Prøve GULL - Gratis
பயங்கரவாத முகாம்களை ஒழிக்க நடவடிக்கை
Dinamani Puducherry
|April 25, 2025
அனைத்துக் கட்சி கூட்டத்தில் ஒருமித்த ஆதரவு
-
புது தில்லி, ஏப். 24: பயங்கரவாத முகாம்களை ஒழிக்க உறுதியான நடவடிக்கை எடுப்பதற்கு அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் எதிர்க்கட்சிகள் ஒருமித்த ஆதரவளித்ததாக மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு தெரிவித்தார்.
ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில் கடந்த செவ்வாய்க்கிழமை நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்டனர். தாக்குதலில் ஈடுபட்ட பயங்கரவாதிகள் அடையாளம் காணப்பட்டு, அவர்களைத் தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
இத்தாக்குதலின் எல்லை தாண்டிய பயங்கரவாத தொடர்புகளைக் கருத்தில் கொண்டு, பாகிஸ்தானுக்கு எதிராக கடுமையான ராஜீய நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது.
இச்சம்பவத்தையொட்டி பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பாதுகாப்பு விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவைக் குழு புதன்கிழமை (ஏப்.23) கூடியது.
சிந்து நதி நீர் பகிர்வு ஒப்பந்தம் நிறுத்தம், வாகா எல்லை மூடல், பாகிஸ்தானியர்களுக்கு விசா (நுழைவு இசைவு) ரத்து, பரஸ்பர தூதரக பாதுகாப்பு அதிகாரிகள் வெளியேற்றம் போன்ற முக்கிய முடிவுகள் அந்தக் கூட்டத்தில் எடுக்கப்பட்டன.
தொடர்ந்து, பாகிஸ்தானும் இந்தியாவுக்கு எதிராக சில நடவடிக்கைகளை அறிவித்ததால் பதற்றமான சூழல் நிலவுகிறது.
இந்நிலையில், அனைத்துக் கட்சிக் கூட்டம் தில்லியில் ராஜ்நாத் சிங் தலைமையில் வியாழக்கிழமை (ஏப்.24) நடைபெற்றது.
Denne historien er fra April 25, 2025-utgaven av Dinamani Puducherry.
Abonner på Magzter GOLD for å få tilgang til tusenvis av kuraterte premiumhistorier og over 9000 magasiner og aviser.
Allerede abonnent? Logg på
FLERE HISTORIER FRA Dinamani Puducherry
Dinamani Puducherry
ரூ.397 கோடி மின்மாற்றி முறைகேடு: சிபிஐ வழக்குப் பதிவு
சிபிஐ வழக்குப் பதிவு
1 min
June 09, 2026
Dinamani Puducherry
'இண்டி' கூட்டணி ஒற்றுமையை வலுப்படுத்த வேண்டும்
தில்லி கூட்டத்தில் தலைவர்கள் வலியுறுத்தல்
2 mins
June 09, 2026
Dinamani Puducherry
ஆப்கானுடனான டெஸ்ட்: 3 நாளில் வென்றது இந்தியா
ஆப்கானிஸ்தானுடனான டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்தியா, இன்னிங்ஸ் மற்றும் 300 ரன்கள் வித்தியாசத்தில் திங்கள்கிழமை வெற்றி பெற்றது.
1 mins
June 09, 2026
Dinamani Puducherry
காங்கிரஸின் அணுகுமுறையால் கூட்டணியில் அதிருப்தி
அண்மையில் நடந்து முடிந்த தேர்தல்களின் போது காங்கிரஸ் கட்சி கையாண்ட அணுகுமுறையால் இண்டி கூட்டணியில் இடம் பெற்றுள்ள கட்சிகள் இடையே அதிருப்தி ஏற்பட்டுள்ளது என்று மக்களவை உறுப்பினரும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவருமான தொல். திருமாவளவன் திங்கள்கிழமை தெரிவித்தார்.
1 min
June 09, 2026
Dinamani Puducherry
ஆந்திரம்: ஆலையில் உருக்கப்பட்ட இரும்பு குழம்பு சிந்தி 8 பேர் உயிரிழப்பு
ஆந்திர மாநிலத்தில் இரும்பு ஆலையில் கொதிநிலையில் இருந்த உருக்கப்பட்ட இரும்புக் குழம்பு சிந்தியதில் 8 தொழிலாளர்கள் உயிரிழந்தனர். பலத்த காயங்களுடன் மீட்கப்பட்ட 6 பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது.
1 min
June 09, 2026
Dinamani Puducherry
வாக்களித்தால் மட்டும் போதுமா?
கடந்த ஏப்ரல் மாதம் சட்டப்பேரவைத் தேர்தலன்று காலையில் வாக்குச்சாவடிக்குச் சென்று வாக்கைச் செலுத்திவிட்டு வந்தபிறகு கைப்பேசியை எடுத்தால் நான்கு அழைப்புகள் வந்திருந்தன.
3 mins
June 09, 2026
Dinamani Puducherry
தரமான ஆராய்ச்சியே வளர்ச்சி!
தேசத்தின் அறிவுசார் வளம், சமூக முன்னேற்றத்தைத் தீர்மானிக்கும் உயர் கல்வியை வழங்கும் பல்கலைக்கழகங்கள் சிந்தனை விதைகளை விதைப்பதற்கான களங்களாகவும், அறிவியல் கண்டுபிடிப்புகளுக்கான மையங்களாகவும் திகழ்ந்து வந்துள்ளன.
2 mins
June 09, 2026
Dinamani Puducherry
அரசுப் பள்ளியில் காலை சிற்றுண்டி சாப்பிட்ட 11 மாணவர்களுக்கு வாந்தி, மயக்கம்
திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் அருகே அரசுப் பள்ளியில் திங்கள்கிழமை காலை சிற்றுண்டி சாப்பிட்ட 11 மாணவ, மாணவிகளுக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டது.
1 min
June 09, 2026
Dinamani Puducherry
பிரக்ஞானந்தாவுக்கு ரூ.50 லட்சம் ஊக்கத் தொகை
முதல்வர் ஜோசப் விஜய் வழங்கினார்
1 min
June 09, 2026
Dinamani Puducherry
தில்லியில் இன்று 'இண்டி' கூட்டணி கூட்டம்
23 கட்சிகள் பங்கேற்பதாக காங்கிரஸ் தகவல்
1 mins
June 08, 2026
Translate
Change font size
