Gå ubegrenset med Magzter GOLD

Gå ubegrenset med Magzter GOLD

Få ubegrenset tilgang til over 9000 magasiner, aviser og premiumhistorier for bare

$149.99
 
$74.99/År

Prøve GULL - Gratis

ஜனநாயகத்தின் பெயரால்...

Dinamani Chennai

|

September 06, 2025

மகாராஷ்டிர மாநிலத்தின் மராத்தா சமூகத்தினருக்கான இடஒதுக்கீடு கோரிக்கையை முன்வைத்து ஐந்து நாள்களாக உண்ணாவிரதம் இருந்து வந்த மனோஜ் ஜராங்கே தனது போராட்டத்தை கடந்த செவ்வாய்க்கிழமை (செப். 2) முடித்துக்கொண்டார்.

ஒட்டுமொத்த மும்பையும் இப்போது நிம்மதிப் பெருமூச்சு விடுகிறது. மும்பை உயர்நீதிமன்றம் தலையிட்டதைத் தொடர்ந்துதான் ஜராங்கேயின் ஐந்து நாள் போராட்டம் முடிவுக்கு வந்திருக்கிறது என்பது எந்த அளவுக்கு இந்தியாவில் சட்டத்தின் ஆட்சி கேள்விக்குறியாகி இருக்கிறது என்பதன் வெளிப்பாடு.

5,000 பேர் மட்டுமே ஒருநாள் அடையாள உண்ணாவிரதத்துக்காக மும்பையின் மையப் பகுதியில் இருக்கும் ஆசாத் மைதானத்தில் கூடுவதற்கு அனுமதி வழங்கப்பட்டது. ஆனால், 30,000-க்கும் அதிகமானோர் மகாராஷ்டிர மாநிலத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து மும்பை மாநகரத்துக்குள் நுழைந்து, ஆங்காங்கே கூடாரங்கள் அமைத்து ஒட்டுமொத்த மும்பையையும் ஸ்தம்பிக்க வைத்தனர். போக்குவரத்து முடக்கப்பட்டது. அலுவலகங்களுக்குச் செல்ல முடியவில்லை. விநாயகர் சதுர்த்தியையொட்டிய விழாக்களுக்குச் செல்ல முடியாமல் மும்பைவாசிகள் தவித்தனர்.

மராத்தாக்களுக்கான இடஒதுக்கீடு கோரிக்கையை முன்வைத்து ஒருநாள் அடையாள உண்ணாவிரதம் அறிவித்த ஜராங்கே தானும், தனது ஆதரவாளர்களும் தங்களது கோரிக்கை நிறைவேற்றப்படாமல் நகரப்போவதில்லை என்று அறிவித்தார். இதுபோல சட்டத்தை மீறி கும்பல் அரசியல் முன்னெடுக்கப்பட்டால் அரசும், நிர்வாகமும் வேடிக்கை பார்க்கத்தான் வேண்டுமா என்கிற கேள்வி எழுகிறது.

FLERE HISTORIER FRA Dinamani Chennai

Dinamani Chennai

Dinamani Chennai

இந்திய திறமைசாலிகளால் அதிக பயனடைந்தது அமெரிக்கா

எலான் மஸ்க் கருத்து

time to read

1 min

December 02, 2025

Dinamani Chennai

வக்ஃப் சொத்து தகவல்கள் பதிவேற்றம்: கால அவகாசத்தை நீட்டிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு

ஒருங்கிணைந்த வக்ஃப் மேலாண்மை, அதிகாரம் அளித்தல், திறன் மற்றும் மேம்பாடு (யுஎம்இஇடி) வலைதளத்தில் வக்ஃப் சொத்துகள் குறித்த தகவல்களை கட்டாயம் பதிவேற்றம் செய்வதற்கான கால அவகாசத்தை நீட்டிக்க உச்ச நீதிமன்றம் திங்கள் கிழமை மறுப்பு தெரிவித்தது.

time to read

1 min

December 02, 2025

Dinamani Chennai

Dinamani Chennai

ஷேக் ஹசீனா, பிரிட்டன் எம்.பி.க்கு சிறைத் தண்டனை

நில மோசடி வழக்கில், வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கு 5 ஆண்டுகளும், அவரின் உறவினரும், பிரிட்டன் எம்.பி.யுமான துலிப் சித்திக்குக்கு 2 ஆண்டுகளும் சிறைத் தண்டனை விதித்து டாக்கா சிறப்பு நீதிமன்றம் திங்கள்கிழமை தீர்ப்பளித்தது.

time to read

1 min

December 02, 2025

Dinamani Chennai

மெளனம் கலைக்கப்பட வேண்டும்!

