இந்த கிராமத்தின் பெயர் சோளகனை; ஒரு காலத்தில் வீரப்பன் நடமாடிய கிராமம், ஒரு காலத்தில் அதிரடிப்படைக்கு மறைந்து திரிந்த மக்கள் கூட்டம்தான் இப்போது இப்படியொரு தீர்மானத்தை முன்மொழிந்து வருவாய்த்துறை அதிகாரிகளுக்கு அனுப்பியிருக்கிறார்கள்.
வீரப்பன் இருந்த வரை, ‘அவருக்கு அரிசி பருப்பு கொண்டு போகக்கூடாது; உணவு வழங்கக்கூடாது. கண்ணில் தட்டுப்பட்டால் உடனடியாகத் துப்பு தரவேண்டும். உங்களுக்கு
வேண்டிய சன்மானம் தருகிறோம். உங்கள் ஊரையே சுபிட்சமாக்கி, சொர்க்கபுரியாக்குகிறோம்!’ என்றெல்லாம் சொல்லி ஆசை வார்த்தைகள் கூறிய அதிரடிப்படை போலீஸாரையும், ‘வீரப்பன்கிட்டப் போனியா? அரிசி பருப்பு கொடுத்தியா?’ எனக்கேட்டு சித்ரவதை செய்த டார்ச்சர் முகாம்களையும் நம்மால் மறக்க முடியாது. அதில் முதலாவதாக வருவதுதான் இந்த சோளகனை கிராமம்.
ஈரோடு மாவட்டம், அந்தியூரிலிருந்து பர்கூர் சுமார் 50 கிலோமீட்டர். அங்கிருந்து ஐந்து கிலோமீட்டர் தூரம் துருசணம்பாளையம். இங்கேயிருந்து புலி, சிறுத்தை, யானை, கரடி என வனவிலங்குகள் பகலிலேயே திரியும் காட்டுப் பாதையில் 10 கிலோமீட்டர் சென்றால் எட்டுவதுதான் இந்த சோளகனை. நான்கைந்து வருடங்களுக்கு முன்பு இந்த 10 கிலோமீட்டர் தூரமும் சின்னதாக ரோடு போட்டிருக்கிறார்கள். இப்போது அந்த ரோடு அத்தனையும் ஜல்லிக்கற்களாகக் கிடக்கிறது. கடந்த அதிமுக ஆட்சியில் போட்ட சாலை இது!
அரைகிலோமீட்டருக்கு ஒரு முறை தடுக்கி விழுந்து எழ வேண்டியிருக்கிறது.
This story is from the 25-11-2022 edition of Kungumam.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 8,500+ magazines and newspapers.
Already a subscriber ? Sign In
This story is from the 25-11-2022 edition of Kungumam.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 8,500+ magazines and newspapers.
Already a subscriber? Sign In
இந்தியப் பெண்கள் அதிகம் பாதிப்படைய வப்பம் காரணமா.?
‘‘2010 மற்றும் 2019க்கு இடைப்பட்ட காலத்தில் இந்தியாவில் ஆண்களின் இறப்பைவிட பெண்களின் இறப்பு விகிதம் அதிகமாக இருந்ததை வைத்து பார்க்கும்போது ஒருவேளை இந்தியாவில் அதிகரிக்கும் வெப்ப அலைகள்தான் இந்த இறப்புக்கு காரணமோ என்று எண்ணத் தோன்றுகிறது...’’ என்று சொல்கிறது அண்மைய ஆய்வு ஒன்று.
மீண்டும் கமல்...மீண்டும் அபிராமி
உன்னை விட இந்த உல -கத்தில் ஒசந்தது யாரும் இல்ல...' என்ற 'விருமாண்டி' பாடலைக் கேட்கும்போதெல்லாம் மனசுக்குள் மத்தாப்பாக வந்து போகும் அசத்தல் அழகி அபிராமி.
மகாபலிபுரம் to சென்னை...
நீச்சலில் சாதித்த, ஆட்டிசம் குறைபாடுள்ள சிறுவன்.
2024 Pan India நடிகைகள் இவர்கள்தான்!
ஒரு நடிகை நம்பர் ஒன் இடத்திற்கு செல்வதும், அவரின் சம்பளம் அதிகரிப்பதும் அவர் நடிக்கும் படங்களைப் பொருத்ததுதான்.
இந்தியத் தேர்தல் வரலாறு!
சுதந்திரத்திற்குப் பிறகு இந்தியா பதினேழு தேர்தல்களைச் சந்தித்துள்ளது. இன்று நவீன வசதிகள் வந்தபோதும் தேர்தலை நடத்துவதில் அத்தனை சிக்கல்கள் இருக்கத்தான் செய்கின்றன.
ரூ.1கோடி!
கடந்த சில நாட்களாக டுவிட்டரில் ஒரு விவாதம் பெரும் கவனத்தை ஈர்த்து வருகிறது.
விபீஷணனாக விஜய் சேதுபதி?
எஸ். அப்படித்தான் பேச்சு அடிபடுகிறது. இந்தி வெப்சீரீஸ் ஒன்றில் விஜய் சேதுபதி நடிக்க...
ஐசிசி தர வரிசையில் நம்பர் ஒன் இடம் பிடித்த இந்தியாவின் முதல் வேகப்பந்து வீச்சாளர்!
ஐசிசியின் டெஸ்ட் கிரிக்கெட் தரவரிசைப்பட்டியலில் முதலிடம் பிடித்த இந்தியாவின் முதல் வேகப்பந்து வீச்சாளர் என்ற சாதனையைப் படைத்திருக்கிறார் ஜஸ்பிரித் பும்ரா.
சாண்டில்யன் பேரன்...இசையின் காதலன்!
தமிழ் சினிமாவின் முன்னணி இசை அமைப்பாளர் ஷான் ரோல்டன். இவர் பிரபல எழுத்தாளர் சாண்டில்யன் பேரன். ‘தல கோதும்...’, ‘நான் காலி...’ உட்பட பல ஹிட் பாடல்கள் மூலம் ரசிகர்களால் அதிகம் அறியப்படும் இவர் இப்போது ‘லவ்வர்’ படம் செய்திருக்கிறார். அதில் இடம்பெற்ற ‘தேன் சுடரே...’ பாடல் ட்ரெண்டிங்கில் முன்னிலையில் இருக்கிறது.
முற்பிறவியின் கதை!
‘‘ஆரோக்கியமான வழியில் குழந்தைப் பேறு கொடுக்கக்கூடிய ஒரு கிராமம்... அதைத் தேடி வருகிற ஒரு தம்பதி...’’