Prøve GULL - Gratis

துறந்தார் பெருமை போற்றுதும்!

Dinamani Tiruvarur

|

July 09, 2025

சிந்தையாலும் சொல்லாலும் செயலாலும் எவ்வுயிர்க்கும் தீங்கு கருதாது இருப்பதோடு எல்லாவுயிரும் இன்புற்றிருப்பதற்காக தன் வாழ்வைத் தகுதிப்படுத்திக் கொள்வதே மெய்த்துறவின் அடிப்படை. எவ்வுயிரையும் தம்முயிர்போல் எண்ணி உள்ளே ஒத்துரிமை உடையவராய் உவக்கின்றவர் யாரோ அவரே மெய்த்துறவி.

- அருணன் கபிலன்

தமிழ்மரபு காட்டுகிற அறங்கள் இரண்டனுள் ஒன்று இல்லறம்; மற்றொன்று துறவறம். இல்லறம் துறவறத்துக்கான நல்வழி. துறவை நேரடியாக மேற்கொள்வோரும் உளர்; இல்லறத்தின் பயன்துய்த்துப் பின்னர் துறவறம் சிறந்தவரும் உளர்.

துறவு மார்க்க ஞானம் என்பது பொன்னில் பதித்த ரத்தினம் ஒக்கும்; இல்லற மார்க்க ஞானமானது இரும்பில் பதித்த ரத்தினம் ஒக்கும் என்பர் ஞானியர்.

துறவு வாழ்வு மனிதனின் ஆறாவது புலனாகிய மனதை அடக்கும் வித்தை. மனம் பற்றுகளால் துன்பத்தில் வீழும் போது, அதை உறுதி என்னும் கடிவாளத்தால் பிடித்து நிறுத்திப் பழக்குவதே சரியான துறவுப் பயிற்சியாம். இதற்கு யோகம் என்ற மற்றொரு பெயரும் உண்டு. இந்தப் பயிற்சியை சிலர் தனியிடங்களிலிருந்து கண்ணை மூடிக்கொண்டு பழகுகிறார்கள். வேறுசிலர் மூச்சைக் கட்டியும் அவயவங்களைப் பலவாறு திருப்பியும் பழகுகிறார்கள்: தனியே இருந்து ஜபம் செய்து பார்க்கிறார்கள்.

ஆனால், இவற்றிலெல்லாம் மனம் அடங்கி விடாது. உலகத்தாருடன் கூடி அவர்களைப் போலவே தொழில் செய்து சமூக நடவடிக்கைகளில் ஈடுபட்ட வண்ணமாகவே சஞ்சலத்துக்கு இடங்கொடாதபடி, தன் மனத்தைக் கட்டக்கூடிய திறமைதான் துறவின் வெற்றி, மற்ற முயற்சிகளெல்லாம் வீண். தண்ணீரிலே இருந்தும் ஒட்டாது இருக்கிற தாமரை இலையைத் துறவுக்குத் தகுந்த உவமையாக்குவர்.

எல்லா சமயங்களும் துறவறத்தைச் சுட்டியபோதும், துறவு சமயம் சார்ந்தது அன்று. அது மானுடம் சார்ந்தது; உயிர்க்குலம் சார்ந்தது. மண்ணால் செய்த ஓட்டினையும் பொன்னால் செய்த அணியினை யும் ஒன்றே என்று பற்றற்று நோக்கும் நற்குணமே துறவின் சிறப்பு.

சங்க இலக்கியம் துறவைப் பேசுகிறது. காப்பியங்கள் விவரிக்கின்றன. சன்னியாசம் என்று இந்து மதம் துறவைக் குறிக்கிறது. அருளாளர்கள் பலர் துறவு போற்றியவர்கள். பௌத்தம் புத்தர் பின்பற்றிய துறவைச் சுட்டி நிர்வாணம் என்றும், முழு விடுதலை யைப் பெருந்துறவு அல்லது பரி நிர்வாணம் என்றும் குறிக்கிறது. சமணம் சாரணம் என்கிறது. கிறிஸ்தவத்தில் இயேசுவின் வாழ்க்கையே துறவின் சான்று. இஸ்லாம் இல்லறத்தை மறுக்காது பற்றில்லாப் பிணைப்பு மூலம் துறவுக்கு வழிகாட்டுகிறது.

FLERE HISTORIER FRA Dinamani Tiruvarur

Dinamani Tiruvarur

கோமாரிக்கல்

கால்நடைகளின் காவலன்!

time to read

1 mins

November 02, 2025

Dinamani Tiruvarur

புறநானூற்றில் தந்தை-மகன் சண்டை

இலக்கியம் என்பது வாழ்வை எதிரொலிப்பதாகப் படைக்கப்படுவது! அதில் கற்பனை, உவமை, அணி இலக்கணங்கள் எல்லாம் சேரப் படைக்கப்படுங்கால் அவற்றை விஞ்சிய மனித வாழ்வின் பதிவே காலக்கண்ணாடியாக நவில்தொறும் நயப்பாடுடைய இறவாப் பதிவிறக்கமாக எப்போதும் ஒளிர்வதாகும்.

time to read

1 min

November 02, 2025

Dinamani Tiruvarur

Dinamani Tiruvarur

கடல் கடந்தும் தமிழ்...

