Poging GOUD - Vrij
அரசியல் சூழலால் குறைந்த வாக்கு சதவீதம்!
Dinamani Chennai
|April 29, 2024
மக்களவைத் தோ்தலில் தமிழகத்தில் வாக்குப் பதிவு குறைந்ததற்கு அரசியல், சமூக உளவியல் உள்ளிட்டவை காரணங்களாக உள்ளதாக அரசியல் நோக்கா்கள் கருதுகின்றனா்.
-
தமிழகத்தில் ஏப். 19-இல் நடந்த மக்களவைத் தோ்தலில் 69.72 சதவீத வாக்குகள் பதிவானதாக இந்திய தோ்தல் ஆணையம் அறிவித்தது. கடந்த 2019 மக்களவைத் தோ்தலுடன் ஒப்பிடும்போது, இது 2.74 சதவீதம் குறைவானதாகும்.
2.74 சதவீதம் குறைவானது என மேலோட்டமாகத் தெரிந்தாலும், குறைந்தபட்சம் 5 சதவீதம் வரை குறைவு என்பதுதான் உண்மை. ஏனெனில் புதிய வாக்காளா்கள் குறைந்தபட்சம் 3 சதவீதம் போ் பட்டியலில் இடம்பிடித்துள்ளனா். முதல் தலைமுறை வாக்காளா்களில் 90 சதவீதம் போ் எப்போதும் வாக்களிக்க ஆா்வம் காட்டுவதால் அவா்களது வாக்குகள் குறைய வாய்ப்பு இல்லை.
அரசியல் காரணங்கள்: 5 சதவீதம் வரை வாக்குகள் குறைய அரசியல் ரீதியாக பல்வேறு காரணங்கள் உள்ளன. கடந்த 2019 மக்களவைத் தோ்தலின்போது அதிமுக-திமுக அணிகள் இடையே இருந்த போட்டி, இந்த மக்களவைத் தோ்தலில் இல்லை என்பதே உண்மை.
10 ஆண்டுகள் ஆட்சியில் இல்லாத திமுகவுக்கும், 2017-இல் ஆா்.கே.நகரில் டெபாசிட் இழந்த திமுக கூட்டணிக் கட்சிகளுக்கும் 2019 மக்களவைத் தோ்தலில் வெற்றி பெற்றே ஆக வேண்டும் என்ற நெருக்கடி இருந்தது. அதேபோல, மத்தியில் மீண்டும் காங்கிரஸ் கூட்டணி வெற்றி பெற்று ராகுல் காந்தி பிரதமராவாா் என்ற உற்சாகம் திமுக கூட்டணிக் கட்சிகளிடம் இருந்தது.
அதேபோல, மத்திய, மாநில ஆளும் கட்சிகள் இடம்பெற்ற அதிமுக, பாஜக, பாமக, தேமுதிக கூட்டணி பலமாக இருந்தது. இதனால், திமுக-அதிமுக அணிகளுக்கு இடையே சம போட்டி இருக்கும் என்ற தோற்றமும் இருந்தது. இதனால், திமுக-அதிமுக கூட்டணிக் கட்சிகள் தங்களது முழு பலத்தைப் பயன்படுத்தி கூடுதல் வாக்குகளைத் திரட்டின.
Dit verhaal komt uit de April 29, 2024-editie van Dinamani Chennai.
Abonneer u op Magzter GOLD voor toegang tot duizenden zorgvuldig samengestelde premiumverhalen en meer dan 9000 tijdschriften en kranten.
Bent u al abonnee? Aanmelden
MEER VERHALEN VAN Dinamani Chennai
Dinamani Chennai
‘எஸ்ஐஆர்’ விவாதத்துக்கு மத்திய அரசு மறுக்கவில்லை
வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் (எஸ்ஐஆர்) மீதான விவாதத்துக்கு மத்திய அரசு மறுப்பு தெரிவிக்கவில்லை என நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு மாநிலங்களவையில் திங்கள்கிழமை தெரிவித்தார்.
