Ga onbeperkt met Magzter GOLD

Ga onbeperkt met Magzter GOLD

Krijg onbeperkte toegang tot meer dan 9000 tijdschriften, kranten en Premium-verhalen voor slechts

$149.99
 
$74.99/Jaar

Poging GOUD - Vrij

அதிகாரமே குறிக்கோள்!

Dinamani Nagapattinam

|

November 24, 2025

ஆரியர்கள், திராவிடர்கள் என்று திராவிட இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் தொடர்ந்து பேசி வருகின்றனர். அவர்களோடு போட்டி போட்டுக் கொண்டு தமிழ் தேசியவாதிகளும் தமிழர், தெலுங்கர் என்று பிரிவினை பேசிக் கொண்டிருக்கிறார்கள். அனைவருக்கும் தங்கள் கருத்தை வெளிப்படுத்துவதற்கான சுதந்திரத்தை சமூகவலைதளங்கள் தருகின்றன. அதை தங்கள் கருத்தைப் பதிவு செய்வதாகச் சொல்லிக்கொண்டு அடுத்தவரை வசைபாடுவதையும் குற்றம் சுமத்துவதையும் அன்றாடம் செய்து வருகின்றனர்.

- கோதை ஜோதிலட்சுமி

அதிகாரமே குறிக்கோள்!

ஆரிய, திராவிட இனவாதம் பேசுவோர் அதில் எந்த ஆராய்ச்சியையும் செய்ததில்லை. பிரிட்டிஷார் நம்மைப் பிரித்தாள்வதற்காகப் பயன்படுத்திய சூழ்ச்சி, தங்களுக்கும் சாதகமாக இருப்பதால் இவர்களும் பயன்படுத்துகின்றனர். ஆரியர்-திராவிடர் என்ற இனங்கள் பாரத தேசத்தில் எந்த நாளிலும் இருக்கவில்லை என்று மேதைமை நிறைந்த அம்பேத்கர் தெளிவுபடுத்தினார். ஆனாலும், திராவிடர் என்று தங்களை அடையாளப்படுத்திக் கொள்வதோடு தமிழர்கள் மீதும் அத்தகைய வண்ணத்தைப் பூசிவிடும் முயற்சியில் சிலர் ஈடுபடுகிறார்கள்.

திராவிடர்கள்- ஆரியர்கள் என்ற பாகுபாட்டை தமிழ் இலக்கியங்கள் சொல்லவில்லை. சங்க இலக்கியத்தில்கூட ஆரிய என்ற சொல் இடம்பெறுகிறதே அன்றி திராவிடர் என்ற சொல் இல்லை. தமிழ்நாட்டுக்கு வெளியில் இருக்கும் பிரதேசங்களைக் குறிப்பிட மொழி, பெயர், தேயம் என்ற சொல் பயன்படுத்தப்பட்டிருக்கிறதே தவிர திராவிடர் என்ற சொல் கிடையாது.

தமிழ் தேசியவாதிகள் என்று தங்களை அடையாளப்படுத்திக் கொள்வோர் 'திராவிடம்' என்ற பாகுபாட்டை மறுக்கின்றனர்; தமிழர்களை திராவிடர் என்று அடையாளப்படுத்துவதை எதிர்க்கின்றனர். ஆனால், ஒரு சிலர் ஆரியர்கள் என்று ஒரு பிரிவினரை வசைபாடி அவர்கள் மீது வரலாற்றுப் பிழைகளை ஏற்றுவது போல், இவர்கள் தெலுங்கர்கள் மீது வெறுப்புணர்வை விதைக்கின்றனர்.

மொத்தத்தில் திராவிட அரசியலோ, தமிழ் தேசிய அரசியலோ தமிழர்களின் பெருமைகளை வளர்ச்சியை வரலாற்றை விட்டுவிட்டு ஒரு பிரிவினரைக் குற்றஞ்சாட்டி இந்திய ஒருமைப்பாட்டுக்கு விரோதமாகவே நடந்து கொள்கின்றன. வெறுப்பு அரசியலை மக்கள் மனங்களில் விதைத்து தங்களுக்கான வாக்குவங்கியை உறுதி செய்வதில் கவனமாக இருக்கின்றனர்.

