試す 金 - 無料
அறப் பணிக்கு அர்ப்பணித்தவர்கள்!
Dinamani Pudukkottai
|September 05, 2025
உள்ளங்கைக்குள் உலகம் சுருங்கிவிட்ட இன்றைய சூழலில், ஆசிரியர்களின் கற்பித்தல் பணியிலும் வேகமாக மாற்றம் ஏற்பட்டு வருகிறது. இந்தச் சமூகத்தின் எதிர்பார்ப்பையும் மீறி, தன் வகுப்பு மாணவர்கள் மீது அதிக அன்பும், அக்கறையும் கொண்டு, அவர்கள் மேம்பட போராடும் ஒவ்வொரு ஆசிரியரும் போர் வீரர்தான்.
ஆண்டுதோறும் டாக்டர் சர்வபள்ளி ராதாகிருஷ்ணனின் பிறந்த நாளை (செப்டம்பர் 5), அவரது பங்களிப்புகள் மற்றும் சாதனைகளுக்கு மரியாதை செலுத்தும் வகையில், தேசிய ஆசிரியர் தினமாக இந்தியா கொண்டாடுகிறது.
சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் 1888-ஆம் ஆண்டு செப்டம்பர் 5-ஆம் தேதி திருத்தணி அருகே உள்ள சர்வபள்ளி என்ற கிராமத்தில், ஒரு சாதாரண குடும்பத்தில் பிறந்தார். அவர் தத்துவத்தில் முதுநிலைப் பட்டம் பெற்றார். சைதாப்பேட்டை ஆசிரியர் பயிற்சிக் கல்லூரியில் பயின்றவர். இவர் அன்னிபெசன்ட் அம்மையாரின் பேச்சில் கவரப்பட்டதோடு, பேச்சுவன்மை மிகுந்தவராகவும், தன்பேச்சால் அனைவரையும் ஈர்ப்பவராகவும் திகழ்ந்தார்.
தன் முதல் பணியை சென்னை மாநில கல்லூரியில் தொடங்கி, மைசூர், கொல்கத்தா, வாரணாசி, ஆக்ஸ்போர்டு போன்ற இடங்களிலும் தொடர்ந்து, நீண்ட காலமாக தத்துவப் பேராசிரியராகப் பணியாற்றினார். இவர் 'சர்' பட்டத்தை தனதாக்கிக் கொண்டதோடு, இவருக்கு 1954-இல் இந்தியாவின் மிக உயரிய விருதான பாரத ரத்னா வழங்கப்பட்டது. டாக்டர் சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் 1952 முதல் 1962 வரை இந்தியாவின் முதல் குடியரசு துணைத் தலைவராகப் பணியாற்றினார்.
டாக்டர் ராதாகிருஷ்ணன் 1962-ஆம் ஆண்டு இந்தியாவின் இரண்டாவது குடியரசுத் தலைவராகப் பணியாற்றிய போது, அவரது பிறந்த நாளான செப்டம்பர் 5-ஆம் தேதியை, ஒரு சிறப்பு நாளாகக் கொண்டாட அனுமதி கோரி அவருடைய மாணவர்கள் அவரை அணுகியபோது, 'எனது பிறந்த நாளைக் கொண்டாடுவதற்குப் பதிலாக, செப்டம்பர் 5-ஆம் தேதியை ஆசிரியர் தினமாகக் கொண்டாடினால் அது எனது பெருமைக்குரிய பாக்கியமாக இருக்கும்' என்ற கோரிக்கையைப் பரிந்துரை செய்தார். அதன்படி, இந்தியாவில் 1962-ஆம் ஆண்டுமுதல் ஆண்டுதோறும் செப்டம்பர் 5 ஆசிரியர் தினமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.
மாதா, பிதா வரிசையில் மூன்றாவது இடம்பெற்றுள்ளவர் குரு. நமக்கு இந்த உலகைக் கற்பிக்கும் ஆசான். நமக்கு ஒழுக்கம், தன்னம்பிக்கை, பொது அறிவு என பல்வேறு விஷயங்களைக் கற்பித்து, உண்மையான வழிகாட்டியாக ஆசிரியர்கள் திகழ்கின்றனர். பெற்றோர் சொல்வதைவிட ஆசிரியர் சொல்வதைத்தான் மாணவர்கள் கேட்பார்கள். எனவே, ஆசிரியர்கள் மாணவர்களின் இரண்டாவது பெற்றோர்.
このストーリーは、Dinamani Pudukkottai の September 05, 2025 版からのものです。
Magzter GOLD を購読すると、厳選された何千ものプレミアム記事や、10,000 以上の雑誌や新聞にアクセスできます。
すでに購読者ですか? サインイン
Dinamani Pudukkottai からのその他のストーリー
Dinamani Pudukkottai
புறநானூற்றில் தந்தை-மகன் சண்டை
இலக்கியம் என்பது வாழ்வை எதிரொலிப்பதாகப் படைக்கப்படுவது! அதில் கற்பனை, உவமை, அணி இலக்கணங்கள் எல்லாம் சேரப் படைக்கப்படுங்கால் அவற்றை விஞ்சிய மனித வாழ்வின் பதிவே காலக்கண்ணாடியாக நவில்தொறும் நயப்பாடுடைய இறவாப் பதிவிறக்கமாக எப்போதும் ஒளிர்வதாகும்.
