Ga onbeperkt met Magzter GOLD

Ga onbeperkt met Magzter GOLD

Krijg onbeperkte toegang tot meer dan 9000 tijdschriften, kranten en Premium-verhalen voor slechts

$149.99
 
$74.99/Jaar

Poging GOUD - Vrij

மகாகவி பாரதியார் - சில நிகழ்வுகள்...!

Dinamani Thoothukudi

|

March 02, 2025

பாரதியாரின் நெருங்கிய நண்பராக இருந்த மண்டயம் ஸ்ரீநிவாசாச்சாரியாரின் மகள் யதுகிரியம்மாள். மகாகவி பாரதியாரின் வளர்ப்பு மகள் என்றுகூட இவரைச் சொல்லலாம். அந்த அளவுக்கு மகாகவி பாரதிக்கு யதுகிரிடம் பாசம்.

- ரவிசுப்பிரமணியன்

யதுகிரியம்மாளின் பாரதி நினைவுகள் புத்தகத்தினுடைய முதல் அத்தியாயமே 'ஏலேலோ பாட்டு' என்ற தலைப்பில் வெகு சுவாரஸ்யமாக இப்படித் தொடங்குகிறது.

“ஒரு நாள் சாயங்காலம் பாரதியாரின் பெண்கள் இருவர், நாங்கள் நான்கு பேர், ஆக ஆறு சிறுவர்களும், பாரதியாரின் மனைவி செல்லம்மாவுடன், பாரதியாரும் கடற்கரை வந்து சேர்ந்தோம். மணி ஆறரை இருக்கும். மணல் மேல் உட்கார்ந்து வேடிக்கையாகப் பேசிக் கொண்டிருந்தோம். அருகில் செம்படவர் சிலர் கூடைகளில் மீன்களைத் திரப்பி விட்டுச் சந்தோஷமாய்ப் பாடி பஜனை செய்து கொண்டு சென்றார்கள்.

பாரதியாருக்குப் பெரிய சங்கீதக் கச்சேரிகளைக் காட்டிலும் சாதாரண பாம்பாட்டி, வண்ணான், நெல் குத்தும் பெண்கள், செம்படவர்கள், உழவர் - இவர்களுடைய பாட்டு என்றால் ரொம்ப இஷ்டம். அதனால் எங்களோடு பேசிக் கொண்டிருந்தவர் அந்தச் செம்படவர் பாட்டுக்குச் சபாஷ் சொல்ல ஆரம்பித்தார்.

நான் அவரைப் பார்த்து, “இதென்ன வேடிக்கை! அவர்கள் அர்த்தம், ராகம் ஒன்றுமில்லாமல் பாடும் பாட்டை நீர் இவ்வளவு மெச்சுகிறீரே? எங்களுக்கு ஒன்றுமே புரிகிறதில்லையே!” என்றேன்.

அதைக் கேட்டு செல்லம்மா, “அவர் ஒரு பித்து என்பது உனக்குத் தெரியாதா? வீதியில் மாரியம்மன் எடுத்துக்கொண்டு உடுக்கையடிப்பவன் வந்தால், இவர் கூத்தாடுகிறார்; தம் நினைவே கிடைப்பாது. இப்போ சாயங்கால வேளை; கடற்கரை; அலைகளின் ஒலி; இதோடு தாளம் போடும் அர்த்தமில்லாத பாட்டு! கேட்க வேண்டுமா?” என்று சொல்லிச் சிரித்தாள்.

உடனே பாரதியார் எழுந்தார். ஒரு பென்சிலும் காகிதமும் எடுத்துக் கொண்டு அந்தச் செம்படவரிடம் ஓடினார்; அதில் இருந்த ஒரு கிழவனை அந்தப் பாட்டை அடி அடியாகச் சொல்லும்படி கேட்டார்; பிழைகளைத் திருத்திக் கொண்டு எங்களிடம் வந்து, “நீங்களெல்லாரும் என்னைக் கேலி செய்கிறீர்களே! பிரபஞ்சத்தின் அடிப்படையை அந்தச் செம்படவன் எனக்கு உபதேசம் பண்ணினான்” என்றார்.

செல்லம்மா: ஆகா! நீங்கள் எல்லாருக்கும் சிஷ்யர்தான்! முதல் தெய்வமாகிற மடத்தின் குருவுக்கு மாத்திரம் சிஷ்யர் அல்ல!

பாரதியார்: இதோ பார், செல்லம்மா. உன் அர்த்தமில்லாத மூட வழக்கத்தை எனக்குச் சொல்லாதே! அந்தச் சாரமில்லாத, உண்மையல்லாத விஷயங்களை என் உயிர் போனாலும் நம்ப மாட்டேன். செம்படவன் அவனுக்குரிய தொழில் செய்தாலும், அவன் உயிரும் என் உயிரும் ஒன்றே!

