Prøve GULL - Gratis

வரலாறு மன்னிக்காது!

Dinamani Cuddalore

|

August 11, 2025

இந்தியா, ரஷியா பொருளாதாரம் சிதைந்து போய்விட்டால், இரு நாடுகளின் பொருளாதார வளம் முற்றிலுமாக அழித்தொழிக்கப்படும் என்பதற்கான இந்த மிரட்டல் போக்கில் டிரம்ப் எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியையும் 140 கோடி மக்களும் விழிப்போடு எதிர்கொள்ள வேண்டும் என்பதே இப்போதைக்கான நமது நிலை.

ஹல்காம் தாக்குதலுக்குப் பிறகு, இந்தியா-பாகிஸ்தான் மோதலை வர்த்தகத்தை முன்வைத்து நான்தான் முடிவுக்குக் கொண்டு வந்தேன் என தொடர்ச்சியாகக் கூறிவரும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், தற்போது இந்தியப் பொருள்களின் மீது 25% வரி விதித்திருக்கிறார்.

ஏற்கெனவே, ஆப்பிள் உள்ளிட்ட அமெரிக்க நிறுவனங்களிடம் தங்களின் தொழிற்சாலைகளை இந்தியா உள்ளிட்ட நாடுகளில் நிறுவக் கூடாது என எச்சரித்து வந்த டிரம்ப், ரஷியாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவதை அந்த நாட்டின் பொருளாதாரத்துக்கும், உக்ரைன் போருக்கு இந்தியா மறைமுக ஆதரவு வழங்குவதாகவும் குற்றச்சாட்டை முன்வைத்தார். அதை இந்தியா நிறுத்தா விட்டால், வரியை மேலும் அதிகரிப்பேன் என்று டிரம்ப் கூறிவந்த நிலையில், அடுத்த 24 மணி நேரத்திலேயே இந்தியா மீதான வரியை மேலும் 25% உயர்த்தி, 50% அதிகரித்திருக்கிறார்.

ரஷியாவிடம் இருந்து கச்சா எண்ணெயை இந்தியா வாங்கி வருவதால், அதற்கு அபராதமாக இந்த 25% வரியை உயர்த்தியிருப்பதாக டிரம்ப் அறிவித்திருக்கிறார். இந்த அபராத வரி விதிப்பு அடுத்த 21 நாள்களில் நடைமுறைக்கு வருவதாகத் தெரிவித்திருக்கிறார். இதன் மூலம் பிரேசிலுக்கு அடுத்தபடியாக, அமெரிக்காவால் 50% வரி விதிப்புக்கு உள்ளான நாடாக இருக்கிறது இந்தியா.

ஒரு நாடு எந்த நாட்டுடன் வர்த்தகம் செய்ய வேண்டும் என்பது அந்நாட்டின் உரிமை. அதை யாரும் கட்டுப்படுத்தக் கூடாது. டிரம்ப்பின் இந்த நடவடிக்கை நியாயமற்றது; காரணமற்றது.

ரஷியாவிடம் இருந்து நாம் கச்சா எண்ணெய் வாங்குகிறோம்; ஆனால், ரஷியா மீது அமெரிக்கா பொருளாதாரத் தடை விதித்திருக்கிறது. இதற்கு உக்ரைன் மீதான போர்தான் முக்கியக் காரணம். நம் நாட்டின் கச்சா எண்ணெய் தேவையில் 36% முதல் 38% வரை ரஷியாதான் நிறைவு செய்கிறது.

ரஷியாவிடம் கச்சா எண்ணெய் வாங்கக் கூடாது என்று டிரம்ப் கூறிவந்த நிலையில், இந்தியா அதை ஏற்கவில்லை. தேச நலன்தான் முக்கியம் என்று இந்தியா திட்டவட்டமாகத் தெரிவித்து விட்டது.

FLERE HISTORIER FRA Dinamani Cuddalore

Dinamani Cuddalore

Dinamani Cuddalore

புறநானூற்றில் தந்தை-மகன் சண்டை

இலக்கியம் என்பது வாழ்வை எதிரொலிப்பதாகப் படைக்கப்படுவது! அதில் கற்பனை, உவமை, அணி இலக்கணங்கள் எல்லாம் சேரப் படைக்கப்படுங்கால் அவற்றை விஞ்சிய மனித வாழ்வின் பதிவே காலக்கண்ணாடியாக நவில்தொறும் நயப்பாடுடைய இறவாப் பதிவிறக்கமாக எப்போதும் ஒளிர்வதாகும்.

