CATEGORIES
Categories
கோவிந்த நாம மகிமை!
கலியுகத்தின் கண்கண்ட தெய்வம் திருவேங்கடமுடையானுக்கு ஆயிரம் நாமங்கள் உண்டு. அவற்றுள் கேசவா, மாதவா, நாராயணா, கோவிந்தா, விஷ்ணு, மது சூதனா, திரிவிக்ரமா, வாமனா, ஸ்ரீதரா, ரிஷிகேசா, பத்மநாபா, தாமோதரா எனும் பன்னிரெண்டு நாமங்கள் சிறப்புமிக்கவை.
தொலைந்த பொருளை மீட்டுத் தரும் அரைக்காசு அம்மன்!
புதுக்கோட்டையிலிருந்து 5 கி.மீ. தொலைவில், திருக்கோ கர்ணம் தலத்தில் அமைந்துள்ளது அருள்மிகு பிரகதாம்பாள் சமேத ஸ்ரீ கோகர்ணேஸ்வரர் திருக்கோயில்.
பயிராவது நெல்லா? அரிசியா?
ஸ்ரீராமகிருஷ்ண பரமஹம்சரிடம், "பரிபூரண உண்மையை உணர்ந்து, கடவுளை அறிவதற்குத்தானே மதம்?'' என்று கேட்டான் சீடன் ஒருவன்.
பாதமே பங்கஜம்!
பழகுவதற்கு இனியவர்களுக்கு நண்பர்கள் எண்ணிக்கை அதிகமாய்த்தானே இருக்கும்? அதிலும் நண்பர் மணிகண்டன் மாநகராட்சியில் பொறியாளராகப் பணிபுரிந்தவர். கேட்கவா வேண்டும்...? அவர் எங்கள் பகுதிக்கு வீடு கட்டி வந்த தினத்திலிருந்தே எங்களுக்குள் நல்ல நட்பு வளரலாயிற்று. அவருடைய பெரிய ப்ரியம் சினிமா.
குலம் தழைக்கச் செய்யும் அமாவாசை!
நவராத்திரி பண்டிகைக்கு முன்னோட்டமாக வருவது மஹாளய பட்சம். புரட்டாசி தேய்பிறை பிரதமையிலிருந்து அமாவாசை முடிய இரு வார காலத்தில்தான் தேவி பராசக்தி அசுரர்களை வதம் செய்து உலகத்துக்கு நன்மை விளைவித்தாள்.
மழலைப் பேறு தரும் சந்தான கோபாலகிருஷ்ணன்!
திருச்சி மாவட்டம், லால்குடிக்கு அருகில் உள்ளது இடையாற்றுமங்கலம் அருள்மிகு ஸ்ரீ லெட்சுமி நாராயணப் பெருமாள் திருக்கோயில். மனவேற்றுமை காரணமாகப் பிரிந்து வாழும் தம்பதியரை ஒன்று சேர்ப்பதில் வரப்ரசாதியாகத் திகழும் இத்தல பெருமாள், குழந்தைப் பேறு வேண்டும் தம்பதியரின் குறையையும் தீர்த்து அருளும் சந்தான கோபால கிருஷ்ணனாகவும் அருள்பாலிக்கிறார்!
துரும்பை நகர்த்த முடியாத கர்வம்!
அளவான கூட்டம்...சொற்பொழிவாற்றிக் கொண்டிருந்தார் பேச்சாளர் ஒருவர். மெய்மறந்து கேட்டுக்கொண்டிருந்தது கூட்டம், ஒரே ஒருவர் மட்டும் மண்டபத்தின் தூணில் சாய்ந்து தூங்கி வழிந்து கொண்டிருந்தார். அவ்வப்போது கண் விழித்துச் சொற்பொழிவைக் கேட்பதுபோல பாவனை செய்துவிட்டு மறுபடியும் தூக்கத்துக்குப் போனார். இதை கவனித்த பேச்சாளர், அவரை சோதிக்க எண்ணினார்.
தத்தாத்ரேய அவதார ஸ்வாமி ஸ்ரீ சமர்த்தர்!
