CATEGORIES
Categories
மரகதமாய் ஜொலிக்கும் மகேஸ்வரன்!
சிவபெருமானுக்கு உலகம் முழுவதும் ஆலயங்கள் உள்ளன. அவற்றில் சிவபெருமான் கல் உள்ளிட்ட பல்வேறு உலோகங்களில் பலவாறாக அருள்பாலிக்கிறார்.
மெய்ப்பொருளாவது நமசிவாயவே!
'நமசிவாய வாழ்க! நாதன்தாள் வாழ்க!' எனத் தொடங்குகிறது மாணிக்கவாசகரின் சிவபுராணம், இதுதான் திருவாசகத்தின் முதல் அடி. மாணிக்கவாசகர் சொல்ல, சிவபிரானே எழுதியது இது. ஒருவரால் இறைவன் சிவபெருமானை நேரில் தரிசிக்க முடியாது. ஆனால், அவனது அருளைப் பெற முடியும். அதற்கான ஒரே வழி, ‘நமசிவய' என்னும் ஐந்தெழுத்தை உள்ளம் உருக உச்சரிக்க வேண்டும்.
பாசாங்குசதாரிணி ஸ்ரீ திரிபுரசுந்தரி!
மஹா பலன் தரும் தசமஹா வித்யா! 4
ஸ்ரீ ராமரின் பாதையிலே...
ராம ராம ராமேதி ரமே ராமே மனோரமே ஸஹஸ்ர நாம தத்துல்யம் ராமநாம வரானனே'
பத்ரபூதியின் மகிமை!
ஆதிசங்கரருக்கும் அபிநவ குப்தருக்கும் ஏற்பட்ட வாதப்போரில் ஆதிசங்கரர் வென்றார். இதனால் கோபம் கொண்ட அபிநவ குப்தர், செய்வினை ஒன்றைச் செய்து ஆதிசங்கரரின் உடலை வருத்தும்படி நோயை உண்டாக்கி விட்டார்.
நாக தோஷம் தீர்ப்பாள் நாக மாரியம்மன்!
வெளிநாட்டுக் கோயில்
உயிரின் ரகசியம்!
வாழ்க வையகம்... வாழ்க வளமுடன்! -24
சகலமும் அருளும் சப்த கன்னியர் பூஜை!
அண்ட, முண்டர்கள் என்ற அரக்கர்களை அழிக்க அவதரித்தவர்களே சப்த கன்னியர். மனித கர்ப்பத்தில் பிறக்காமலும், ஆண், பெண் இணைவில் தோன்றாமலும், அம்பிகை எனப்படும் சக்தியின் அம்சத்திலிருந்து உருவானவர்களே பிராம்மி, மகேஸ்வரி, கௌமாரி, வைஷ்ணவி, வாராஹி, இந்திராணி, சாமுண்டி முதலான ஏழு கன்னியர்கள்.
இனிக்கும் வாழ்வருளும் ஸ்ரீ தேனுபுரீஸ்வரர்!
ஆலய தரிசனம்
அதோ பார்... விட்டோபா போறான்!
அருணை ஜோதி சேஷாத்ரி சுவாமிகள்!-5
நித்ய அமாவாசை ஆலயம்!
தில்லை என்றும் புலியூர் என்றும் அழைக்கப்படும் சிதம்பரத்தில் பதஞ்சலி முனிவரால் புற்று மண்ணால் உருவாக்கப்பட்டது ஸ்ரீ அனந்தீஸ்வரர் திருக்கோயில். இது, சிதம்பரம் ஸ்ரீ நடராஜர் கோயிலை விட மிகவும் பழைமை வாய்ந்தது என்று கூறப்படுகிறது. கருவறையில் ஸ்ரீ அனந்தீஸ்வரர் லிங்கத் திருமேனியராக நாகம் குடைபிடிக்கக் காட்சியளிக்கிறார். தனிச் சன்னிதியில் ஸ்ரீ சௌந்தநாயகி அம்பாள் அருள்பாலிக்கிறார்.
