CATEGORIES
Categories
அந்த அற்புதத் தருணம்!
ஐனவரி, 2005இல் இனி மேக் அப் போட்டு நடிக்கிறது இல்லனு முடிவு செஞ்சேன். 192 படங்கள், பல தொலைக் காட்சித் தொடர்கள் எல்லாம் நடிச்சாச்சு. இனி வேண்டாம்னு முடிவு எடுத்துட்டேன்.
தினந்தோறும் கொண்டாட்டம்!
'கலா சார்தான் முதலில் ஜெயிலர் படம் பார்த்தார். அனியும் நெல்சனும் அவர்கிட்ட படம் எப்படி இருக்குது என்று கேட்டார்கள். அனி, 'சார்... படம் பேட்ட மாதிரி வருமா' என்று கேட்டிருக்கிறார்.
இலக்கற்ற பயணங்கள் 4
சிங்கப்பூரிலிருந்து மூன்று மணிநேர விமானப்பயணத்தில் பாலி தீவைச் சென்று சேரலாம். இந்தோனேசியாவின் 18,100 தீவுகளில் பாலியும் ஒன்று. 18 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தீவுகளில் 6000 தீவுகளில் மட்டுமே மனிதர்கள் வாழ்கிறார்களாம். வழக்கமான கடற்கரைகளிலிருந்து மலைகளும் கடல்களும் இணைந்த நிலப்பரப்புகளைக் கொண்டது பாலி. அதுவே பாலியின் முதன்மையான கவர்ச்சி. மலைகளில் நின்று கொண்டு கடலைப் பார்ப்பதும் கடல் நடுவில் துருத்திக்கொண்டிருக்கும் மனித சஞ்சாரமில்லாத பெரும் பாறைத்திட்டுகளைப் பார்ப்பதும் பெரும் பரவசம் தரும் அனுபவங்கள். பாலி முழுக்க சுற்றுலாவை மட்டுமே நம்பி இருக்கும் நகரம் என்று சொல்லலாம்.
என்னை மாட்டிவிட்டவர் ஏ.ஆர். ரஹ்மான்!
ராஜீவ் மேனன், இந்தியாவின் மிகச் ஒளிப்பதிவாளர்களின் சிறந்த முன்வரிசையில் இருப்பவர். ஆயிரக் கணக்கான விளம்பரப்படங்களை எழுதி இயக்கியவர். திரைப்பட இயக்குநர், வனவிலங்கு புகைப்படக் கலைஞர், செவ்வியல் இசை ஆர்வலர், பாடகர், திரைக்கலை ஆசிரியர், திரைப்பட நடிகர் எனப் பல முகங்கள் கொண்டவர். அவருடன் எழுத்தாளரும் நடிகருமான ஷாஜி சென் நிகழ்த்திய உரையாடலில் பகிரப்பட்ட விஷயங்களின் சுருக்கமான எழுத்து வடிவம் இதோ.
“படம் செத்திருச்சு சார்!”
இயக்குநர் மிஷ்கின் நேர்காணல்
கதை எழுதி 1900 கோடி சம்பாதித்தவர்!
ஆங்கிலக் கதையுலகின் மாஸ்டரான ஜெப்ரே ஆர்ச்சர் The Traitors Gate என்ற தன்னுடைய புதிய நாவலை வெளியிட்டுள்ளார். லண்டனில் ஹாட்சர்ட்ஸ் என்கிற புத்தகக் கடையில் இதற்கான நிகழ்ச்சி நடந்தது. பிரிட்டனில் உள்ள மிக வயதான புத்தகக் கடை இது. 1797இல் இருந்து இயங்குகிறதாம்.
"இயக்குநர் சுதந்திரத்தில் தலையிடாதவர் விஜய் ஆண்டனி!"
'விஜய் ஆண்டனியும் நானும் கல்லூரி காலத்து நண்பர்கள். என் இரண்டாவது படத்தையே அவரை வைத்துதான் இயக்குவதாக இருந்தது. சில சூழல்களால், பத்து ஆண்டுகளுக்குப் பின் இப்போது 'ரத்தம்' படத்தில்தான் ணைய முடிந்தது'.
வெறுப்பை உமிழ்தல்!
இணைய உலகம் ஆப்-கள் என்கிற செயலிகளை முக்கியமாகக் கொண்டு இயங்குகிறது. யூடியூப், ட்விட்டர், பேஸ்புக்... போன்றவை அந்த தளங்களில் தரும் இடத்தில் நாம் பேசுகிறோம்.
பிரச்னையின் தீர்வுதான் முக்கியம்!