அவனை ஆசீர்வதித்த பாலயோகி, தாம் பன்னெடுங்காலமாக புற்றின் அருகில் இருந்த ஆலமரத்தில் வசித்ததாகவும், ஸ்ரீ ந்ருஸிம்ம சரஸ்வதி ஸ்வாமிகளின் அழைப்பின் பேரில், புற்றுக்குள் சென்று அவரிடம் உபதேசம் பெற்றதாகவும், அவர் செய்த ஆன்மிகத் தொண்டினை தாம் தொடரப் போவதாகவும் திருவாய் மலர்ந்தருளினார். அந்த இளம் பாலயோகியே பிற்காலத்தில் ஸ்ரீ ஸ்வாமி சமர்த்தர் என்றழைக்கப்பட்டார்!
நாலம்பலம் யாத்திரை!
ராமாயணத்தில் நான்கு சகோதரர்களிடையே நிலவிய ஒற்றுமை பலரும் அறிந்ததுதான். ஸ்ரீராமருக்குத் துணையாக லஷ்மணன் வனவாசம் சென்றான். பரதனோ, தனக்குக் கிடைத்த ராஜ்ஜியத்தை உதறிவிட்டு, ஸ்ரீராமர் பாதுகையைப் பெற்று ஆட்சி புரிந்தான். சத்ருக்கனன் பரதனுக்கு உறுதுணையாக இருந்தான்.
மனமிருந்தால் மார்க்கம் உண்டு!
'தம்மிடம் உள்ளதில் முடிந்ததை மற்றவர்க்குக் கொடுப்பது, அனைவரும் சுகமாயிருக்க வேண்டும்' என நினைப்பது மட்டுமே புண்ணியம் செய்ய ஒருவருக்குத் தகுதியாகும். ஆம், புண்ணியம் செய்வதற்கு மனம் வேண்டுமே தவிர, பணம், காசு மட்டுமே பிரதானமில்லை. உங்கள் மனம் நல்லதையே நினைக்கட்டும். அதுவும் மற்றவர் களுக்காக இருக்கட்டும். அதுதான் புண்ணியம்.
லிங்க சொரூப ரிஷ்ய சிருங்கர்!
தாம் செல்லும் இடமெல்லாம் மழையைப் பொழியவைக்கும் அரிய வரத்தை சிவபெருமானிடமிருந்து பெற்றவர் ரிஷ்ய சிருங்கர்.
வறுமையிலும் சிவத்தொண்டு புரிந்த நாயனார்!
'கடல்நாகை' எனும் நாகப்பட்டினத்தில் உள்ளது அருள்மிகு நீலாயதாட்சியம்மன் உடனுறை ஸ்ரீ காயாரோகணேஸ்வரர் திருக்கோயில். 'காயம்' என்றால், உடல் என்று பொருள் படும்.
நவகுஞ்சரமாக வந்த ஸ்ரீ கிருஷ்ணன்!
மகாபாரதக் காவியத்தில் வரும் வித்தியாசமான உடலமைப்பைக் கொண்ட பறவையே நவகுஞ்சரம். இது, சேவலின் தலை, மயிலின் கழுத்து, எருதின் திமில், சிங்கத்தின் இடை, பாம்பின் வால், யானை, புலி, மானின் கால்கள், மனிதனின் கையுடன் ஒன்பது உயிரினங்களின் உடல் உறுப்புகள் சேர்ந்த கலவையாகும்.
குளிர்ந்த கடலுக்கு பெயர் அக்னி தீர்த்தம்!
ராமேஸ்வரம் ஸ்ரீராமநாத சுவாமி கோயில் முன்பு உள்ள கடலை, அக்னி தீர்த்தம்' என்கிறோம். குளிர்ந்த தண்ணீருடைய கடலுக்கு சுட்டெரிக்கும் அக்னியின் பெயரைச் சூட்டக் காரணம் உண்டு. ராமபிரானின் மனைவி சீதாதேவி ராவணனால் இலங்கைக்கு கடத்திச் செல்லப்பட்டாள். அவளை மீட்டுக்கொண்டு ராமபிரான் ராமேஸ்வரம் வந்தார்.
சடை மேல் வைத்த தாமரை!
தாயிடம் குழந்தை பேசுவதான உரிமையில், “உன்னுடைய கருணையை எனக்குத் தருவதால் உனக்கு என்ன குறை வந்து விடப் போகிறது?” என்று ஆதங்கப்பட்டார் ஆதிசங்கரர்.
எண்ணத்தின் வலிமை!
