Prøve GULL - Gratis
பகைமை வேண்டாம்!
Dinamani Virudhunagar
|August 02, 2025
போர் என்பது பேரழிவு, பொருளாதார நாசத்தைத் தரும் என்பது எல்லா நாட்டுத் தலைவர்களுக்கும் தெரியும். இது போருக்கான யுகம் அல்ல; பேச்சுவார்த்தை மூலம் பிரச்னைக்கு தீர்வு காண ஒவ்வொரு தலைவரும் முயல வேண்டும் என்று நமது பிரதமரும் உலகத்தை நோக்கி வலியுறுத்தியுள்ளார்.
பத்தாம் வகுப்பு படித்த போது, ஒரு நாள் சமூக அறிவியல் ஆசிரியர் முதலாம், இரண்டாம் உலகப் போர்கள் பற்றி பாடம் எடுத்துக் கொண்டிருந்தார். 1914 முதல் 1918 வரை முதல் உலகப் போர், 1939 முதல் 1945 வரை இரண்டாம் உலகப் போர் நடைபெற்றன என்று சொல்லிக்கொண்டிருந்தபோது, இப்படி நான்கு, ஆறு ஆண்டுகள் வரை ஒரு போர் தொடருமா என நாங்கள் ஆச்சரியமாக கேட்டுக் கொண்டிருந்தோம்.
ஒரு மாணவி மட்டும் எழுந்து, அதற்குப் பிறகு ஏன் மூன்றாம் உலகப் போர் ஏற்படவில்லை? என்று ஆசிரியரை நோக்கி கேள்வி எழுப்பினாள். இரண்டாம் உலகப் போர் ஏற்படுத்திய அழிவுக்குப் பிறகு போரே வேண்டாம் என்ற நிலைப்பாட்டை நாடுகள் எடுக்கத் தொடங்கின. மேலும், நாடுகளிடையே ஏற்படும் பிணக்கைப் போக்க ஐ.நா. போன்ற அமைப்புகள் கடும் பிரயத்தனம் மேற்கொள்கின்றன. அதனால், இனி மூன்றாம் உலகப் போர் ஏற்படாது என்று 1990-இல் எங்களுக்கு பாடம் எடுத்த சமூக அறிவியல் ஆசிரியர் சொன்னார். அவர் அன்று சொன்ன சொற்களை, போர் மேகங்களோடு சுழலும் இன்றைய உலகோடு பொருத்திப் பார்க்கும் போது கவலை தோன்றுகிறது.
போர் முறைகள் காலத்துக்கு ஏற்ப மாறிக்கொண்டே வருகின்றன. இன்றைய போர்க்களங்களை நம்முன் கொண்டுவரும் காணொலிகள் எல்லாம் நெஞ்சைப் பதற வைக்கின்றன. நிவாரண உதவிகள் வழங்கும் வண்டிகளை மக்கள் சூழ்ந்து கொண்டு முட்டி மோதுவதைக் காணும் போது உள்ளம் பதை பதைக்கிறது. குழந்தைகள் முதல் முதியவர்கள்வரை உணவுக்காக அடித்துக் கொள்வதைக் காண முடியவில்லை.
சில நாள்களுக்கு முன்பு, தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்ட ஒரு செய்தியில், சிறுவன் ஒருவன் உணவுக்காக தாங்கள் படும் அவல நிலையை எடுத்துச் சொல்ல கீழே கிடந்த மண்ணை எடுத்து வாயில் போட்டு, எங்களுக்கு போதுமான அளவு உணவு இல்லை; இனி மண்ணை எடுத்து வாயில் போட்டுக் கொண்டு சாக வேண்டியதுதான் என்று அழுது கொண்டே கூறினான்.
உணவுக்கே அடிதடி எனும் போது, கல்வியைப் பற்றி அவர்கள் எவ்வாறு சிந்திக்க இயலும்? போரில் ஏற்பட்ட மனித இழப்புகளையும் அழிவுகளையும் கண்டு இனி போர் புரிவதில்லை என்ற முடிவுக்கு வந்த அசோக சக்கரவர்த்தியைப் பற்றி நாம் வாசித்து இருக்கிறோம். தற்போது, அது போன்ற போர்ப் புறக்கணிப்பை தலைவர்கள் அல்லது நாட்டின் அதிபர்கள் ஏற்படுத்துவார்களா என பொதுமக்கள் எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள்.
Denne historien er fra August 02, 2025-utgaven av Dinamani Virudhunagar.
Abonner på Magzter GOLD for å få tilgang til tusenvis av kuraterte premiumhistorier og over 9000 magasiner og aviser.
Allerede abonnent? Logg på
FLERE HISTORIER FRA Dinamani Virudhunagar
Dinamani Virudhunagar
முதல் பெண்ணாக ஆசை
காஷ்மீரைச் சேர்ந்த பத்து வயதாகும் அதீகா மிர். 'ஃபார்முலா 1' (எஃப் 1) அகாதெமியின் 'டிஸ்கவர் யுவர் டிரைவ்' திட்டத்துக்கு உலகளவில் தேர்ந்தெடுக்கப்பட்ட மூன்று பெண்களில் ஒருவர், இதுவரை இப்படித் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களில் வயது குறைந்தவரும் இவர்தான்.