MEER VERHALEN VAN Dinamani Thoothukudi

Dinamani Thoothukudi

மெளனம் கலைக்கப்பட வேண்டும்!

விற்று, வாங்கும் பொருளாக வாக்கு மாறியபோது, எந்த அரசியல் கட்சியும், எந்தத் தலைவரும் கவலை கொள்ளவில்லை. ஆனால், இன்று வாக்கு திருட்டு என்றும் வாக்குப் பறிப்பு என்றும் முழக்கங்கள் அரசியல் களத்தில் ஓங்கி ஒலிக்கின்றன. இந்த முழக்கங்களால் அடுத்த தேர்தலில் கூடுதலாக தங்கள் கட்சிகளுக்கு வாக்குகளைப் பெறலாமே தவிர வாக்கைப் பாதுகாக்க முடியுமா என்பதுதான் பெரும் கேள்வி.

time to read

3 mins

December 02, 2025

Dinamani Thoothukudi

கேரள முதல்வருக்கு அமலாக்கத் துறை நோட்டீஸ்

கேரள உள்கட்டமைப்பு முதலீட்டு நிதி வாரியத்துக்கு (கேஐஐஎஃப்பி) மாநில அரசு கடன் பத்திரங்கள் மூலம் பெற்ற வெளிநாட்டு முதலீடுகளில் பண முறைகேடு நடந்ததாக கூறி, முதல்வர் பினராயி விஜயன், முன்னாள் அமைச்சர் தாமஸ் ஐசக் மற்றும் முதல்வரின் முதன்மைச் செயலர் கே.எம். ஆப்ரகாம் ஆகியோருக்கு அமலாக்கத் துறை நோட்டீஸ் அனுப்பியது.

time to read

1 min

December 02, 2025

Dinamani Thoothukudi

இடைவிடாத மழை: தத்தளிக்கும் சென்னை

4 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை

time to read

2 mins

December 02, 2025

Dinamani Thoothukudi

இரு தரப்புக்கும் பொதுவாக செயல்பட வேண்டும்

மாநிலங்களவைத் தலைவரிடம் கார்கே வலியுறுத்தல்

time to read

1 min

December 02, 2025

Dinamani Thoothukudi

அமைச்சர் மன்சுக் மாண்டவியா நாளை ஆலோசனை

உள்நாட்டு கால்பந்து போட்டிகளுக்கான பிரச்னைகள்

time to read

1 min

December 02, 2025

Dinamani Thoothukudi

அசோக் லேலண்ட் விற்பனை 29% உயர்வு

இந்தியாவின் முன்னணி வாகன நிறுவனங்களில் ஒன்றான அசோக் லேலண்டின் மொத்த விற்பனை கடந்த நவம்பர் மாதத்தில் 29 சதவீதம் உயர்ந்துள்ளது.

time to read

1 min

December 02, 2025

Dinamani Thoothukudi

உச்சங்களைத் தொட்டும் சரிவில் முடிந்த பங்குச் சந்தை

நிதி மற்றும் எஃப்எம்சிஜி பங்குகளில் லாப நோக்க விற்பனை மற்றும் அந்நிய முதலீடுகள் வெளியேற்றம் காரணமாக, இந்திய பங்குச் சந்தைகள் திங்கள்கிழமை புதிய உச்சங்களை எட்டிய பிறகும் லேசான சரிவுடன் நிறைவடைந்தன.

time to read

1 min

December 02, 2025

Dinamani Thoothukudi

தமிழக அரசின் தில்லி சிறப்பு பிரதிநிதி வீட்டில் 87 பவுன் நகைகள் திருட்டு

தஞ்சாவூரில் தமிழக அரசின் தில்லி சிறப்பு பிரதிநிதியும், முன்னாள் மக்களவை திமுக உறுப்பினருமான ஏ.கே.எஸ். விஜயன் வீட்டில் பூட்டை உடைத்து 87 பவுன் நகைகளை மர்மநபர்கள் திருடிச் சென்றனர். இதுதொடர்பாக போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

time to read

1 min

December 02, 2025

Dinamani Thoothukudi

Dinamani Thoothukudi

நமீபியாவை பந்தாடிய இந்திய மகளிர் அணி

ஜூனியர் மகளிர் உலகக் கோப்பை ஹாக்கி போட்டியில் இந்தியா தனது முதல் ஆட்டத்தில் 13-0 கோல் கணக்கில் நமீபியாவை திங்கள்கிழமை அபார வெற்றி கண்டது.

time to read

1 min

December 02, 2025

Dinamani Thoothukudi

Dinamani Thoothukudi

காவல் துறை மீதான மக்களின் பார்வை மாற்றப்படுவது அவசியம்

பிரதமர் மோடி அறிவுறுத்தல்

time to read

1 min

December 01, 2025

Translate

Share

-
+

Change font size