Poging GOUD - Vrij
அமைதிக்குப் பரிசு!
Dinamani Tirunelveli
|October 31, 2025
அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் புக்கு அமைதிக்கான நோபல் பரிசு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. கடைசி நிமிஷத்தில் வெனிசுலாவின் எதிர்க் கட்சித் தலைவர் மரியா கொரினா மச்சா டோவுக்கு அறிவிக்கப்பட்டது. அமெரிக்க அதிபர் டிரம்ப்புக்கு பல்வேறு நாடுகளின் அதிபர்களும் பரிந்துரை செய்திருக்கிறார் கள். அதுமட்டுமன்றி, 8 போர்களை நிறுத் தியுள்ளதால் தனக்கு கிடைக்கும் என்று மிகுந்த எதிர்பார்ப்போடு காத்திருந்தார். ஆனால், வெனிசுலாவைச் சேர்ந்த மரியா கொரினா மச்சாடோவுக்கு அந்த வாய்ப்புக் கிடைத்தது.
வெனிசுலா மக்களின் ஜனநாயக உரிமை களுக்காக அயராது உழைத்து வருபவர் மச்சாடோ. சர்வாதிகாரப்போக்கில் இருந்து, ஜனநாயகக் கட்டமைப்பை நோக்கி, அமை தியான மாற்றத்தை எதிர்நோக்கி மரியா போராடி வருவதாக புகழாரம் சூட்டப்பட் டிருக்கிறது. டிரம்ப் உள்ளிட்ட 388 பேர் களின் பெயர்கள் அமைதிக்கான நோபல் பரிசுக்குப் பரிந்துரை செய்யப்பட்டதை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.
வெனிசுலாவின் ஜனநாயகம் மிகவும் ஆபத்தான நிலையில் இருக்கிறது. இங்கு தோட்டாக்கள் வேண்டாம்; வாக்குகள் தான் வேண்டும்; ஜனநாயக முறையில் தேர் தல் நடத்தலாம் என்று 20 ஆண்டுகளுக்கும் மேல் மரியா போராடி வருகிறார். நேர்மை யான சுதந்திரமான தேர்தல் நடத்த வேண் டும். சுதந்திரக் காற்றை சுவாசிக்க வேண்டும் என்ற இவரது போராட்டத்துக்கு, நோபல் பரிசு ஓர் அங்கீகாரத்தைத் தந்திருக்கிறது.
லத்தீன் அமெரிக்காவைச் சேர்ந்த பெண் போராளி - 1967-ஆம் ஆண்டு அக்டோ பர் 7-ஆம் தேதி வெனிசுலா நாட்டின் கராகஸ்லில் பிறந்தவர். அரசியல் மட்டு மன்றி தொழில் துறை பொறியாளராகவும் செயல்பட்டுள்ளார். 2011 முதல் 2014 வரை வெனிசுலா நாட்டின் தேசிய சபையின் உறுப்பினராக இருந்தார். இந்த நாட்டின் ஜனநாயக அடக்குமுறைகளுக்கு எதிராக தொடர்ச்சியான போராட்டங்களை முன் னெடுத்து வருபவர். இதனால், பொது மக்கள் மத்தியில் நற்பெயரை எடுத்து வருகிறார்.
மச்சாடோ கடந்த 14 மாதங்களாக தலை மறைவாக வாழ்ந்து வருகிறார். அவரது உயிருக்கு ஆபத்து இருந்தாலும்கூட, அவர் வெனிசுலாவை விட்டு வெளியேறவில்லை. இது இந்த நாட்டு மக்களின் மத்தியில் அவருக்கு ஒரு பெரும் புகழைச் சம்பா தித்துத் தந்திருக்கிறது. வெனிசுலாவின் ராணுவ ஆட்சி அகற்றப்பட வேண்டும் என்பதற்காக எதிர்க்கட்சிகளை ஒன்று திரட்டி அங்கே ஜனநாயகம் அமைதி வழியில் மலர ஒரு பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறார். ஆகவேதான், இவரை 'இரும்புப் பெண்மணி' என்று அந்த நாட்டு மக்கள் பெருமையோடு அழைக்கிறார்கள்.
வெனிசுலாவின் சர்வாதிகார ஆட்சியாளர் நிக்கோலஸ் மடூரோ வின் அடக்குமுறை ஆட்சியை எதிர்த்துப் போராடி வருகிறார். அச்சுறுத்தல்கள், கைதுகள் மற் றும் அரசியல் துன்புறுத்தல்களை எதிர்கொண்டிருக்கிறார். ஆனா லும், ஆயுதம் இல் லாமலே தங்களது போராட்டம் தொட ரும் என்று துணிச்சலையும், உண்மையை யும் துணைக்கு அழைத்துக் கொண்டு இவரது ஜனநாயகப் போராட்டக் களம் பேசுபொருளாகி இருக்கிறது.
Dit verhaal komt uit de October 31, 2025-editie van Dinamani Tirunelveli.
Abonneer u op Magzter GOLD voor toegang tot duizenden zorgvuldig samengestelde premiumverhalen en meer dan 9000 tijdschriften en kranten.
