Prøve GULL - Gratis

உயர்நீதிமன்ற நீதிபதி குறித்து வழக்குரைஞர் விமர்சித்த விவகாரம்: தலைமை நீதிபதிக்கு பரிந்துரை

Dinamani Thoothukudi

|

July 29, 2025

உயர்நீதிமன்ற நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதனை விமர்சித்து, சமூக ஊடகங்களில் வழக்குரைஞர் ஒருவர் பேசியது தொடர்பான பதிவுகளை சென்னை உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதி அமர்வின் நடவடிக்கைக்கு அனுப்ப திங்கள்கிழமை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

மதுரை, ஜூலை 28:

உயர்நீதிமன்ற நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதனின் தீர்ப்புகள் தொடர்பாக வழக்குரைஞர் வாஞ்சிநாதன் சில குற்றச்சாட்டுகளை முன்வைத்து உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதிக்கு கடிதம் அனுப்பினார். அந்தக் கடிதம் அண்மையில் சமூக ஊடகங்களில் வெளியானது.

இந்த நிலையில், விசாரணையில் உள்ள ஒரு வழக்கின் வழக்குரைஞர் என்ற அடிப்படையில், உயர்நீதிமன்ற மதுரை அமர்வு நீதிபதிகள் ஜி.ஆர்.சுவாமிநாதன், ராஜசேகரன் அமர்வில் முன்னிலையாக வழக்குரைஞர் வாஞ்சிநாதனுக்கு அழைப்பாணை அனுப்பப்பட்டது. இதன்படி, நீதிபதிகள் ஜி.ஆர். சுவாமிநாதன், ராஜசேகரன் அமர்வில் வழக்குரைஞர் வாஞ்சிநாதன் கடந்த வெள்ளிக்கிழமை (ஜூலை 25) முன்னிலையானார்.

அப்போது, 'என்னுடைய தீர்ப்புகள் குறித்து சமூக ஊடகங்களில் தாங்கள் தெரிவித்த கருத்துகளில் தற்போதும் உறுதியாக உள்ளீர்களா? என வழக்குரைஞர் வாஞ்சிநாதனிடம் நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் கேள்வி எழுப்பினார். இதற்கு, எழுத்துப்பூர்வமாக கேட்டால் விளக்கம் அளிப்பதாக வழக்குரைஞர் வாஞ்சிநாதன் பதில் அளித்தார். பிறகு, இது குறித்து திங்கள்கிழமை (ஜூலை 28) இதே அமர்வில் வாஞ்சிநாதன் பதில் அளிக்க வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

FLERE HISTORIER FRA Dinamani Thoothukudi

Dinamani Thoothukudi

Dinamani Thoothukudi

முதல் பெண்ணாக ஆசை

காஷ்மீரைச் சேர்ந்த பத்து வயதாகும் அதீகா மிர். 'ஃபார்முலா 1' (எஃப் 1) அகாதெமியின் 'டிஸ்கவர் யுவர் டிரைவ்' திட்டத்துக்கு உலகளவில் தேர்ந்தெடுக்கப்பட்ட மூன்று பெண்களில் ஒருவர், இதுவரை இப்படித் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களில் வயது குறைந்தவரும் இவர்தான்.

time to read

2 mins

November 02, 2025

Dinamani Thoothukudi

நடமாடும் உயிர்க்காவலர்

எனது இருபத்தைந்து வயதில் உயிர்காக்கும் முதலுதவி சேவையைத் தொடங்கி, நாற்பது ஆண்டுகளாக இடைவிடாது இயங்கி வருகிறேன்\" என்கிறார் ஸ்ரீரங்கத்தைச் சேர்ந்த அறுபத்தைந்து வயதான டி. சீனிவாச பிரசாத்.

time to read

2 mins

November 02, 2025

Dinamani Thoothukudi

கவனம் ஈர்த்த பயோபிக் சினிமாக்கள்!

