Ga onbeperkt met Magzter GOLD

Ga onbeperkt met Magzter GOLD

Krijg onbeperkte toegang tot meer dan 9000 tijdschriften, kranten en Premium-verhalen voor slechts

$149.99
 
$74.99/Jaar

Poging GOUD - Vrij

தமிழ் பயிற்றுமொழி ஆகவேண்டும்!

Dinamani Chennai

|

January 06, 2024

உலக அளவில் அதிக மக்கள் பேசக்கூடிய மொழிகளில் தமிழ் 15-ஆம் இடத்தில் இருக்கிறதென்றால் அதற்குக் காரணம் இலங்கைத் தமிழா்கள்தாம். தமிழ்நாட்டுத் தமிழா்களைவிட இலங்கைத் தமிழா்கள் மொழியுணா்வு மிக்கவா்கள்.

தமிழ் பயிற்றுமொழி ஆகவேண்டும்!

அதனால்தான் வெளிநாடுகளில் அவா்கள் பரவலாக வாழ்ந்தாலும் தங்கள் மொழியை விட்டுவிடாமல் தங்கள் பிள்ளைகளுக்கும் அதனைக் கற்றுக்கொடுப்பதோடு, அங்கெல்லாம் இயங்கிக்கொண்டிருக்கக்கூடிய பல தமிழ் அமைப்புகளோடு தொடா்பு வைத்திருப்பவா்களாகவும் விளங்குகிறாா்கள் இன்று உலகமெங்கும் வாழ்கின்ற ஈழத் தமிழா்களால்தான் தமிழ் பற்றியும் தமிழா்கள் பற்றியும் மேல் நாட்டவா்கள் நன்கு அறியக்கூடிய சூழ்நிலை ஏற்பட்டிருக்கிறது. ‘தேமதுரத் தமிழோசை உலகமெலாம் பரவும் வகை செய்தல் வேண்டும்’ என்கிற மகாகவி பாரதியாரின் கவிதை வரிக்கு உயிரூட்டிக் கொண்டிருப்பவா்கள் அவா்கள்தாம்.  இலங்கைத் தமிழா்களுக்கு ஆதரவளிக்கும் நாடுகளில் கனடா குறிப்பிடத் தகுந்த நாடாகும்.

தைப்பொங்கல் பிறக்கின்ற தை மாதத்தை ‘தமிழ்ச் சம்பிரதாய மாதம்’ என்ற பெயரில் கனடா நாட்டு அரசாங்கமே தமிழ்களோடு சோ்ந்து கொண்டாடி வருகின்றது. கனடா நாட்டின் பிரதமரே ஆண்டுதோறும் அந்த விழாவில் கலந்து கொள்கிறாா் என்றால் இதைவிடத் தமிழுக்கும் தமிழா்களுக்கும் வேறென்ன பெருமை வேண்டும்?  மேல் நாடுகளில் வேறெந்தநாடு தமிழா்களுக்கு இப்படிச் சிறப்பளிக்கிறது? இந்தச் சிறப்பெல்லாம் யாரால் கிட்டியது? ஈழத் தமிழா்களால்தானே?  

இலங்கைக் கவிஞா்கள் பலரும் தமிழ்மொழி குறித்து உணா்ச்சிகரமாகக் கவிதைகளை வடித்துள்ளாா்கள். உதாரணமாக,  சாம்போதும் தமிழ்படித்துச் சாக வேண்டும்  தமிழ்மணந்து என்னுடலம் வேக வேண்டும்  பாடையிலே படுத்தூரைச் சுற்றும் போதும்  பைந்தமிழே என்காதில் ஒலிக்க வேண்டும்  ஓடையிலே என் சாம்பல் கலக்கும் போதும்  ஒண்டமிழே சலசலத்(து) ஓட வேண்டும்”  என்று பாடிய சச்சிதானந்தன் என்ற கவிஞரும் இலங்கையைச் சோ்ந்தவா்தான். உணா்ச்சிக் கவிஞா் காசி ஆனந்தனைப் போல் எத்தனையோ கவிஞா்கள் தமிழ் நாட்டுக் கவிஞா்களுக்கு சவால் விடும் வண்ணம் சிறப்பாகப் பாடியிருக்கிறாா்கள்.  அது மட்டுமல்ல, உலக மொழிகளுக்கெல்லாம் தாய்மொழி தமிழ்தான் என்று 85 ஆண்டுகளுக்கு முன் மேற்கத்திய, கிழக்கத்திய நாடுகளுக்குச் சென்று சொற்பொழிவு மூலம் தன் கருத்தை நிலைநாட்டியவா் நல்லூா் ஞானப்பிரகாச சுவாமிகள் ஆவாா். இவருக்கு 72 மொழிகள் எழுதப்படிக்கத் தெரியும். அவற்றில் 18 மொழிகளில் சொற்பொழிவாற்றக்கூடிய பெரும்புலமை பெற்றவா்.

