試す - 無料

தீர்வுகளைத் தேடுவோம்

Dinamani Tenkasi

|

March 14, 2025

சரியான புரிதல் இல்லாத பதின்ம வயதில் கைப்பேசிப் பயன்பாடு பல தீங்குகளுக்கு வழி கோலுகிறது. அதனால் இணையவழி வகுப்புகள், கணினி மற்றும் கைப்பேசி வழித் தகவல் பரிமாற்றம் ஆகியவற்றைப் பள்ளிகளில் மட்டுமாவது தடை செய்ய வேண்டும்.

- முனைவர் இரா.கற்பகம்

சில காலமாக, குற்றங்களில் ஒரு புதிய பரிமாணத்தைக் காண்கிறோம். அதிக அளவில் பதின்ம வயதுச் சிறுவர்கள், அதிலும் பள்ளி மாணவர்கள், குற்றச் செயல்களில் ஈடுபடுகிறார்கள் என்பது மிகவும் கவலை அளிப்பதாக உள்ளது. அதே வேளையில், சிறுமிகள் மீதான பாலியல் வன்முறை எல்லை கடந்து போய்க்கொண்டிருப்பது இந்தச் சமுதாயத்தின் மீது கோபத்தை ஏற்படுத்திக்கொண்டிருக்கிறது. கள்ளம், கபடம் இல்லாத பிஞ்சுகளில் ஒரு சாரார், அதாவது சிறுவர்கள் குற்றவாளிகளாகவும், மற்றொரு சாரார், அதாவது சிறுமியர் குற்றமிழைக்கப்படுபவர்களாகவும் மாறிக் கொண்டிருப்பது, நம் சமுதாயத்தில் ஆண், பெண் பேதம் எவ்வளவு அதிகம் உள்ளது என்பதையே காட்டுகிறது.

இந்தக் கொடுங் குற்றங்களை அலசி ஆராய்வது இக்கட்டுரையின் நோக்கமன்று. அதுதான் தினம் தினம் இவற்றைப் பற்றிய விலாவாரியான செய்திகளையும், ஒன்றுக்கும் உதவாத அறிவிப்புகளையும், பயனில்லாத சட்டங்களையும் கண்டும் கேட்டும், இயலாமையில் மனம் குமுறிக் கொந்தளித்துக் கொண்டிருக்கிறோமே, அது போதாதா? பேசியது போதும், தீர்வுகளைத் தேடுவோம்!

அரசு உடனடியாகச் செய்யக் கூடியவை, செய்ய வேண்டியவை: பள்ளி செல்லும் சிறுமிகளை வக்கிர மனங்கள் கொண்ட ஆசிரியர்களிடமிருந்து காப்பாற்ற வேண்டும். சென்னையில் பல பெற்றோர்கள் ஒன்று சேர்ந்து அரசிடம் ஒரு கோரிக்கையை வைத்திருக்கிறார்கள். 'மாணவிகளுக்குத் தனிப் பள்ளிகள்; அதில் ஆசிரியைகள் மட்டுமே பணியில் அமர்த்தப்பட வேண்டும்' என்பதே அந்தக் கோரிக்கை. அரசு இதை உடனடியாக, அதாவது வரும் கல்வியாண்டிலிருந்து நடைமுறைப்படுத்த வேண்டும். இதில் நிர்வாகச் சிக்கல் ஒன்றும் இருக்கப் போவதில்லை. ஏற்கெனவே ஒரு பகுதியில் இருக்கும் அரசுப் பள்ளிகளை மாணவர்களுக்கு ஆசிரியர்களை நியமித்து ஆண்கள் பள்ளியாகவும், வேறொரு பள்ளியை ஆசிரியைகளை நியமித்து மாணவிகளுக்கும் நடத்தலாம். ஆண்கள் பள்ளியில் தலைமைப் பொறுப்பிலிருந்து கீழ்நிலை வரை ஆண்களே பணியமர்த்தப்பட வேண்டும்; அதே போல் பெண்கள் பள்ளியில் அனைத்து நிலைகளிலும் பெண்களே பணியமர்த்தப்பட வேண்டும்.

Dinamani Tenkasi からのその他のストーリー

Dinamani Tenkasi

Dinamani Tenkasi

புறநானூற்றில் தந்தை-மகன் சண்டை

இலக்கியம் என்பது வாழ்வை எதிரொலிப்பதாகப் படைக்கப்படுவது! அதில் கற்பனை, உவமை, அணி இலக்கணங்கள் எல்லாம் சேரப் படைக்கப்படுங்கால் அவற்றை விஞ்சிய மனித வாழ்வின் பதிவே காலக்கண்ணாடியாக நவில்தொறும் நயப்பாடுடைய இறவாப் பதிவிறக்கமாக எப்போதும் ஒளிர்வதாகும்.

time to read

1 min

November 02, 2025

Dinamani Tenkasi

கவனம் ஈர்த்த பயோபிக் சினிமாக்கள்!

