Poging GOUD - Vrij
நடமாடும் உயிர்க்காவலர்
Dinamani Nagapattinam
|November 02, 2025
எனது இருபத்தைந்து வயதில் உயிர்காக்கும் முதலுதவி சேவையைத் தொடங்கி, நாற்பது ஆண்டுகளாக இடைவிடாது இயங்கி வருகிறேன்" என்கிறார் ஸ்ரீரங்கத்தைச் சேர்ந்த அறுபத்தைந்து வயதான டி. சீனிவாச பிரசாத்.
சித்த மருத்துவர், அக்குபஞ்சர் சிகிச்சையாளர், ஓவியர், கைவினைக் கலைஞர், கர்நாடக இசைக் கலைஞர், முதலுதவி சிகிச்சை அளிப்பவர், தீ- வாகன விபத்து தடுப்பு விழிப்புணர்வு பிரசாரகர் உள்ளிட்ட பன்முகம் கொண்டவரான சீனிவாச பிரசாத்தை 'டி.எஸ்.பி.' என்றே மக்கள் அழைக்கின்றனர்.
உள்ளூரில் இருந்தால் மிதிவண்டியிலும், வெளியூர் சென்றால் மொபெட்டில் செல்லும் இவர் தனது வாகனத்திலேயே தீயணைப்பான் கருவி, முதலுதவிப் பெட்டி, மருந்துகள், மருத்துவ உபகரணங்களை எப்போதும் வைத்திருந்து, பாதிக்கப்பட்டோருக்கு உதவிகளைப் புரிந்து 'நடமாடும் உயிர்க் காவலர்' என்ற பெயரை எடுத்துள்ளார்.
அவருடன் ஒரு சந்திப்பு:
உங்கள் இளமைக்காலம் ..?
ஸ்ரீரங்கம் அரசு மேல்நிலைப் பள்ளியில் 12-ஆம் வகுப்பு வரை பயின்றேன். என்.சி.சி., சாரணர் இயக்கத்தில் அணித் தலைவராக இருந்தேன். மேலே படிக்க விருப்பமின்றி கிடைத்த வேலைகளைச் செய்யத் தொடங்கினேன். 1985-இல் ரயில்வேயில் கலாசி பணி கிடைத்து, முதுநிலை தொழில் நிபுணராக ஓய்வு பெற்றேன். ஆனால், முதலுதவி சிகிச்சையிலும், சேவைப் பணிகளிலும் ஓய்வின்றி என் இறுதி மூச்சு வரையும் பணியாற்றுவேன்.
சேவைப் பணிகள் குறித்து ..?
ரயில்வே ஊழியர்களில் சிலரை ஒருங்கிணைத்து, ‘கடற்படை சாரணர் இயக்கம்' என்ற பெயரில் சேவையைத் தொடங்கினேன். சாரணர் இயக்கத்தில் கிடைத்த முதலுதவிப் பயிற்சியே சேவைக்கு உந்துதலாகவும், தனியாக ஒரு பிரிவையும் அமைக்கவும் முடிந்தது.
Dit verhaal komt uit de November 02, 2025-editie van Dinamani Nagapattinam.
Abonneer u op Magzter GOLD voor toegang tot duizenden zorgvuldig samengestelde premiumverhalen en meer dan 9000 tijdschriften en kranten.
Bent u al abonnee? Aanmelden
MEER VERHALEN VAN Dinamani Nagapattinam
Dinamani Nagapattinam
முதல் பெண்ணாக ஆசை
காஷ்மீரைச் சேர்ந்த பத்து வயதாகும் அதீகா மிர். 'ஃபார்முலா 1' (எஃப் 1) அகாதெமியின் 'டிஸ்கவர் யுவர் டிரைவ்' திட்டத்துக்கு உலகளவில் தேர்ந்தெடுக்கப்பட்ட மூன்று பெண்களில் ஒருவர், இதுவரை இப்படித் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களில் வயது குறைந்தவரும் இவர்தான்.
2 mins
November 02, 2025
Dinamani Nagapattinam
புறநானூற்றில் தந்தை-மகன் சண்டை
இலக்கியம் என்பது வாழ்வை எதிரொலிப்பதாகப் படைக்கப்படுவது! அதில் கற்பனை, உவமை, அணி இலக்கணங்கள் எல்லாம் சேரப் படைக்கப்படுங்கால் அவற்றை விஞ்சிய மனித வாழ்வின் பதிவே காலக்கண்ணாடியாக நவில்தொறும் நயப்பாடுடைய இறவாப் பதிவிறக்கமாக எப்போதும் ஒளிர்வதாகும்.
