Prøve GULL - Gratis
சமத்துவமே லட்சியம்!
Dinamani Thoothukudi
|August 29, 2025
இந்திய அரசமைப்புச் சட்டம், அதன் குடிமக்களுக்கு பாலினப் பாகுபாடு இன்றி சமத்துவத்தை உறுதி செய்கிறது.
-
அரசமைப்பின் 14-ஆவது பிரிவு சட்டத்தின் முன் அனைவருக்கும் சமத்துவத்தை வழங்குகிறது; அதேசமயம் 15-ஆவது பிரிவு பாலினம், மதம், ஜாதி அல்லது இனம் ஆகியவற்றின் அடிப்படையில் பாகுபாட்டைத் தடை செய்கிறது. இந்தச் சட்டங்கள் பெண்களுக்கான சமத்துவத்தின் அடித்தளமாகச் செயல்படுகின்றன. ஆனால், இந்தச் சட்டப்பூர்வ பாதுகாப்புகள் மட்டுமே நடைமுறையில் உள்ள சமூக ஏற்றத்தாழ்வுகளை மாற்றப் போதுமானதாக இல்லை.
வரலாற்று ரீதியாக, இந்திய சமூகம் பெரும்பாலும் ஆணாதிக்கம் கொண்டதாகவே இருந்துள்ளது. சில சமூகங்களில், பெண்கள் அதிக மரியாதை பெற்றாலும், பெரும்பாலான பகுதிகளில் அவர்கள் இரண்டாம் தரக் குடிமக்களாகவே கருதப்பட்டனர். கல்வி, சொத்துரிமை, மற்றும் அரசியல் முடிவெடுப்பதில் பெண்களுக்கு இருந்த வாய்ப்புகள் மிகவும் குறைவாகவே இருந்தன. சதி (கணவர் இறந்ததும் மனைவி உடன்கட்டை ஏறுவது), குழந்தைத் திருமணம், வரதட்சணை போன்ற பழக்கவழக்கங்கள் பெண்களின் வாழ்க்கையை மிகவும் சிக்கலாக்கின.
இந்தப் பழக்கவழக்கங்களுக்கு எதிராக, இந்தியாவில் பல சமூகச் சீர்திருத்தவாதிகள் போராடினார்கள். பெண்களின் கல்வி, மறுமணம் மற்றும் உரிமைகளுக்காக பலரும் குரல் கொடுத்தனர். அவர்களின் விடாமுயற்சிகளின் தொடர்விளைவாக இந்தியாவில் பெண்களின் நிலைமை சற்று மேம்பட ஒரு வழி பிறந்தது.
Denne historien er fra August 29, 2025-utgaven av Dinamani Thoothukudi.
Abonner på Magzter GOLD for å få tilgang til tusenvis av kuraterte premiumhistorier og over 9000 magasiner og aviser.
Allerede abonnent? Logg på
FLERE HISTORIER FRA Dinamani Thoothukudi
Dinamani Thoothukudi
மெளனம் கலைக்கப்பட வேண்டும்!
விற்று, வாங்கும் பொருளாக வாக்கு மாறியபோது, எந்த அரசியல் கட்சியும், எந்தத் தலைவரும் கவலை கொள்ளவில்லை. ஆனால், இன்று வாக்கு திருட்டு என்றும் வாக்குப் பறிப்பு என்றும் முழக்கங்கள் அரசியல் களத்தில் ஓங்கி ஒலிக்கின்றன. இந்த முழக்கங்களால் அடுத்த தேர்தலில் கூடுதலாக தங்கள் கட்சிகளுக்கு வாக்குகளைப் பெறலாமே தவிர வாக்கைப் பாதுகாக்க முடியுமா என்பதுதான் பெரும் கேள்வி.
3 mins
December 02, 2025
Dinamani Thoothukudi
கேரள முதல்வருக்கு அமலாக்கத் துறை நோட்டீஸ்
கேரள உள்கட்டமைப்பு முதலீட்டு நிதி வாரியத்துக்கு (கேஐஐஎஃப்பி) மாநில அரசு கடன் பத்திரங்கள் மூலம் பெற்ற வெளிநாட்டு முதலீடுகளில் பண முறைகேடு நடந்ததாக கூறி, முதல்வர் பினராயி விஜயன், முன்னாள் அமைச்சர் தாமஸ் ஐசக் மற்றும் முதல்வரின் முதன்மைச் செயலர் கே.எம். ஆப்ரகாம் ஆகியோருக்கு அமலாக்கத் துறை நோட்டீஸ் அனுப்பியது.
1 min
December 02, 2025
Dinamani Thoothukudi
இடைவிடாத மழை: தத்தளிக்கும் சென்னை
4 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை
2 mins
December 02, 2025
Dinamani Thoothukudi
இரு தரப்புக்கும் பொதுவாக செயல்பட வேண்டும்
மாநிலங்களவைத் தலைவரிடம் கார்கே வலியுறுத்தல்
1 min
December 02, 2025
Dinamani Thoothukudi
அமைச்சர் மன்சுக் மாண்டவியா நாளை ஆலோசனை
உள்நாட்டு கால்பந்து போட்டிகளுக்கான பிரச்னைகள்
1 min
December 02, 2025
Dinamani Thoothukudi
அசோக் லேலண்ட் விற்பனை 29% உயர்வு
இந்தியாவின் முன்னணி வாகன நிறுவனங்களில் ஒன்றான அசோக் லேலண்டின் மொத்த விற்பனை கடந்த நவம்பர் மாதத்தில் 29 சதவீதம் உயர்ந்துள்ளது.
1 min
December 02, 2025
Dinamani Thoothukudi
உச்சங்களைத் தொட்டும் சரிவில் முடிந்த பங்குச் சந்தை
நிதி மற்றும் எஃப்எம்சிஜி பங்குகளில் லாப நோக்க விற்பனை மற்றும் அந்நிய முதலீடுகள் வெளியேற்றம் காரணமாக, இந்திய பங்குச் சந்தைகள் திங்கள்கிழமை புதிய உச்சங்களை எட்டிய பிறகும் லேசான சரிவுடன் நிறைவடைந்தன.
1 min
December 02, 2025
Dinamani Thoothukudi
தமிழக அரசின் தில்லி சிறப்பு பிரதிநிதி வீட்டில் 87 பவுன் நகைகள் திருட்டு
தஞ்சாவூரில் தமிழக அரசின் தில்லி சிறப்பு பிரதிநிதியும், முன்னாள் மக்களவை திமுக உறுப்பினருமான ஏ.கே.எஸ். விஜயன் வீட்டில் பூட்டை உடைத்து 87 பவுன் நகைகளை மர்மநபர்கள் திருடிச் சென்றனர். இதுதொடர்பாக போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
1 min
December 02, 2025
Dinamani Thoothukudi
நமீபியாவை பந்தாடிய இந்திய மகளிர் அணி
ஜூனியர் மகளிர் உலகக் கோப்பை ஹாக்கி போட்டியில் இந்தியா தனது முதல் ஆட்டத்தில் 13-0 கோல் கணக்கில் நமீபியாவை திங்கள்கிழமை அபார வெற்றி கண்டது.
1 min
December 02, 2025
Dinamani Thoothukudi
காவல் துறை மீதான மக்களின் பார்வை மாற்றப்படுவது அவசியம்
பிரதமர் மோடி அறிவுறுத்தல்
1 min
December 01, 2025
Translate
Change font size

