
பெண்களை கவர்ச்சியாகக் காட்டும் ஒரு பாடல், புழுதி பறக்க நாலு ஃபைட், ரசிகர்களை விசிலடிக்க வைக்க பஞ்ச் வசனம் போன்ற அம்சங்கள் இருந்தது. இந்த படம் யாரும் எதிர்பாராத அளவிற்கு ஹிட்டடிக்க, அதன் மூலம் இந்திய அளவில் கவனம் ஈர்த்த நடிகரானார் அல்லு அர்ஜூன். இந்த வெற்றியைத் தொடர்ந்து அதன் இரண்டாம் பாகம் 'புஷ்பா 2 -தி ரூல்' என்ற தலைப்பில் 2022ஆம் ஆண்டு தொடங்கி கிட்டத்தட்ட இரண்டு வருடங்களுக்கு மேலாக படப்பிடிப்பு நடந்தது.
நாட்கள் அதிகரிக்க அதிகரிக்க ரசிகர்களுக்கு படத்தின்மீதான பெரும் எதிர்பார்ப்பு கிளம்பியது. அதற்கேற்ப ஒவ்வொரு மாநிலத்திலும் புரமோஷன் நிகழ்ச்சி நடத்திய படக்குழு,அம்மாநில ரசிகர்களை கவருவதற்கு ஏகப்பட்ட ஷயங்களை செய்தது. குறிப்பாக அல்லு அர்ஜூன் தமிழ்நாட்டில், தமிழ்மொழியை தூக்கிப் பிடித்தும், வட இந்தியாவில் அந்தந்த மாநில மொழிகளைத் தூக்கிப் பிடித்தும் புரமோஷன் செய்தார்.
இதனால் பெரும்பாலான மாநிலங்களில் இப்படத்திற்கு எதிர்பார்ப்பு மேலும் அதிகரித்தது.
தெலுங்கானாவில் படம் ரிலீஸாவதற்கு முந்தைய நாள் (04-12-2024) ஹைதராபாத்தில் உள்ள சந்தியா தியேட்டரில் சிறப்புக் காட்சி திரையிடப்பட்டது. இதில் வழக்கம்போல் ரசிகர்கள் பேனர் வைத்தும், கேக் வெட்டியும், பட்டாசு வெடித்தும் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சிதரும் விதமாக அல்லு அர்ஜூன் திடீரென அங்கு சென்றார். அவரை பார்த்ததும் அனைத்து கூட்டமும் அவரை நோக்கி ஓட... அந்த கூட்ட நெரிசலில் சிக்கி ரேவதி என்ற ரசிகை மயக்கமடைந்தார். அவரை மீட்டு போலீஸார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் அந்த பெண் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
அவருடன் படம் பார்க்க வந்த அவரது 9 வயது மகனும் கூட்ட நெரிசலில் சிக்கி மயக்கமடைந்து கீழே விழ, அவருக்கு அருகிலிருந்த காவல் துறையினர் முதலுதவி கொடுத்து, பின்பு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்பு அவர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார்.
This story is from the December 28-31, 2024 edition of Nakkheeran.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.
Already a subscriber ? Sign In
This story is from the December 28-31, 2024 edition of Nakkheeran.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.
Already a subscriber? Sign In

பிரசாந்த் கிஷோரிடம் எடப்பாடடி டீல்!
'ஹலோ தலைவரே, தமிழகத்தில் இப்போது எல்லாப் பக்கமும் அதிரடி மாற்றங்கள் அரங்கேறியிருக்கிறது.\"

விசாரணை ஏன்ற பெயரில் ரேட்டாதே!,
சென்னை பத்திரிகையாளர் மன்ற வளாகத்தில் பிப்ரவரி 1ஆம் தேதி மாலை பத்திரிகையாளர்கள் போராட்டம் நடைபெற்றது.

