Facebook Pixel கவலை தரும் கல்வியின் தரம் | Dinamani Dharmapuri - newspaper - Les denne historien på Magzter.com

Prøve GULL - Gratis

கவலை தரும் கல்வியின் தரம்

Dinamani Dharmapuri

|

August 07, 2025

கற்றல் திறனை அதிகரிக்கும் முறைகளில் சோதித்து அளவிடுதல் முறை மிகப் பழைமையானது மட்டுமல்ல; சரியானதும் ஆகும். தொடக்கக் கல்வி, உயர்நிலைப் பள்ளிக் கல்வி, கல்லூரிக் கல்வி என்ற எல்லா நிலைகளிலும் முதன்மை பெற பாடத்திட்டங்களும் தேர்ச்சி முறைகளும் அமைக்கப்பட வேண்டும்.

- டி.எஸ். தியாகராசன்

அமெரிக்க ஹார்வர்டு பிஸினஸ் ஸ்கூலின் இந்திய உறுப்பு அமைப்பான திறன் சோதிப்பு நிறுவனம் ஆய்வு அறிக்கையொன்றை வெளியிட்டு உள்ளது. அதில் இந்திய தொழிலாளர்களில் பத்து நபர்களில் ஒன்பது பேர் குறைந்த செயல் திறன் உள்ளவர்கள் என்று கூறப்பட்டுள்ளது. தொழிலாளர்களின் திறனை தரவரிசைப் பட்டியலிட்டு மிகக் குறைந்த செயலாற்றும் திறன் உடையவர்களை ஒன்று, இரண்டு என்ற தரத்தில் பிரிக்கிறது. இவர்கள் வீதியில் விற்பனை செய்வோர், வீட்டுப் பணியாளர்கள், கை கால் களைக் கொண்டு தொழில்களை இயக்குவோர் என்று வகைப்படுத்தி உள்ளனர்.

இந்த மாதிரியான தொழிலாளர்களை வொகேஷனல் பாடப்பிரிவுகளில் சேர்த்து பயிற்சி கொடுத்தாலும் பலன் இல்லை. பிராந்தியவாரியாக பிரித்து பிகார், உத்தர பிரதேசம் போன்ற மாநிலங்கள் மிகவும் பின்தங்கிய நிலையில் இருப்பதைச் சுட்டிக் காட்டுகிறது அந்த அறிக்கை. அதேநேரத்தில், யூனியன் பிரதேசங்களான சண்டீகர், புதுவை, கோவா மற்றும் கேரளம் போன்ற மாநிலங்கள் செயல்திறன்மிக்க தொழிலாளர்களைக் கொண்டதாகக் கணிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவின் எதிர்கால தொழிலாளர் திறன் குறித்தான வரைபடத்தின் கீழ் நடத்தப்பட்ட தகவல் சேகரிப்பு அட்டவணை 2017-18 முதல் 2023-2024 வரையிலான தகவல் 8.25% பட்டதாரிகள் மட்டுமே அவர்களின் பணிக்கு ஏற்ற கல்வித் தகுதியைப் பெற்றிருக்கிறார்கள். இவர்களை மூன்று என்ற தரவரிசையில் சேர்க்கிறார்கள். 88 % தொழிலாளர்கள் மேற்சொன்ன ஒன்று, இரண்டு என்ற தரவரிசைப் பட்டியலின் கீழ் வருகிறார்கள்.

மத்திய தொழில்முனைவோர், திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சர் ஜெயந்த் சௌதரி 50 % பட்டதாரிகள், எழுத்தர், மெக்கானிக், இயந்திரங்களை இயக்குவோர் என்கிறார். 38.23% பட்டதாரிகள் மட்டுமே தொழில் திறன்மிக்கவர்கள் என்ற தரவரிசையான நான்கில் வருகிறார்கள். 28.12 % முதுநிலைப் பட்டதாரிகள் மத்திம தொழில் திறன் உடையவர்கள்.

பொதுவாக, தொழிலாளர்கள் முறையான கல்வியில் நன்கு தேர்ச்சி பெறாதவர்கள். இப்படி கற்ற கல்வி பணியாற்றுவதற்கோ, தொழில் புரிவதற்கோ ஏற்றதாக இல்லை; 'மிஸ் மேச்' என்கிறார் அமைச்சர்.

இதன்மூலம் தெரிய வருகிற உண்மை என்னவென்றால், தொழிலாளர் பணிக்கான தேவைச் சந்தையில் தகுதியானவர்கள் இல்லை என்பதே. தொழில் திறன் தர வரிசையில் உள்ள இரண்டாவது பிரிவினர் ஆண்டு ஊதியத்தில் 5, 6 % அளவில் உயர்வு பெறுகின்றனர்.