'பயோபிக்' என்ற வார்த்தையைச் சொன்னதும் நம் நினைவுக்குச் சட்டென வருவது பாலிவுட்தான். அந்தளவிற்கு எண்ணில் அடங்காத அளவிற்கு பயோபிக் திரைப்படங்களை எடுத்து பாலிவுட் சோபிக்கவும் செய்திருக்கிறது. சோதிக்கவும் செய்திருக்கிறது. இந்திய சினிமாவிலேயே தொடர்ந்து அதிகமாக பயோபிக் திரைப்படங்கள் வருவது பாலிவுட்டில்தான்.

time to read

2 mins

November 02, 2025

Dinamani Thoothukudi

தங்கம் பவுனுக்கு ரூ.80 உயர்வு

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சனிக்கிழமை பவுனுக்கு ரூ.80 உயர்ந்து ரூ.90,480-க்கு விற்பனையானது.

time to read

1 min

November 02, 2025

Dinamani Thoothukudi

Dinamani Thoothukudi

புறநானூற்றில் தந்தை-மகன் சண்டை

இலக்கியம் என்பது வாழ்வை எதிரொலிப்பதாகப் படைக்கப்படுவது! அதில் கற்பனை, உவமை, அணி இலக்கணங்கள் எல்லாம் சேரப் படைக்கப்படுங்கால் அவற்றை விஞ்சிய மனித வாழ்வின் பதிவே காலக்கண்ணாடியாக நவில்தொறும் நயப்பாடுடைய இறவாப் பதிவிறக்கமாக எப்போதும் ஒளிர்வதாகும்.

time to read

1 min

November 02, 2025

Dinamani Thoothukudi

உள்ளாட்சி அமைப்புகளுக்கு அதிகாரப் பகிர்வை மறுக்கும் மாநிலங்கள்

பிரதமரின் பொருளாதார ஆலோசனைக் குழுத் தலைவர் கவலை

time to read

1 min

November 02, 2025

Dinamani Thoothukudi

கோமாரிக்கல்

கால்நடைகளின் காவலன்!

time to read

1 mins

November 02, 2025

Dinamani Thoothukudi

Dinamani Thoothukudi

கடல் கடந்தும் தமிழ்...

புதுக்கோட்டை மாவட்டத்தில் 1924-இல் பிறந்த முருகு. சுப்ரமணியம் 1950-களில் மலேசியாவுக்குச் சென்றார். மலேசியா, சிங்கப்பூரில் வெளியாகும் தமிழ் நாளிதழ்களில் ஆசிரியராகப் பணியாற்றிய இவர், கடல் கடந்து தமிழ் வளர்த்த பத்திரிகையாளர். இவரது குடும்பத்தினரது முன்னெடுப்பில், கண்ணதாசன் அறவாரியம், மலேசிய எழுத்தாளர் சங்கம் ஆகியன இணைந்து அவரது நூற்றாண்டு விழாவை மலேசியாவில் அண்மையில் கொண்டாடியது.

time to read

1 mins

November 02, 2025

Dinamani Thoothukudi

யுபிஐ சர்க்கிள்: அமேஸானின் புதிய வசதிகள்

தனது பணப்பட்டுவாடா செயலி மூலம் குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுக்கு உடனடியாக பணம் அனுப்புவதற்கான யுபிஐ சர்க்கிள் முறையில் புதிய வசதிகளை அமேஸான் அறிமுகப்படுத்தியுள்ளது.

time to read

1 min

November 01, 2025

Dinamani Thoothukudi

சென்னையில் ரூட்மேடிக் கட்டளை மையம்

பணியாளர் போக்குவரத்து தீர்வுகள் மற்றும் கார்ப்பரேட் மொபிலிட்டி தொழில்நுட்பத்தில் முன்னணி நிறுவனங்களில் ஒன்றான ரூட்மேடிக், சென்னையில் தனது கட்டளை மையத்தைத் திறந்துள்ளது.

time to read

1 min

November 01, 2025

Translate

Share

-
+

Change font size