試す 金 - 無料
தமிழக நிதிநிலை அறிக்கை: ஒரு பார்வை!
Dinamani Thoothukudi
|March 25, 2025
அரசு என்பது மக்கள் நலனில் அக்கறை செலுத்த வேண்டுமே தவிர, அடுத்த தேர்தலில் வெற்றி பெறுவதற்கான வாய்ப்புகளை எப்படி உருவாக்கலாம், எதன் மூலமாக மக்களின் வாக்குகளைப் பெறலாம் என்று திட்டம் வகுப்பது ஒரு நிதிநிலைக்கான ஒரு மேம்பட்ட பார்வையாக இருக்க இயலாது.
தமிழகத்தினுடைய நிதிப்பற்றாக்குறை ஒரு லட்சம் கோடியைத் தாண்டி விட்ட நிலையில், நிலைமையை எப்படிச் சமாளிப்பது என்கிற வகையில், நடப்பாண்டில் ரூ.1.62 லட்சம் கோடியை தமிழக அரசு கடனாக வாங்கி இருக்கிறது. இதனால் 2025-26-ஆம் ஆண்டின் முடிவில் தமிழக அரசின் கடன் தொகை ரூ.9 லட்சத்து 29 ஆயிரத்து 959 கோடியாக அதிகரிக்கும். அதற்கான வட்டியாக மட்டும் 70 ஆயிரத்து 753 கோடி ரூபாயைச் செலுத்த வேண்டியதிருக்கும். இவ்வாறாகக் கணக்கிட்டால் தமிழ்நாட்டின் மக்கள்தொகையை ஒப்பிடும் போது ஒவ்வொரு தனிநபர் மீதும் 1.25 லட்சம் ரூபாய் கடன்சுமை சுமத்தப்பட்டிருக்கும்.
'எல்லோருக்கும் எல்லாம்' என்ற முழக்கத்துடன் தொடங்கப்பட்ட தமிழக அரசின் நிதிநிலை அறிக்கை இவைதானோ? ஒவ்வொரு தனிநபரின் மீதும் சுமத்தப்பட்டிருக்கும் கடனைத்தான் இவ்வாறாகத் தமிழக அரசு பெருமை பொங்கப் பேசுகிறதோ?
நான்காண்டுகளாக மடிக்கணினித் திட்டம் நிறுத்தப்பட்டு தற்போது அதற்கு ரூ.2,000 கோடி ஒதுக்கப்பட்டிருப்பதாகவும், இனி 20 லட்சம் கல்லூரி மாணவர்களுக்கு மடிக்கணினிகள் அல்லது கைக்கணினிகள் வழங்கப்படும் என்று சொல்வது தேர்தலுக்கான நோக்கமாக இருக்குமே தவிர, வேறு எதுவாக இருக்க முடியும்? பந்தி முடிந்த பிறகு பசியாற வந்த விருந்தாளியைப் போல, சந்தை முடிந்த பிறகு சரக்கு வாங்க வந்த வியாபாரியைப் போல, தேரோட்டம் முடிந்த பிறகு, திருவிழாவைக் காண வந்த பக்தனைப் போல, வாக்குப்பதிவு முடிந்து விட்ட பிறகு வாக்களிக்க வந்த வாக்காளனைப் போல, நோயாளி மடிந்து விட்ட பிறகு, மருந்து வாங்கி வந்த உறவினரைப் போல, யாது செய்வது, எதைச் செய்வது என்று தெரியாமல் மக்கள் திகைத்துப் போயிருக்கிறார்கள்.
அடுத்த இரு ஆண்டுகளில் வழங்கப்படுகிற திட்டமாக இவை சொல்லப்படுகிறது. ஆனால், திமுக அரசின் பதவிக்காலம் இன்னும் ஓராண்டே இருக்கும் நிலையில், 20 லட்சம் பேருக்கு மடிக்கணினி வழங்குவது சாத்தியமில்லை என்பதே உண்மையாகும்.
பள்ளிக்கல்வித்துறையில் 20 ஆயிரத்துக்கும் அதிகமான ஆசிரியர் பணியிடங்கள் காலியாக இருக்கும் நிலையில், 2,562 ஆசிரியர் பணியிடங்கள் மட்டுமே நிரப்பப்படும் என்று நிதிநிலை அறிக்கை தெரிவிக்கிறது. போதிய நிதியும் ஆசிரியரும் இல்லாமல், அரசுப் பள்ளி மாணவர்களை உலகத் தரத்துக்கு மாற்றவா முடியும்? உள்ளூர் தரத்தையே அவர்கள் பெற இயலாமல் போகும்.
