Poging GOUD - Vrij
பூமித் தாயைக் காப்போம்
Dinamani Madurai
|June 26, 2025
‘பொழுதெல்லாம் எங்கள் செல்வம் கொள்ளை கொண்டு போகவோ? - நாங்கள் சாகவோ?’ என்று மகாகவி பாரதி பாடினார். ஆங்கிலேயர்கள் வந்து நம் நாட்டைக் கொள்ளையடித்தது குறித்து அவர் மனம் வருந்திப் பாடினார். விடுதலை பெற்ற தேசத்தில், நம் நாட்டவர்களே மிகப் பெரிய அளவில் கொள்ளையடிப்பதை யார் பாடுவது?
மனித இனத்தை மட்டுமல்ல, உலக உயிர்களைத் தாங்கியிருப்பது பூமியாகும். பூமியிருந்தால்தானே உயிர்கள் உயிர்வாழ முடியும். பூமி உயிர்களால் நிரம்பி வழிகிறது. அந்த பூமியைக் காப்பாற்ற வேண்டிய கடமை ஒவ்வோர் உயிருக்கும் உள்ளது. மனித உயிர்களுக்கு இந்தக் கடமை அதிகமாக உள்ளது.
அகழ்வாரைத் தாங்கும் நிலம்போலத் தம்மை இகழ்வார்ப் பொறுத்தல் தலை என்றார் திருவள்ளுவர். தன்னைத் தோண்டுகிறவர்களையும் தாங்கி நிற்கும் பூமியைப்போல தம்மை இகழ்வாரைப் பொறுத்தலே மிகச் சிறந்த பண்பாகும் என்று அவர் கூறுகிறார்.
பூமி என்பது வெறும் மண்ணும், மக்களும் அல்ல; மலை, கடல், காடுகள், ஆறுகள், ஏரிகள் எல்லாம் சேர்ந்தது தான். இவை எல்லாம் அழிக்கப்படுகின்றன. மலைகளிலும், காடுகளிலும் ஆண்டாண்டு காலமாக வாழும் மக்களையும், கடல்சார் மக்களாகிய மீனவர்களையும் விரட்டியடித்துவிட்டு, அந்த நிலப்பரப்பில் இருக்கும் கனிமவளங்களைக் கொள்ளையடிக்கின்றனர்.
‘ஒவ்வொரு மனிதனின் தேவையையும் நிறைவேற்ற முடியும். ஆனால், ஒரே ஒரு மனிதனின் பேராசையைக்கூட நிறைவேற்ற முடியாது’ என்றார் மகாத்மாகாந்தி. பேராசை கொண்ட மனிதனின் கொள்ளையால் இயற்கை வளங்கள் இல்லாமல் போகின்றன. இதற்கு அரசு அதிகாரிகள் துணை போகின்றனர் என்று சென்னை உயர்நீதிமன்றமே உறுதிசெய்துள்ளது.
பூமித் தாயின் மார்பை அறுத்து ரத்தத்தைக் குடிப்பவர்களாக குவாரி உரிமையாளர்கள் இருக்கின்றனர் என்று குவாரி விதிமீறல் தொடர்பான வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் வேதனை தெரிவித்துள்ளது.
கோவை மாவட்டத்தில் புரவிபாளையம் கிராமத்தில் செந்தாமரை என்பவர் பட்டா நிலங்களில் 2009-ஆம் ஆண்டு முதல் குவாரிகளை நடத்திவருகிறார். அவரது குவாரியில் விதிமீறல் இருப்பதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்குத் தாக்கல் செய்யப்பட்டது.
இந்நிலையில் உயர்நீதிமன்ற உத்தரவுப்படி அமைக்கப்பட்ட குழு 2021 ஆம் ஆண்டு அறிக்கை தாக்கல் செய்தது. அதில் சிறிய அளவில் விதிமீறல் இருப்பதாகக் கூறப்பட்டது. விதிமீறல் தொடர்பாக நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டு வழக்கு முடிக்கப்பட்டது. ஆனால், இந்த அறிக்கையை ஆய்வு செய்த அதிகாரிகள் குவாரியிலிருந்து சட்ட விரோதமாக கனிமவளங்கள் எடுத்ததாகக் கூறி ரூ.32 கோடியே 29 லட்சத்து 77,792 அபராதம் விதித்து 2022ஆம் ஆண்டு உத்தரவிட்டார்.
Dit verhaal komt uit de June 26, 2025-editie van Dinamani Madurai.
Abonneer u op Magzter GOLD voor toegang tot duizenden zorgvuldig samengestelde premiumverhalen en meer dan 9000 tijdschriften en kranten.
Bent u al abonnee? Aanmelden
MEER VERHALEN VAN Dinamani Madurai
Dinamani Madurai
நடமாடும் உயிர்க்காவலர்
எனது இருபத்தைந்து வயதில் உயிர்காக்கும் முதலுதவி சேவையைத் தொடங்கி, நாற்பது ஆண்டுகளாக இடைவிடாது இயங்கி வருகிறேன்\" என்கிறார் ஸ்ரீரங்கத்தைச் சேர்ந்த அறுபத்தைந்து வயதான டி. சீனிவாச பிரசாத்.
