Gå ubegrenset med Magzter GOLD

Gå ubegrenset med Magzter GOLD

Få ubegrenset tilgang til over 9000 magasiner, aviser og premiumhistorier for bare

$149.99
 
$74.99/År

Prøve GULL - Gratis

சட்டங்கள் திருத்தப்பட வேண்டும்!

Dinamani Tiruvarur

|

November 22, 2025

மத்திய பிரதேசத்தில் இருமல் மருந்து உட்கொண்ட குழந்தைகள் உயிரிழந்த நிகழ்வுக்குப் பிறகு, இந்தச் சம்பவத்தில் தொடர்புடைய நீர்ம மருந்துகள் (சிரப்) வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படவில்லை என மத்திய சுகாதார, குடும்ப நல அமைச்சகத்தின் கீழ் செயல்படும் மத்திய மருந்து தரக் கட்டுப்பாட்டு அமைப்பு உலக சுகாதார மையத்துக்கு அனுப்பிய அறிக்கையில் கூறியிருந்தது. அதன் பின்பும் உலக சுகாதார மையம் உலக நாடுகள் தங்களிடம் இந்த மருந்துகளின் இருப்பு குறித்து ஆய்வு செய்யுமாறு அறிவுறுத்தியிருந்தது.

- பேராசிரியர் தி. ஜெயராஜசேகர்

2022-ஆம் ஆண்டு காம்பியா மற்றும் உஸ்பெகிஸ்தானிலும், 2023-ஆம் ஆண்டு கேமரூன் நாட்டிலும் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட இருமல் மருந்துகளை உட்கொண்டதால் பத்துக்கும் மேற்பட்ட குழந்தைகள் உயிரிழந்தனர். குழந்தைகளின் மரணங்களும் நீர்ம மருந்துகளில் கண்டறியப்பட்ட உறுதிப்படுத்தப்பட்ட மாசுகளும் இந்திய மருந்து தயாரிப்பு ஒழுங்குமுறை கண்காணிப்பில் தீவிர குறைபாடு இருப்பதையே காட்டுவதாக வல்லுநர்கள் கூறுகின்றனர்.

டைஎத்திலின் கிளைகோலின் நச்சுத்தன்மை விளைவுகள் முழுமையாகப் புரிந்து கொள்ளப்படாத நிலையில், அதை உட்கொண்டதாகக் கருதப்படும் நோயாளிகளுக்கான நோய் அறிதல் மற்றும் சிகிச்சை முறைகள் சவாலாக உள்ளன. இதனால், சிகிச்சை அளிப்பதிலும் நச்சுக்கான மாற்று மருந்து வழங்குவதிலும் தாமதம் ஏற்படுகிறது. அறியாமையையும் அக்கறையின்மையையும் அகற்றி டைஎத்திலின் கிளைகோல் நச்சுத்தன்மை பாதிப்புக்கு உள்ளான நோயாளிகள் குறித்த விழிப்புணர்வை மருத்துவர்களுக்கு ஏற்படுத்துவது அரசின் கடமை. இதற்கு மருந்து தரக் கட்டுப்பாட்டு அமைப்பை உடனடியாக வலுப்படுத்துவது அவசியம்.

இந்தியாவின் மருந்துச் சந்தையில் சில நிறுவனங்கள் ஒப்பந்த உற்பத்தி நடைமுறையின் கீழ் உற்பத்திச் செலவைக் குறைக்கும் வகையில், மலிவான நச்சுத்தன்மையுள்ள கரப்பான், கரை திரவங்கள், பொதி பொருள்கள் போன்ற மாற்றுகளைப் பயன்படுத்துகின்றன.

FLERE HISTORIER FRA Dinamani Tiruvarur

Dinamani Tiruvarur

Dinamani Tiruvarur

மெளனம் கலைக்கப்பட வேண்டும்!