வரலாற்றில் இடம்பிடித்த சாரண, சாரணியர் வைர விழா!
தமிழ்நாடு பாரத சாரண, சாரணியர் இயக்க வைரவிழா மற்றும் முத்தமிழறிஞர் கலைஞரின் நூற்றாண்டு பெருந்திரளணி விழா கடந்த ஜன.28-ஆம் தேதி மணப்பாறையில் சிப்காட் வளாகத்தில் மிக பிரமாண்டமாகத் தொடங்கி பிப்3ம் தேதி நிறைவடைந்தது.

மா.செ. நீக்கம்!
சேலம் மாநகர் மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் பதவியிலிருந்து முன்னாள் எம்.எல்.ஏ. ஜி. வெங்கடாசலம் திடீரென்று நீக்கப்பட்ட விவகாரம் மாங்கனி மாவட்ட அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Budget 2025 ஆச்சரியமும் ஏமாற்றமும்!
மூன்றாவது முறையாக பிரதமராகப் பதவியேற்ற மோடியின் 2025-26-ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பிப்ரவரி 1-ஆம் தேதி 11 மணியளவில் தாக்கல் செய்தார். தொடர்ச்சியாக 8-வது முறையாகத் நிர்மலா சீதாராமன் தாக்கல்செய்யும் பட்ஜெட் இது.

பா.ஜ.க.வின் B டீம் விஜய்!
உங்கள் உரையின் சொற்களை சரியான இடைவெளியுடன் திருத்தியிருக்கிறேன்: த.வெ.க. வியூக அமைப்பாளர் ஜான் ஆரோக்கியசாமி, பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த், பொருளாளர் வெங்கட்ராமன் ஆகியோர்களிடையேயான முட்டல், மோதல்களையும், அவர்களை விஜய் கண்டித்ததையும் நக்கீரனிடம் ஏற்கனவே தெரிவித்திருந்த திருச்சி சூர்யாவிடம், த.வெ.க.வில் என்ன நடக்கிறது எனப் பேசியோம்...

விஜய்யுடன் சேர்ந்த : ஆதவ்வைத்த தி! தி.மு.க. கூட்டணியில் திகு.. திகு..!
த.வெ.க.வில் இணைந்த ஆதவ் அர்ஜுனாவை தேர்தல் மேலாண்மைப் பிரிவின் பொதுச் செயலாளராக்கியிருக்கிறார் விஜய். பதவியைக் கைப்பற்றிய கையோடு திருமாவளவனை சந்தித்து ஆதவ் அர்ஜுனா ஆசி பெற்றதும், திருமாவும் ஆதவ்வும் மகிழ்ச்சி யாகப் பேட்டியளித்ததும் தி.மு.க. தலைமையை அதிர்ச்சியடைய வைத்திருக்கிறது.

சாட்டையை சுழற்றிய கோவி.செழியன்!
உயர்கல்வித்துறையில் அதிரடி!

பா.ஜ.க.வசூல் வேட்டை! காரிலேயே விசாரணை நடத்திய அமித்ஷா!
அதனைச் சுட்டிக்காட்டி, இந்த பல்கலையில் படிக்கும் மாணவிக்குத்தான் பாலியல் சீண்டல்கள் நடந்தன என்று அமித்ஷாவிடம் அந்த பா.ஜ.க. நிர்வாகி கூற, அது குறித்தும் அவர் விசாரித்திருக்கிறார்.

ஊடக சுதந்திரத்தைப் பறிக்க போலீசுக்கு அதிகாரமில்லை!
அண்ணா பல்கலைக்கழக மாணவி, ஞானசேகரனால் பாலியல் தொந்தரவுக்கு உள்ளாக்கப்பட்ட வழக்குல எஃப்.ஐ.ஆர். தரவிறக்கம் செய்யப்பட்ட விவகாரம் ஒரு பெரிய சர்ச்சையாக மாறியுள்ளது. தெரிந்த தகவல்களின் அடிப்படையில் பார்த்தீங்கன்னா, எந்தப் பத்திரிகையாளரும் இதுல தவறு செய்யலன்னு தெரியுது. அதற்கு ஆதாரம் கிடையாது.