Prøve GULL - Gratis

நீட் தேர்வுக்குத் தடை தேவையா?

Dinamani Tiruppur

|

May 31, 2025

மருத்துவக் கல்லூரி சேர்க்கையில் இடஒதுக்கீடு கடைப்பிடிக்கப்படுகிறது. அது மட்டுமல்ல, பட்டியலின-பிற்படுத்தப்பட்ட வகுப்பு மாணவர்களும் பொது ஒதுக்கீட்டில் இடம்பெற வாய்ப்புள்ளது. அப்படியிருக்க நீட் தேர்வை எதிர்ப்பதற்கு போதுமான காரணம் இல்லை.

- டி.எஸ்.ஆர்.வேங்கடரமணா

நுழைவுத்தேர்வு என்பது ஏதோ நேற்றோ, வந்தது அல்ல; அதற்கு ஒரு நூற்றாண்டுக்கு மேல் வரலாறு இருக்கிறது. இது அரசால் காலங்காலமாக நடத்தப்படும் ஒன்றுதான்.

சரியாக 54 ஆண்டுகளுக்கு முன் சென்னை சட்டக் கல்லூரியின் வரலாற்றிலேயே முதன்முறையாக மாணவர் சேர்க்கைக்கு நேர்காணல் நடத்தப்பட்டது. 1961-ஆம் ஆண்டில் ஆரம்பிக்கப்பட்ட அகமதாபாத் இந்திய நிர்வாக மேலாண்மை நிறுவனம், நுழைவுத் தேர்வு மூலம் தேர்வு செய்யப்படும் கெட்டிக்கார மாணவர்களின் கனவாகவும், அமெரிக்காவுக்கு செல்லும் கடவுச் சீட்டாகவும் இருக்கிறது.

இதற்கு முன் 1858-ஆம் ஆண்டுமுதல் ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் ஐ.சி.எஸ். என்ற கடுமையான போட்டித் தேர்வும், சுதந்திர இந்தியாவில் ஆட்சித் துறை, காவல் துறை, வெளியுறவுத் துறை என பல வகை வேலைக்கான நுழைவுத் தேர்வுகளும் மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் (யுபிஎஸ்சி) 75 ஆண்டுகளாக நடத்தப்படுகிறது. அதுபோல், மாநில அரசுப் பணிகளுக்கு தேர்வுப் பணி ஆணையம் ஆண்டாண்டு காலமாக தேர்வுகளை நடத்தி வருகிறது.

நீட் தேர்வு மூலம் பல மாநிலங்களில், பல பாடத்திட்டங்களின் அடிப்படையில் தேர்வு பெற்ற மாணவர்களை, ஒரே நேர்கோட்டில் பரிசோதித்து திறமையானவர்களை மருத்துவக் கல்லூரிக்கு தேர்ந்தெடுப்பதற்குக் காரணம் உச்சநீதிமன்றம் வழங்கிய ஒரு தீர்ப்புதான். இதில் 15% வெளிமாநிலத்தவர்களுக்கு ஒதுக்கீடு உள்ளது.

ஏதோ நுழைவுத் தேர்வை இந்த ஆட்சி கொண்டு வந்தது; அந்த ஆட்சி தடுக்கவில்லை; ஒரே நாளில் அதை நீக்கி விடுவோம்; ஒரு கோடி கையொப்பம் வாங்கினால் நீட் மறைந்துவிடும் என்று பேசுவதெல்லாம் அற்பமான அரசியல். உண்மையில், நுழைவுத் தேர்வுகள் வெளிப்படையாக அரசியலாக்கப்படுகின்றன.

கல்வி, வெகுஜனமயம் ஆக்கப்பட்ட பிறகு, வேலையில்லாத் திண்டாட்டம் மிகுந்துள்ள ஒரு நாட்டில் தகுதி தேர்வுகள் தேர்ந்தெடுக்கப்படுவதற்காக நடத்தப்படுவதல்ல; அவை வேண்டாதவர்களை அல்லது தகுதி இல்லாதவர்களை வெளியேற்றுவதற்கு நடத்தப்படுபவை.

FLERE HISTORIER FRA Dinamani Tiruppur

Dinamani Tiruppur

Dinamani Tiruppur

குருவின் கனவு நிறைவேற வேண்டும்: தருமபுரம் ஆதீனம்

'தருமபுரம் ஆதீனம் 26-ஆவது குருமகா சந்நிதானத்தின் கனவு நிறைவேற வேண்டும்' என தருமபுரம் ஆதீனம் 27-ஆவது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் குறிப்பிட்டார்.

time to read

1 mins

November 02, 2025

Dinamani Tiruppur

உள்ளாட்சி அமைப்புகளுக்கு அதிகாரப் பகிர்வை மறுக்கும் மாநிலங்கள்

பிரதமரின் பொருளாதார ஆலோசனைக் குழுத் தலைவர் கவலை

time to read

1 min

November 02, 2025

Dinamani Tiruppur

நடமாடும் உயிர்க்காவலர்

எனது இருபத்தைந்து வயதில் உயிர்காக்கும் முதலுதவி சேவையைத் தொடங்கி, நாற்பது ஆண்டுகளாக இடைவிடாது இயங்கி வருகிறேன்\" என்கிறார் ஸ்ரீரங்கத்தைச் சேர்ந்த அறுபத்தைந்து வயதான டி. சீனிவாச பிரசாத்.

time to read

2 mins

November 02, 2025

Dinamani Tiruppur

கவனம் ஈர்த்த பயோபிக் சினிமாக்கள்!

