試す - 無料

ஆதித் தமிழ்க்குடியின் தொன்மை முருகன்

Dinamani Nagapattinam

|

July 21, 2025

இந்தியாவில் மற்ற மாநிலங்களில் கார்த்திகேயன், சுப்ரமணியன் என்று முருகன் வழிபாடு இருந்தாலும் கந்தன், கடம்பன், முருகன் என்றும், குன்றுகள் தோறும் இடம்பெற்றிருக்கும் குமரன் என்றும் தமிழர்கள் வாழும் இடங்களிலெல்லாம் பெருமையோடு கொண்டாடி மகிழ்கிற தனித்துவம் முருகனுக்கு மாத்திரம்தான்.

- முனைவர் வைகைச்செல்வன்

உலகில் தொன்மையான செம்மையுறத்தக்க மொழியாக இரண்டு மொழிகள் திகழ்கின்றன. அவை தமிழ் மொழி, மற்றொன்று வடமொழியான சமஸ்கிருதம். வடமொழி பேச்சு வழக்கில் இல்லை. இலக்கிய வழக்கு மட்டுமே உண்டு. ஆனால், தமிழ் மொழியில் பேச்சும், இலக்கிய வழக்கும் ஒன்றாகச் சேர்ந்து செழிப்பான மொழியாக திகழ்கிறது.

தமிழில் கிடைத்திருக்கும் ஆகச் சிறந்த நூல்களில் சங்க இலக்கியங்கள் தலைசாயது ஆகும். பத்துப்பாட்டு, எட்டுத்தொகை, பதினென்கீழ்க்கணக்கு நூல்களில், பத்துப்பாட்டு முதல் பகுதியாக வைக்கப்பட்டுள்ளது. அதில் முதலாவதாக திருமுருகாற்றுப்படை திகழ்கிறது. முருக பக்தனை ஆற்றுப்படுத்துதலே திருமுருகாற்றுப்படை என்று அழைக்கப்படுகிறது.

சங்க இலக்கியங்களில் முருகன் குறித்து வழங்கும் பெயர்கள் மிகுதியாக இருக்கின்றன. இந்தப் பெயர்கள் அனைத்தும் அவற்றின் சூழல்களின் அடிப்படையில் வேறுவேறாக அமைந்திருக்கின்றன. சேவற்கொடியோன், சேய், முதிர்கடவுள், நெடுவேள், தெய்வம், முருகு, அனங்கு, கடவுள், மலைவாழ், விரல்வேல், மலைஉரைகடவுள், முருகன், சூர்செல்வன், நெடியோன், மால்முருகன் போன்றவை இடம்பெற்றிருக்கின்றன.

ஒரு வறியவன் தன் இன்னல்களில் இருந்து விடுபட முருகனைச் சென்று பார்த்துப் பாடுவது போல் அமைக்கப்பட்டதான் திருமுருகாற்றுப்படை. உண்மையில் ஆற்றுப்படை என்பதுதான் மருவி ஆறுபடை என்றாகி விட்டது. அதேசமயம், முருகனுக்கு ஆறு என்பது உகந்தது. அவரை பக்திப்பூர்வமாக பூசிகிற போது ஆறு இதழ்களைக் கொண்ட மலர்களைக் கொண்டு மலர்மாலை சூடுகிறார்கள்.

முருகனிடம் இருக்கும் வேல் வெறுமனே கீழ்ப்பகுதி அகன்றும், மேல் பகுதி முனை கூர்மையாக இருப்பது மட்டுமல்ல; வேலின் இரண்டு பக்கங்களும் மேடு தட்டி இருக்கும். அதைக் கணக்கிட்டால் கூட ஆறுமுனைகள் கொண்டதாக இருக்கும். ஆறு முகங்களை உடையதாக நாம் முருகனை வணங்கியும் வருகிறோம். இதனால், ஆற்றுப்படை என்பது ஆறு படையாக மருவி இருக்கிறது.

Dinamani Nagapattinam からのその他のストーリー

Dinamani Nagapattinam

Dinamani Nagapattinam

முதல் பெண்ணாக ஆசை

காஷ்மீரைச் சேர்ந்த பத்து வயதாகும் அதீகா மிர். 'ஃபார்முலா 1' (எஃப் 1) அகாதெமியின் 'டிஸ்கவர் யுவர் டிரைவ்' திட்டத்துக்கு உலகளவில் தேர்ந்தெடுக்கப்பட்ட மூன்று பெண்களில் ஒருவர், இதுவரை இப்படித் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களில் வயது குறைந்தவரும் இவர்தான்.

time to read

2 mins

November 02, 2025

Dinamani Nagapattinam

புறநானூற்றில் தந்தை-மகன் சண்டை

இலக்கியம் என்பது வாழ்வை எதிரொலிப்பதாகப் படைக்கப்படுவது! அதில் கற்பனை, உவமை, அணி இலக்கணங்கள் எல்லாம் சேரப் படைக்கப்படுங்கால் அவற்றை விஞ்சிய மனித வாழ்வின் பதிவே காலக்கண்ணாடியாக நவில்தொறும் நயப்பாடுடைய இறவாப் பதிவிறக்கமாக எப்போதும் ஒளிர்வதாகும்.

time to read

1 min

November 02, 2025

Dinamani Nagapattinam

Dinamani Nagapattinam

கடல் கடந்தும் தமிழ்...