MEER VERHALEN VAN Dinamani Chennai

Dinamani Chennai

Dinamani Chennai

‘எஸ்ஐஆர்’ விவாதத்துக்கு மத்திய அரசு மறுக்கவில்லை

வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் (எஸ்ஐஆர்) மீதான விவாதத்துக்கு மத்திய அரசு மறுப்பு தெரிவிக்கவில்லை என நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு மாநிலங்களவையில் திங்கள்கிழமை தெரிவித்தார்.

time to read

1 min

December 02, 2025

Dinamani Chennai

Dinamani Chennai

பொதுப்பயன்பாட்டு நிலத்தை விற்பனை செய்த வழக்கு: அதிகாரிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

கோவையில் பொது பயன்பாட்டுக்காக ஒதுக்கப்பட்ட நிலத்தை வீட்டுமனைகளாக மாற்றி விற்பனை செய்த கூட்டுறவு சங்க அதிகாரிகள் மற்றும் உடந்தையாக இருந்த துறை அதிகாரிகளுக்கு எதிராக தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

time to read

1 min

December 02, 2025

Dinamani Chennai

Dinamani Chennai

ஷேக் ஹசீனா, பிரிட்டன் எம்.பி.க்கு சிறைத் தண்டனை

நில மோசடி வழக்கில், வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கு 5 ஆண்டுகளும், அவரின் உறவினரும், பிரிட்டன் எம்.பி.யுமான துலிப் சித்திக்குக்கு 2 ஆண்டுகளும் சிறைத் தண்டனை விதித்து டாக்கா சிறப்பு நீதிமன்றம் திங்கள்கிழமை தீர்ப்பளித்தது.

time to read

1 min

December 02, 2025

Dinamani Chennai

காங்கிரஸ் குழு முதல்வரை நாளை சந்திக்க திட்டம்

திமுகவுடன் தொகுதிப் பங்கீடு குறித்து பேச்சு வார்த்தை நடத்தவுள்ள காங்கிரஸ் குழுவினர், அக்கூட்டணி தலைவ ரும், முதல்வருமான மு.க. ஸ்டா லினை புதன்கிழமை (டிச.3) சந் தித்து பேசவுள்ளதாக தகவல் வெளி யாகியுள்ளது.

time to read

1 min

December 02, 2025

Dinamani Chennai

பல்கலைக்கழக தேர்வுகள் ஒத்திவைப்பு

மழை எச்சரிக்கை காரணமாக சென்னை பல்கலைக்கழகம், அண்ணா பல்கலைக்கழகங்களில் செவ்வாய்க்கிழமை (டிச.2) நடைபெறவிருந்த தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன.

time to read

1 min

December 02, 2025

Dinamani Chennai

அசோக் லேலண்ட் விற்பனை 29% உயர்வு

இந்தியாவின் முன்னணி வாகன நிறுவனங்களில் ஒன்றான அசோக் லேலண்டின் மொத்த விற்பனை கடந்த நவம்பர் மாதத்தில் 29 சதவீதம் உயர்ந்துள்ளது.

time to read

1 min

December 02, 2025

Dinamani Chennai

Dinamani Chennai

ஜெர்மனி, தென்னாப்பிரிக்கா, நியூசிலாந்து அசத்தல் வெற்றி

எஃப்ஐஎச் ஜூனியர் ஆடவர் உலகக் கோப்பை ஹாக்கிப் போட்டியில் நடப்புச் சாம்பியன் ஜெர்மனி, தென்னாப்பிரிக்க அணிகள் அசத்தல் வெற்றி பெற்றன.

time to read

1 min

December 02, 2025

Dinamani Chennai

வாட்ஸ்ஆப், டெலிகிராம் பயன்படுத்தும் கைபேசிகளில் பதிவு எண்ணின் ‘சிம் கார்டு’ இருப்பது கட்டாயம்

மத்திய அரசு புதிய உத்தரவு

time to read

1 min

December 02, 2025

Dinamani Chennai

Dinamani Chennai

அதானி நிறுவனத்தில் எல்ஐசி முதலீடு: நாடாளுமன்றத்தில் நிர்மலா சீதாராமன் விளக்கம்

அதானி குழும நிறுவனங்களில் முதலீடு செய்யுமாறு இந்திய ஆயுள் காப்பீட்டு நிறுவனத்துக்கு (எல்ஐசி) நிதியமைச்சகம் எந்த ஆலோசனையையும் வழங்கவில்லை என்று நாடாளுமன்றத்தில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் எழுத்துமூலம் விளக்கமளித்தார்.

time to read

1 min

December 02, 2025

Dinamani Chennai

Dinamani Chennai

நாட்டை விட்டு வெளியேறுங்கள்

வெனிசுலா அதிபருக்கு டிரம்ப் 'உத்தரவு'

time to read

1 min

December 02, 2025

Translate

Share

-
+

Change font size