Prøve GULL - Gratis

நீதி தேவன் மயக்கம் தெளிய வேண்டும்!

Dinamani Cuddalore

|

July 31, 2025

உச்சநீதிமன்ற உள் விசாரணையை எதிர்த்தும், தலைமை நீதிபதி அனுப்பிய பரிந்துரையை எதிர்த்தும் நீதிபதி யஷ்வந்த் வர்மா உச்சநீதிமன்றத்திலேயே வழக்கு தொடர்ந்துள்ளார். தங்களுக்கு எதிரான வழக்கை தாங்களே விசாரிப்பது உச்சநீதிமன்றம் இதுவரை கண்டதில்லை.

- உதயமு. வீரையன்

துவாக ஊழல் என்பது ஒரு தேசத்தின் வளர்ச்சியைத் தடுத்து நிறுத்திவிடும். அதிலும் நீதித் துறையில் ஊழல் என்றால் கேட்க வேண்டுமா? நாட்டின் அனைத்து வளர்ச்சிகளையும் அழித்துவிடும். தேசம் முன்னோக்கிச் செல்வதற்குப் பதிலாக பின்னோக்கிச் செல்லத் தொடங்கிவிடும்.

தில்லி உயர்நீதிமன்ற நீதிபதி யஷ்வந்த் வர்மா வீட்டில் கட்டுக்கட்டாக பணம் கண்டறியப்பட்டது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. நீதிமன்றங்களும், நீதிபதிகளும் மக்களின் நம்பிக்கைக்கு உரியதாகச் செயல்பட வேண்டும். எப்போதாவது, தவறு ஏற்படுமானால் வெள்ளைத் துணியில் கருப்பு மை பட்டதுபோல் எல்லோருக்கும் தெரிந்துவிடும்.

'நீதித் துறையில் ஊழல் மற்றும் தவறான செயல்பாடுகள் இடம்பெறுவது அதன் மீதான பொதுமக்களின் நம்பிக்கையில் எதிர்மறைத் தாக்கத்தை ஏற்படுத்தும். அத்துடன் ஒட்டுமொத்த நீதித் துறையின் நேர்மை மீதான நம்பிக்கையும் சிதைந்துவிடும்' என்று உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் தெரிவித்துள்ளார்.

பிரிட்டன் உச்சநீதிமன்றத்தில் 'நீதித் துறையின் சட்டபூர்வ தன்மை மற்றும் பொது நம்பிக்கையைப் பராமரித்தல்' என்ற தலைப்பில் நடைபெற்ற வட்ட மேஜை மாநாட்டில் பங்கேற்ற அவர் இவ்வாறு பேசியுள்ளார். ஒவ்வொரு அமைப்பும் வலுவான நடைமுறையைக் கொண்டுள்ளபோதும் தொழில் முறையில் தவறான நடத்தை தொடர்பான பிரச்னைகளுக்கு உள்ளாகின்றன.

எப்போதாவது நீதித் துறைக்குள்ளும் இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறுகின்றன. இதுபோன்ற நடத்தைகள் பொதுமக்களின் நம்பிக்கை மீது எதிர்மறைத் தாக்கத்தை ஏற்படுத்தும். எனவே, இதற்கு எதிராக சரியான வெளிப்படையான நடவடிக்கைகள் மூலம் பொதுமக்களின் நம்பிக்கையை மீட்டெடுக்க முடியும்.

அந்த வகையில், நீதித் துறையில் ஊழல், தவறான நடத்தைகள் தொடர்பான சம்பவங்கள் வெளிச்சத்துக்கு வரும் போதெல்லாம் உரிய உடனடி நடவடிக்கைகளை உச்சநீதிமன்றம் மேற்கொண்டு வருகிறது. மேலும், நீதிபதிகள் பணி ஓய்வு பெற்றவுடன் அரசில் நியமனங்களை மேற்கொள்வது அல்லது தேர்தலில் போட்டியிடுவதற்காகப் பணி விலகுவது போன்றவற்றால் பொதுமக்களின் நம்பிக்கையை இழக்க வாய்ப்புள்ளது.

அதன் காரணமாக, பணி ஓய்வுக்குப் பிறகு எந்தவித அரசுப் பணியையும் ஏற்க மாட்டோம் என்று உறுதி ஏற்க வேண்டும். நீதித் துறையின் நம்பகத்தன்மை மற்றும் சுதந்திரத்தைப் பாதுகாக்கும் முயற்சியாக இந்த உறுதிப்பாடு இருக்க வேண்டும்.

