Prøve GULL - Gratis
எண்ம வியூகம்!
Dinamani Perambalur & Ariyalur
|November 01, 2025
அடுக்கு மொழிகள், அலங்கார மேடைகள், வானுயர்ந்த கட்-அவுட்கள், வகை வகையான வண்ணச் சுவரொட்டிகள் இவை யாவும் பழைய அரசியல் களத்தின் சிதைந்த எச்சங்கள். இப்போதோ இணைய வழியில் சமூக ஊடகங்களே நவீன அரசியலின் புதிய சிம்மாசனமாக மாறியுள்ளன. அதிலும் குறிப்பாக, தனி மனிதனின் அறிதிறன்பேசியே இன்றைய அரசியல் போர்க்களத்தின் அதிமுக்கிய ஆயுதம்.
சமூக ஊடகங்களின் வளர்ச்சிக்குப் பிறகு, அரசியல் கூட்டங்களுக்குத் திரண்டு வரும் தொண்டர்கள் இனி தேவை இல்லை. ‘ஃபாலோயர்கள்' (பின்பற்றுபவர்கள்) என்று சொல்லக்கூடிய இணைய செல்வாக்கு மட்டுமே போதுமானது; அரசியல் சந்தை அமோகமான வணிகச் சலசலப்புடன் உச்சம் தொடும்.
அரசியல் தலைவர்கள் ஓர் அறிக்கையை வெளியிட, சமூக ஊடகத்தில் சிறு பதிவிட்டால் போதும், அடுத்த விநாடியே அது லட்சக்கணக்கான மக்களை மின்னல் வேகத்தில் சென்றடைந்து விடுகிறது. சில தலைவர்கள் தங்கள் அறைக்குள் இருந்து கொண்டே சமூக ஊடகங்களில் அடிக்கடி நேரடியாகக் காட்சியளித்து உரையாற்றுகிறார்கள். அவர்கள் மேல்மட்டத் தலைவர்கள் முதல் கடைக்கோடித் தொண்டர்கள் வரை அனைவரிடமும் ஆலோசனை நடத்துகிறார்கள்.
தலைவர்கள் இப்போது வெறும் அரசியல்வாதிகள் அல்லர்; அவர்கள்தாம் அந்தந்தக் கட்சிகளின் விளம்பரத் தூதர்கள். ஆரோக்கியக் குறிப்புகள், வாகன விபத்தில் சிக்கியவரை மீட்க நீளும் உதவிக்கரங்கள், பொது மக்களுடன் ஒருவராகத் தேநீர் அருந்தும் எளிய காட்சிகள், பண்டிகைக்குப் பகிரப்படும் அழகான வாழ்த்துச் செய்திகள் ... இவை அனைத்தும் எதற்காகத் தெரியுமா? ஓர் எளிய, நெருக்கமான பிம்பத்தைக் கட்டமைக்கத்தான். இந்த எண்ம (டிஜிட்டல்) அலங்காரம்தான் இப்போது தலைவர்களுக்கான பிரம்மாண்டமான ஒப்பனையாகிவிட்டது.
Denne historien er fra November 01, 2025-utgaven av Dinamani Perambalur & Ariyalur.
Abonner på Magzter GOLD for å få tilgang til tusenvis av kuraterte premiumhistorier og over 9000 magasiner og aviser.
Allerede abonnent? Logg på
FLERE HISTORIER FRA Dinamani Perambalur & Ariyalur
Dinamani Perambalur & Ariyalur
கடல் கடந்தும் தமிழ்...
புதுக்கோட்டை மாவட்டத்தில் 1924-இல் பிறந்த முருகு. சுப்ரமணியம் 1950-களில் மலேசியாவுக்குச் சென்றார். மலேசியா, சிங்கப்பூரில் வெளியாகும் தமிழ் நாளிதழ்களில் ஆசிரியராகப் பணியாற்றிய இவர், கடல் கடந்து தமிழ் வளர்த்த பத்திரிகையாளர். இவரது குடும்பத்தினரது முன்னெடுப்பில், கண்ணதாசன் அறவாரியம், மலேசிய எழுத்தாளர் சங்கம் ஆகியன இணைந்து அவரது நூற்றாண்டு விழாவை மலேசியாவில் அண்மையில் கொண்டாடியது.
1 mins
November 02, 2025
Dinamani Perambalur & Ariyalur
கோமாரிக்கல்
கால்நடைகளின் காவலன்!
1 mins
November 02, 2025
Dinamani Perambalur & Ariyalur
கவனம் ஈர்த்த பயோபிக் சினிமாக்கள்!
