Prøve GULL - Gratis
காலம் வழங்கிய கொடை!
Dinamani Thoothukudi
|August 01, 2025
சோழர்களின் கட்டடக்கலைக்கு ஆகச் சிறந்த உதாரணம் கங்கைகொண்ட சோழபுரம். ஆயிரம் ஆண்டுகள் கடந்தும் அதே கம்பீரமாய் காட்சியளிக்கிறது. முதலாம் ராஜேந்திர சோழனால் கட்டப்பட்ட பழைமையான கங்கைகொண்ட சோழபுரம், சோழர்களின் வரலாற்றைப் பறைசாற்றுகிறது. தற்போதிருக்கும் டெல்டா மாவட்டம் முழுவதும் தனித்துவமான கட்டடக்கலையின் மூலம் பிரசித்தி பெற்று விளங்குகிறது. தோற்ற அமைப்பு சற்று தஞ்சை பெரிய கோயிலைப் போல இருந்தாலும், இந்த இரண்டு கோயில்களும் தனித்துவமான கலைநயத்தை அடையாளப்படுத்துகின்றன.
சோழர்களின் தலைநகரம் கங்கைகொண்ட சோழபுரம். ராஜேந்திர சோழனால் நிறுவப்பட்டு சுமார் 250 ஆண்டுகளுக்கும் மேலாக சோழர்களின் அதிகாரமையமாக விளங்கியது. கங்கை வரை படையெடுத்துச் சென்று பல வெற்றிகளைப் பெற்ற முதலாம் ராஜேந்திர சோழன் அந்த வெற்றியின் நினைவாக இந்த நகரத்தையும், கோயிலையும் கட்டினார். கங்கையை வென்ற சோழனின் நகரம் என்பதே கங்கைகொண்ட சோழபுரத்தின் பொருளாகும்.
இன்றளவும் உலக அளவில் யுனெஸ்கோவால் அங்கீகரிக்கப்பட்டிருக்கிறது. சோழர்களின் கலை, கட்டடக்கலை மற்றும் கலாசாரத்தின் உன்னதத்தை இன்றும் தாங்கி நிற்கிறது. ஆனால், கோயிலின் மேல் பகுதி சுமார் 55 மீட்டர் உயரம் கொண்டது. இது தஞ்சாவூர் பெரிய கோவிலைவிட சற்று குறைவான உயரம் உடையது என்றாலும், அதன் வளைந்த மற்றும் நேர்த்தியான அமைப்பு தனித்துவமானது.
கோயிலின் கர்ப்பகிரகத்தில் உள்ள சிவலிங்கத்தின் மீது தினமும் சூரிய ஒளி நேரடியாக விழுந்து நந்தியின் மீது பிரதிபலித்து சிவலிங்கத்தை ஒளிர்விப்பது காணக்கிடைக்காத கட்டட கலையின் அரிய நிகழ்வாகும். தொல்காப்பியம் மேற்கோளிட்டுக் காட்டிய, 'வடவேங்கடம் முதல் தென்குமரி வரை, வடக்கே வேங்கடமும் தெற்கே குமரியும்' என்றிருந்த தமிழ்நாட்டின் எல்லைப் பகுதிகளை மிகக் குறுகிய காலத்திலேயே மாற்றி அமைத்தவர் ராஜேந்திர சோழன்.
தனது ஆட்சிக்காலத்தில் வடக்கே கங்கை வரை சென்று வெற்றிக்கொடி நாட்டியதுடன் கடல் கடந்து இலங்கை, சுமத்ரா, கடாரம், ஸ்ரீவிஜயம், மலேயா ஆகிய கிழக்காசிய தேசங்களையும் வென்றவர் ராஜேந்திர சோழன். கி.பி. 1014-இல் அரசனாகப் பொறுப்பேற்ற ராஜேந்திர சோழன் 1017-இல் இலங்கை மீது படையெடுத்து வென்றார். இந்த வெற்றியை இலங்கை வரலாற்றைக் கூறும் மகா வம்சம் மிகத் தெளிவாக விளக்கியிருக்கிறது.
இலங்கையில் ராஜேந்திர சோழனின் கல்வெட்டுகள் புலனுருவ, திரிகோணமலை, அத்தரகுழளியா, பெரியகுளம், மாதோட்டம், நித்தவினோதம், கனதாரவ முதலிய இடங்களில் உள்ளன. அதேபோல் கடாரம் வெற்றியும் ராஜேந்திர சோழனின் முக்கிய சாதனையாகும். லெய்டன் செப்பேட்டில் கடார வெற்றி தெளிவாகப் பதிவு செய்யப்பட்டிருக்கிறது.
Denne historien er fra August 01, 2025-utgaven av Dinamani Thoothukudi.
Abonner på Magzter GOLD for å få tilgang til tusenvis av kuraterte premiumhistorier og over 9000 magasiner og aviser.