சேக்கிழார் வழிபட்ட ஸ்ரீ நாகேஸ்வரர்!
சென்னைக்கு அருகே குன்றத்தூரில் அமைந்துள்ளது ஸ்ரீ நாகேஸ்வர ஸ்வாமி திருக்கோயில். மிகவும் தொன்மை வாய்ந்த இந்த ஆலயத்தில் அருளும் மூலவரை பிரதிஷ்டை செய்தவர், பெரிய புராணத்தை இயற்றிய சேக்கிழார் என்கிறது வரலாறு.
திருமாலின் திருமேனியான அழகர்மலை!
மலை வளமும் சோலை வளமும், நீர் வளமும் நிரம்பப்பெற்று, அதோடு எம்பெருமான் அழகரின் அருள் வளமும் நிரம்பி வழியும் அழகுத் திருத்தலம் அழகர்மலை. இது, மதுரைக்கு வடக்கே 20 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. அழகர் என்ற திருமால் இக்கோயிலில் குடிகொண்டிருப்பதால் இது அழகர் மலை என்று அழைக்கப்படுகிறது. இம்மலையில் பலவகை மரங்களும், செடி, கொடிகளும் நெருக்கமாக வளர்ந்து பச்சைப் பசேலென பசுஞ்சோலையாக, கண்களுக்குக் குளிர்ச்சியாக இன்பமூட்டுகிறது. .
கற்பூரநாயகியே..!
கோயிலுக்குச் செல்லும் வழிகள் அபாரமானவை. எந்த ஊரிலும் கோயில் வீதிகளில் உள்ள கடைகளின் உரிமையாளர்கள், அங்கே பணிபுரிபவர்கள் கடுஞ்சொற்கள் பேசுவதைப் பெரும்பாலும் தவிர்ப்பார்கள். அப்படித்தான் பலருடைய வாழ்வின் பின்புலத் திரையாக ஆன்மிகம் விளங்குகிறது. காட்சிகள் மாறி மாறி வாழ்க்கை நகர்கிறது.
பித்ரு தோஷம் தீர்க்கும் மாசி மகம்!
மாசி மகம் நன்னாளை, 'கடலாடும் நாள்' என்றும், 'தீர்த்தமாடும் நாள்' என்றும் சொல்வார்கள்.
எம பயம் நீக்கும் நவ நரசிம்மர்!
'நாளை என்பது நரசிம்மனுக்கு இல்லை' என்பர். திருவண்ணாமலை மாவட்டம், சேத்துப்பட்டு வட்டத்தில் அமைந்த, 'தட்சிண அஹோபிலம்' என்று அழைக்கப்படும் ஆவணியாபுரத்தில் நரசிம்மர் எழுந்தருளி அருள்பாலிக்கிறார்.
பிரம்ம முகூர்த்த சிறப்பும் பலன்களும்!
பிரம்ம முகூர்த்த ரகசியத்தைப் பற்றி சாஸ்திரங்கள் பல்வேறு செய்திகளைக் கூறுகின்றன! பிரம்ம முகூர்த்தம் என்பது பிரம்மா எனப்படும் நான்முகனை குறிக்கின்றது. சூரியன் உதிப்பதற்கு 48 நிமிடங்களுக்கு முன் பிரம்ம முகூர்த்தம் ஆரம்பமாகின்றது. படைக்கும் தொழில் புரியும் நான்முகன் தன்னுடைய நாவில் சரஸ்வதியை அமரச்செய்து 24 கலைகளையும் படைத்தார். இரவில் உறங்கும் உயிர்கள் மீண்டும் உடலோடு இணைவது மறுபிறவி என்றால், ஒவ்வொரு நாளும் காலையில் மறுபிறவி பெறுவதை சிருஷ்டி படைத்தல் என்றே சொல்லலாம். இந்தத் தொழிலைச் செய்பவர் பிரம்மா. எனவே, இவரது பெயரால் விடியற்காலைப் பொழுதை பிரம்ம முகூர்த்தம் என்று வைத்துள்ளனர்!
வைரமுடி சேவையில் செல்வநாராயண ஸ்வாமி!
