Prøve GULL - Gratis
கவனம் சிதறக் கூடாது!
Dinamani Chennai
|March 17, 2025
மனிதனின் வாழ்க்கையில் மாணவப் பருவம் மிகவும் முக்கியமானது. மாணவப் பருவத்தில் ஒருவர் பெறுகின்ற கல்வியறிவும், வளர்த்துக்கொள்ளும் குணநலன்களும் அவருடைய எதிர்காலத்தையே வடிவமைக்க வல்லவையாகும்.
மாணவப்பருவத்தினர் வன்முறையில் நாட்டம் கொள்வது, போதைப் பொருள்களுக்கு அடிமையாவது, சாதி, சமயங்களின் அடிப்படையில் விருப்பு வெறுப்பைக் காட்டுவது, உள்ளூர் உலக அரசியல் விவகாரங்களில் தேவையற்ற ஆர்வத்தை வெளிப்படுத்துவது ஆகியவற்றை அறவே தவிர்ப்பது நல்லது.
‘இளம் கன்று பயம் அறியாது’ என்பதற்கேற்ப, நெறியற்ற விஷயங்களில் ஈடுபடுவதற்கான வேட்கையும் வேகமும் மாணவப் பருவத்தில் உருவாவது இயற்கையே. ஆனால், எதிர்கால முன்னேற்றம் என்ற ஒற்றை நோக்கத்தை மட்டுமே நினைவில் வைத்து நெறியற்ற நடவடிக்கைகளை நாடாமல் இருக்கப் பழக வேண்டும்.
தனியொரு மாணவன் நல்லவனாகவே இருப்பான். ஆனால், பல மாணவர்கள் ஒன்று கூடினால் மோசமானவர்களாக நடந்து கொள்வார்கள் என்று பொருள்படும் ஆங்கிலப் பழமொழியை நிரூபிப்பது போன்று ஒன்றுக்கும் மேற்பட்ட மாணவர்கள் ஒன்று கூடும் வேளைகளில் எத்தகைய அத்துமீறல்களிலும் ஈடுபடுகின்ற தைரியம் அவர்களுக்கு உருவாகிவிடுகின்றது. அதன் வெளிப்பாடாகவே நீண்ட காலமாகத் தொடரும் பல்வேறு பிரச்னைகள் தலைதூக்குகின்றன.
ஒரே கல்லூரி அல்லது பள்ளிக்கூடத்தைச் சேர்ந்த மாணவர்கள் இரண்டு பிரிவுகளாகப் பிரிந்து ஒருவரை ஒருவர் தாக்கிக்கொள்வது, தாங்கள் பயிலும் கல்லூரி தவிர்த்த இதர கல்வி நிறுவனங்களில் பயிலும் மாணவர்களை வம்புக்கு இழுப்பது, பேருந்து, ரயில் உள்ளிட்டவற்றில் கூட்டமாக ஏறி ரகளை செய்வது, கல்வீசுவது, பட்டாக்கத்தி உள்ளிட்ட ஆயுதங்களுடன் பொதுவெளிகளில் திரிவது ஆகிய செயல்களில் ஈடுபடும் மாணவர்களால் பொதுமக்களின் அன்றாட வாழ்க்கையும் பாதிக்கப்படுகின்றது.
Denne historien er fra March 17, 2025-utgaven av Dinamani Chennai.
Abonner på Magzter GOLD for å få tilgang til tusenvis av kuraterte premiumhistorier og over 9000 magasiner og aviser.
Allerede abonnent? Logg på
FLERE HISTORIER FRA Dinamani Chennai
Dinamani Chennai
இந்திய திறமைசாலிகளால் அதிக பயனடைந்தது அமெரிக்கா
எலான் மஸ்க் கருத்து
1 min
December 02, 2025
Dinamani Chennai
வக்ஃப் சொத்து தகவல்கள் பதிவேற்றம்: கால அவகாசத்தை நீட்டிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு
ஒருங்கிணைந்த வக்ஃப் மேலாண்மை, அதிகாரம் அளித்தல், திறன் மற்றும் மேம்பாடு (யுஎம்இஇடி) வலைதளத்தில் வக்ஃப் சொத்துகள் குறித்த தகவல்களை கட்டாயம் பதிவேற்றம் செய்வதற்கான கால அவகாசத்தை நீட்டிக்க உச்ச நீதிமன்றம் திங்கள் கிழமை மறுப்பு தெரிவித்தது.