யூடியூப் வலைக்காட்சியில் தனக்கென கொண்ட சங்கர், அதை அழுத்தமாக நம்பியே தனி ஆவர்த்தனத்தில் இறங்கியிருக்கிறார்
ட்ரெண்டைப் பிடித்துக்கொண்டு போகிறார்கள்!
பத்து ஆண்டுகளுக்கு முன்னர் சரியாகச் சொன்னால் 2011ஆம் ஆண்டுக்கு முன்வரை டிஜிட்டல் செயல்பாடுகள், நிர்வாகம் ஆகியவற்றைச் செயல்படுத்த முடியவில்லை.
தவிர்க்க இயலாத வீச்சு!
அந்திமழையின் சிறப்புப்பக்கங்களில் இடம்பெறும் தலைப்புகளுக்காக கடும் விவாதங்கள் நடப்பதுண்டு.
இலக்கற்ற பயணங்கள் 3
உலகின் வேறெந்த நகரைக்காட்டிலும் 'மாஸ்கோவும், பீட்டர்ஸ்பர்க்கும் நமக்கு (எனக்கு) ஒரு வகையில் நெருக்கமானவை.
ஒரே இரவில் தொண்ணூறு பக்கங்கள்!
நான் பிறந்த கற்பகநாதர்குளம் ஒரு கடலோரக் கிராமம். தற்போது திருவாரூர் மாவட்டத்தில் அமைந்துள்ளது.
பயணங்களின் வாழ்க்கை!
'வாழ்க்கை ஒரு பயணம்’ என்று தேய் வழக்காய் சொல்லப்படுவதுண்டு.பல தன் வரலாற்று நூல்களின் பெயர்கள் ‘எனது வாழ்க்கைப் பயணம்' என்றோ பாதை என்றோ இருக்கும்.
இப்போதும் அப்பா பணம் அனுப்புகிறார்
உதவி இயக்குநராக இயக்குநராக நீங்கள் எதிர்கொண்ட நெருக்கடிகள் பற்றி?
உடைந்தது கூட்டணி! இடைவேளையா? இறுதிக்கட்டமா?
ஜெயலலிதா மறைவுக்குப் பின் எடப்பாடி பழனிசாமி அதிமுக தலைமையை ஏற்ற பின்னர் தொடங்கிய அதிமுக-பாஜக உறவு, முறிந்துவிட்டதாக அதிமுக அறிவித்தபோது தமிழக அரசியல் அரங்கில் புருவம் உயர்த்தாதோர் யாரும் இல்லை.
கலைஞர் எழுதினால் கரகரவென சத்தம் வரும்!
எனக்கு பதினேழு வயது! பச்சையப்பன் கல்லூரியில் இளங்கலை படித்துக் கொண்டே, சிந்தாதிரிப்பேட்டையில் அண்ணா நற்பணி மன்றத்தை தொடங்கினேன். ஏழை எளிய மாணவர்களுக்கு இலவசக் கல்வி அளிப்பதுதான் மன்றத்தின் பிரதான பணி.
தந்தையின் குரல்!
தொடக்கத்தில் சிறுவயதில் காரைக்குடியில் கலைஞரின் பேச்சைக் கேட்டிருக்கிறேன். என் தந்தையார் இராம சுப்பையா, திமுக தொடங்கியதிலிருந்தே பொதுக்குழு உறுப்பினர்.
கலைஞரின் இகிகை! (Ikigai)
இருந்தவர் கூட்டணிக்கு வந்தார். அணைத்துக் கொண்டார். அரசியல் கைதியாக சிறையில் இருந்தபோது சென்று பார்த்து ஆறுதல் கூறினார்.
சந்திரயான் -3 வெற்றி அந்த 3 பயன்கள்
ஜப்பான் நாடு ஸ்லிம் எனும் விண்வெளித்திட்டத்தைச் செயல்படுத்துகிறது.
எழுத்தாளர் யார் காலிலும் விழக்கூடாது!
நான் ஆறாம் வகுப்பு படிக்கும்போது காலண்டரிலிருந்த ஒரு போட்டோவைக் காட்டி, 'இவர்தான் கலைஞர்’ என்று ஒருவர் சொன்னார். அதன் பிறகு எட்டாம் வகுப்பு படிக்கும்போது விருத்தாசலத்தில் நடந்த தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கலைஞரைப் பார்த்தேன்.
வீடு தேடி வந்த மளிகைப் பொருள்
என் முதல் கவிதைத்தொகுப்பான எஞ்சோட்டுப் பெண் வெளியான போது தலைவரைச் சந்தித்து அதைக் கொடுப்பதற்காகப் போயிருந்தேன்.
