Poging GOUD - Vrij
சமூக நீதிக்கான அடையாளம் ஜாதிவாரி கணக்கெடுப்பு!
Dinamani Chennai
|May 03, 2025
அடித்தட்டு மக்களின் வாழ்வு உயரத்தைத் தொடுவதற்கு ஜாதிவாரி கணக்கெடுப்பு அவசியமான ஒன்றாகிறது. அது உணவுப் பொருள்களின் விநியோகத்தில் தொடங்கி, ஊரக வேலைவாய்ப்புத் திட்டம் வரை ஊடுருவிச் செல்லக்கூடிய ஒன்றாகும்.
ஜாதிவாரி கணக்கெடுப்பு தொடர்பாக முந்தைய அதிமுக அரசு ஓர் அரசாணையை நிறைவேற்றியது. ஜாதிவாரி கணக்கெடுப்பை மாநில அரசே நடத்த முடியுமா அல்லது மத்திய அரசின் துணை வேண்டுமா என்ற கேள்வி எழுந்த நிலையில், நாடு முழுவதும் மக்கள்தொகை கணக்கெடுப்புடன் ஜாதிவாரி கணக்கெடுப்பையும் நடத்த மத்திய அரசு இப்போது ஒப்புதல் வழங்கியிருக்கிறது.
பிரிட்டிஷ் ஆட்சிக்காலத்தில் 1881-இல் தொடங்கி 10 ஆண்டுகளுக்கு ஒரு முறை மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட்டதோடு, ஜாதிவாரியான புள்ளிவிவரத் தரவுகளையும் பிரிட்டிஷ் அரசு எடுத்து வந்தது. இறுதியாக, ஜாதிவாரி கணக்கெடுப்பு 1931-இல் நடத்தப்பட்டது. இதன்பின்னர், 1947-இல் அரசியல் சாசனத்தின் அடிப்படையில் சுதந்திர இந்தியா தன்னை குடியரசாக அறிவித்துக் கொண்டதைத் தொடர்ந்து குடிமக்கள் அனைவரும் சமம் என்கிற அடிப்படையில் ஜாதிவாரி கணக்கெடுப்பை கைவிட்டது. அதன்பிறகு மத்திய அரசு 10 ஆண்டுகளுக்கு ஒரு முறை மக்கள்தொகை கணக்கெடுப்பை மட்டுமே நடத்துகிறது.
அதில் பட்டியல் ஜாதியினர், பழங்குடியினர் போன்ற தரவுகள் இடம்பெறுகின்றனவே தவிர, பிற்படுத்தப்பட்ட ஜாதியினர், முன்னேறிய வகுப்பினர் குறித்த கணக்கெடுப்பு நடத்தப்படவில்லை. 2009 முதல் 2016 வரையிலான மத்திய ஆட்சியில் இருந்த காங்கிரஸ், 2011-ஆம் ஆண்டு ஜாதிவாரி கணக்கெடுப்பை நடத்தியது. அதாவது, பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் அடங்கிய முதல் தரவுக் குறிப்புகள் திரட்டப்பட்டன.
ஆனால், ஜாதிவாரி கணக்கெடுப்பின் முழு விவரங்களைப் பொதுவெளியில் வெளியிடுவதற்கு அமைச்சரவையில் ஒருமித்த கருத்து இல்லாததால் வெளியிடப்படவில்லை. அன்றைக்கு அமைச்சராக இருந்த ப.சிதம்பரம் உள்ளிட்டோர் இந்தப் பட்டியலை வெளியிடக் கூடாது என்று கருத்து தெரிவித்தவர்களில் முக்கியமானவர்கள். அவர்களது ஆட்சிக் காலம் முடிவடைந்துவிட்டது.
பின்னர், 10 ஆண்டுகள் ஆட்சியில் இருந்தபோதும், மீண்டும் ஆட்சிக்கு வந்துவிட்ட நிலையிலும் பாஜக அரசு ஜாதிவாரி கணக்கெடுப்பை நடத்தாமல்தான் இருந்தது. ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று தொடர்ந்து கோரிக்கை வலுத்துவந்த நிலையில், தற்போது நாடு முழுவதும் மக்கள்தொகை கணக்கெடுப்புடன், ஜாதிவாரி கணக்கெடுப்பையும் சேர்த்து நடத்த மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.
Dit verhaal komt uit de May 03, 2025-editie van Dinamani Chennai.