கர்நாடகா மாநிலம், பாண்டவபுராவுக்கு அருகில் திருநாராயணபுரத்தில் அமைந்துள்ளது மேல்கோட்டை ஸ்ரீ செல்வநாராயண ஸ்வாமி திருக்கோயில். இப்பகுதிக்கு அருகில் தொண்டனூரில் பன்னிரெண்டு ஆண்டுகள் தங்கி வைணவம் தழைக்க உதவியுள்ளார் ஸ்ரீ ராமானுஜர்!
அழைத்தது அருணாசலம்!
பஞ்சபூதத் தலங்களில் அக்னி தலமான திருவண்ணாமலை கிருத யுகத்தில் நெருப்பு மலையாகவே இருந்ததாம். திரேதா யுகத்திலோ மாணிக்க மலையாக ஜொலித்ததாம்.
அபவாதம் நீக்கும் பிரம்மலிங்கேஸ்வரர்!
'படைப்புத் தொழிலைப் புரிவதால், தானே உயர்ந்தவன்' என்று ஆணவம் கொண்டிருந்தார் பிரம்ம தேவன். பின்னர், அனைவரை விடவும் உயர்ந்தவர் சிவபெருமானே என்பதை உணர்ந்த பிரம்மா, தாம் கொண்டிருந்த சிவ அபவாதம் தீர, பல்வேறு திருத்தலங்களில் லிங்கப் பிரதிஷ்டை செய்து வழிபாடு செய்யத் தொடங்கினார்.
வாரிசு இல்லாத வருத்தம்!
மஹரிஷிக்கு திருமணம் ஆகி பல ஆண்டுகள் ஆகிவிட்டன. இப்போது அவருக்கு வயது 32. ஆனால், அவருக்கு இன்னும் குழந்தை இல்லை என்ற ஒரு கேள்வி சுற்றம் நட்பிடமிருந்து வரத் தொடங்கியது.
பாண்டவர்க்குக் காட்சி தந்த பஞ்சவரதர்!
காஞ்சிபுரம் மாவட்டம், உத்திரமேரூரில் அமைந்துள்ளது ஸ்ரீ ஆனந்தவள்ளி சமேத ஸ்ரீ சுந்தரவரதராஜ பெருமாள் திருக்கோயில். ஸ்ரீ மகாவிஷ்ணு இக்கோயிலில் அமைந்துள்ள அஷ்டாங்க விமானத்தின் கீழ் ஒன்பது கருவறைகளில் நின்றான், இருந்தான், கிடந்தான் எனும் நின்ற, அமர்ந்த, சயனக் கோலங்களில் சேவை சாதிக்கிறார்.
பீஷ்மர் பாபம் பொசுக்கிய அர்க்கபத்ரம்!
பீஷ்மருக்கு 'தாம் விரும்பிய நேரத்தில், விரும்பியபடி மரணம் அடையலாம்' என வரமிருந்தது. ஆனால், அவர் விரும்பியது போல் மரணம் ஏற்படவில்லை. 'ஏன் என்று மனதுக்குள் கேள்விகள் கேட்டுக்கொண்டிருந்தார் பீஷ்மர். அப்போது அங்கே வந்தார் வேதவியாசர்.
தங்கக் கோயிலில் வெள்ளி கணபதி!
வேலூரை அடுத்த மலையடிவாரத்தில் அமைந்துள்ளது தகதகக்கும் தங்கத்தால் ஆன ஸ்ரீபுரம் ஸ்ரீ லட்சுமி நாராயணி ஆலயம். நீராழிக்கு நடுவில் ஸ்ரீ மகாலட்சுமி திருக்கோயில் கொண்டுள்ளாள். மூலஸ்தான கருவறை விமானம், அர்த்த மண்டபம் ஆகியவை செம்பு கொண்டு அமைக்கப்பட்டு, தங்கத் தகடு அடுக்குகளால் போர்த்தி அழகுற உருவாக்கப்பட்டிருக்கிறது.
மருந்துகளின் தாய் ஸ்ரீ மஹா தாரா தேவி!
