試す - 無料

சித்த மருத்துவத்தைக் காப்போம்!

Dinamani Puducherry

|

May 22, 2025

ஆங்கில (அலோபதி) மருத்துவ முறை மிகவும் வளர்ந்தது என்பதாகப் பலரும் கருதுகின்றனர். உண்மையில், 300 ஆண்டுகளுக்கு முன்னர் ஆங்கில மருத்துவ முறை இல்லை; மிக வயதான சிலர் கூறும் பொருள்களை மருந்து என அந்தக் காலத்தில் உண்டு வந்தனர். இதை மேலை நாடுகளில் பழைய முறை என்று கூறினர். 1806-இல் ஹனிமன் என்பவர் ஹோமியோபதி மருத்துவ முறையைக் கண்டுபிடித்தார். பின்னர்தான் பழைய மருத்துவ முறைக்கு அலோபதி எனப் பெயர் வந்தது. ஆனால், தமிழக சித்த மருத்துவம் ஈராயிரம் ஆண்டுகள் முன்னரே சிறந்து விளங்கியது.

- பா. இறையரசன்

சங்க காலத்தில் (கிமு 1500 - 100) மருத்துவன் தாமோதரனார் முதலிய பெயர்களும், மருத்துவ முறைகளும் இருந்துள்ளன. 2,500 ஆண்டுகளுக்கு முன்னரே தமிழர்கள் மருந்தையும், மருந்துப் பொருள்களையும் பயன்படுத்துவதில் வளர்ச்சியடைந்த நிலையில் இருந்தனர்.

சிந்துவெளி அகழாய்வில் கிடைத்துள்ள பொருள்களில் வளைந்த சட்டி (வாணலி), கரண்டி, சட்டுவம், கூரிய வெட்டுக் கருவி ஆகியவை கிடைத்துள்ளன. அக்காலத்திலேயே அறுவை மருத்துவமும் செய்துள்ளனர். அதற்குச் செம்பைப் பயன்படுத்தினால் பக்கவிளைவுகள் ஏற்படாது என்பதையும் தெரிந்துவைத்திருந்தனர்.

போர்க் காலங்களில் வீரர்களுக்கு ஏற்படுகிற பெரிய காயங்கள், வெட்டுகள், புண்கள் ஆகியவற்றை மருந்தால் ஆற்றுவது கடினம் என்பதால், அறுவை மருத்துவர்களால் அந்தப் புண்கள் தைக் கப்பட்டன. அதன் பின்னரே மருந்திட்டுள்ளனர். 'மீன்தேர் கொட்பின் பனிக்கயம் மூழ்கிச் சிரல் பெயர்ந்து நெடுவள் ளூசி நெடுவசி பரந்த வடுவாழ் மார்பின்' என்ற பதிற்றுப்பத்து (5.2) பாடல் இதற்குச் சான்றாகும்.

புண் ஆறிய பின் வடு தோன்றாமல் தோலின் நிறம் பழைய நிலையை அடைய அத்திப்பால் பயன்படும் எனப் புறநானூறு தெரிவிக்கிறது. 'வடுவின்றி வடிந்த யாக்கையான்' என்று பழைய நிலைக்குத் தோல் நிறமும் உடலமைப்பும் திரும்பியதைக் கூறும்.

Dinamani Puducherry からのその他のストーリー

Dinamani Puducherry

Dinamani Puducherry

புறநானூற்றில் தந்தை-மகன் சண்டை

இலக்கியம் என்பது வாழ்வை எதிரொலிப்பதாகப் படைக்கப்படுவது! அதில் கற்பனை, உவமை, அணி இலக்கணங்கள் எல்லாம் சேரப் படைக்கப்படுங்கால் அவற்றை விஞ்சிய மனித வாழ்வின் பதிவே காலக்கண்ணாடியாக நவில்தொறும் நயப்பாடுடைய இறவாப் பதிவிறக்கமாக எப்போதும் ஒளிர்வதாகும்.

time to read

1 min

November 02, 2025

Dinamani Puducherry

Dinamani Puducherry

முதல் பெண்ணாக ஆசை

காஷ்மீரைச் சேர்ந்த பத்து வயதாகும் அதீகா மிர். 'ஃபார்முலா 1' (எஃப் 1) அகாதெமியின் 'டிஸ்கவர் யுவர் டிரைவ்' திட்டத்துக்கு உலகளவில் தேர்ந்தெடுக்கப்பட்ட மூன்று பெண்களில் ஒருவர், இதுவரை இப்படித் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களில் வயது குறைந்தவரும் இவர்தான்.

time to read

2 mins

November 02, 2025

Dinamani Puducherry

Dinamani Puducherry

கடல் கடந்தும் தமிழ்...

