Prøve GULL - Gratis

அறிவின் அமுதூற்று ‘நூலகம்’!

Dinamani Pudukkottai

|

August 12, 2025

மக்களைக் கொன்றால் ஒரு தலைமுறையைத்தான் அழிக்க முடியும்; அதேநேரத்தில், நூலகங்களை அழித்தால் ஒட்டுமொத்தமாக ஓர் இனத்தின் அடையாளத்தையே அழித்துவிட முடியும். அதைத்தான் சாம்ராஜ்யங்களைக் கைப்பற்றியவர்கள் செய்தார்கள்.

- ஔவை ந. அருள்

இந்திய நூலக அறிவியலின் தந்தையும் சென்னைப் பல்கலைக்கழகத்தின் முதல் நூலகருமான முனைவர் எஸ்.ஆர்.ரங்கநாதனின் பிறந்த நாளைப் போற்றும் வகையில், ஆண்டுதோறும் ஆகஸ்ட் 12-ஆம் தேதி தேசிய நூலக தினமாகக் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.

பொதுவாக, ஒரு நாட்டின் நூலக வளர்ச்சியைக் கொண்டே அந்த நாட்டின் அறிவுச் செழுமை அளவிடப்படுகிறது. இந்தியாவில் தற்போது எங்கெங்கும் தேர்வுப் பயிற்சிக் களங்களும், உயர் பதவி தேர்வுக்கூடங்களும் பரவியிருக்கின்றன. அந்த மாணவர்களுக்கு விருந்தோம்புகங்களாக நூலகங்கள்தான் மிளிர் கின்றன. எங்கள் நூலகத்தை எந்த நேரமும் நாங்கள் மூடுவதில்லை என்று அறிவிக்கும் நூலகங்கள் வளர்ந்து வருகின்றன.

நடமாடும் நூலகங்கள் வீதி முனைகளில் நிற்பதெல்லாம் நமக்குப் பெருமையாக இருக் கிறது. நூலக விழாக்கள், நூலக இதழ்கள் பெருகி வருகின்றன. புத்தகங்கள் படிப்பது மூளைக்கு நலமளிக்கக்கூடிய ஒன்று. புதிய சிந்தனைகள் தோன்றுவதற்கும், அறிவாற்ற லைப் பெருக்கிக்கொள்ளவும், சவால்களை எதிர்கொள்வதற்கும், எழுத்தாளராக உருவா கவும், வெளிப்படையான அறிவார்ந்த உரை யாடல்கள் நடத்தவும் புத்தகங்கள் படிப்பது அவசியமாகிறது.

கி.மு. 300-ஆம் ஆண்டில் எகிப்து நாட்டின் அருமை-பெருமைகளைக் கேட்டு வியந்த மாவீரன் அலெக்சாண்டர், எகிப்தின் எழிலில் மயங்கி ‘அலெக்சாண்டிரியா’ என்ற நகரை உருவாக்கினார். அங்குதான் மிகப் பெரிய நூலகத்தை எழுப்பினார். உலகில் புகழ்பெற்ற எழுத்தாளர்களின் நூல்களை எல்லாம் திரட்டி 10 லட்சம் புத்தகங்களை அந்த நூலகத்தில் வைத்தார்.

அந்தப் புத்தகங்களைப் படிப்பதற்காகவே உலகின் அனைத்து நாடுகளிலிருந்தும் அறிஞர்கள் அலெக்சாண்டிரியாவுக்கு வந்த னர். அங்கிருந்துதான் உலகின் அனைத்துப் பகுதிகளுக்கும் தத்துவங்கள், விஞ்ஞானம், அளவையியல், புவியியல், சமய தத்துவார்த் தங்கள் பரவத் தொடங்கின.

எகிப்தியர்கள் பாப்பிரஸ் (தருப்பை) புல்லில் தயாரிக்கப்பட்ட ஏடுகளில் எழுதி அலெக்சாண்டிரியாவில் இருந்த நூலகத் தில் சேமித்து வைத்திருந்தனர். ரோமானி யர்களில் புகழ்வாய்ந்த ஜூலியஸ் சீசர், ரோம் நாட்டில் வாழ்ந்த வசதியானவர்களிடம் நன்கொடை வாங்கி பொது நூலகங்களை அமைத்தார். கி.மு. 4-ஆம் நூற்றாண்டில் இப்படி 28 பொது நூலகங்கள் நிறுவப்பட் டிருந்தன.

FLERE HISTORIER FRA Dinamani Pudukkottai

Dinamani Pudukkottai

புறநானூற்றில் தந்தை-மகன் சண்டை

இலக்கியம் என்பது வாழ்வை எதிரொலிப்பதாகப் படைக்கப்படுவது! அதில் கற்பனை, உவமை, அணி இலக்கணங்கள் எல்லாம் சேரப் படைக்கப்படுங்கால் அவற்றை விஞ்சிய மனித வாழ்வின் பதிவே காலக்கண்ணாடியாக நவில்தொறும் நயப்பாடுடைய இறவாப் பதிவிறக்கமாக எப்போதும் ஒளிர்வதாகும்.

time to read

1 min

November 02, 2025

Dinamani Pudukkottai

கோமாரிக்கல்

கால்நடைகளின் காவலன்!

time to read

1 mins

November 02, 2025

Dinamani Pudukkottai

அம்மானை!