ஸ்ரீவித்யாவினுடைய முதல்படியான தசமஹா வித்தையில் முதல் தேவியான காளிஹா தேவி பற்றி சென்ற இதழில் பார்த்தோம். அந்த வகையில் இரண்டாவது தேவியான தாரா தேவி பற்றி இந்த இதழில் பார்ப்போம்!
படிக்காசு அளித்த பெருமான்!
பசுமை நிறைந்த மரங்களும், குளிர்ந்த சோலைகளும் சூழ்ந்த சோழ தேசத்தின் அரிசொல் நதியென்னும் அரசலாற்றின் கரையில், அழகாபுத்தூரில் அமைந்துள்ளது அருள்மிகு அழகாம்பிகை சமேத ஸ்ரீ சொர்ணபுரீஸ்வரர் திருக்கோயில். முற்காலத்தில் புத்தூர், திருப்புத்தூர், செருவிலிபுத்தூர், அரிசிற்கரைப் புத்தூர் போன்ற பெயர்களைக் கொண்ட இப்பதி மூவரால் தேவாரப் பாடல் பெற்ற பெருமையுடையது.
ஞானக்காற்று!
மனத்தின் வேலைதான் என்ன...? உண்மையில் மனம் என்ற ஒன்று இருக்கிறதா? அல்லது அதுகூட மனத்தின் கற்பனைதானா? இந்தக் கேள்வி எத்தனை வியப்பாக விரிகிறது பாருங்கள். ஞானத்தைத் தேடுவதும் அடைவதும் ஒன்றின் அடுத்தடுத்த நிலைகள் இல்லையா?
கேட்ட வரம் தரும் சூரிய சதகம்!
அனைத்துத் தெய்வங்களுக்கும் ஜயந்தி தினம் கொண்டாடும் ஆன்மிக அன்பர்கள், சூரியனுக்கும் ஒரு ஜயந்தி தினத்தைக் கொண்டாடி மகிழ்கிறார்கள். அந்த நாள்தான் ரத சப்தமி, உத்தராயண தை அமாவாசைக்குப் பின்வரும் ஏழாவது நாள் (சப்தமி திதி) ரத சப்தமி என்று போற்றப்படுகிறது. சூரியன் தனது வடக்கு நோக்கிய பயண ஆரம்பத்தில், இந்த சப்தமி திதியிலிருந்துதான் தனது ஒளிக்கதிர்களுக்கு வெப்பத்தை சிறுகச் சிறுகக் கூட்டுகிறான் என்று சாஸ்திரம் கூறுகிறது. இதை அறிவியலும் ஏற்றுக்கொள்கிறது. தை மாதம் முதல் நாள் உத்தராயணம் ஆரம்பித்து விட்டாலும், உண்மையில் ஆதவனின் ரதம் தை வளர்பிறை சப்தமி அன்றுதான் வடகிழக்குத் திசை நோக்கி திரும்புகிறது.
காவல் தெய்வமாக விளங்கும் ஸ்ரீ லக்ஷ்மி நரசிம்மர்!
கர்நாடக மாநிலம், பெங்களூரு நகரத்தின் மத்திய பேருந்து நிலையம் மற்றும் ரயில் நிலையத்தின் அருகே மெஜஸ்டிக் பகுதியில், பாலாபெட் (Balapet) என்ற இடத்தில் அமைந்துள்ளது ஸ்ரீ லக்ஷ்மி நரசிம்மர் திருக்கோயில்.
குரு அளித்த சன்யாஸ் தீக்ஷை!
மனிதப் பிறவி என்பது கிடைத்தற்கரிய பிறவி என்கிறார்கள் மகான்கள். மனிதப் பிறவியின் நோக்கமே தன் கர்மவினை பதிவுகளை அனுபவித்துக் கழித்து தீர்ப்பதுதான். எப்பேர்ப்பட்ட வாய்ப்பு இது? இதனால்தான் தேவர்கள் கூட மனிதர்களைப் பார்த்துப் பொறாமைப்படுகிறார்களாம்.