Prøve GULL - Gratis

உலகுக்கு இந்தியாவின் உத்தரவாதம்!

Dinamani Thanjavur

|

September 12, 2025

நம் கண்முன் இனி இரண்டு செப்டம்பர் தேதிகள் தெரியட்டும். முதல் செப்டம்பர் 11, 1893-இல் நிகழ்ந்தது விவேகானந்தருடையது; அடுத்து 2001-ஆம் ஆண்டு செப்டம்பர் 11 (இரட்டை கோபுர தாக்குதல்) என்பது விவேகம் இல்லாதவர்களுடையது. முன்னது உலகை உயர்த்துவது; பின்னது உலகைச் சிதைப்பது.

- சுவாமி விவேகானந்தர்

செப்டம்பர் 11, 1893 அன்று சுவாமி விவேகானந்தர் அமெரிக்காவின் சிகாகோவில் உரையாற்றினார். அவர் சர்வ சமயப் பேரவையில் பேசிய முதல் வாக்கியத்திற்கு அரங்கில் இருந்த 4000 பேர் எழுந்து நின்று கரகோஷம் செய்தார்கள். இது ஓர் அரிய வரலாற்று உண்மை. முன் பின் தெரியாத ஒருவருக்கு அதுவும் அப்போது அடிமை நாடாக இருந்த இந்தியாவிலிருந்து சென்ற ஒருவருக்கு இவ்வளவு மரியாதை கிடைத்தது இந்தியர்களாகிய நமக்குப் பெருமை.

சுவாமி விவேகானந்தரின் சிகாகோ உரை என்பது உலக தரத்தில் வழங்கப்பட்ட சிறிய, சிறந்த சொற்பொழிவு ஆகும். அந்த உரையில் சுவாமிஜி 3.5 நிமிஷங்கள் மட்டுமே பேசினார். பகவத் கீதையில் 18 அத்தியாயங்கள் உள்ளது போல், சிகாகோ உரையில் 18 வாக்கியங்கள் உள்ளன. அந்த உரை 472 வார்த்தைகள் மட்டுமே கொண்டவை.

சுவாமிஜி உரையாற்ற 5 அல்லது 6 நிமிஷங்களே வழங்கப்பட்டிருந்தன. 'சிஸ்டர்ஸ் அண்ட் பிரதர்ஸ்' ஆஃப் அமெரிக்கா என்ற அவரது முதல் வாக்கியத்திற்குப் பார்வையாளர்கள் வழங்கிய கரவொலியால் அரங்கம் அதிர்ந்தது.

அந்த உரையின் இன்னொரு சிறப்பம்சம்; சர்வ சமயப் பேரவையில் சமயத் தலைவர்கள் பலரும் தங்கள் மதத்துப் பெருமையை மட்டும் சொல்லிவிட்டுச் சென்றார்கள். ஆனால், சுவாமி விவேகானந்தரோ, எல்லா மதங்களின் சாரமாக உள்ள மனிதநேயத்தையும் இறையருளில் அனைவரும் வாழ்வது எவ்வாறு என்பது பற்றியும் உரையாற்றினார்.

அந்த மாநாட்டில் பேசிய பலரும் எங்கள் மதத்தை விட்டால் மக்களுக்கு வேறு கதி இல்லை என்ற வகையில் பேசினார்கள். விவேகானந்தரோ, அனைவரையும் அரவணைக்கும்படி உலக மக்கள் எவ்வாறு இருக்க முடியும் என்ற நம்பிக்கையை விதைத்தார்.

FLERE HISTORIER FRA Dinamani Thanjavur

Dinamani Thanjavur

கோமாரிக்கல்

கால்நடைகளின் காவலன்!

time to read

1 mins

November 02, 2025

Dinamani Thanjavur

புறநானூற்றில் தந்தை-மகன் சண்டை

இலக்கியம் என்பது வாழ்வை எதிரொலிப்பதாகப் படைக்கப்படுவது! அதில் கற்பனை, உவமை, அணி இலக்கணங்கள் எல்லாம் சேரப் படைக்கப்படுங்கால் அவற்றை விஞ்சிய மனித வாழ்வின் பதிவே காலக்கண்ணாடியாக நவில்தொறும் நயப்பாடுடைய இறவாப் பதிவிறக்கமாக எப்போதும் ஒளிர்வதாகும்.

time to read

1 min

November 02, 2025

Dinamani Thanjavur

நடமாடும் உயிர்க்காவலர்

எனது இருபத்தைந்து வயதில் உயிர்காக்கும் முதலுதவி சேவையைத் தொடங்கி, நாற்பது ஆண்டுகளாக இடைவிடாது இயங்கி வருகிறேன்\" என்கிறார் ஸ்ரீரங்கத்தைச் சேர்ந்த அறுபத்தைந்து வயதான டி. சீனிவாச பிரசாத்.

time to read

2 mins

November 02, 2025

Dinamani Thanjavur

கவனம் ஈர்த்த பயோபிக் சினிமாக்கள்!