'பயோபிக்' என்ற வார்த்தையைச் சொன்னதும் நம் நினைவுக்குச் சட்டென வருவது பாலிவுட்தான். அந்தளவிற்கு எண்ணில் அடங்காத அளவிற்கு பயோபிக் திரைப்படங்களை எடுத்து பாலிவுட் சோபிக்கவும் செய்திருக்கிறது. சோதிக்கவும் செய்திருக்கிறது. இந்திய சினிமாவிலேயே தொடர்ந்து அதிகமாக பயோபிக் திரைப்படங்கள் வருவது பாலிவுட்டில்தான்.

time to read

2 mins

November 02, 2025

Dinamani Tenkasi

தங்கம் பவுனுக்கு ரூ.80 உயர்வு

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சனிக்கிழமை பவுனுக்கு ரூ.80 உயர்ந்து ரூ.90,480-க்கு விற்பனையானது.

time to read

1 min

November 02, 2025

Dinamani Tenkasi

கோமாரிக்கல்

கால்நடைகளின் காவலன்!

time to read

1 mins

November 02, 2025

Dinamani Tenkasi

Dinamani Tenkasi

கடல் கடந்தும் தமிழ்...

புதுக்கோட்டை மாவட்டத்தில் 1924-இல் பிறந்த முருகு. சுப்ரமணியம் 1950-களில் மலேசியாவுக்குச் சென்றார். மலேசியா, சிங்கப்பூரில் வெளியாகும் தமிழ் நாளிதழ்களில் ஆசிரியராகப் பணியாற்றிய இவர், கடல் கடந்து தமிழ் வளர்த்த பத்திரிகையாளர். இவரது குடும்பத்தினரது முன்னெடுப்பில், கண்ணதாசன் அறவாரியம், மலேசிய எழுத்தாளர் சங்கம் ஆகியன இணைந்து அவரது நூற்றாண்டு விழாவை மலேசியாவில் அண்மையில் கொண்டாடியது.

time to read

1 mins

November 02, 2025

Dinamani Tenkasi

Dinamani Tenkasi

முதல் பெண்ணாக ஆசை

காஷ்மீரைச் சேர்ந்த பத்து வயதாகும் அதீகா மிர். 'ஃபார்முலா 1' (எஃப் 1) அகாதெமியின் 'டிஸ்கவர் யுவர் டிரைவ்' திட்டத்துக்கு உலகளவில் தேர்ந்தெடுக்கப்பட்ட மூன்று பெண்களில் ஒருவர், இதுவரை இப்படித் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களில் வயது குறைந்தவரும் இவர்தான்.

time to read

2 mins

November 02, 2025

Dinamani Tenkasi

நடமாடும் உயிர்க்காவலர்

எனது இருபத்தைந்து வயதில் உயிர்காக்கும் முதலுதவி சேவையைத் தொடங்கி, நாற்பது ஆண்டுகளாக இடைவிடாது இயங்கி வருகிறேன்\" என்கிறார் ஸ்ரீரங்கத்தைச் சேர்ந்த அறுபத்தைந்து வயதான டி. சீனிவாச பிரசாத்.

time to read

2 mins

November 02, 2025

Dinamani Tenkasi

தெலங்கானா அமைச்சராக முகமது அசாருதீன் பதவியேற்பு

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் முகமது அசாருதீன் தெலங்கானா மாநில அமைச்சராக வெள்ளிக்கிழமை பதவியேற்றார்.

time to read

1 mins

November 01, 2025

Dinamani Tenkasi

Dinamani Tenkasi

படகுகள் மீதான அமெரிக்க தாக்குதல் சட்டவிரோத படுகொலை: ஐ.நா.

தங்கள் நாட்டுக்குள் போதைப் பொருள்களை ஏற்றிவருவதாகக் கூறி, கரீபியன் தென் அமெரிக்க பகுதிகளில் இருந்து கரீபியன் மற்றும் பசிபிக் கடல் வழியாக வரும் படகுகள் (படம்) மீது அமெரிக்கா தாக்குதல் நடத்துவது சட்டவிரோத மனிதப் படுகொலைகள் என்று ஐ.நா. கண்டனம் தெரிவித்துள்ளது.

time to read

1 min

November 01, 2025

Dinamani Tenkasi

இரண்டாவது நாளாக பங்குச் சந்தை சரிவு

சர்வதேச மற்றும் உள்நாட்டு சந்தைகளில் நிலவிய பலவீனமான போக்கு காரணமாக, இந்திய பங்குச் சந்தைகள் தொடர்ந்து இரண்டாவது நாளாக வெள்ளிக்கிழமை சரிவைக் கண்டன.

time to read

1 min

November 01, 2025

Translate

Share

-
+

Change font size