Prøve GULL - Gratis
தீவு மீட்பல்ல தீர்வு!
Dinamani Pudukkottai
|September 11, 2025
இலங்கையின் வட பகுதியான யாழ்ப்பாணத்தில் வளர்ச்சிக்கு அதிபர் அநுர குமார திசாநாயக கடந்த வாரம் முன்னறிவிப்பு எதுவும் இல்லாமல் திடீரென கச்சத் தீவுக்கு சென்று ஆய்வு செய்தது மீண்டும் விவாதத்தை எழுப்பி இருக்கிறது.
-
அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுடன் விசைப் படகில் கச்சத் தீவுக்கு சென்றார் இலங்கை அதிபர். இந்தியா கச்சத் தீவை இலங்கைக்கு கொடுத்து அரை நூற்றாண்டு காலம் ஆகிவிட்ட நிலையில், அங்கு சென்றுள்ள முதல் இலங்கை அதிபர் திசாநாயகதான்.
குடியிருப்புகள் எதுவும் இல்லாத, புதர்கள் அடர்ந்த தரிசு நிலமான கச்சத் தீவில், புனித அந்தோணியார் ஆலயமும், கடற்படை அலுவலகமும் மட்டுமே உள்ளன. குடிக்க தண்ணீர்கூட கிடையாது. சுமார் 1.15 சதுர கி.மீ. பரப்பளவு உள்ள தீவின் மீதான இலங்கையின் உரிமை மற்றும் கட்டுப்பாட்டை உறுதி செய்வதுதான் அவரது பயணத்தின் நோக்கம்.
“அந்நிய ஆக்கிரமிப்புகளிலிருந்து நமது கடல் பகுதியைப் பாதுகாக்க வேண்டும். நமது மீனவர்களுக்கு கச்சத் தீவு மிகவும் முக்கியமான ஒரு பகுதி. கச்சத் தீவைப் பற்றிய விவாதம் (மீண்டும்) ஏற்பட்டுள்ளது. நமது நிலம், தீவு, கடல் பகுதி மற்றும் வான் பகுதியை எதிர்காலச் சந்ததியினருக்காக பாதுகாக்க வேண்டியது எனது கடமை” என்று கச்சத் தீவில் அவருடன் ஆலோசனை நடத்திய அமைச்சர்கள் மற்றும் கடற்படை அதிகாரிகளிடம் உறுதிபடத் தெரிவித்திருக்கிறார் இலங்கை அதிபர்.
இலங்கையின் சுற்றுலா வழித்தடத்தில் இல்லாத நெடுந்தீவிலிருந்து சுமார் 14.5 கி.மீ. தொலைவில் உள்ள கச்சத் தீவை சுற்றுலாத் தலமாக மேம்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகளை ஆராய உள்ளதாக இலங்கை அரசு அறிவித்துள்ளது. இதற்கு யாழ் கத்தோலிக்க மறை மாவட்ட குருக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
Denne historien er fra September 11, 2025-utgaven av Dinamani Pudukkottai.
Abonner på Magzter GOLD for å få tilgang til tusenvis av kuraterte premiumhistorier og over 9000 magasiner og aviser.
Allerede abonnent? Logg på
FLERE HISTORIER FRA Dinamani Pudukkottai
Dinamani Pudukkottai
புறநானூற்றில் தந்தை-மகன் சண்டை
இலக்கியம் என்பது வாழ்வை எதிரொலிப்பதாகப் படைக்கப்படுவது! அதில் கற்பனை, உவமை, அணி இலக்கணங்கள் எல்லாம் சேரப் படைக்கப்படுங்கால் அவற்றை விஞ்சிய மனித வாழ்வின் பதிவே காலக்கண்ணாடியாக நவில்தொறும் நயப்பாடுடைய இறவாப் பதிவிறக்கமாக எப்போதும் ஒளிர்வதாகும்.
1 min
November 02, 2025
Dinamani Pudukkottai
கோமாரிக்கல்
கால்நடைகளின் காவலன்!
1 mins
November 02, 2025
Dinamani Pudukkottai
அம்மானை!
அம்மானை என்பது மகளிர் விளையாட்டுகளில் ஒன்று. மூன்று பெண்கள் ஆடும் இவ்விளையாட்டில் கற்களை எறிவதும் பிடிப்பதும் குறிப்பிட்ட தாளகதியில் அமையும் எனவும், அந்தத் தாளத்துக்கு ஏற்றாற்போல பெண்கள் பாடுவது அம்மானைப் பாடல் எனவும் திறனாய்வாளர் குறிப்பிடுவது எண்ணத்தக்கதாகும்.