このストーリーは、Dinamani Thoothukudi の March 25, 2025 版からのものです。
Magzter GOLD を購読すると、厳選された何千ものプレミアム記事や、10,000 以上の雑誌や新聞にアクセスできます。
すでに購読者ですか? サインイン
Dinamani Thoothukudi からのその他のストーリー
Dinamani Thoothukudi
மெளனம் கலைக்கப்பட வேண்டும்!
விற்று, வாங்கும் பொருளாக வாக்கு மாறியபோது, எந்த அரசியல் கட்சியும், எந்தத் தலைவரும் கவலை கொள்ளவில்லை. ஆனால், இன்று வாக்கு திருட்டு என்றும் வாக்குப் பறிப்பு என்றும் முழக்கங்கள் அரசியல் களத்தில் ஓங்கி ஒலிக்கின்றன. இந்த முழக்கங்களால் அடுத்த தேர்தலில் கூடுதலாக தங்கள் கட்சிகளுக்கு வாக்குகளைப் பெறலாமே தவிர வாக்கைப் பாதுகாக்க முடியுமா என்பதுதான் பெரும் கேள்வி.
3 mins
December 02, 2025
Dinamani Thoothukudi
கேரள முதல்வருக்கு அமலாக்கத் துறை நோட்டீஸ்
கேரள உள்கட்டமைப்பு முதலீட்டு நிதி வாரியத்துக்கு (கேஐஐஎஃப்பி) மாநில அரசு கடன் பத்திரங்கள் மூலம் பெற்ற வெளிநாட்டு முதலீடுகளில் பண முறைகேடு நடந்ததாக கூறி, முதல்வர் பினராயி விஜயன், முன்னாள் அமைச்சர் தாமஸ் ஐசக் மற்றும் முதல்வரின் முதன்மைச் செயலர் கே.எம். ஆப்ரகாம் ஆகியோருக்கு அமலாக்கத் துறை நோட்டீஸ் அனுப்பியது.
1 min
December 02, 2025
Dinamani Thoothukudi
இடைவிடாத மழை: தத்தளிக்கும் சென்னை
4 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை
2 mins
December 02, 2025
Dinamani Thoothukudi
இரு தரப்புக்கும் பொதுவாக செயல்பட வேண்டும்
மாநிலங்களவைத் தலைவரிடம் கார்கே வலியுறுத்தல்
1 min
December 02, 2025
Dinamani Thoothukudi
அமைச்சர் மன்சுக் மாண்டவியா நாளை ஆலோசனை
உள்நாட்டு கால்பந்து போட்டிகளுக்கான பிரச்னைகள்
1 min
December 02, 2025
Dinamani Thoothukudi
அசோக் லேலண்ட் விற்பனை 29% உயர்வு
இந்தியாவின் முன்னணி வாகன நிறுவனங்களில் ஒன்றான அசோக் லேலண்டின் மொத்த விற்பனை கடந்த நவம்பர் மாதத்தில் 29 சதவீதம் உயர்ந்துள்ளது.
1 min
December 02, 2025
Dinamani Thoothukudi
உச்சங்களைத் தொட்டும் சரிவில் முடிந்த பங்குச் சந்தை
நிதி மற்றும் எஃப்எம்சிஜி பங்குகளில் லாப நோக்க விற்பனை மற்றும் அந்நிய முதலீடுகள் வெளியேற்றம் காரணமாக, இந்திய பங்குச் சந்தைகள் திங்கள்கிழமை புதிய உச்சங்களை எட்டிய பிறகும் லேசான சரிவுடன் நிறைவடைந்தன.
1 min
December 02, 2025
Dinamani Thoothukudi
தமிழக அரசின் தில்லி சிறப்பு பிரதிநிதி வீட்டில் 87 பவுன் நகைகள் திருட்டு
தஞ்சாவூரில் தமிழக அரசின் தில்லி சிறப்பு பிரதிநிதியும், முன்னாள் மக்களவை திமுக உறுப்பினருமான ஏ.கே.எஸ். விஜயன் வீட்டில் பூட்டை உடைத்து 87 பவுன் நகைகளை மர்மநபர்கள் திருடிச் சென்றனர். இதுதொடர்பாக போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
1 min
December 02, 2025
Dinamani Thoothukudi
நமீபியாவை பந்தாடிய இந்திய மகளிர் அணி
ஜூனியர் மகளிர் உலகக் கோப்பை ஹாக்கி போட்டியில் இந்தியா தனது முதல் ஆட்டத்தில் 13-0 கோல் கணக்கில் நமீபியாவை திங்கள்கிழமை அபார வெற்றி கண்டது.
1 min
December 02, 2025
Dinamani Thoothukudi
காவல் துறை மீதான மக்களின் பார்வை மாற்றப்படுவது அவசியம்
பிரதமர் மோடி அறிவுறுத்தல்
1 min
December 01, 2025
Translate
Change font size