1 min
November 02, 2025
Dinamani Pudukkottai
கோமாரிக்கல்
கால்நடைகளின் காவலன்!
1 mins
November 02, 2025
Dinamani Pudukkottai
அம்மானை!
அம்மானை என்பது மகளிர் விளையாட்டுகளில் ஒன்று. மூன்று பெண்கள் ஆடும் இவ்விளையாட்டில் கற்களை எறிவதும் பிடிப்பதும் குறிப்பிட்ட தாளகதியில் அமையும் எனவும், அந்தத் தாளத்துக்கு ஏற்றாற்போல பெண்கள் பாடுவது அம்மானைப் பாடல் எனவும் திறனாய்வாளர் குறிப்பிடுவது எண்ணத்தக்கதாகும்.
1 min
November 02, 2025
Dinamani Pudukkottai
ஊடல் கொள்ள நேரமில்லை!
சங்க இலக்கியங்கள் மனித வாழ்வின் அடையாளங்கள்; உயர் வாழ்வை உணர்த்தும் வழிகாட்டிகள். விருந்தோம்பல் உலகம் முழுவதற்குமான பொதுப் பண்புகளில் ஒன்று. ஆனால், தமிழ்நெறி 'இல்வாழ்வது என்பதே விருந்தோம்புவதற்கே' என்ற கொள்கையை உடையது. தமிழன் இல்வாழ்வு என்று கூறவில்லை. 'இல்லறம்' என்றான். இல்லத்திலிருந்து செய்யும் சீரிய அறம் தான் விருந்தோம்பல்.
2 mins
November 02, 2025
Dinamani Pudukkottai
உள்ளாட்சி அமைப்புகளுக்கு அதிகாரப் பகிர்வை மறுக்கும் மாநிலங்கள்
பிரதமரின் பொருளாதார ஆலோசனைக் குழுத் தலைவர் கவலை
1 min
November 02, 2025
Dinamani Pudukkottai
நடமாடும் உயிர்க்காவலர்
எனது இருபத்தைந்து வயதில் உயிர்காக்கும் முதலுதவி சேவையைத் தொடங்கி, நாற்பது ஆண்டுகளாக இடைவிடாது இயங்கி வருகிறேன்\" என்கிறார் ஸ்ரீரங்கத்தைச் சேர்ந்த அறுபத்தைந்து வயதான டி. சீனிவாச பிரசாத்.
2 mins
November 02, 2025
Dinamani Pudukkottai
முதல் பெண்ணாக ஆசை
காஷ்மீரைச் சேர்ந்த பத்து வயதாகும் அதீகா மிர். 'ஃபார்முலா 1' (எஃப் 1) அகாதெமியின் 'டிஸ்கவர் யுவர் டிரைவ்' திட்டத்துக்கு உலகளவில் தேர்ந்தெடுக்கப்பட்ட மூன்று பெண்களில் ஒருவர், இதுவரை இப்படித் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களில் வயது குறைந்தவரும் இவர்தான்.
2 mins
November 02, 2025
Dinamani Pudukkottai
கடல் கடந்தும் தமிழ்...
புதுக்கோட்டை மாவட்டத்தில் 1924-இல் பிறந்த முருகு. சுப்ரமணியம் 1950-களில் மலேசியாவுக்குச் சென்றார். மலேசியா, சிங்கப்பூரில் வெளியாகும் தமிழ் நாளிதழ்களில் ஆசிரியராகப் பணியாற்றிய இவர், கடல் கடந்து தமிழ் வளர்த்த பத்திரிகையாளர். இவரது குடும்பத்தினரது முன்னெடுப்பில், கண்ணதாசன் அறவாரியம், மலேசிய எழுத்தாளர் சங்கம் ஆகியன இணைந்து அவரது நூற்றாண்டு விழாவை மலேசியாவில் அண்மையில் கொண்டாடியது.
1 mins
November 02, 2025
Dinamani Pudukkottai
கவனம் ஈர்த்த பயோபிக் சினிமாக்கள்!
'பயோபிக்' என்ற வார்த்தையைச் சொன்னதும் நம் நினைவுக்குச் சட்டென வருவது பாலிவுட்தான். அந்தளவிற்கு எண்ணில் அடங்காத அளவிற்கு பயோபிக் திரைப்படங்களை எடுத்து பாலிவுட் சோபிக்கவும் செய்திருக்கிறது. சோதிக்கவும் செய்திருக்கிறது. இந்திய சினிமாவிலேயே தொடர்ந்து அதிகமாக பயோபிக் திரைப்படங்கள் வருவது பாலிவுட்டில்தான்.
2 mins
November 02, 2025
Dinamani Pudukkottai
இரண்டாவது நாளாக பங்குச் சந்தை சரிவு
சர்வதேச மற்றும் உள்நாட்டு சந்தைகளில் நிலவிய பலவீனமான போக்கு காரணமாக, இந்திய பங்குச் சந்தைகள் தொடர்ந்து இரண்டாவது நாளாக வெள்ளிக்கிழமை சரிவைக் கண்டன.
1 min
November 01, 2025
Translate
Change font size
