試す - 無料

முடக்கம் தவிர்ப்பீர்!

Dinamani Cuddalore

|

August 16, 2025

மக்கள் தங்கள் பிரதிநிதிகள் மூலமாக தங்கள் அதிகாரத்தைச் செயல்படுத்துகிறார்கள். மக்கள் பிரதிநிதிகள் கூடும் மன்றம்தான் நாடாளுமன்றம். அரசின் முதன்மை அங்கமாக நாடாளுமன்றம் திகழ்கிறது என்பதை ஆட்சியாளர்களும் எதிர்க்கட்சி வரிசையில் அமர்ந்திருப்பவர்களும் உணர வேண்டும்.

- முனைவர் கோ.விசுவநாதன்

கடந்த ஐந்தாறு ஆண்டுகளாக நாடாளுமன்றக் கூட்டத்தொடர் சுமுகமாக நடந்ததாகத் தெரியவில்லை. ஒவ்வொரு கூட்டத் தொடர் தொடங்கும்போதும் முதல் ஒரு வாரம் எந்த அலுவலும் நடக்காமல் முடங்கிப் போவதை நான் தொடர்ந்து கவனித்து வருகிறேன். இப்போது நடக்கும் மழைக்கால கூட்டத்தொடரிலும் அதுதான் நடந்தது.

கடந்த ஜூலை 21-ஆம் தேதி மழைக்கால கூட்டத் தொடர் தொடங்கியது. முதல் நாள், கூட்டம் தொடங்கிய ஒரு சில நிமிஷங்களிலேயே எதிர்க்கட்சிகள் அமளி காரணமாக மதியம்வரை ஒத்திவைக்கப்பட்டு, அதன் பிறகு மதியமும் இதே அமளி தொடர அன்று முழுவதும் அவை ஒத்தி வைக்கப்பட்டது. மக்களவை, மாநிலங்களவை இரண்டிலும் இதுதான் நடந்தது. தொடர்ந்து சுமார் ஒரு வாரம் இப்படித்தான் நடந்தது.

ஜூலை 28-ஆம் தேதி 'ஆபரேஷன் சிந்தூர்' குறித்து 16 மணி நேரம் விவாதம் நடக்கும் என்ற ஒப்புதலுடன் அவை அமைதியாக நடந்தது. அன்றுகூட பிகார் வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் குறித்து விவாதிக்க வேண்டும் என்று எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட பகல் 12 மணி வரை அவை ஒத்திவைக்கப்பட்டது. அதன்பிறகு, மீண்டும் அவை கூடியதும் சுமூகமான சூழ்நிலை நிலவியது.

பொதுவாக, ஒவ்வொரு கூட்டத்தொடருக்கு முன்பும் மக்களவைத் தலைவர் அலுவலகத்தில் அலுவல் ஆய்வுக் குழு கூட்டம் நடக்கும். இந்தக் குழுவில் ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி உறுப்பினர்கள் இருப்பார்கள். இந்தத் தொடரில் முக்கியமாக விவாதிக்க வேண்டிய விஷயங்கள் குறித்து இந்தக் கூட்டத்தில் முடிவு செய்வார்கள்.

இந்த அலுவல் ஆய்வுக் குழு கூட்டத்தில் 'ஆபரேஷன் சிந்தூர்' குறித்து முழுமையாக விவாதம் செய்ய வேண்டும்; இதே போல், பிகாரில் வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தப் பணி பற்றி விவாதிக்க வேண்டும். அந்த உத்தரவு திரும்பப் பெற வேண்டும் என்பதுதான் எதிர்க்கட்சிகளின் முக்கியக் கோரிக்கையாக இருந்தது. அப்போது, ஆளுங்கட்சி தரப்பில் இவை எல்லாம் விவாதிக்கப்படும். நீங்கள் அவையை நடத்த ஒத்துழைப்பு தாருங்கள் என்று கோரிக்கை வைத்தார்கள்.