வேதாத்திரி மஹரிஷி என்னதான் தறி நெய்து, முழு உழைப்புத் தந்தாலும், பொருளாதாரத்தில் ஏற்றமே இல்லை. இதுவே, புதியதொரு பணிக்கு சுவாமிஜியை உந்தித்தள்ளியது.
ஒரே பாடலில் முழு திருப்புகழ்!
திருஞானசம்பந்தர் மூன்று வயதிலேயே தேவாரம் பாட ஆரம்பித்தார். அவருடைய தந்தை சிவபாத ஹ்ருதயர் மகன் பாடும் தேவாரங்களைப் பாடி மகிழ்வார்.
ஊசிக்குப் பின்னால் நூல் போக வேண்டும்!
முனிவர் ஒருவர் மரத்தடியில் அமர்ந்து, தனது வேட்டியில் இருந்த கிழிசலைத் தைத்துக்கொண்டு இருந்தார். அவர் ஒரு சிவபக்தர். அப்போது சிவ பிரானும், பார்வதியும் வான்வெளியில் வலம்வந்து கொண்டிருந்தனர். மரத்தடியில் அமர்ந்திருந்த முனிவரைக் கண்டதும், உள்ளம் நெகிழ்ந்த பார்வதி, "அந்த மரத்தடியில் அமர்ந்திருக்கும் முனிவரைப் பார்த்தீர்களா?'' என்றார் சிவபிரானிடம்.
பிரம்மன் மனதில் தோன்றிய ஸ்ரீ பங்காரு காமாட்சி!
காஞ்சி ஸ்ரீ காமாட்சியம்மன் ஆலயத்தில் ஐந்து ரூபங்களில் அம்மன் அருள்பாலிப் பதாக ஐதீகம். ஆலயக் கருவறையின் அடிப்பகுதியில் குகையைப் போன்ற அமைப்புடைய பிலத்துவாரத்தில் அருளும் பிலாகாச காமாட்சி, ஆதியில் அந்தர் முகமாக அருள்பாலித்த ஸ்ரீ காமாட்சி, ஆதிசங்கரர் ஸ்ரீ சக்ர ரூபமாகப் பிரதிஷ்டை செய்த சக்ர காமாட்சி, கருவறையில் அருளும் மூலவர் காமாட்சி, கருவறை அம்மனின் வலது புறத்தில் ஊசி முனையில் ஒற்றைக் காலில் தவம் இருக்கும் தபஸ் காமாட்சி என ஐந்து ரூபங்களில் அன்னை ஸ்ரீ காமாட்சி அருள் பாலிக்கிறாள்.
ஸ்ரீ ராமன் ஆராதித்த ஆதிஜெகந்நாதப் பெருமாள்!
ஆழ்வார்களால் மங்களாசாசனம் செய்யப்பட்ட (பாடல் பெற்ற) 108 வைணவ திருப்பதிகள், 'திவ்ய தேசங்கள்' என்று போற்றப்பட்டன. இந்த திவ்ய தேசங்களில் ஸ்ரீ மகாவிஷ்ணு நித்தியவாசம் செய்வதாக ஐதீகம்!
போரில்லா நல்லுலகு வேண்டும்!
வேதாத்திரி மஹரிஷியின் மனவளக் கலை மன்றத்தைச் சார்ந்த கலைஞர்கள், உலக சமுதாய சேவா சங்கத்தின் உறுப்பினர்கள் ஆகியோருக்கு ஆகஸ்ட் மாதம் ஒரு புனிதமான மாதம் என்றே சொல்லலாம். இந்த மாதத்தில்தான் இரண்டு முக்கிய கொண்டாட்டங்கள் நிகழ்கின்றன. முதலாவது ஆகஸ்ட் 14ஆம் தேதி மஹரிஷியின் 110வது பிறந்த நாள். தொடர்ந்து ஆகஸ்ட் 29ஆம் தேதி மனைவி நல வேட்பு நாள் வெகு விமரிசையாகக் கொண்டாடப்படும்.
நர்மதா பரிக்ரமா யாத்திரை!
கிரிவலம் என்பதை அனைவரும் அறிந்திருப் போம். நதிவலம் என்பது பெரும்பாலானோர் அறிந்திராத ஒன்று. மக்கள் தொன்றுதொட்டு பக்தி யோடு வலம் வரும் சிறப்புப் பெற்ற நதி நர்மதை.