புதுக்கோட்டை மாவட்டத்தில் 1924-இல் பிறந்த முருகு. சுப்ரமணியம் 1950-களில் மலேசியாவுக்குச் சென்றார். மலேசியா, சிங்கப்பூரில் வெளியாகும் தமிழ் நாளிதழ்களில் ஆசிரியராகப் பணியாற்றிய இவர், கடல் கடந்து தமிழ் வளர்த்த பத்திரிகையாளர். இவரது குடும்பத்தினரது முன்னெடுப்பில், கண்ணதாசன் அறவாரியம், மலேசிய எழுத்தாளர் சங்கம் ஆகியன இணைந்து அவரது நூற்றாண்டு விழாவை மலேசியாவில் அண்மையில் கொண்டாடியது.

time to read

1 mins

November 02, 2025

Dinamani Tiruvarur

1040-ஆவது சதய விழா: ராஜராஜசோழன் சிலைக்கு மாலை அணிவிப்பு

பெருவுடையார்-பெரியநாயகிக்கு 48 வகை பேரபிஷேகம்

time to read

1 min

November 02, 2025

Dinamani Tiruvarur

கவனம் ஈர்த்த பயோபிக் சினிமாக்கள்!

'பயோபிக்' என்ற வார்த்தையைச் சொன்னதும் நம் நினைவுக்குச் சட்டென வருவது பாலிவுட்தான். அந்தளவிற்கு எண்ணில் அடங்காத அளவிற்கு பயோபிக் திரைப்படங்களை எடுத்து பாலிவுட் சோபிக்கவும் செய்திருக்கிறது. சோதிக்கவும் செய்திருக்கிறது. இந்திய சினிமாவிலேயே தொடர்ந்து அதிகமாக பயோபிக் திரைப்படங்கள் வருவது பாலிவுட்டில்தான்.

time to read

2 mins

November 02, 2025

Dinamani Tiruvarur

Dinamani Tiruvarur

முதல் பெண்ணாக ஆசை

காஷ்மீரைச் சேர்ந்த பத்து வயதாகும் அதீகா மிர். 'ஃபார்முலா 1' (எஃப் 1) அகாதெமியின் 'டிஸ்கவர் யுவர் டிரைவ்' திட்டத்துக்கு உலகளவில் தேர்ந்தெடுக்கப்பட்ட மூன்று பெண்களில் ஒருவர், இதுவரை இப்படித் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களில் வயது குறைந்தவரும் இவர்தான்.

time to read

2 mins

November 02, 2025

Dinamani Tiruvarur

அம்மானை!

அம்மானை என்பது மகளிர் விளையாட்டுகளில் ஒன்று. மூன்று பெண்கள் ஆடும் இவ்விளையாட்டில் கற்களை எறிவதும் பிடிப்பதும் குறிப்பிட்ட தாளகதியில் அமையும் எனவும், அந்தத் தாளத்துக்கு ஏற்றாற்போல பெண்கள் பாடுவது அம்மானைப் பாடல் எனவும் திறனாய்வாளர் குறிப்பிடுவது எண்ணத்தக்கதாகும்.

time to read

1 min

November 02, 2025

Dinamani Tiruvarur

ஊடல் கொள்ள நேரமில்லை!

சங்க இலக்கியங்கள் மனித வாழ்வின் அடையாளங்கள்; உயர் வாழ்வை உணர்த்தும் வழிகாட்டிகள். விருந்தோம்பல் உலகம் முழுவதற்குமான பொதுப் பண்புகளில் ஒன்று. ஆனால், தமிழ்நெறி 'இல்வாழ்வது என்பதே விருந்தோம்புவதற்கே' என்ற கொள்கையை உடையது. தமிழன் இல்வாழ்வு என்று கூறவில்லை. 'இல்லறம்' என்றான். இல்லத்திலிருந்து செய்யும் சீரிய அறம் தான் விருந்தோம்பல்.

time to read

2 mins

November 02, 2025

Dinamani Tiruvarur

உள்ளாட்சி அமைப்புகளுக்கு அதிகாரப் பகிர்வை மறுக்கும் மாநிலங்கள்

பிரதமரின் பொருளாதார ஆலோசனைக் குழுத் தலைவர் கவலை

time to read

1 min

November 02, 2025

Dinamani Tiruvarur

நடமாடும் உயிர்க்காவலர்

எனது இருபத்தைந்து வயதில் உயிர்காக்கும் முதலுதவி சேவையைத் தொடங்கி, நாற்பது ஆண்டுகளாக இடைவிடாது இயங்கி வருகிறேன்\" என்கிறார் ஸ்ரீரங்கத்தைச் சேர்ந்த அறுபத்தைந்து வயதான டி. சீனிவாச பிரசாத்.

time to read

2 mins

November 02, 2025

Translate

Share

-
+

Change font size