FLERE HISTORIER FRA Dinamani Dharmapuri

Dinamani Dharmapuri

தமிழகத்தில் 5 மாதங்களில் 145 பேர் உடல் உறுப்பு தானம் !

தமிழகத்தில் முன்னெப்போதும் இல்லாத வகையில், கடந்த ஐந்து மாதங்களில் 145 பேரின் உடல் உறுப்புகள் தானமாகப் பெறப்பட்டு 800 பேருக்கு மறுவாழ்வு அளிக்கப்பட்டுள்ளது.

time to read

1 min

June 09, 2026

Dinamani Dharmapuri

தொடர் சரிவில் சென்செக்ஸ், நிஃப்டி!

மத்திய கிழக்கில் வெடித்த புதிய மோதலின் எதிரொலியாக கச்சா எண்ணெய் விலை உயர்வு மற்றும் உலகளாவிய பங்குச் சந்தைகளில் நிலவிய பலவீனமான போக்கு ஆகிய காரணங்களால், இந்த வாரத்தின் முதல் வர்த்தக தினமான திங்கள்கிழமை இந்தியப் பங்குச் சந்தை சரிவுப் பாதையில் தொடர்ந்தது.

time to read

1 min

June 09, 2026

Dinamani Dharmapuri

Dinamani Dharmapuri

ரயில் நிலையத்தில் சூட்கேஸில் சடலம் கிடந்த வழக்கு: தலை, கை, கால்கள் மீட்பு

பெரம்பூர் ரயில் நிலையத்தில் சூட்கேஸில் சடலம் மீட்கப்பட்ட வழக்கில் கொலை செய்யப்பட்டவரின் தலை, கை, கால்கள் மீட்கப்பட்டன.

time to read

1 mins

June 09, 2026

Dinamani Dharmapuri

இஸ்ரேல்-ஈரான் இடையே மீண்டும் மோதல்

அமெரிக்கா தலையீட்டால் தணிந்த பதற்றம்

time to read

1 min

June 09, 2026

Dinamani Dharmapuri

Dinamani Dharmapuri

தவெக ஆட்சி நீடிக்காது என ஸ்டாலின் கூறியிருக்கக் கூடாது

தவெக ஆட்சி 3 மாதங்கள்கூட நீடிக்காது என்று முன்னாள் முதல்வர் மு.க. ஸ்டாலின் தெரிவித்திருக்கக் கூடாது என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலர் மு. வீரபாண்டியன் தெரிவித்தார்.

time to read

1 min

June 09, 2026

Dinamani Dharmapuri

ரூ.397 கோடி மின்மாற்றி முறைகேடு: சிபிஐ வழக்குப் பதிவு

சிபிஐ வழக்குப் பதிவு

time to read

1 min

June 09, 2026

Dinamani Dharmapuri

Dinamani Dharmapuri

பெண் அமைச்சர் குறித்து அவதூறு: யூடியூபர் மாரிதாஸ் கைது

தமிழக தொழில்துறை அமைச்சர் கீர்த்தனா குறித்து அவதூறு கருத்து தெரிவித்ததாக யூடியூபர் மாரிதாஸ் கைது செய்யப்பட்டார்.

time to read

1 min

June 09, 2026

Dinamani Dharmapuri

Dinamani Dharmapuri

ஆந்திரம்: ஆலையில் உருக்கப்பட்ட இரும்பு குழம்பு சிந்தி 8 பேர் உயிரிழப்பு

ஆந்திர மாநிலத்தில் இரும்பு ஆலையில் கொதிநிலையில் இருந்த உருக்கப்பட்ட இரும்புக் குழம்பு சிந்தியதில் 8 தொழிலாளர்கள் உயிரிழந்தனர். பலத்த காயங்களுடன் மீட்கப்பட்ட 6 பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது.

time to read

1 min

June 09, 2026

Dinamani Dharmapuri

மாநிலங்களவைத் தேர்தல்: வேட்புமனு தாக்கல் நிறைவு

வரும் ஜூன் 18-ஆம் தேதி 27 இடங்களுக்கான மாநிலங்களவைத் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அதற்கான வேட்புமனு தாக்கல் திங்கள்கிழமை நிறைவடைந்தது.

time to read

1 mins

June 09, 2026

Dinamani Dharmapuri

Dinamani Dharmapuri

பிரக்ஞானந்தாவுக்கு ரூ.50 லட்சம் ஊக்கத் தொகை

முதல்வர் ஜோசப் விஜய் வழங்கினார்

time to read

1 min

June 09, 2026

Translate

Share

-
+

Change font size