1 min
November 02, 2025
Dinamani Pudukkottai
ஊடல் கொள்ள நேரமில்லை!
சங்க இலக்கியங்கள் மனித வாழ்வின் அடையாளங்கள்; உயர் வாழ்வை உணர்த்தும் வழிகாட்டிகள். விருந்தோம்பல் உலகம் முழுவதற்குமான பொதுப் பண்புகளில் ஒன்று. ஆனால், தமிழ்நெறி 'இல்வாழ்வது என்பதே விருந்தோம்புவதற்கே' என்ற கொள்கையை உடையது. தமிழன் இல்வாழ்வு என்று கூறவில்லை. 'இல்லறம்' என்றான். இல்லத்திலிருந்து செய்யும் சீரிய அறம் தான் விருந்தோம்பல்.
2 mins
November 02, 2025
Dinamani Pudukkottai
உள்ளாட்சி அமைப்புகளுக்கு அதிகாரப் பகிர்வை மறுக்கும் மாநிலங்கள்
பிரதமரின் பொருளாதார ஆலோசனைக் குழுத் தலைவர் கவலை
1 min
November 02, 2025
Dinamani Pudukkottai
நடமாடும் உயிர்க்காவலர்
எனது இருபத்தைந்து வயதில் உயிர்காக்கும் முதலுதவி சேவையைத் தொடங்கி, நாற்பது ஆண்டுகளாக இடைவிடாது இயங்கி வருகிறேன்\" என்கிறார் ஸ்ரீரங்கத்தைச் சேர்ந்த அறுபத்தைந்து வயதான டி. சீனிவாச பிரசாத்.
2 mins
November 02, 2025
Dinamani Pudukkottai
முதல் பெண்ணாக ஆசை
காஷ்மீரைச் சேர்ந்த பத்து வயதாகும் அதீகா மிர். 'ஃபார்முலா 1' (எஃப் 1) அகாதெமியின் 'டிஸ்கவர் யுவர் டிரைவ்' திட்டத்துக்கு உலகளவில் தேர்ந்தெடுக்கப்பட்ட மூன்று பெண்களில் ஒருவர், இதுவரை இப்படித் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களில் வயது குறைந்தவரும் இவர்தான்.
2 mins
November 02, 2025
Dinamani Pudukkottai
கடல் கடந்தும் தமிழ்...
புதுக்கோட்டை மாவட்டத்தில் 1924-இல் பிறந்த முருகு. சுப்ரமணியம் 1950-களில் மலேசியாவுக்குச் சென்றார். மலேசியா, சிங்கப்பூரில் வெளியாகும் தமிழ் நாளிதழ்களில் ஆசிரியராகப் பணியாற்றிய இவர், கடல் கடந்து தமிழ் வளர்த்த பத்திரிகையாளர். இவரது குடும்பத்தினரது முன்னெடுப்பில், கண்ணதாசன் அறவாரியம், மலேசிய எழுத்தாளர் சங்கம் ஆகியன இணைந்து அவரது நூற்றாண்டு விழாவை மலேசியாவில் அண்மையில் கொண்டாடியது.
1 mins
November 02, 2025
Dinamani Pudukkottai
கவனம் ஈர்த்த பயோபிக் சினிமாக்கள்!
'பயோபிக்' என்ற வார்த்தையைச் சொன்னதும் நம் நினைவுக்குச் சட்டென வருவது பாலிவுட்தான். அந்தளவிற்கு எண்ணில் அடங்காத அளவிற்கு பயோபிக் திரைப்படங்களை எடுத்து பாலிவுட் சோபிக்கவும் செய்திருக்கிறது. சோதிக்கவும் செய்திருக்கிறது. இந்திய சினிமாவிலேயே தொடர்ந்து அதிகமாக பயோபிக் திரைப்படங்கள் வருவது பாலிவுட்டில்தான்.
2 mins
November 02, 2025
Dinamani Pudukkottai
இரண்டாவது நாளாக பங்குச் சந்தை சரிவு
சர்வதேச மற்றும் உள்நாட்டு சந்தைகளில் நிலவிய பலவீனமான போக்கு காரணமாக, இந்திய பங்குச் சந்தைகள் தொடர்ந்து இரண்டாவது நாளாக வெள்ளிக்கிழமை சரிவைக் கண்டன.
1 min
November 01, 2025
Translate
Change font size