விற்று, வாங்கும் பொருளாக வாக்கு மாறியபோது, எந்த அரசியல் கட்சியும், எந்தத் தலைவரும் கவலை கொள்ளவில்லை. ஆனால், இன்று வாக்கு திருட்டு என்றும் வாக்குப் பறிப்பு என்றும் முழக்கங்கள் அரசியல் களத்தில் ஓங்கி ஒலிக்கின்றன. இந்த முழக்கங்களால் அடுத்த தேர்தலில் கூடுதலாக தங்கள் கட்சிகளுக்கு வாக்குகளைப் பெறலாமே தவிர வாக்கைப் பாதுகாக்க முடியுமா என்பதுதான் பெரும் கேள்வி.

time to read

3 mins

December 02, 2025

Dinamani Tiruvarur

இடைவிடாத மழை: தத்தளிக்கும் சென்னை

4 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை

time to read

2 mins

December 02, 2025

Dinamani Tiruvarur

Dinamani Tiruvarur

நமீபியாவை பந்தாடிய இந்திய மகளிர் அணி

ஜூனியர் மகளிர் உலகக் கோப்பை ஹாக்கி போட்டியில் இந்தியா தனது முதல் ஆட்டத்தில் 13-0 கோல் கணக்கில் நமீபியாவை திங்கள்கிழமை அபார வெற்றி கண்டது.

time to read

1 min

December 02, 2025

Dinamani Tiruvarur

அசோக் லேலண்ட் விற்பனை 29% உயர்வு

இந்தியாவின் முன்னணி வாகன நிறுவனங்களில் ஒன்றான அசோக் லேலண்டின் மொத்த விற்பனை கடந்த நவம்பர் மாதத்தில் 29 சதவீதம் உயர்ந்துள்ளது.

time to read

1 min

December 02, 2025

Dinamani Tiruvarur

இரு தரப்புக்கும் பொதுவாக செயல்பட வேண்டும்

மாநிலங்களவைத் தலைவரிடம் கார்கே வலியுறுத்தல்

time to read

1 min

December 02, 2025

Dinamani Tiruvarur

திருவண்ணாமலை மலை மீது நாளை மகா தீபம்

மருத்துவ வசதிகளை அறிய 'க்யூஆர்' குறியீடு

time to read

1 mins

December 02, 2025

Dinamani Tiruvarur

Dinamani Tiruvarur

அமைச்சர் மன்சுக் மாண்டவியா நாளை ஆலோசனை

உள்நாட்டு கால்பந்து போட்டிகளுக்கான பிரச்னைகள்

time to read

1 min

December 02, 2025

Dinamani Tiruvarur

நாகை மாவட்டத்தில் நீரில் மூழ்கிய 50,000 ஏக்கர் நெற்பயிர்கள்

விவசாயிகள் கடும் பாதிப்பு

time to read

1 min

December 01, 2025

Dinamani Tiruvarur

மகளிர் இடஒதுக்கீடு மசோதா அமல் குறித்து நாடாளுமன்றத்தில் விவாதிக்க வேண்டும்

நாடாளுமன்றம், சட்டப்பேரவைகளில் பெண்களுக்கு 33 சதவீத இடஒதுக்கீடு வழங்க வகை செய்யும் மசோதா நிறைவேற்றப்பட்ட நிலையில், அது எப்போது அமலுக்கு வரும் என்பது குறித்து குளிர்கால கூட்டத் தொடரில் விவாதிக்க வேண்டும் என்று நாடாளுமன்ற அதிமுக குழுத் தலைவர் மு. தம்பிதுரை வலியுறுத்தினார்.

time to read

1 min

December 01, 2025

Dinamani Tiruvarur

நீதிபதிகள் மாறினாலும் தீர்ப்புகளை நிராகரிக்கக் கூடாது

உச்சநீதிமன்ற நீதிபதி பி.வி.நாகரத்னா

time to read

1 mins

December 01, 2025

Listen

Translate

Share

-
+

Change font size