திருக்காவளம்பாடி ஸ்ரீ கோபாலகிருஷ்ணன்
'காவளம்' என்றால் தோட்டம்; 'பாடி' என்றால் கன்று பசு மேயும் இடம் என்று பொருள். பசுவுடன் கோபாலனான, மகாவிஷ்ணுவான ஸ்ரீ கிருஷ்ணர் இந்திரனுக்குக் காட்சி கொடுத்த இடம் இது.
கணேசரும் காளமேகப் புலவரும்!
பதினைந்தாம் நூற்றாண்டில் வாழ்ந்த தமிழ் புலவர் காளமேகம். பிறப்பில் வைணவரான இவர் ஸ்ரீரங்கம் கோயில் சமையல்காரராகப் பணிபுரிந்து வந்தவர். இவரது இயற்பெயர் வரதன் என்பதாகும்.
கடவுளைக் காண முடியுமா?
கணவன் மனைவி இருவருக்கும் கடுமையான சண்டை பிணைத்திருக்க வேண்டிய அன்பு தொலைந்துபோனது. 'போயும் போயும் உன்னைக் கல்யாணம் செய்துகொண்டேனே' என்று தலையில் அடித்துக்கொண்டான் கணவன். ‘நான்தான் தெரியாத்தனமாக உன்னைக் கட்டிக்கொண்டு அவதிப்படுகிறேன்' என்று எரிந்து விழுந்தாள் மனைவி.
கடன் தரும் கணபதி!
தமிழகத்தின் விருத்தாசலம் அருகே மணவாள நல்லூரில் அமைந்த கொளஞ்சியப்பர் கோயிலில், 'பிராது கொடுத்தல்' எனும் நிகழ்வு மிகவும் பிரபலம். அந்தப் பிராதில் நியாயம் இருப்பின் அதனை கொளஞ்சியப்பர் தீர்த்து, பிராது கொடுத்த வருக்கு நிம்மதி வழங்குவார் என்பது நம்பிக்கை!
அல்லல் தீர்க்கும் ஐங்கரன்!
ஆணவம் அது யாரையும் விட்டு வைப்ப தில்லை. அதிலும் ஞானக்கல்வி கற்று விட்டாலோ, ஆணவக் கிளைகள் ஆகாயம் அளாவ ஆடுகின்றன. அதை யானைமுகன்தான் வந்து தீர்த்து வைக்க வேண்டும் போலிருக்கிறது.
அம்பாள் திருவடியில் பாமாலை!
அபிராமி பட்டர் வியப்பின் தலைவாயிலில் நிற்கிறார். என்ன காரணம்? பட்டரின் பாமாலைகளை அம்பிகை ஏற்றுக்கொண்டுவிட்டாள்! இதில் என்ன அதிசயம் இருக்கிறது என்கிறீர்களா? பட்டர் பாடப் பாட, அப்பாமாலைகள் அம்பாளின் பாதாரவிந்தங்களில் ஏறிக்கொண்டனவாம்!
அடையாத கதவிருக்கும் சந்நிதானம்!
சென்ற நூற்றாண்டில் சினிமா பாட்டுப் புத்த கங்கள் சேகரிப்பது ஒரு பொழுதுபோக்கு. அப்போதெல்லாம் பத்துப் பைசாவில் தொடங்கி நாலணா, எட்டணா என விற்கப்பட்ட விதவிதமான சினிமா பாட்டுப் புத்தகங்களைச் சேகரித்த அனுபவம் எனக்கு உண்டு.
புத்ர தோஷம் தீர்க்கும் நவநீதக் கிருஷ்ணன்!
'குழலினிது யாழினிது என்பதம் மக்கள் மழலைச் சொல் கேளாதவர்' என்பது வள்ளுவன் வாக்கு. குழந்தை இல்லாதவர்களுக்கு சயன தோஷம், புத்திர தோஷம், சுக்கிர தோஷம், நாக தோஷம் போன்ற பல தோஷங்கள் இருப்பதாக ஜோதிடம் கூறுகிறது. இப்படிப்பட்ட தோஷங்கள் விலக அருமருந்தாகத் திகழ்வது தமிழகத்தின் திருக்கருகாவூர் கர்ப்பரட்சாம்பிகை உடனுறை மாதவிவனேஸ்வரர் மற்றும் கர்நாடகாவில் உள்ள தொட்ட மளூர் ஸ்ரீ நவநீதக்கிருஷ்ணன் திருக்கோயில்கள் ஆகும்.