2 mins
November 02, 2025
Dinamani Madurai
ஊடல் கொள்ள நேரமில்லை!
சங்க இலக்கியங்கள் மனித வாழ்வின் அடையாளங்கள்; உயர் வாழ்வை உணர்த்தும் வழிகாட்டிகள். விருந்தோம்பல் உலகம் முழுவதற்குமான பொதுப் பண்புகளில் ஒன்று. ஆனால், தமிழ்நெறி 'இல்வாழ்வது என்பதே விருந்தோம்புவதற்கே' என்ற கொள்கையை உடையது. தமிழன் இல்வாழ்வு என்று கூறவில்லை. 'இல்லறம்' என்றான். இல்லத்திலிருந்து செய்யும் சீரிய அறம் தான் விருந்தோம்பல்.
2 mins
November 02, 2025
Dinamani Madurai
உள்ளாட்சி அமைப்புகளுக்கு அதிகாரப் பகிர்வை மறுக்கும் மாநிலங்கள்
பிரதமரின் பொருளாதார ஆலோசனைக் குழுத் தலைவர் கவலை
1 min
November 02, 2025
Dinamani Madurai
முதல் பெண்ணாக ஆசை
காஷ்மீரைச் சேர்ந்த பத்து வயதாகும் அதீகா மிர். 'ஃபார்முலா 1' (எஃப் 1) அகாதெமியின் 'டிஸ்கவர் யுவர் டிரைவ்' திட்டத்துக்கு உலகளவில் தேர்ந்தெடுக்கப்பட்ட மூன்று பெண்களில் ஒருவர், இதுவரை இப்படித் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களில் வயது குறைந்தவரும் இவர்தான்.
2 mins
November 02, 2025
Dinamani Madurai
புறநானூற்றில் தந்தை-மகன் சண்டை
இலக்கியம் என்பது வாழ்வை எதிரொலிப்பதாகப் படைக்கப்படுவது! அதில் கற்பனை, உவமை, அணி இலக்கணங்கள் எல்லாம் சேரப் படைக்கப்படுங்கால் அவற்றை விஞ்சிய மனித வாழ்வின் பதிவே காலக்கண்ணாடியாக நவில்தொறும் நயப்பாடுடைய இறவாப் பதிவிறக்கமாக எப்போதும் ஒளிர்வதாகும்.
1 min
November 02, 2025
Dinamani Madurai
கோமாரிக்கல்
கால்நடைகளின் காவலன்!
1 mins
November 02, 2025
Dinamani Madurai
கவனம் ஈர்த்த பயோபிக் சினிமாக்கள்!
'பயோபிக்' என்ற வார்த்தையைச் சொன்னதும் நம் நினைவுக்குச் சட்டென வருவது பாலிவுட்தான். அந்தளவிற்கு எண்ணில் அடங்காத அளவிற்கு பயோபிக் திரைப்படங்களை எடுத்து பாலிவுட் சோபிக்கவும் செய்திருக்கிறது. சோதிக்கவும் செய்திருக்கிறது. இந்திய சினிமாவிலேயே தொடர்ந்து அதிகமாக பயோபிக் திரைப்படங்கள் வருவது பாலிவுட்டில்தான்.
2 mins
November 02, 2025
Dinamani Madurai
கடல் கடந்தும் தமிழ்...
புதுக்கோட்டை மாவட்டத்தில் 1924-இல் பிறந்த முருகு. சுப்ரமணியம் 1950-களில் மலேசியாவுக்குச் சென்றார். மலேசியா, சிங்கப்பூரில் வெளியாகும் தமிழ் நாளிதழ்களில் ஆசிரியராகப் பணியாற்றிய இவர், கடல் கடந்து தமிழ் வளர்த்த பத்திரிகையாளர். இவரது குடும்பத்தினரது முன்னெடுப்பில், கண்ணதாசன் அறவாரியம், மலேசிய எழுத்தாளர் சங்கம் ஆகியன இணைந்து அவரது நூற்றாண்டு விழாவை மலேசியாவில் அண்மையில் கொண்டாடியது.
1 mins
November 02, 2025
Dinamani Madurai
குருவின் கனவு நிறைவேற வேண்டும்: தருமபுரம் ஆதீனம்
'தருமபுரம் ஆதீனம் 26-ஆவது குருமகா சந்நிதானத்தின் கனவு நிறைவேற வேண்டும்' என தருமபுரம் ஆதீனம் 27-ஆவது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் குறிப்பிட்டார்.
1 mins
November 02, 2025
Dinamani Madurai
தங்கம் பவுனுக்கு ரூ.80 உயர்வு
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சனிக்கிழமை பவுனுக்கு ரூ.80 உயர்ந்து ரூ.90,480-க்கு விற்பனையானது.
1 min
November 02, 2025
Translate
Change font size