FLERE HISTORIER FRA Dinamani Cuddalore

Dinamani Cuddalore

Dinamani Cuddalore

புறநானூற்றில் தந்தை-மகன் சண்டை

இலக்கியம் என்பது வாழ்வை எதிரொலிப்பதாகப் படைக்கப்படுவது! அதில் கற்பனை, உவமை, அணி இலக்கணங்கள் எல்லாம் சேரப் படைக்கப்படுங்கால் அவற்றை விஞ்சிய மனித வாழ்வின் பதிவே காலக்கண்ணாடியாக நவில்தொறும் நயப்பாடுடைய இறவாப் பதிவிறக்கமாக எப்போதும் ஒளிர்வதாகும்.

time to read

1 min

November 02, 2025

Dinamani Cuddalore

நடமாடும் உயிர்க்காவலர்

எனது இருபத்தைந்து வயதில் உயிர்காக்கும் முதலுதவி சேவையைத் தொடங்கி, நாற்பது ஆண்டுகளாக இடைவிடாது இயங்கி வருகிறேன்\" என்கிறார் ஸ்ரீரங்கத்தைச் சேர்ந்த அறுபத்தைந்து வயதான டி. சீனிவாச பிரசாத்.

time to read

2 mins

November 02, 2025

Dinamani Cuddalore

கோமாரிக்கல்

கால்நடைகளின் காவலன்!

time to read

1 mins

November 02, 2025

Dinamani Cuddalore

Dinamani Cuddalore

முதல் பெண்ணாக ஆசை

காஷ்மீரைச் சேர்ந்த பத்து வயதாகும் அதீகா மிர். 'ஃபார்முலா 1' (எஃப் 1) அகாதெமியின் 'டிஸ்கவர் யுவர் டிரைவ்' திட்டத்துக்கு உலகளவில் தேர்ந்தெடுக்கப்பட்ட மூன்று பெண்களில் ஒருவர், இதுவரை இப்படித் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களில் வயது குறைந்தவரும் இவர்தான்.

time to read

2 mins

November 02, 2025

Dinamani Cuddalore

Dinamani Cuddalore

கடல் கடந்தும் தமிழ்...

புதுக்கோட்டை மாவட்டத்தில் 1924-இல் பிறந்த முருகு. சுப்ரமணியம் 1950-களில் மலேசியாவுக்குச் சென்றார். மலேசியா, சிங்கப்பூரில் வெளியாகும் தமிழ் நாளிதழ்களில் ஆசிரியராகப் பணியாற்றிய இவர், கடல் கடந்து தமிழ் வளர்த்த பத்திரிகையாளர். இவரது குடும்பத்தினரது முன்னெடுப்பில், கண்ணதாசன் அறவாரியம், மலேசிய எழுத்தாளர் சங்கம் ஆகியன இணைந்து அவரது நூற்றாண்டு விழாவை மலேசியாவில் அண்மையில் கொண்டாடியது.

time to read

1 mins

November 02, 2025

Dinamani Cuddalore

கவனம் ஈர்த்த பயோபிக் சினிமாக்கள்!

'பயோபிக்' என்ற வார்த்தையைச் சொன்னதும் நம் நினைவுக்குச் சட்டென வருவது பாலிவுட்தான். அந்தளவிற்கு எண்ணில் அடங்காத அளவிற்கு பயோபிக் திரைப்படங்களை எடுத்து பாலிவுட் சோபிக்கவும் செய்திருக்கிறது. சோதிக்கவும் செய்திருக்கிறது. இந்திய சினிமாவிலேயே தொடர்ந்து அதிகமாக பயோபிக் திரைப்படங்கள் வருவது பாலிவுட்டில்தான்.

time to read

2 mins

November 02, 2025

Dinamani Cuddalore

இரண்டாவது நாளாக பங்குச் சந்தை சரிவு

சர்வதேச மற்றும் உள்நாட்டு சந்தைகளில் நிலவிய பலவீனமான போக்கு காரணமாக, இந்திய பங்குச் சந்தைகள் தொடர்ந்து இரண்டாவது நாளாக வெள்ளிக்கிழமை சரிவைக் கண்டன.

time to read

1 min

November 01, 2025

Dinamani Cuddalore

அன்புள்ள ஆசிரியருக்கு...

கட்டுப்பாடு வேண்டும்

time to read

1 min

November 01, 2025

Dinamani Cuddalore

Dinamani Cuddalore

படகுகள் மீதான அமெரிக்க தாக்குதல் சட்டவிரோத படுகொலை: ஐ.நா.

தங்கள் நாட்டுக்குள் போதைப் பொருள்களை ஏற்றிவருவதாகக் கூறி, கரீபியன் தென் அமெரிக்க பகுதிகளில் இருந்து கரீபியன் மற்றும் பசிபிக் கடல் வழியாக வரும் படகுகள் (படம்) மீது அமெரிக்கா தாக்குதல் நடத்துவது சட்டவிரோத மனிதப் படுகொலைகள் என்று ஐ.நா. கண்டனம் தெரிவித்துள்ளது.

time to read

1 min

November 01, 2025

Dinamani Cuddalore

யுபிஐ சர்க்கிள்: அமேஸானின் புதிய வசதிகள்

தனது பணப்பட்டுவாடா செயலி மூலம் குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுக்கு உடனடியாக பணம் அனுப்புவதற்கான யுபிஐ சர்க்கிள் முறையில் புதிய வசதிகளை அமேஸான் அறிமுகப்படுத்தியுள்ளது.

time to read

1 min

November 01, 2025

Translate

Share

-
+

Change font size