Bent u al abonnee? Aanmelden
MEER VERHALEN VAN Dinamani Tirunelveli
Dinamani Tirunelveli
உள்ளாட்சி அமைப்புகளுக்கு அதிகாரப் பகிர்வை மறுக்கும் மாநிலங்கள்
பிரதமரின் பொருளாதார ஆலோசனைக் குழுத் தலைவர் கவலை
1 min
November 02, 2025
Dinamani Tirunelveli
கடல் கடந்தும் தமிழ்...
புதுக்கோட்டை மாவட்டத்தில் 1924-இல் பிறந்த முருகு. சுப்ரமணியம் 1950-களில் மலேசியாவுக்குச் சென்றார். மலேசியா, சிங்கப்பூரில் வெளியாகும் தமிழ் நாளிதழ்களில் ஆசிரியராகப் பணியாற்றிய இவர், கடல் கடந்து தமிழ் வளர்த்த பத்திரிகையாளர். இவரது குடும்பத்தினரது முன்னெடுப்பில், கண்ணதாசன் அறவாரியம், மலேசிய எழுத்தாளர் சங்கம் ஆகியன இணைந்து அவரது நூற்றாண்டு விழாவை மலேசியாவில் அண்மையில் கொண்டாடியது.
1 mins
November 02, 2025
Dinamani Tirunelveli
புறநானூற்றில் தந்தை-மகன் சண்டை
இலக்கியம் என்பது வாழ்வை எதிரொலிப்பதாகப் படைக்கப்படுவது! அதில் கற்பனை, உவமை, அணி இலக்கணங்கள் எல்லாம் சேரப் படைக்கப்படுங்கால் அவற்றை விஞ்சிய மனித வாழ்வின் பதிவே காலக்கண்ணாடியாக நவில்தொறும் நயப்பாடுடைய இறவாப் பதிவிறக்கமாக எப்போதும் ஒளிர்வதாகும்.
1 min
November 02, 2025
Dinamani Tirunelveli
நடமாடும் உயிர்க்காவலர்
எனது இருபத்தைந்து வயதில் உயிர்காக்கும் முதலுதவி சேவையைத் தொடங்கி, நாற்பது ஆண்டுகளாக இடைவிடாது இயங்கி வருகிறேன்\" என்கிறார் ஸ்ரீரங்கத்தைச் சேர்ந்த அறுபத்தைந்து வயதான டி. சீனிவாச பிரசாத்.
2 mins
November 02, 2025
Dinamani Tirunelveli
முதல் பெண்ணாக ஆசை
காஷ்மீரைச் சேர்ந்த பத்து வயதாகும் அதீகா மிர். 'ஃபார்முலா 1' (எஃப் 1) அகாதெமியின் 'டிஸ்கவர் யுவர் டிரைவ்' திட்டத்துக்கு உலகளவில் தேர்ந்தெடுக்கப்பட்ட மூன்று பெண்களில் ஒருவர், இதுவரை இப்படித் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களில் வயது குறைந்தவரும் இவர்தான்.
2 mins
November 02, 2025
Dinamani Tirunelveli
கோமாரிக்கல்
கால்நடைகளின் காவலன்!
1 mins
November 02, 2025
Dinamani Tirunelveli
கவனம் ஈர்த்த பயோபிக் சினிமாக்கள்!
'பயோபிக்' என்ற வார்த்தையைச் சொன்னதும் நம் நினைவுக்குச் சட்டென வருவது பாலிவுட்தான். அந்தளவிற்கு எண்ணில் அடங்காத அளவிற்கு பயோபிக் திரைப்படங்களை எடுத்து பாலிவுட் சோபிக்கவும் செய்திருக்கிறது. சோதிக்கவும் செய்திருக்கிறது. இந்திய சினிமாவிலேயே தொடர்ந்து அதிகமாக பயோபிக் திரைப்படங்கள் வருவது பாலிவுட்டில்தான்.
2 mins
November 02, 2025
Dinamani Tirunelveli
எண்ம வியூகம்!
அடுக்கு மொழிகள், அலங்கார மேடைகள், வானுயர்ந்த கட்-அவுட்கள், வகை வகையான வண்ணச் சுவரொட்டிகள் இவை யாவும் பழைய அரசியல் களத்தின் சிதைந்த எச்சங்கள். இப்போதோ இணைய வழியில் சமூக ஊடகங்களே நவீன அரசியலின் புதிய சிம்மாசனமாக மாறியுள்ளன. அதிலும் குறிப்பாக, தனி மனிதனின் அறிதிறன்பேசியே இன்றைய அரசியல் போர்க்களத்தின் அதிமுக்கிய ஆயுதம்.
2 mins
November 01, 2025
Dinamani Tirunelveli
படகுகள் மீதான அமெரிக்க தாக்குதல் சட்டவிரோத படுகொலை: ஐ.நா.
தங்கள் நாட்டுக்குள் போதைப் பொருள்களை ஏற்றிவருவதாகக் கூறி, கரீபியன் தென் அமெரிக்க பகுதிகளில் இருந்து கரீபியன் மற்றும் பசிபிக் கடல் வழியாக வரும் படகுகள் (படம்) மீது அமெரிக்கா தாக்குதல் நடத்துவது சட்டவிரோத மனிதப் படுகொலைகள் என்று ஐ.நா. கண்டனம் தெரிவித்துள்ளது.
1 min
November 01, 2025
Dinamani Tirunelveli
அன்புள்ள ஆசிரியருக்கு...
கட்டுப்பாடு வேண்டும்
1 min
November 01, 2025
Listen
Translate
Change font size
