Prøve GULL - Gratis

தஞ்சாவூர் - காரைக்கால் இரண்டாவது ரயில் பாதை பணிகள் தொடங்குவது எப்போது?

Dinamani Tiruvarur

|

June 23, 2025

தஞ்சாவூர் - காரைக்கால் இடையே இரண்டாவது ரயில் பாதை அமைக்கும் பணிகள் எப்போது தொடங்கும் என ரயில் பயணிகள் மற்றும் பல்வேறு அமைப்பினரும் எதிர்நோக்கியுள்ளனர்.

- பா.லெனின்

நாகப்பட்டினம், ஜூன் 22:

1861 முதல் 1875 வரை நாகையில் தென்னிந்திய ரயில்வே கம்பெனியின் தலைமை அலுவலகம் செயல்பட்டது. அந்தக் காலத்தில் நாகை - தஞ்சை - திருச்சி இடையே அகல பாதை இருந்தது. ஆனால் தமிழகத்தில் மற்ற பகுதிகளில் ரயில்வே பாதைகள் மீட்டர் கேஜ் (Meter Gauge) பாதைகளாக இருந்ததால், திருச்சி வழியாக தஞ்சை மற்றும் நாகை பகுதிக்கு ரயில்கள் இயக்க முடியவில்லை. இதன் காரணமாக 1875-இல் நாகை - திருச்சி பாதை மீட்டர் கேஜ் பாதையாக மாற்றப்பட்டது. பின்னர், 2006-இல் நாகூர் - தஞ்சை ரயில் பாதை மீண்டும் அகல பாதையாக மாற்றப்பட்டது. 1929 ஆம் ஆண்டுக்குப் பிறகு, நாகையில் செயல்பட்ட ரயில்வே பணிமனை பொன்மலைக்கு மாற்றப்பட்டது.

ரயில் பாதை விரிவாக்கம்

புதுச்சேரி மாநிலம் காரைக்கால் மாவட்டத்தில் 2009-இல் புதிய தனியார் துறைமுகம் அமைக்கப்பட்டு, செயல்பட்டு வருகிறது. இதில் நிலக்கரி, சிமெண்ட், உரம் போன்ற பொருள்கள் இறக்குமதி செய்யப்பட்டு, பல்வேறு பகுதிகளுக்கு அனுப்பப்படுகிறது. இந்த துறைமுகத்திலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருள்களை கையாள்வதற்காக, நாகை - காரைக்கால் இடையே 10 கி.மீ தூரம், நாகை - வேளாங்கண்ணி இடையே 10 கி.மீ தூரம், புதிய அகல ரயில் பாதைகள் 2011-இல் அமைக்கப்பட்டன.

சரக்குப் போக்குவரத்தால் கூடுதல் வருவாய்

FLERE HISTORIER FRA Dinamani Tiruvarur

Dinamani Tiruvarur

அன்புள்ள ஆசிரியருக்கு...

காவிரி டெல்டா மாவட்டங்களில் நெல் கொள்முதல் பணி எல்லா ஆட்சி காலத்திலும் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது ('தேவை அவசர அறிவிப்பு!'-ஆசிரியர் உரை, 28.10.25). இம்முறை மேட்டூர் அணை உரிய நாளில் திறந்து விடப்பட்டு பருவ மழை சாதகமாக இருந்த காரணத்தால் குறுவை சாகுபடியும் அதிக பரப்பளவில் நடந்தது. நெல் கொள்முதலும் எதிர்பார்த்தபடி அதிக அளவில் இருக்கும் எனத் தெரியவந்தது. ஆனால், இயற்கை செய்த சதி டெல்டா மாவட்டங்களில் தீபாவளிக்கு முன் மூன்று நாள்கள் பெய்த பெருமழைதான். தொடர் தீபாவளி விடுமுறை, தீபாவளியின்போது பெய்த மழை, நெல் கொள்முதலில் ஏற்பட்ட சுணக்கம் விவசாயிகளைப் பழிவாங்கி விட்டது. இனியாவது அசிரத்தைக்கொள்ளாமல், நெல் கொள்முதலில் உரிய நடவடிக்கை மேற்கொண்டால் விவசாயம் செழிக்கும்.

time to read

1 min

November 03, 2025

Dinamani Tiruvarur

Dinamani Tiruvarur

சமன்செய்து சீர்தூக்கும் கோல்!