1 min
December 02, 2025
Dinamani Chennai
பொதுப்பயன்பாட்டு நிலத்தை விற்பனை செய்த வழக்கு: அதிகாரிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு
கோவையில் பொது பயன்பாட்டுக்காக ஒதுக்கப்பட்ட நிலத்தை வீட்டுமனைகளாக மாற்றி விற்பனை செய்த கூட்டுறவு சங்க அதிகாரிகள் மற்றும் உடந்தையாக இருந்த துறை அதிகாரிகளுக்கு எதிராக தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
1 min
December 02, 2025
Dinamani Chennai
ஷேக் ஹசீனா, பிரிட்டன் எம்.பி.க்கு சிறைத் தண்டனை
நில மோசடி வழக்கில், வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கு 5 ஆண்டுகளும், அவரின் உறவினரும், பிரிட்டன் எம்.பி.யுமான துலிப் சித்திக்குக்கு 2 ஆண்டுகளும் சிறைத் தண்டனை விதித்து டாக்கா சிறப்பு நீதிமன்றம் திங்கள்கிழமை தீர்ப்பளித்தது.
1 min
December 02, 2025
Dinamani Chennai
காங்கிரஸ் குழு முதல்வரை நாளை சந்திக்க திட்டம்
திமுகவுடன் தொகுதிப் பங்கீடு குறித்து பேச்சு வார்த்தை நடத்தவுள்ள காங்கிரஸ் குழுவினர், அக்கூட்டணி தலைவ ரும், முதல்வருமான மு.க. ஸ்டா லினை புதன்கிழமை (டிச.3) சந் தித்து பேசவுள்ளதாக தகவல் வெளி யாகியுள்ளது.
1 min
December 02, 2025
Dinamani Chennai
பல்கலைக்கழக தேர்வுகள் ஒத்திவைப்பு
மழை எச்சரிக்கை காரணமாக சென்னை பல்கலைக்கழகம், அண்ணா பல்கலைக்கழகங்களில் செவ்வாய்க்கிழமை (டிச.2) நடைபெறவிருந்த தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன.
1 min
December 02, 2025
Dinamani Chennai
அசோக் லேலண்ட் விற்பனை 29% உயர்வு
இந்தியாவின் முன்னணி வாகன நிறுவனங்களில் ஒன்றான அசோக் லேலண்டின் மொத்த விற்பனை கடந்த நவம்பர் மாதத்தில் 29 சதவீதம் உயர்ந்துள்ளது.
1 min
December 02, 2025
Dinamani Chennai
ஜெர்மனி, தென்னாப்பிரிக்கா, நியூசிலாந்து அசத்தல் வெற்றி
எஃப்ஐஎச் ஜூனியர் ஆடவர் உலகக் கோப்பை ஹாக்கிப் போட்டியில் நடப்புச் சாம்பியன் ஜெர்மனி, தென்னாப்பிரிக்க அணிகள் அசத்தல் வெற்றி பெற்றன.
1 min
December 02, 2025
Dinamani Chennai
வாட்ஸ்ஆப், டெலிகிராம் பயன்படுத்தும் கைபேசிகளில் பதிவு எண்ணின் ‘சிம் கார்டு’ இருப்பது கட்டாயம்
மத்திய அரசு புதிய உத்தரவு
1 min
December 02, 2025
Dinamani Chennai
அதானி நிறுவனத்தில் எல்ஐசி முதலீடு: நாடாளுமன்றத்தில் நிர்மலா சீதாராமன் விளக்கம்
அதானி குழும நிறுவனங்களில் முதலீடு செய்யுமாறு இந்திய ஆயுள் காப்பீட்டு நிறுவனத்துக்கு (எல்ஐசி) நிதியமைச்சகம் எந்த ஆலோசனையையும் வழங்கவில்லை என்று நாடாளுமன்றத்தில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் எழுத்துமூலம் விளக்கமளித்தார்.
1 min
December 02, 2025
Dinamani Chennai
நாட்டை விட்டு வெளியேறுங்கள்
வெனிசுலா அதிபருக்கு டிரம்ப் 'உத்தரவு'
1 min
December 02, 2025
Translate
Change font size