புதுக்கோட்டை மாவட்டத்தில் 1924-இல் பிறந்த முருகு. சுப்ரமணியம் 1950-களில் மலேசியாவுக்குச் சென்றார். மலேசியா, சிங்கப்பூரில் வெளியாகும் தமிழ் நாளிதழ்களில் ஆசிரியராகப் பணியாற்றிய இவர், கடல் கடந்து தமிழ் வளர்த்த பத்திரிகையாளர். இவரது குடும்பத்தினரது முன்னெடுப்பில், கண்ணதாசன் அறவாரியம், மலேசிய எழுத்தாளர் சங்கம் ஆகியன இணைந்து அவரது நூற்றாண்டு விழாவை மலேசியாவில் அண்மையில் கொண்டாடியது.

time to read

1 mins

November 02, 2025

Dinamani Nagapattinam

ஊடல் கொள்ள நேரமில்லை!

சங்க இலக்கியங்கள் மனித வாழ்வின் அடையாளங்கள்; உயர் வாழ்வை உணர்த்தும் வழிகாட்டிகள். விருந்தோம்பல் உலகம் முழுவதற்குமான பொதுப் பண்புகளில் ஒன்று. ஆனால், தமிழ்நெறி 'இல்வாழ்வது என்பதே விருந்தோம்புவதற்கே' என்ற கொள்கையை உடையது. தமிழன் இல்வாழ்வு என்று கூறவில்லை. 'இல்லறம்' என்றான். இல்லத்திலிருந்து செய்யும் சீரிய அறம் தான் விருந்தோம்பல்.

time to read

2 mins

November 02, 2025

Dinamani Nagapattinam

நடமாடும் உயிர்க்காவலர்

எனது இருபத்தைந்து வயதில் உயிர்காக்கும் முதலுதவி சேவையைத் தொடங்கி, நாற்பது ஆண்டுகளாக இடைவிடாது இயங்கி வருகிறேன்\" என்கிறார் ஸ்ரீரங்கத்தைச் சேர்ந்த அறுபத்தைந்து வயதான டி. சீனிவாச பிரசாத்.

time to read

2 mins

November 02, 2025

Dinamani Nagapattinam

உள்ளாட்சி அமைப்புகளுக்கு அதிகாரப் பகிர்வை மறுக்கும் மாநிலங்கள்

பிரதமரின் பொருளாதார ஆலோசனைக் குழுத் தலைவர் கவலை

time to read

1 min

November 02, 2025

Dinamani Nagapattinam

கவனம் ஈர்த்த பயோபிக் சினிமாக்கள்!

'பயோபிக்' என்ற வார்த்தையைச் சொன்னதும் நம் நினைவுக்குச் சட்டென வருவது பாலிவுட்தான். அந்தளவிற்கு எண்ணில் அடங்காத அளவிற்கு பயோபிக் திரைப்படங்களை எடுத்து பாலிவுட் சோபிக்கவும் செய்திருக்கிறது. சோதிக்கவும் செய்திருக்கிறது. இந்திய சினிமாவிலேயே தொடர்ந்து அதிகமாக பயோபிக் திரைப்படங்கள் வருவது பாலிவுட்டில்தான்.

time to read

2 mins

November 02, 2025

Dinamani Nagapattinam

அம்மானை!

அம்மானை என்பது மகளிர் விளையாட்டுகளில் ஒன்று. மூன்று பெண்கள் ஆடும் இவ்விளையாட்டில் கற்களை எறிவதும் பிடிப்பதும் குறிப்பிட்ட தாளகதியில் அமையும் எனவும், அந்தத் தாளத்துக்கு ஏற்றாற்போல பெண்கள் பாடுவது அம்மானைப் பாடல் எனவும் திறனாய்வாளர் குறிப்பிடுவது எண்ணத்தக்கதாகும்.

time to read

1 min

November 02, 2025

Dinamani Nagapattinam

1040-ஆவது சதய விழா: ராஜராஜசோழன் சிலைக்கு மாலை அணிவிப்பு

பெருவுடையார்-பெரியநாயகிக்கு 48 வகை பேரபிஷேகம்

time to read

1 min

November 02, 2025

Dinamani Nagapattinam

கோமாரிக்கல்

கால்நடைகளின் காவலன்!

time to read

1 mins

November 02, 2025

Translate

Share

-
+

Change font size