விற்று, வாங்கும் பொருளாக வாக்கு மாறியபோது, எந்த அரசியல் கட்சியும், எந்தத் தலைவரும் கவலை கொள்ளவில்லை. ஆனால், இன்று வாக்கு திருட்டு என்றும் வாக்குப் பறிப்பு என்றும் முழக்கங்கள் அரசியல் களத்தில் ஓங்கி ஒலிக்கின்றன. இந்த முழக்கங்களால் அடுத்த தேர்தலில் கூடுதலாக தங்கள் கட்சிகளுக்கு வாக்குகளைப் பெறலாமே தவிர வாக்கைப் பாதுகாக்க முடியுமா என்பதுதான் பெரும் கேள்வி.

time to read

3 mins

December 02, 2025

Dinamani Chennai

Dinamani Chennai

ஹாங்காங் குடியிருப்பு தீவிபத்து: உயிரிழப்பு 151-ஆக அதிகரிப்பு

ஹாங்காங்கின் டை போ பகுதியில் உள்ள வாங் ஃபுக் கோர்ட் குடியிருப்பு வளாகத்தில் கடந்த நவம்பர் 27-ஆம் தேதி ஏற்பட்ட தீவிபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 151-ஆக உயர்ந்துள்ளது.

time to read

1 min

December 02, 2025

Dinamani Chennai

Dinamani Chennai

தொழிலக உற்பத்தியில் 13 மாதங்கள் காணாத சரிவு

இந்தியாவின் தொழிலக உற்பத்தி வளர்ச்சி, கடந்த 13 மாதங்கள் காணாத அளவுக்கு 0.4 சதவீதமாகக் குறைந்துள்ளது.

time to read

1 min

December 02, 2025

Dinamani Chennai

தில்லி கார் வெடிப்பு வழக்கு: அல் ஃபலா நிறுவனருக்கு 14 நாள் நீதிமன்றக் காவல்

பயங்கரவாத செயல்களுடன் தொடர்புபடுத்தப்படும் பணப்பரிவர்த்தனை மோசடி வழக்கில் கைதாகியுள்ள அல் ஃபலா பல்கலைக்கழக நிறுவனர் ஜாவத் அகமது சித்திக்கியை 14 நாள்களுக்கு நீதிமன்றக் காவலில் வைக்க தில்லி நீதிமன்றம் திங்கள்கிழமை உத்தரவிட்டது.

time to read

1 min

December 02, 2025

Dinamani Chennai

Dinamani Chennai

நமீபியாவை பந்தாடிய இந்திய மகளிர் அணி

ஜூனியர் மகளிர் உலகக் கோப்பை ஹாக்கி போட்டியில் இந்தியா தனது முதல் ஆட்டத்தில் 13-0 கோல் கணக்கில் நமீபியாவை திங்கள்கிழமை அபார வெற்றி கண்டது.

time to read

1 min

December 02, 2025

Dinamani Chennai

Dinamani Chennai

உச்சங்களைத் தொட்டும் சரிவில் முடிந்த பங்குச் சந்தை

நிதி மற்றும் எஃப்எம்சிஜி பங்குகளில் லாப நோக்க விற்பனை மற்றும் அந்நிய முதலீடுகள் வெளியேற்றம் காரணமாக, இந்திய பங்குச் சந்தைகள் திங்கள்கிழமை புதிய உச்சங்களை எட்டிய பிறகும் லேசான சரிவுடன் நிறைவடைந்தன.

time to read

1 min

December 02, 2025

Dinamani Chennai

Dinamani Chennai

அமளியுடன் தொடங்கிய நாடாளுமன்றம்: மக்களவை நாள் முழுவதும் ஒத்திவைப்பு

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடர் தொடங்கிய முதல் நாளிலேயே வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த (எஸ்ஐஆர்) விவகாரத்தை எதிர்க்கட்சிகள் எழுப்பி தொடர் அமளியில் ஈடுபட்டன.

time to read

1 min

December 02, 2025

Translate

Share

-
+

Change font size