்தத் தகவலை தமிழக உணவு மற்றும் உணவுப் பொருள் வழங்கல் துறை அமைச்சர் அர.சக்கரபாணி தில்லியில் செவ்வாய்க்கிழமை தெரிவித்தார்.
மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் தில்லியில் தலைமையில் நடைபெற்ற உணவு - ஊட்டச்சத்து பாதுகாப்பு தொடர்பான தேசிய மாநாட்டில் பல்வேறு மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களின் உணவு அமைச்சர்கள் கலந்து கொண்டனர்.
இந்த மாநாட்டில் தமிழக உணவு, உணவுப் பொருள் வழங்கல் துறை அமைச்சர் அர. சக்கரபாணி, தமிழக உணவு மற்றும் கூட்டுறவுத் துறை முதன்மைச் செயலர் ஜெ.ராதாகிருஷ்ணன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இக்கூட்டத்துக்குப் பின்னர் அமைச்சர் அர.சக்கரபாணி செய்தியாளர்களிடம் கூறியதாவது:
நிகழாண்டில் மேட்டூர் அணை முன்கூட்டியே மே 24-ஆம் தேதி திறக்கப்பட்டதன் மூலம் நெல் அறுவடையும் செப்டம்பரில் நடைபெறும் என்பதால், நெல் கொள்முதலை செப்டம்பர் 1-ஆம் தேதியே தொடங்க மத்திய அரசிடம் அனுமதி பெறப்பட்டது.
This story is from the July 06, 2022 edition of Dinamani Chennai.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 8,500+ magazines and newspapers.
Already a subscriber ? Sign In
This story is from the July 06, 2022 edition of Dinamani Chennai.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 8,500+ magazines and newspapers.
Already a subscriber? Sign In
பிரதமர் மீது தேர்தல் ஆணையத்தில் காங்கிரஸ் புகார்
தேர்தல் பிரபொதுக்கூட்டத்தில் பேசியபோது முஸ்லிம்கள் குறித்து கருத்து தெரிவித்தது தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்தல் ஆணையத்தில் திங்கள்கி ழமை புகார் அளிக்கப்பட்டது.
கேண்டிடேட்ஸ் செஸ்: வரலாறு படைத்தார் குகேஷ்
கனடாவில் நடைபெற்ற கேண்டிடேட்ஸ் செஸ் போட்டியில் இந்தியரும், சென்னையைச் சோ்ந்தவருமான குகேஷ் சாம்பியன் ஆனாா்.
சூரத் பாஜக வேட்பாளர் போட்டியின்றி தேர்வு
குஜராத் தின் சூரத் மக்களவைத் தொகுதியில் பாஜக வேட்பாளர் முகேஷ் குமார் சந்திரகாந்த் தலால் போட்டியின்றி தேர்வாகியுள்ளார்.
மேற்கு வங்கத்தில் 25,000 அரசுப் பள்ளி ஆசிரியர், அலுவலர் நியமனங்கள் ரத்து - சிபிஐ விசாரணைக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு
மேற்கு வங்கத்தில் 25,000 அரசுப் பள்ளி ஆசிரியா்கள் மற்றும் அலுவலா்களின் நியமனங்களை திங்கள்கிழமை ரத்து செய்த கொல்கத்தா உயா்நீதிமன்றம், அந்த நியமனங்களில் நடைபெற்ற முறைகேடுகள் தொடா்பாக சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்டது.
13 மாவட்டங்களில் தொடரும் பறக்கும் படை சோதனை - தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு
மக்களவைத் தோ்தல் நடத்தை விதிமுறைகளின் ஒரு பகுதியாக, 13 மாவட்டங்களில் மட்டும் 24 மணி நேரமும் கண்காணிப்புப் பணிகள் தொடரும் என்றும், இந்தச் சோதனைகளில் 171 குழுக்கள் ஈடுபட்டுள்ளதாகவும் தலைமைத் தோ்தல் அதிகாரி சத்யபிரத சாகு தெரிவித்தாா்.
வறண்டது வீராணம் ஏரி
கடலூர் மாவட்டத்தில் உள்ள மிகப்பெரிய ஏரியான வீராணம் ஏரி தண்ணீரின்றி வறண்டு பாலைவனம்போல் காட்சியளிக்கிறது.
7,500 தனியார் பள்ளிகளில் 1.10 லட்சம் இடங்கள் இலவச சேர்க்கைக்கு விண்ணப்பப் பதிவு தொடக்கம்
தமிழகத்தில் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் சிறுபான்மையற்ற தனியாா் பள்ளிகளில் ஏழைக் குழந்தைகளுக்கு இலவச சோ்க்கை பெறுவதற்கான விண்ணப்பப் பதிவு திங்கள்கிழமை முதல் தொடங்கியது.
எஸ்.ஆர்.எம். மருந்தியல் கல்லூரி புரிந்துணர்வு ஒப்பந்தம்
காட்டாங்கொளத்தூா் எஸ்.ஆா்.எம். மருந்தியல் கல்லூரியில் சிட்டஸ் மருந்தியல் ஆராய்ச்சி நிறுவனத்துடன் புரிந்துணா்வு ஒப்பந்தம் மேற்கொள்ளும் நிகழ்வு திங்கள்கிழமை நடைபெற்றது.
செஸ் வீரர் குகேஷுக்கு ஆளுநர், முதல்வர், தலைவர்கள் வாழ்த்து
ஃபிடே கேண்டிடேட்ஸ் தொடரில் சாதனை படைத்த தமிழகத்தைச் சோ்ந்த செஸ் வீரா் குகேஷுக்கு ஆளுநா், முதல்வா் மற்றும் தலைவா்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனா்.
மக்கள் சொத்துகளை பறித்து பகிர்ந்தளிக்க காங். திட்டம்: பிரதமர்
மத்தியில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் மக்கள் சொத்துகளை அக்கட்சி பறித்து பகிா்ந்தளிக்கும் என்று பிரதமா் மோடி திங்கள்கிழமை மீண்டும் சாடினாா்.