'பயோபிக்' என்ற வார்த்தையைச் சொன்னதும் நம் நினைவுக்குச் சட்டென வருவது பாலிவுட்தான். அந்தளவிற்கு எண்ணில் அடங்காத அளவிற்கு பயோபிக் திரைப்படங்களை எடுத்து பாலிவுட் சோபிக்கவும் செய்திருக்கிறது. சோதிக்கவும் செய்திருக்கிறது. இந்திய சினிமாவிலேயே தொடர்ந்து அதிகமாக பயோபிக் திரைப்படங்கள் வருவது பாலிவுட்டில்தான்.

time to read

2 mins

November 02, 2025

Dinamani Tiruppur

Dinamani Tiruppur

முதல் பெண்ணாக ஆசை

காஷ்மீரைச் சேர்ந்த பத்து வயதாகும் அதீகா மிர். 'ஃபார்முலா 1' (எஃப் 1) அகாதெமியின் 'டிஸ்கவர் யுவர் டிரைவ்' திட்டத்துக்கு உலகளவில் தேர்ந்தெடுக்கப்பட்ட மூன்று பெண்களில் ஒருவர், இதுவரை இப்படித் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களில் வயது குறைந்தவரும் இவர்தான்.

time to read

2 mins

November 02, 2025

Dinamani Tiruppur

தங்கம் பவுனுக்கு ரூ.80 உயர்வு

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சனிக்கிழமை பவுனுக்கு ரூ.80 உயர்ந்து ரூ.90,480-க்கு விற்பனையானது.

time to read

1 min

November 02, 2025

Dinamani Tiruppur

கோமாரிக்கல்

கால்நடைகளின் காவலன்!

time to read

1 mins

November 02, 2025

Dinamani Tiruppur

Dinamani Tiruppur

கடல் கடந்தும் தமிழ்...

புதுக்கோட்டை மாவட்டத்தில் 1924-இல் பிறந்த முருகு. சுப்ரமணியம் 1950-களில் மலேசியாவுக்குச் சென்றார். மலேசியா, சிங்கப்பூரில் வெளியாகும் தமிழ் நாளிதழ்களில் ஆசிரியராகப் பணியாற்றிய இவர், கடல் கடந்து தமிழ் வளர்த்த பத்திரிகையாளர். இவரது குடும்பத்தினரது முன்னெடுப்பில், கண்ணதாசன் அறவாரியம், மலேசிய எழுத்தாளர் சங்கம் ஆகியன இணைந்து அவரது நூற்றாண்டு விழாவை மலேசியாவில் அண்மையில் கொண்டாடியது.

time to read

1 mins

November 02, 2025

Dinamani Tiruppur

Dinamani Tiruppur

புறநானூற்றில் தந்தை-மகன் சண்டை

இலக்கியம் என்பது வாழ்வை எதிரொலிப்பதாகப் படைக்கப்படுவது! அதில் கற்பனை, உவமை, அணி இலக்கணங்கள் எல்லாம் சேரப் படைக்கப்படுங்கால் அவற்றை விஞ்சிய மனித வாழ்வின் பதிவே காலக்கண்ணாடியாக நவில்தொறும் நயப்பாடுடைய இறவாப் பதிவிறக்கமாக எப்போதும் ஒளிர்வதாகும்.

time to read

1 min

November 02, 2025

Dinamani Tiruppur

Dinamani Tiruppur

‘நெடுந்தொடர்’ பரிதாபங்கள்!

உண்மையில் நெடுந்தொடரில் வில்லத்தனம் புரியும் சின்னத்திரை நடிகர், நடிகைகளும் அதன் பார்வையாளர்களுமாக எதிரெதிரே அமர்ந்து விவாதிக்கும் ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியைக் காண நேர்ந்தது. நிகழ்ச்சியின் கருப்பொருள் சாதாரணமானதாக இருந்தாலும் எளிய மக்களின் வார்த்தைகள் அந்த நிகழ்ச்சிக்கு மிகவும் வலிமையாக இருந்தன. ஒரு கட்டத்தில் தாம் பார்க்கும் நெடுந்தொடர் வில்லிகளைப் பார்த்து எதிரே இருந்த பார்வையாளர்கள் ஆவேசமாகக் கேள்வி கேட்டுக் கொண்டே இருந்தார்கள்.

time to read

3 mins

November 01, 2025

Translate

Share

-
+

Change font size