அம்மானை என்பது மகளிர் விளையாட்டுகளில் ஒன்று. மூன்று பெண்கள் ஆடும் இவ்விளையாட்டில் கற்களை எறிவதும் பிடிப்பதும் குறிப்பிட்ட தாளகதியில் அமையும் எனவும், அந்தத் தாளத்துக்கு ஏற்றாற்போல பெண்கள் பாடுவது அம்மானைப் பாடல் எனவும் திறனாய்வாளர் குறிப்பிடுவது எண்ணத்தக்கதாகும்.

time to read

1 min

November 02, 2025

Dinamani Pudukkottai

ஊடல் கொள்ள நேரமில்லை!

சங்க இலக்கியங்கள் மனித வாழ்வின் அடையாளங்கள்; உயர் வாழ்வை உணர்த்தும் வழிகாட்டிகள். விருந்தோம்பல் உலகம் முழுவதற்குமான பொதுப் பண்புகளில் ஒன்று. ஆனால், தமிழ்நெறி 'இல்வாழ்வது என்பதே விருந்தோம்புவதற்கே' என்ற கொள்கையை உடையது. தமிழன் இல்வாழ்வு என்று கூறவில்லை. 'இல்லறம்' என்றான். இல்லத்திலிருந்து செய்யும் சீரிய அறம் தான் விருந்தோம்பல்.

time to read

2 mins

November 02, 2025

Dinamani Pudukkottai

உள்ளாட்சி அமைப்புகளுக்கு அதிகாரப் பகிர்வை மறுக்கும் மாநிலங்கள்

பிரதமரின் பொருளாதார ஆலோசனைக் குழுத் தலைவர் கவலை

time to read

1 min

November 02, 2025

Dinamani Pudukkottai

நடமாடும் உயிர்க்காவலர்

எனது இருபத்தைந்து வயதில் உயிர்காக்கும் முதலுதவி சேவையைத் தொடங்கி, நாற்பது ஆண்டுகளாக இடைவிடாது இயங்கி வருகிறேன்\" என்கிறார் ஸ்ரீரங்கத்தைச் சேர்ந்த அறுபத்தைந்து வயதான டி. சீனிவாச பிரசாத்.

time to read

2 mins

November 02, 2025

Dinamani Pudukkottai

Dinamani Pudukkottai

முதல் பெண்ணாக ஆசை

காஷ்மீரைச் சேர்ந்த பத்து வயதாகும் அதீகா மிர். 'ஃபார்முலா 1' (எஃப் 1) அகாதெமியின் 'டிஸ்கவர் யுவர் டிரைவ்' திட்டத்துக்கு உலகளவில் தேர்ந்தெடுக்கப்பட்ட மூன்று பெண்களில் ஒருவர், இதுவரை இப்படித் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களில் வயது குறைந்தவரும் இவர்தான்.

time to read

2 mins

November 02, 2025

Dinamani Pudukkottai

Dinamani Pudukkottai

கடல் கடந்தும் தமிழ்...

புதுக்கோட்டை மாவட்டத்தில் 1924-இல் பிறந்த முருகு. சுப்ரமணியம் 1950-களில் மலேசியாவுக்குச் சென்றார். மலேசியா, சிங்கப்பூரில் வெளியாகும் தமிழ் நாளிதழ்களில் ஆசிரியராகப் பணியாற்றிய இவர், கடல் கடந்து தமிழ் வளர்த்த பத்திரிகையாளர். இவரது குடும்பத்தினரது முன்னெடுப்பில், கண்ணதாசன் அறவாரியம், மலேசிய எழுத்தாளர் சங்கம் ஆகியன இணைந்து அவரது நூற்றாண்டு விழாவை மலேசியாவில் அண்மையில் கொண்டாடியது.

time to read

1 mins

November 02, 2025

Dinamani Pudukkottai

கவனம் ஈர்த்த பயோபிக் சினிமாக்கள்!

'பயோபிக்' என்ற வார்த்தையைச் சொன்னதும் நம் நினைவுக்குச் சட்டென வருவது பாலிவுட்தான். அந்தளவிற்கு எண்ணில் அடங்காத அளவிற்கு பயோபிக் திரைப்படங்களை எடுத்து பாலிவுட் சோபிக்கவும் செய்திருக்கிறது. சோதிக்கவும் செய்திருக்கிறது. இந்திய சினிமாவிலேயே தொடர்ந்து அதிகமாக பயோபிக் திரைப்படங்கள் வருவது பாலிவுட்டில்தான்.

time to read

2 mins

November 02, 2025

Dinamani Pudukkottai

இரண்டாவது நாளாக பங்குச் சந்தை சரிவு

சர்வதேச மற்றும் உள்நாட்டு சந்தைகளில் நிலவிய பலவீனமான போக்கு காரணமாக, இந்திய பங்குச் சந்தைகள் தொடர்ந்து இரண்டாவது நாளாக வெள்ளிக்கிழமை சரிவைக் கண்டன.

time to read

1 min

November 01, 2025

Translate

Share

-
+

Change font size