MEER VERHALEN VAN Dinamani Nagapattinam

Dinamani Nagapattinam

Dinamani Nagapattinam

அமைச்சர் மன்சுக் மாண்டவியா நாளை ஆலோசனை

உள்நாட்டு கால்பந்து போட்டிகளுக்கான பிரச்னைகள்

time to read

1 min

December 02, 2025

Dinamani Nagapattinam

Dinamani Nagapattinam

நமீபியாவை பந்தாடிய இந்திய மகளிர் அணி

ஜூனியர் மகளிர் உலகக் கோப்பை ஹாக்கி போட்டியில் இந்தியா தனது முதல் ஆட்டத்தில் 13-0 கோல் கணக்கில் நமீபியாவை திங்கள்கிழமை அபார வெற்றி கண்டது.

time to read

1 min

December 02, 2025

Dinamani Nagapattinam

திருவண்ணாமலை மலை மீது நாளை மகா தீபம்

மருத்துவ வசதிகளை அறிய 'க்யூஆர்' குறியீடு

time to read

1 mins

December 02, 2025

Dinamani Nagapattinam

Dinamani Nagapattinam

மெளனம் கலைக்கப்பட வேண்டும்!

விற்று, வாங்கும் பொருளாக வாக்கு மாறியபோது, எந்த அரசியல் கட்சியும், எந்தத் தலைவரும் கவலை கொள்ளவில்லை. ஆனால், இன்று வாக்கு திருட்டு என்றும் வாக்குப் பறிப்பு என்றும் முழக்கங்கள் அரசியல் களத்தில் ஓங்கி ஒலிக்கின்றன. இந்த முழக்கங்களால் அடுத்த தேர்தலில் கூடுதலாக தங்கள் கட்சிகளுக்கு வாக்குகளைப் பெறலாமே தவிர வாக்கைப் பாதுகாக்க முடியுமா என்பதுதான் பெரும் கேள்வி.

time to read

3 mins

December 02, 2025

Dinamani Nagapattinam

இடைவிடாத மழை: தத்தளிக்கும் சென்னை

4 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை

time to read

2 mins

December 02, 2025

Dinamani Nagapattinam

அசோக் லேலண்ட் விற்பனை 29% உயர்வு

இந்தியாவின் முன்னணி வாகன நிறுவனங்களில் ஒன்றான அசோக் லேலண்டின் மொத்த விற்பனை கடந்த நவம்பர் மாதத்தில் 29 சதவீதம் உயர்ந்துள்ளது.

time to read

1 min

December 02, 2025

Dinamani Nagapattinam

இரு தரப்புக்கும் பொதுவாக செயல்பட வேண்டும்

மாநிலங்களவைத் தலைவரிடம் கார்கே வலியுறுத்தல்

time to read

1 min

December 02, 2025

Dinamani Nagapattinam

Dinamani Nagapattinam

கர்நாடகம்: இப்போதைக்கு ‘புயல்’ கரை கடந்தது!

தேவராஜ் அர்ஸ் காலத்தில் இருந்தே அரசியல் பரபரப்புக்கு பஞ்சம் வைக்காத மாநிலம் கர்நாடகம். காங்கிரஸ், ஜனதா, ஜனதாதளம், மஜத, பாஜக என எந்தக் கட்சி ஆட்சி நடந்தாலும் அதில் முதல்வர் பதவியில் யார் தொடர்வது என்ற குழப்பத்துக்கு என்றுமே குறைவில்லை. தேவராஜ் அர்ஸ், வீரேந்திர பாட்டீல், எஸ். பங்காரப்பா, வீரப்பமொய்லி எல்லோருமே தங்களது ஆட்சிக் காலத்தில் முதல்வர் பதவியைத் தக்கவைக்க படாதபாடு பட்டனர்.

time to read

2 mins

December 01, 2025

Dinamani Nagapattinam

Dinamani Nagapattinam

காவல் துறை மீதான மக்களின் பார்வை மாற்றப்படுவது அவசியம்

பிரதமர் மோடி அறிவுறுத்தல்

time to read

1 min

December 01, 2025

Dinamani Nagapattinam

கலைஞர் பல்கலை. மசோதா: குடியரசுத் தலைவரை சந்திப்போம்

கும்பகோணத்தில் அமைக்கப்படவுள்ள கலைஞர் பல்கலைக்கழக மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்கக் கோரி குடியரசுத் தலைவரைச் சந்தித்து வலியுறுத்துவோம் என மக்களவை திமுக குழுத் தலைவர் டி.ஆர். பாலு தெரிவித்தார்.

time to read

1 min

December 01, 2025

Listen

Translate

Share

-
+

Change font size