Abonneer u op Magzter GOLD voor toegang tot duizenden zorgvuldig samengestelde premiumverhalen en meer dan 9000 tijdschriften en kranten.
Bent u al abonnee? Aanmelden
MEER VERHALEN VAN Dinamani Chennai
Dinamani Chennai
இடைவிடாத மழை: தத்தளிக்கும் சென்னை
4 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை
2 mins
December 02, 2025
Dinamani Chennai
திருவண்ணாமலை மலை மீது நாளை மகா தீபம்
மருத்துவ வசதிகளை அறிய 'க்யூஆர்' குறியீடு
1 mins
December 02, 2025
Dinamani Chennai
ஏழுமலையான் உண்டியல் காணிக்கை ரூ.4.47 கோடி
திருமலை ஏழுமலையான் கோயில் உண்டியல் காணிக்கையாக ரூ.4.47 கோடி வசூலானதாக தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.
1 min
December 02, 2025
Dinamani Chennai
‘எஸ்ஐஆர்’ விவாதத்துக்கு மத்திய அரசு மறுக்கவில்லை
வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் (எஸ்ஐஆர்) மீதான விவாதத்துக்கு மத்திய அரசு மறுப்பு தெரிவிக்கவில்லை என நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு மாநிலங்களவையில் திங்கள்கிழமை தெரிவித்தார்.
1 min
December 02, 2025
Dinamani Chennai
பொதுப்பயன்பாட்டு நிலத்தை விற்பனை செய்த வழக்கு: அதிகாரிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு
கோவையில் பொது பயன்பாட்டுக்காக ஒதுக்கப்பட்ட நிலத்தை வீட்டுமனைகளாக மாற்றி விற்பனை செய்த கூட்டுறவு சங்க அதிகாரிகள் மற்றும் உடந்தையாக இருந்த துறை அதிகாரிகளுக்கு எதிராக தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
1 min
December 02, 2025
Dinamani Chennai
ஷேக் ஹசீனா, பிரிட்டன் எம்.பி.க்கு சிறைத் தண்டனை
நில மோசடி வழக்கில், வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கு 5 ஆண்டுகளும், அவரின் உறவினரும், பிரிட்டன் எம்.பி.யுமான துலிப் சித்திக்குக்கு 2 ஆண்டுகளும் சிறைத் தண்டனை விதித்து டாக்கா சிறப்பு நீதிமன்றம் திங்கள்கிழமை தீர்ப்பளித்தது.
1 min
December 02, 2025
Dinamani Chennai
காங்கிரஸ் குழு முதல்வரை நாளை சந்திக்க திட்டம்
திமுகவுடன் தொகுதிப் பங்கீடு குறித்து பேச்சு வார்த்தை நடத்தவுள்ள காங்கிரஸ் குழுவினர், அக்கூட்டணி தலைவ ரும், முதல்வருமான மு.க. ஸ்டா லினை புதன்கிழமை (டிச.3) சந் தித்து பேசவுள்ளதாக தகவல் வெளி யாகியுள்ளது.
1 min
December 02, 2025
Dinamani Chennai
பல்கலைக்கழக தேர்வுகள் ஒத்திவைப்பு
மழை எச்சரிக்கை காரணமாக சென்னை பல்கலைக்கழகம், அண்ணா பல்கலைக்கழகங்களில் செவ்வாய்க்கிழமை (டிச.2) நடைபெறவிருந்த தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன.
1 min
December 02, 2025
Dinamani Chennai
அசோக் லேலண்ட் விற்பனை 29% உயர்வு
இந்தியாவின் முன்னணி வாகன நிறுவனங்களில் ஒன்றான அசோக் லேலண்டின் மொத்த விற்பனை கடந்த நவம்பர் மாதத்தில் 29 சதவீதம் உயர்ந்துள்ளது.
1 min
December 02, 2025
Dinamani Chennai
ஜெர்மனி, தென்னாப்பிரிக்கா, நியூசிலாந்து அசத்தல் வெற்றி
எஃப்ஐஎச் ஜூனியர் ஆடவர் உலகக் கோப்பை ஹாக்கிப் போட்டியில் நடப்புச் சாம்பியன் ஜெர்மனி, தென்னாப்பிரிக்க அணிகள் அசத்தல் வெற்றி பெற்றன.
1 min
December 02, 2025
Translate
Change font size