'பயோபிக்' என்ற வார்த்தையைச் சொன்னதும் நம் நினைவுக்குச் சட்டென வருவது பாலிவுட்தான். அந்தளவிற்கு எண்ணில் அடங்காத அளவிற்கு பயோபிக் திரைப்படங்களை எடுத்து பாலிவுட் சோபிக்கவும் செய்திருக்கிறது. சோதிக்கவும் செய்திருக்கிறது. இந்திய சினிமாவிலேயே தொடர்ந்து அதிகமாக பயோபிக் திரைப்படங்கள் வருவது பாலிவுட்டில்தான்.
2 mins
November 02, 2025
Dinamani Perambalur & Ariyalur
புறநானூற்றில் தந்தை-மகன் சண்டை
இலக்கியம் என்பது வாழ்வை எதிரொலிப்பதாகப் படைக்கப்படுவது! அதில் கற்பனை, உவமை, அணி இலக்கணங்கள் எல்லாம் சேரப் படைக்கப்படுங்கால் அவற்றை விஞ்சிய மனித வாழ்வின் பதிவே காலக்கண்ணாடியாக நவில்தொறும் நயப்பாடுடைய இறவாப் பதிவிறக்கமாக எப்போதும் ஒளிர்வதாகும்.
1 min
November 02, 2025
Dinamani Perambalur & Ariyalur
நடமாடும் உயிர்க்காவலர்
எனது இருபத்தைந்து வயதில் உயிர்காக்கும் முதலுதவி சேவையைத் தொடங்கி, நாற்பது ஆண்டுகளாக இடைவிடாது இயங்கி வருகிறேன்\" என்கிறார் ஸ்ரீரங்கத்தைச் சேர்ந்த அறுபத்தைந்து வயதான டி. சீனிவாச பிரசாத்.
2 mins
November 02, 2025
Dinamani Perambalur & Ariyalur
ஊடல் கொள்ள நேரமில்லை!
சங்க இலக்கியங்கள் மனித வாழ்வின் அடையாளங்கள்; உயர் வாழ்வை உணர்த்தும் வழிகாட்டிகள். விருந்தோம்பல் உலகம் முழுவதற்குமான பொதுப் பண்புகளில் ஒன்று. ஆனால், தமிழ்நெறி 'இல்வாழ்வது என்பதே விருந்தோம்புவதற்கே' என்ற கொள்கையை உடையது. தமிழன் இல்வாழ்வு என்று கூறவில்லை. 'இல்லறம்' என்றான். இல்லத்திலிருந்து செய்யும் சீரிய அறம் தான் விருந்தோம்பல்.
2 mins
November 02, 2025
Dinamani Perambalur & Ariyalur
முதல் பெண்ணாக ஆசை
காஷ்மீரைச் சேர்ந்த பத்து வயதாகும் அதீகா மிர். 'ஃபார்முலா 1' (எஃப் 1) அகாதெமியின் 'டிஸ்கவர் யுவர் டிரைவ்' திட்டத்துக்கு உலகளவில் தேர்ந்தெடுக்கப்பட்ட மூன்று பெண்களில் ஒருவர், இதுவரை இப்படித் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களில் வயது குறைந்தவரும் இவர்தான்.
2 mins
November 02, 2025
Dinamani Perambalur & Ariyalur
படகுகள் மீதான அமெரிக்க தாக்குதல் சட்டவிரோத படுகொலை: ஐ.நா.
தங்கள் நாட்டுக்குள் போதைப் பொருள்களை ஏற்றிவருவதாகக் கூறி, கரீபியன் தென் அமெரிக்க பகுதிகளில் இருந்து கரீபியன் மற்றும் பசிபிக் கடல் வழியாக வரும் படகுகள் (படம்) மீது அமெரிக்கா தாக்குதல் நடத்துவது சட்டவிரோத மனிதப் படுகொலைகள் என்று ஐ.நா. கண்டனம் தெரிவித்துள்ளது.
1 min
November 01, 2025
Dinamani Perambalur & Ariyalur
அன்புள்ள ஆசிரியருக்கு...
கட்டுப்பாடு வேண்டும்
1 min
November 01, 2025
Dinamani Perambalur & Ariyalur
யுபிஐ சர்க்கிள்: அமேஸானின் புதிய வசதிகள்
தனது பணப்பட்டுவாடா செயலி மூலம் குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுக்கு உடனடியாக பணம் அனுப்புவதற்கான யுபிஐ சர்க்கிள் முறையில் புதிய வசதிகளை அமேஸான் அறிமுகப்படுத்தியுள்ளது.
1 min
November 01, 2025
Listen
Translate
Change font size