தமிழர்களின் பண்பாட்டையும் தொன்மையையும் விளக்கும் எத்தனையோ விதமான பொருள்கள் இன்றும் பயன்பாட்டில் இருக்கின்றன. அவற்றுள் சில மறைந்து போயின; பல நமக்கு மறந்து போயின. அவ்வாறு மறந்து விட்டாலும் அல்லது இழந்து விட்டாலும் நம் நெஞ்சை விட்டு அவை இன்னும் அகலவில்லை.

time to read

3 mins

November 03, 2025

Dinamani Tiruvarur

அதிக வலிமையுடன் அணுசக்தி மையங்கள் மறுகட்டமைப்பு: ஈரான் அதிபர் உறுதி

அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் சேதம் டைந்த அணுசக்தி மையங்களை முன் பைவிட அதிக வலிமையுடன் மறு கட்டமைக்கவுள்ளதாக ஈரான் ஞாயிற் றுக்கிழமை தெரிவித்தது.

time to read

1 min

November 03, 2025

Dinamani Tiruvarur

கோமாரிக்கல்

கால்நடைகளின் காவலன்!

time to read

1 mins

November 02, 2025

Dinamani Tiruvarur

புறநானூற்றில் தந்தை-மகன் சண்டை

இலக்கியம் என்பது வாழ்வை எதிரொலிப்பதாகப் படைக்கப்படுவது! அதில் கற்பனை, உவமை, அணி இலக்கணங்கள் எல்லாம் சேரப் படைக்கப்படுங்கால் அவற்றை விஞ்சிய மனித வாழ்வின் பதிவே காலக்கண்ணாடியாக நவில்தொறும் நயப்பாடுடைய இறவாப் பதிவிறக்கமாக எப்போதும் ஒளிர்வதாகும்.

time to read

1 min

November 02, 2025

Dinamani Tiruvarur

Dinamani Tiruvarur

கடல் கடந்தும் தமிழ்...

புதுக்கோட்டை மாவட்டத்தில் 1924-இல் பிறந்த முருகு. சுப்ரமணியம் 1950-களில் மலேசியாவுக்குச் சென்றார். மலேசியா, சிங்கப்பூரில் வெளியாகும் தமிழ் நாளிதழ்களில் ஆசிரியராகப் பணியாற்றிய இவர், கடல் கடந்து தமிழ் வளர்த்த பத்திரிகையாளர். இவரது குடும்பத்தினரது முன்னெடுப்பில், கண்ணதாசன் அறவாரியம், மலேசிய எழுத்தாளர் சங்கம் ஆகியன இணைந்து அவரது நூற்றாண்டு விழாவை மலேசியாவில் அண்மையில் கொண்டாடியது.

time to read

1 mins

November 02, 2025

Dinamani Tiruvarur

1040-ஆவது சதய விழா: ராஜராஜசோழன் சிலைக்கு மாலை அணிவிப்பு

பெருவுடையார்-பெரியநாயகிக்கு 48 வகை பேரபிஷேகம்

time to read

1 min

November 02, 2025

Dinamani Tiruvarur

கவனம் ஈர்த்த பயோபிக் சினிமாக்கள்!

'பயோபிக்' என்ற வார்த்தையைச் சொன்னதும் நம் நினைவுக்குச் சட்டென வருவது பாலிவுட்தான். அந்தளவிற்கு எண்ணில் அடங்காத அளவிற்கு பயோபிக் திரைப்படங்களை எடுத்து பாலிவுட் சோபிக்கவும் செய்திருக்கிறது. சோதிக்கவும் செய்திருக்கிறது. இந்திய சினிமாவிலேயே தொடர்ந்து அதிகமாக பயோபிக் திரைப்படங்கள் வருவது பாலிவுட்டில்தான்.

time to read

2 mins

November 02, 2025

Dinamani Tiruvarur

Dinamani Tiruvarur

முதல் பெண்ணாக ஆசை

காஷ்மீரைச் சேர்ந்த பத்து வயதாகும் அதீகா மிர். 'ஃபார்முலா 1' (எஃப் 1) அகாதெமியின் 'டிஸ்கவர் யுவர் டிரைவ்' திட்டத்துக்கு உலகளவில் தேர்ந்தெடுக்கப்பட்ட மூன்று பெண்களில் ஒருவர், இதுவரை இப்படித் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களில் வயது குறைந்தவரும் இவர்தான்.

time to read

2 mins

November 02, 2025

Dinamani Tiruvarur

அம்மானை!

அம்மானை என்பது மகளிர் விளையாட்டுகளில் ஒன்று. மூன்று பெண்கள் ஆடும் இவ்விளையாட்டில் கற்களை எறிவதும் பிடிப்பதும் குறிப்பிட்ட தாளகதியில் அமையும் எனவும், அந்தத் தாளத்துக்கு ஏற்றாற்போல பெண்கள் பாடுவது அம்மானைப் பாடல் எனவும் திறனாய்வாளர் குறிப்பிடுவது எண்ணத்தக்கதாகும்.

time to read

1 min

November 02, 2025

Translate

Share

-
+

Change font size