time to read

1 min

November 02, 2025

Dinamani Cuddalore

நடமாடும் உயிர்க்காவலர்

எனது இருபத்தைந்து வயதில் உயிர்காக்கும் முதலுதவி சேவையைத் தொடங்கி, நாற்பது ஆண்டுகளாக இடைவிடாது இயங்கி வருகிறேன்\" என்கிறார் ஸ்ரீரங்கத்தைச் சேர்ந்த அறுபத்தைந்து வயதான டி. சீனிவாச பிரசாத்.

time to read

2 mins

November 02, 2025

Dinamani Cuddalore

கோமாரிக்கல்

கால்நடைகளின் காவலன்!

time to read

1 mins

November 02, 2025

Dinamani Cuddalore

Dinamani Cuddalore

முதல் பெண்ணாக ஆசை

காஷ்மீரைச் சேர்ந்த பத்து வயதாகும் அதீகா மிர். 'ஃபார்முலா 1' (எஃப் 1) அகாதெமியின் 'டிஸ்கவர் யுவர் டிரைவ்' திட்டத்துக்கு உலகளவில் தேர்ந்தெடுக்கப்பட்ட மூன்று பெண்களில் ஒருவர், இதுவரை இப்படித் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களில் வயது குறைந்தவரும் இவர்தான்.

time to read

2 mins

November 02, 2025

Dinamani Cuddalore

Dinamani Cuddalore

கடல் கடந்தும் தமிழ்...

புதுக்கோட்டை மாவட்டத்தில் 1924-இல் பிறந்த முருகு. சுப்ரமணியம் 1950-களில் மலேசியாவுக்குச் சென்றார். மலேசியா, சிங்கப்பூரில் வெளியாகும் தமிழ் நாளிதழ்களில் ஆசிரியராகப் பணியாற்றிய இவர், கடல் கடந்து தமிழ் வளர்த்த பத்திரிகையாளர். இவரது குடும்பத்தினரது முன்னெடுப்பில், கண்ணதாசன் அறவாரியம், மலேசிய எழுத்தாளர் சங்கம் ஆகியன இணைந்து அவரது நூற்றாண்டு விழாவை மலேசியாவில் அண்மையில் கொண்டாடியது.

time to read

1 mins

November 02, 2025

Dinamani Cuddalore

கவனம் ஈர்த்த பயோபிக் சினிமாக்கள்!

'பயோபிக்' என்ற வார்த்தையைச் சொன்னதும் நம் நினைவுக்குச் சட்டென வருவது பாலிவுட்தான். அந்தளவிற்கு எண்ணில் அடங்காத அளவிற்கு பயோபிக் திரைப்படங்களை எடுத்து பாலிவுட் சோபிக்கவும் செய்திருக்கிறது. சோதிக்கவும் செய்திருக்கிறது. இந்திய சினிமாவிலேயே தொடர்ந்து அதிகமாக பயோபிக் திரைப்படங்கள் வருவது பாலிவுட்டில்தான்.

time to read

2 mins

November 02, 2025

Dinamani Cuddalore

இரண்டாவது நாளாக பங்குச் சந்தை சரிவு

சர்வதேச மற்றும் உள்நாட்டு சந்தைகளில் நிலவிய பலவீனமான போக்கு காரணமாக, இந்திய பங்குச் சந்தைகள் தொடர்ந்து இரண்டாவது நாளாக வெள்ளிக்கிழமை சரிவைக் கண்டன.

time to read

1 min

November 01, 2025

Dinamani Cuddalore

அன்புள்ள ஆசிரியருக்கு...

கட்டுப்பாடு வேண்டும்

time to read

1 min

November 01, 2025

Dinamani Cuddalore

Dinamani Cuddalore

படகுகள் மீதான அமெரிக்க தாக்குதல் சட்டவிரோத படுகொலை: ஐ.நா.

தங்கள் நாட்டுக்குள் போதைப் பொருள்களை ஏற்றிவருவதாகக் கூறி, கரீபியன் தென் அமெரிக்க பகுதிகளில் இருந்து கரீபியன் மற்றும் பசிபிக் கடல் வழியாக வரும் படகுகள் (படம்) மீது அமெரிக்கா தாக்குதல் நடத்துவது சட்டவிரோத மனிதப் படுகொலைகள் என்று ஐ.நா. கண்டனம் தெரிவித்துள்ளது.

time to read

1 min

November 01, 2025

Dinamani Cuddalore

யுபிஐ சர்க்கிள்: அமேஸானின் புதிய வசதிகள்

தனது பணப்பட்டுவாடா செயலி மூலம் குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுக்கு உடனடியாக பணம் அனுப்புவதற்கான யுபிஐ சர்க்கிள் முறையில் புதிய வசதிகளை அமேஸான் அறிமுகப்படுத்தியுள்ளது.

time to read

1 min

November 01, 2025

Translate

Share

-
+

Change font size