செயல் மறந்து வான் மிதந்து
திருநெல்வேலி1965 செப்டம்பர் வாக்கில் 11ஆவது வட்ட தி.மு.க. உட்கிளையாக எம்.ஜி.ஆர் மன்றம் ஆரம்பிப்பது என்று முடிவாயிற்று. நகரச் செயலாளர் நம்பி அண்ணாச்சி தலைமையில் பூர்வாங்கக்கூட்டம் நடந்து முடிந்தது.
மறக்க இயலாக மாட்டுவண்டிப் பயணம்!
ஈரோட்டு குருகுல வாச மாணவர்கள் நாங்கள்.கலைஞர்இளம் வயதிலேயே ஒரு சிறந்த அமைப்பாளராக இருந்தவர். தஞ்சைமாவட்டத்தில் 1946 இல்திராவிட மாணவர் கழக சுற்றுப்பயணங்களில் கலந்துகொள்ளநானும் தந்தை பெரியாரால் அனுப்பப்பட்டேன்.
அவரது வேகத்துக்கு ஈடு கொடுப்பது சவாலானது!
அண்ணா நூற்றாண்டு நூலகம் இரண்டொரு நாளில் தன் திறப்பு விழாவிற்காகக் காத்துக்கொண்டிருந்தது.
"நான் சொன்னதை சமந்தா ஏத்துக்கலை!" - விஜய் தேவரகொண்டா
'என் வாழ்க்கையின் ஒரே மெசேஜ் 'போராடினால் உண்டு பொற்காலம்' என்பதுதான்.
மாவீரமன்னன்!
சென்ற மாத இறுதியில் வெளியான மாமன்னன் மிகப்பெரிய கவனத்தைப் பெற்றது. வடிவேலு, உதயநிதி, பகத் பாசில், கீர்த்தி சுரேஷ் ஆகியோர் முக்கியக் கதாபாத் திரங்களில் நடிக்க ஒரு முக்கியமான பிரச்னையை அழுத்தமாக முன்வைத்துள்ளார் இயக்குநர் மாரி செல்வராஜ்.
ஹாலிவுட்டில் சண்டைக் கலை!
அண்மையில் வெளிவந்திருக்கும் Mission Impossible - Dead Reckoning -part1 படத்தில் டாம் க்ரூஸ் அவரது ஸ்டண்ட் காட்சிகளில் அவரே நடித்திருக்கும் வீடியோக்கள் உலகெங்கும் பரவின. இந்தப் படம் மட்டும் அல்லாமல் பொதுவாகவே டாம் க்ரூஸ் அவரது படங்களில் ஆபத்தான பல ஸ்டண்ட் காட்சிகளை அவரே செய்யும் தன்மை உடையவர். இருந்தாலும் அவருக்கும் ஸ்டண்ட்களில் டூப்கள் உண்டு. அதை அவரே சொல்லியும் இருக்கிறார் (தமிழில் கமல்ஹாஸனும் அவரது ஸ்டண்ட்களில் பலவற்றை அவரே செய்யக்கூடியவர்).
கமலஹாசனும் சில டூப் ரகசியங்களும்
சொல்லலாமா - சொல்லக்கூடாதா என்று தெரியவில்லை. அபூர்வ சகோதரர்கள் கமல் நடித்த இரட்டை வேடங்களில் பெரும்பாலும் கமலே தான் ரிஸ்க் எடுத்து நடித்தார். அவருக்கு பொது வாக டூப் போடுவது பிடிக்காது. ரிஸ்க் என்பது அவருக்கு ரஸ்க் சாப்பிடுகிற மாதிரி. பல இடங்களில் பல தடவை விழுந்து எழுந்து சண்டை காட்சிகள் செய்து எலும்பு முறிந்ததை அவர் உடலே சொல்லும்.
விஜய்யின் அர்ப்பணிப்பும் அஜீத்தின் அக்கறையும்!
எதையும் வெளிப்படையாகப் பேசும் மறைந்த இயக்குநர் ஒருவர் துரத்தல் காட்சி ஒன்றைப் படமாக்கிக் கொண்டிருந்தார். இயக்குநர் சொன்ன காட்சியமைப்பை உள்வாங்கி அந்தப்படத்தின் சண்டைப்பயிற்சி இயக்குநர் ஃபைட்டர்களுக்கு விளக்கிக் கொண்டிருந்தார். படத்தின் ஹீரோ ஓர் ஓரமாக இருந்தார். ஹீரோ போலவே ஆடைகள் போட்டிருந்த இன்னொரு ஃபைட்டர் ஷாட் ரெடி என்றதும் உயரமான இடங்களில் பாய்ந்து ஏறினார்.