1 min
November 02, 2025
Dinamani Nagapattinam
கடல் கடந்தும் தமிழ்...
புதுக்கோட்டை மாவட்டத்தில் 1924-இல் பிறந்த முருகு. சுப்ரமணியம் 1950-களில் மலேசியாவுக்குச் சென்றார். மலேசியா, சிங்கப்பூரில் வெளியாகும் தமிழ் நாளிதழ்களில் ஆசிரியராகப் பணியாற்றிய இவர், கடல் கடந்து தமிழ் வளர்த்த பத்திரிகையாளர். இவரது குடும்பத்தினரது முன்னெடுப்பில், கண்ணதாசன் அறவாரியம், மலேசிய எழுத்தாளர் சங்கம் ஆகியன இணைந்து அவரது நூற்றாண்டு விழாவை மலேசியாவில் அண்மையில் கொண்டாடியது.
1 mins
November 02, 2025
Dinamani Nagapattinam
ஊடல் கொள்ள நேரமில்லை!
சங்க இலக்கியங்கள் மனித வாழ்வின் அடையாளங்கள்; உயர் வாழ்வை உணர்த்தும் வழிகாட்டிகள். விருந்தோம்பல் உலகம் முழுவதற்குமான பொதுப் பண்புகளில் ஒன்று. ஆனால், தமிழ்நெறி 'இல்வாழ்வது என்பதே விருந்தோம்புவதற்கே' என்ற கொள்கையை உடையது. தமிழன் இல்வாழ்வு என்று கூறவில்லை. 'இல்லறம்' என்றான். இல்லத்திலிருந்து செய்யும் சீரிய அறம் தான் விருந்தோம்பல்.
2 mins
November 02, 2025
Dinamani Nagapattinam
நடமாடும் உயிர்க்காவலர்
எனது இருபத்தைந்து வயதில் உயிர்காக்கும் முதலுதவி சேவையைத் தொடங்கி, நாற்பது ஆண்டுகளாக இடைவிடாது இயங்கி வருகிறேன்\" என்கிறார் ஸ்ரீரங்கத்தைச் சேர்ந்த அறுபத்தைந்து வயதான டி. சீனிவாச பிரசாத்.
2 mins
November 02, 2025
Dinamani Nagapattinam
உள்ளாட்சி அமைப்புகளுக்கு அதிகாரப் பகிர்வை மறுக்கும் மாநிலங்கள்
பிரதமரின் பொருளாதார ஆலோசனைக் குழுத் தலைவர் கவலை
1 min
November 02, 2025
Dinamani Nagapattinam
கவனம் ஈர்த்த பயோபிக் சினிமாக்கள்!
'பயோபிக்' என்ற வார்த்தையைச் சொன்னதும் நம் நினைவுக்குச் சட்டென வருவது பாலிவுட்தான். அந்தளவிற்கு எண்ணில் அடங்காத அளவிற்கு பயோபிக் திரைப்படங்களை எடுத்து பாலிவுட் சோபிக்கவும் செய்திருக்கிறது. சோதிக்கவும் செய்திருக்கிறது. இந்திய சினிமாவிலேயே தொடர்ந்து அதிகமாக பயோபிக் திரைப்படங்கள் வருவது பாலிவுட்டில்தான்.
2 mins
November 02, 2025
Dinamani Nagapattinam
அம்மானை!
அம்மானை என்பது மகளிர் விளையாட்டுகளில் ஒன்று. மூன்று பெண்கள் ஆடும் இவ்விளையாட்டில் கற்களை எறிவதும் பிடிப்பதும் குறிப்பிட்ட தாளகதியில் அமையும் எனவும், அந்தத் தாளத்துக்கு ஏற்றாற்போல பெண்கள் பாடுவது அம்மானைப் பாடல் எனவும் திறனாய்வாளர் குறிப்பிடுவது எண்ணத்தக்கதாகும்.
1 min
November 02, 2025
Dinamani Nagapattinam
1040-ஆவது சதய விழா: ராஜராஜசோழன் சிலைக்கு மாலை அணிவிப்பு
பெருவுடையார்-பெரியநாயகிக்கு 48 வகை பேரபிஷேகம்
1 min
November 02, 2025
Dinamani Nagapattinam
கோமாரிக்கல்
கால்நடைகளின் காவலன்!
1 mins
November 02, 2025
Listen
Translate
Change font size