புதுக்கோட்டை மாவட்டத்தில் 1924-இல் பிறந்த முருகு. சுப்ரமணியம் 1950-களில் மலேசியாவுக்குச் சென்றார். மலேசியா, சிங்கப்பூரில் வெளியாகும் தமிழ் நாளிதழ்களில் ஆசிரியராகப் பணியாற்றிய இவர், கடல் கடந்து தமிழ் வளர்த்த பத்திரிகையாளர். இவரது குடும்பத்தினரது முன்னெடுப்பில், கண்ணதாசன் அறவாரியம், மலேசிய எழுத்தாளர் சங்கம் ஆகியன இணைந்து அவரது நூற்றாண்டு விழாவை மலேசியாவில் அண்மையில் கொண்டாடியது.

time to read

1 mins

November 02, 2025

Dinamani Puducherry

கவனம் ஈர்த்த பயோபிக் சினிமாக்கள்!

'பயோபிக்' என்ற வார்த்தையைச் சொன்னதும் நம் நினைவுக்குச் சட்டென வருவது பாலிவுட்தான். அந்தளவிற்கு எண்ணில் அடங்காத அளவிற்கு பயோபிக் திரைப்படங்களை எடுத்து பாலிவுட் சோபிக்கவும் செய்திருக்கிறது. சோதிக்கவும் செய்திருக்கிறது. இந்திய சினிமாவிலேயே தொடர்ந்து அதிகமாக பயோபிக் திரைப்படங்கள் வருவது பாலிவுட்டில்தான்.

time to read

2 mins

November 02, 2025

Dinamani Puducherry

கோமாரிக்கல்

கால்நடைகளின் காவலன்!

time to read

1 mins

November 02, 2025

Dinamani Puducherry

நடமாடும் உயிர்க்காவலர்

எனது இருபத்தைந்து வயதில் உயிர்காக்கும் முதலுதவி சேவையைத் தொடங்கி, நாற்பது ஆண்டுகளாக இடைவிடாது இயங்கி வருகிறேன்\" என்கிறார் ஸ்ரீரங்கத்தைச் சேர்ந்த அறுபத்தைந்து வயதான டி. சீனிவாச பிரசாத்.

time to read

2 mins

November 02, 2025

Dinamani Puducherry

Dinamani Puducherry

படகுகள் மீதான அமெரிக்க தாக்குதல் சட்டவிரோத படுகொலை: ஐ.நா.

தங்கள் நாட்டுக்குள் போதைப் பொருள்களை ஏற்றிவருவதாகக் கூறி, கரீபியன் தென் அமெரிக்க பகுதிகளில் இருந்து கரீபியன் மற்றும் பசிபிக் கடல் வழியாக வரும் படகுகள் (படம்) மீது அமெரிக்கா தாக்குதல் நடத்துவது சட்டவிரோத மனிதப் படுகொலைகள் என்று ஐ.நா. கண்டனம் தெரிவித்துள்ளது.

time to read

1 min

November 01, 2025

Dinamani Puducherry

சென்னையில் ரூட்மேடிக் கட்டளை மையம்

பணியாளர் போக்குவரத்து தீர்வுகள் மற்றும் கார்ப்பரேட் மொபிலிட்டி தொழில்நுட்பத்தில் முன்னணி நிறுவனங்களில் ஒன்றான ரூட்மேடிக், சென்னையில் தனது கட்டளை மையத்தைத் திறந்துள்ளது.

time to read

1 min

November 01, 2025

Dinamani Puducherry

எண்ம வியூகம்!

அடுக்கு மொழிகள், அலங்கார மேடைகள், வானுயர்ந்த கட்-அவுட்கள், வகை வகையான வண்ணச் சுவரொட்டிகள் இவை யாவும் பழைய அரசியல் களத்தின் சிதைந்த எச்சங்கள். இப்போதோ இணைய வழியில் சமூக ஊடகங்களே நவீன அரசியலின் புதிய சிம்மாசனமாக மாறியுள்ளன. அதிலும் குறிப்பாக, தனி மனிதனின் அறிதிறன்பேசியே இன்றைய அரசியல் போர்க்களத்தின் அதிமுக்கிய ஆயுதம்.

time to read

2 mins

November 01, 2025

Dinamani Puducherry

இரண்டாவது நாளாக பங்குச் சந்தை சரிவு

சர்வதேச மற்றும் உள்நாட்டு சந்தைகளில் நிலவிய பலவீனமான போக்கு காரணமாக, இந்திய பங்குச் சந்தைகள் தொடர்ந்து இரண்டாவது நாளாக வெள்ளிக்கிழமை சரிவைக் கண்டன.

time to read

1 min

November 01, 2025

Translate

Share

-
+

Change font size