Allerede abonnent? Logg på
FLERE HISTORIER FRA Dinamani Thoothukudi
Dinamani Thoothukudi
முதல் பெண்ணாக ஆசை
காஷ்மீரைச் சேர்ந்த பத்து வயதாகும் அதீகா மிர். 'ஃபார்முலா 1' (எஃப் 1) அகாதெமியின் 'டிஸ்கவர் யுவர் டிரைவ்' திட்டத்துக்கு உலகளவில் தேர்ந்தெடுக்கப்பட்ட மூன்று பெண்களில் ஒருவர், இதுவரை இப்படித் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களில் வயது குறைந்தவரும் இவர்தான்.
2 mins
November 02, 2025
Dinamani Thoothukudi
நடமாடும் உயிர்க்காவலர்
எனது இருபத்தைந்து வயதில் உயிர்காக்கும் முதலுதவி சேவையைத் தொடங்கி, நாற்பது ஆண்டுகளாக இடைவிடாது இயங்கி வருகிறேன்\" என்கிறார் ஸ்ரீரங்கத்தைச் சேர்ந்த அறுபத்தைந்து வயதான டி. சீனிவாச பிரசாத்.
2 mins
November 02, 2025
Dinamani Thoothukudi
கவனம் ஈர்த்த பயோபிக் சினிமாக்கள்!
'பயோபிக்' என்ற வார்த்தையைச் சொன்னதும் நம் நினைவுக்குச் சட்டென வருவது பாலிவுட்தான். அந்தளவிற்கு எண்ணில் அடங்காத அளவிற்கு பயோபிக் திரைப்படங்களை எடுத்து பாலிவுட் சோபிக்கவும் செய்திருக்கிறது. சோதிக்கவும் செய்திருக்கிறது. இந்திய சினிமாவிலேயே தொடர்ந்து அதிகமாக பயோபிக் திரைப்படங்கள் வருவது பாலிவுட்டில்தான்.
2 mins
November 02, 2025
Dinamani Thoothukudi
தங்கம் பவுனுக்கு ரூ.80 உயர்வு
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சனிக்கிழமை பவுனுக்கு ரூ.80 உயர்ந்து ரூ.90,480-க்கு விற்பனையானது.
1 min
November 02, 2025
Dinamani Thoothukudi
புறநானூற்றில் தந்தை-மகன் சண்டை
இலக்கியம் என்பது வாழ்வை எதிரொலிப்பதாகப் படைக்கப்படுவது! அதில் கற்பனை, உவமை, அணி இலக்கணங்கள் எல்லாம் சேரப் படைக்கப்படுங்கால் அவற்றை விஞ்சிய மனித வாழ்வின் பதிவே காலக்கண்ணாடியாக நவில்தொறும் நயப்பாடுடைய இறவாப் பதிவிறக்கமாக எப்போதும் ஒளிர்வதாகும்.
1 min
November 02, 2025
Dinamani Thoothukudi
உள்ளாட்சி அமைப்புகளுக்கு அதிகாரப் பகிர்வை மறுக்கும் மாநிலங்கள்
பிரதமரின் பொருளாதார ஆலோசனைக் குழுத் தலைவர் கவலை
1 min
November 02, 2025
Dinamani Thoothukudi
கோமாரிக்கல்
கால்நடைகளின் காவலன்!
1 mins
November 02, 2025
Dinamani Thoothukudi
கடல் கடந்தும் தமிழ்...
புதுக்கோட்டை மாவட்டத்தில் 1924-இல் பிறந்த முருகு. சுப்ரமணியம் 1950-களில் மலேசியாவுக்குச் சென்றார். மலேசியா, சிங்கப்பூரில் வெளியாகும் தமிழ் நாளிதழ்களில் ஆசிரியராகப் பணியாற்றிய இவர், கடல் கடந்து தமிழ் வளர்த்த பத்திரிகையாளர். இவரது குடும்பத்தினரது முன்னெடுப்பில், கண்ணதாசன் அறவாரியம், மலேசிய எழுத்தாளர் சங்கம் ஆகியன இணைந்து அவரது நூற்றாண்டு விழாவை மலேசியாவில் அண்மையில் கொண்டாடியது.
1 mins
November 02, 2025
Dinamani Thoothukudi
யுபிஐ சர்க்கிள்: அமேஸானின் புதிய வசதிகள்
தனது பணப்பட்டுவாடா செயலி மூலம் குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுக்கு உடனடியாக பணம் அனுப்புவதற்கான யுபிஐ சர்க்கிள் முறையில் புதிய வசதிகளை அமேஸான் அறிமுகப்படுத்தியுள்ளது.
1 min
November 01, 2025
Dinamani Thoothukudi
சென்னையில் ரூட்மேடிக் கட்டளை மையம்
பணியாளர் போக்குவரத்து தீர்வுகள் மற்றும் கார்ப்பரேட் மொபிலிட்டி தொழில்நுட்பத்தில் முன்னணி நிறுவனங்களில் ஒன்றான ரூட்மேடிக், சென்னையில் தனது கட்டளை மையத்தைத் திறந்துள்ளது.
1 min
November 01, 2025
Translate
Change font size