'பயோபிக்' என்ற வார்த்தையைச் சொன்னதும் நம் நினைவுக்குச் சட்டென வருவது பாலிவுட்தான். அந்தளவிற்கு எண்ணில் அடங்காத அளவிற்கு பயோபிக் திரைப்படங்களை எடுத்து பாலிவுட் சோபிக்கவும் செய்திருக்கிறது. சோதிக்கவும் செய்திருக்கிறது. இந்திய சினிமாவிலேயே தொடர்ந்து அதிகமாக பயோபிக் திரைப்படங்கள் வருவது பாலிவுட்டில்தான்.

time to read

2 mins

November 02, 2025

Dinamani Thanjavur

Dinamani Thanjavur

கடல் கடந்தும் தமிழ்...

புதுக்கோட்டை மாவட்டத்தில் 1924-இல் பிறந்த முருகு. சுப்ரமணியம் 1950-களில் மலேசியாவுக்குச் சென்றார். மலேசியா, சிங்கப்பூரில் வெளியாகும் தமிழ் நாளிதழ்களில் ஆசிரியராகப் பணியாற்றிய இவர், கடல் கடந்து தமிழ் வளர்த்த பத்திரிகையாளர். இவரது குடும்பத்தினரது முன்னெடுப்பில், கண்ணதாசன் அறவாரியம், மலேசிய எழுத்தாளர் சங்கம் ஆகியன இணைந்து அவரது நூற்றாண்டு விழாவை மலேசியாவில் அண்மையில் கொண்டாடியது.

time to read

1 mins

November 02, 2025

Dinamani Thanjavur

அம்மானை!

அம்மானை என்பது மகளிர் விளையாட்டுகளில் ஒன்று. மூன்று பெண்கள் ஆடும் இவ்விளையாட்டில் கற்களை எறிவதும் பிடிப்பதும் குறிப்பிட்ட தாளகதியில் அமையும் எனவும், அந்தத் தாளத்துக்கு ஏற்றாற்போல பெண்கள் பாடுவது அம்மானைப் பாடல் எனவும் திறனாய்வாளர் குறிப்பிடுவது எண்ணத்தக்கதாகும்.

time to read

1 min

November 02, 2025

Dinamani Thanjavur

Dinamani Thanjavur

முதல் பெண்ணாக ஆசை

காஷ்மீரைச் சேர்ந்த பத்து வயதாகும் அதீகா மிர். 'ஃபார்முலா 1' (எஃப் 1) அகாதெமியின் 'டிஸ்கவர் யுவர் டிரைவ்' திட்டத்துக்கு உலகளவில் தேர்ந்தெடுக்கப்பட்ட மூன்று பெண்களில் ஒருவர், இதுவரை இப்படித் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களில் வயது குறைந்தவரும் இவர்தான்.

time to read

2 mins

November 02, 2025

Dinamani Thanjavur

ஊடல் கொள்ள நேரமில்லை!

சங்க இலக்கியங்கள் மனித வாழ்வின் அடையாளங்கள்; உயர் வாழ்வை உணர்த்தும் வழிகாட்டிகள். விருந்தோம்பல் உலகம் முழுவதற்குமான பொதுப் பண்புகளில் ஒன்று. ஆனால், தமிழ்நெறி 'இல்வாழ்வது என்பதே விருந்தோம்புவதற்கே' என்ற கொள்கையை உடையது. தமிழன் இல்வாழ்வு என்று கூறவில்லை. 'இல்லறம்' என்றான். இல்லத்திலிருந்து செய்யும் சீரிய அறம் தான் விருந்தோம்பல்.

time to read

2 mins

November 02, 2025

Dinamani Thanjavur

Dinamani Thanjavur

படகுகள் மீதான அமெரிக்க தாக்குதல் சட்டவிரோத படுகொலை: ஐ.நா.

தங்கள் நாட்டுக்குள் போதைப் பொருள்களை ஏற்றிவருவதாகக் கூறி, கரீபியன் தென் அமெரிக்க பகுதிகளில் இருந்து கரீபியன் மற்றும் பசிபிக் கடல் வழியாக வரும் படகுகள் (படம்) மீது அமெரிக்கா தாக்குதல் நடத்துவது சட்டவிரோத மனிதப் படுகொலைகள் என்று ஐ.நா. கண்டனம் தெரிவித்துள்ளது.

time to read

1 min

November 01, 2025

Dinamani Thanjavur

அன்புள்ள ஆசிரியருக்கு...

கட்டுப்பாடு வேண்டும்

time to read

1 min

November 01, 2025

Translate

Share

-
+

Change font size