2 mins
November 02, 2025
Dinamani Virudhunagar
புறநானூற்றில் தந்தை-மகன் சண்டை
இலக்கியம் என்பது வாழ்வை எதிரொலிப்பதாகப் படைக்கப்படுவது! அதில் கற்பனை, உவமை, அணி இலக்கணங்கள் எல்லாம் சேரப் படைக்கப்படுங்கால் அவற்றை விஞ்சிய மனித வாழ்வின் பதிவே காலக்கண்ணாடியாக நவில்தொறும் நயப்பாடுடைய இறவாப் பதிவிறக்கமாக எப்போதும் ஒளிர்வதாகும்.
1 min
November 02, 2025
Dinamani Virudhunagar
தங்கம் பவுனுக்கு ரூ.80 உயர்வு
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சனிக்கிழமை பவுனுக்கு ரூ.80 உயர்ந்து ரூ.90,480-க்கு விற்பனையானது.
1 min
November 02, 2025
Dinamani Virudhunagar
நடமாடும் உயிர்க்காவலர்
எனது இருபத்தைந்து வயதில் உயிர்காக்கும் முதலுதவி சேவையைத் தொடங்கி, நாற்பது ஆண்டுகளாக இடைவிடாது இயங்கி வருகிறேன்\" என்கிறார் ஸ்ரீரங்கத்தைச் சேர்ந்த அறுபத்தைந்து வயதான டி. சீனிவாச பிரசாத்.
2 mins
November 02, 2025
Dinamani Virudhunagar
கடல் கடந்தும் தமிழ்...
புதுக்கோட்டை மாவட்டத்தில் 1924-இல் பிறந்த முருகு. சுப்ரமணியம் 1950-களில் மலேசியாவுக்குச் சென்றார். மலேசியா, சிங்கப்பூரில் வெளியாகும் தமிழ் நாளிதழ்களில் ஆசிரியராகப் பணியாற்றிய இவர், கடல் கடந்து தமிழ் வளர்த்த பத்திரிகையாளர். இவரது குடும்பத்தினரது முன்னெடுப்பில், கண்ணதாசன் அறவாரியம், மலேசிய எழுத்தாளர் சங்கம் ஆகியன இணைந்து அவரது நூற்றாண்டு விழாவை மலேசியாவில் அண்மையில் கொண்டாடியது.
1 mins
November 02, 2025
Dinamani Virudhunagar
குருவின் கனவு நிறைவேற வேண்டும்: தருமபுரம் ஆதீனம்
'தருமபுரம் ஆதீனம் 26-ஆவது குருமகா சந்நிதானத்தின் கனவு நிறைவேற வேண்டும்' என தருமபுரம் ஆதீனம் 27-ஆவது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் குறிப்பிட்டார்.
1 mins
November 02, 2025
Dinamani Virudhunagar
ஊடல் கொள்ள நேரமில்லை!
சங்க இலக்கியங்கள் மனித வாழ்வின் அடையாளங்கள்; உயர் வாழ்வை உணர்த்தும் வழிகாட்டிகள். விருந்தோம்பல் உலகம் முழுவதற்குமான பொதுப் பண்புகளில் ஒன்று. ஆனால், தமிழ்நெறி 'இல்வாழ்வது என்பதே விருந்தோம்புவதற்கே' என்ற கொள்கையை உடையது. தமிழன் இல்வாழ்வு என்று கூறவில்லை. 'இல்லறம்' என்றான். இல்லத்திலிருந்து செய்யும் சீரிய அறம் தான் விருந்தோம்பல்.
2 mins
November 02, 2025
Dinamani Virudhunagar
கோமாரிக்கல்
கால்நடைகளின் காவலன்!
1 mins
November 02, 2025
Dinamani Virudhunagar
உள்ளாட்சி அமைப்புகளுக்கு அதிகாரப் பகிர்வை மறுக்கும் மாநிலங்கள்
பிரதமரின் பொருளாதார ஆலோசனைக் குழுத் தலைவர் கவலை
1 min
November 02, 2025
Dinamani Virudhunagar
கவனம் ஈர்த்த பயோபிக் சினிமாக்கள்!
'பயோபிக்' என்ற வார்த்தையைச் சொன்னதும் நம் நினைவுக்குச் சட்டென வருவது பாலிவுட்தான். அந்தளவிற்கு எண்ணில் அடங்காத அளவிற்கு பயோபிக் திரைப்படங்களை எடுத்து பாலிவுட் சோபிக்கவும் செய்திருக்கிறது. சோதிக்கவும் செய்திருக்கிறது. இந்திய சினிமாவிலேயே தொடர்ந்து அதிகமாக பயோபிக் திரைப்படங்கள் வருவது பாலிவுட்டில்தான்.
2 mins
November 02, 2025
Translate
Change font size