1 min
December 02, 2025
Dinamani Chennai
ஷேக் ஹசீனா, பிரிட்டன் எம்.பி.க்கு சிறைத் தண்டனை
நில மோசடி வழக்கில், வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கு 5 ஆண்டுகளும், அவரின் உறவினரும், பிரிட்டன் எம்.பி.யுமான துலிப் சித்திக்குக்கு 2 ஆண்டுகளும் சிறைத் தண்டனை விதித்து டாக்கா சிறப்பு நீதிமன்றம் திங்கள்கிழமை தீர்ப்பளித்தது.
1 min
December 02, 2025
Dinamani Chennai
மெளனம் கலைக்கப்பட வேண்டும்!
விற்று, வாங்கும் பொருளாக வாக்கு மாறியபோது, எந்த அரசியல் கட்சியும், எந்தத் தலைவரும் கவலை கொள்ளவில்லை. ஆனால், இன்று வாக்கு திருட்டு என்றும் வாக்குப் பறிப்பு என்றும் முழக்கங்கள் அரசியல் களத்தில் ஓங்கி ஒலிக்கின்றன. இந்த முழக்கங்களால் அடுத்த தேர்தலில் கூடுதலாக தங்கள் கட்சிகளுக்கு வாக்குகளைப் பெறலாமே தவிர வாக்கைப் பாதுகாக்க முடியுமா என்பதுதான் பெரும் கேள்வி.
3 mins
December 02, 2025
Dinamani Chennai
ஹாங்காங் குடியிருப்பு தீவிபத்து: உயிரிழப்பு 151-ஆக அதிகரிப்பு
ஹாங்காங்கின் டை போ பகுதியில் உள்ள வாங் ஃபுக் கோர்ட் குடியிருப்பு வளாகத்தில் கடந்த நவம்பர் 27-ஆம் தேதி ஏற்பட்ட தீவிபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 151-ஆக உயர்ந்துள்ளது.
1 min
December 02, 2025
Dinamani Chennai
தொழிலக உற்பத்தியில் 13 மாதங்கள் காணாத சரிவு
இந்தியாவின் தொழிலக உற்பத்தி வளர்ச்சி, கடந்த 13 மாதங்கள் காணாத அளவுக்கு 0.4 சதவீதமாகக் குறைந்துள்ளது.
1 min
December 02, 2025
Dinamani Chennai
தில்லி கார் வெடிப்பு வழக்கு: அல் ஃபலா நிறுவனருக்கு 14 நாள் நீதிமன்றக் காவல்
பயங்கரவாத செயல்களுடன் தொடர்புபடுத்தப்படும் பணப்பரிவர்த்தனை மோசடி வழக்கில் கைதாகியுள்ள அல் ஃபலா பல்கலைக்கழக நிறுவனர் ஜாவத் அகமது சித்திக்கியை 14 நாள்களுக்கு நீதிமன்றக் காவலில் வைக்க தில்லி நீதிமன்றம் திங்கள்கிழமை உத்தரவிட்டது.
1 min
December 02, 2025
Dinamani Chennai
நமீபியாவை பந்தாடிய இந்திய மகளிர் அணி
ஜூனியர் மகளிர் உலகக் கோப்பை ஹாக்கி போட்டியில் இந்தியா தனது முதல் ஆட்டத்தில் 13-0 கோல் கணக்கில் நமீபியாவை திங்கள்கிழமை அபார வெற்றி கண்டது.
1 min
December 02, 2025
Dinamani Chennai
உச்சங்களைத் தொட்டும் சரிவில் முடிந்த பங்குச் சந்தை
நிதி மற்றும் எஃப்எம்சிஜி பங்குகளில் லாப நோக்க விற்பனை மற்றும் அந்நிய முதலீடுகள் வெளியேற்றம் காரணமாக, இந்திய பங்குச் சந்தைகள் திங்கள்கிழமை புதிய உச்சங்களை எட்டிய பிறகும் லேசான சரிவுடன் நிறைவடைந்தன.
1 min
December 02, 2025
Dinamani Chennai
அமளியுடன் தொடங்கிய நாடாளுமன்றம்: மக்களவை நாள் முழுவதும் ஒத்திவைப்பு
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடர் தொடங்கிய முதல் நாளிலேயே வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த (எஸ்ஐஆர்) விவகாரத்தை எதிர்க்கட்சிகள் எழுப்பி தொடர் அமளியில் ஈடுபட்டன.
1 min
December 02, 2025
Translate
Change font size