Dinamani Cuddalore からのその他のストーリー

Dinamani Cuddalore

Dinamani Cuddalore

புறநானூற்றில் தந்தை-மகன் சண்டை

இலக்கியம் என்பது வாழ்வை எதிரொலிப்பதாகப் படைக்கப்படுவது! அதில் கற்பனை, உவமை, அணி இலக்கணங்கள் எல்லாம் சேரப் படைக்கப்படுங்கால் அவற்றை விஞ்சிய மனித வாழ்வின் பதிவே காலக்கண்ணாடியாக நவில்தொறும் நயப்பாடுடைய இறவாப் பதிவிறக்கமாக எப்போதும் ஒளிர்வதாகும்.

time to read

1 min

November 02, 2025

Dinamani Cuddalore

நடமாடும் உயிர்க்காவலர்

எனது இருபத்தைந்து வயதில் உயிர்காக்கும் முதலுதவி சேவையைத் தொடங்கி, நாற்பது ஆண்டுகளாக இடைவிடாது இயங்கி வருகிறேன்\" என்கிறார் ஸ்ரீரங்கத்தைச் சேர்ந்த அறுபத்தைந்து வயதான டி. சீனிவாச பிரசாத்.

time to read

2 mins

November 02, 2025

Dinamani Cuddalore

கோமாரிக்கல்

கால்நடைகளின் காவலன்!

time to read

1 mins

November 02, 2025

Dinamani Cuddalore

Dinamani Cuddalore

முதல் பெண்ணாக ஆசை

காஷ்மீரைச் சேர்ந்த பத்து வயதாகும் அதீகா மிர். 'ஃபார்முலா 1' (எஃப் 1) அகாதெமியின் 'டிஸ்கவர் யுவர் டிரைவ்' திட்டத்துக்கு உலகளவில் தேர்ந்தெடுக்கப்பட்ட மூன்று பெண்களில் ஒருவர், இதுவரை இப்படித் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களில் வயது குறைந்தவரும் இவர்தான்.

time to read

2 mins

November 02, 2025

Dinamani Cuddalore

Dinamani Cuddalore

கடல் கடந்தும் தமிழ்...

புதுக்கோட்டை மாவட்டத்தில் 1924-இல் பிறந்த முருகு. சுப்ரமணியம் 1950-களில் மலேசியாவுக்குச் சென்றார். மலேசியா, சிங்கப்பூரில் வெளியாகும் தமிழ் நாளிதழ்களில் ஆசிரியராகப் பணியாற்றிய இவர், கடல் கடந்து தமிழ் வளர்த்த பத்திரிகையாளர். இவரது குடும்பத்தினரது முன்னெடுப்பில், கண்ணதாசன் அறவாரியம், மலேசிய எழுத்தாளர் சங்கம் ஆகியன இணைந்து அவரது நூற்றாண்டு விழாவை மலேசியாவில் அண்மையில் கொண்டாடியது.

time to read

1 mins

November 02, 2025

Dinamani Cuddalore

கவனம் ஈர்த்த பயோபிக் சினிமாக்கள்!

'பயோபிக்' என்ற வார்த்தையைச் சொன்னதும் நம் நினைவுக்குச் சட்டென வருவது பாலிவுட்தான். அந்தளவிற்கு எண்ணில் அடங்காத அளவிற்கு பயோபிக் திரைப்படங்களை எடுத்து பாலிவுட் சோபிக்கவும் செய்திருக்கிறது. சோதிக்கவும் செய்திருக்கிறது. இந்திய சினிமாவிலேயே தொடர்ந்து அதிகமாக பயோபிக் திரைப்படங்கள் வருவது பாலிவுட்டில்தான்.

time to read

2 mins

November 02, 2025

Dinamani Cuddalore

இரண்டாவது நாளாக பங்குச் சந்தை சரிவு

சர்வதேச மற்றும் உள்நாட்டு சந்தைகளில் நிலவிய பலவீனமான போக்கு காரணமாக, இந்திய பங்குச் சந்தைகள் தொடர்ந்து இரண்டாவது நாளாக வெள்ளிக்கிழமை சரிவைக் கண்டன.

time to read

1 min

November 01, 2025

Dinamani Cuddalore

அன்புள்ள ஆசிரியருக்கு...

கட்டுப்பாடு வேண்டும்

time to read

1 min

November 01, 2025

Dinamani Cuddalore

Dinamani Cuddalore

படகுகள் மீதான அமெரிக்க தாக்குதல் சட்டவிரோத படுகொலை: ஐ.நா.

தங்கள் நாட்டுக்குள் போதைப் பொருள்களை ஏற்றிவருவதாகக் கூறி, கரீபியன் தென் அமெரிக்க பகுதிகளில் இருந்து கரீபியன் மற்றும் பசிபிக் கடல் வழியாக வரும் படகுகள் (படம்) மீது அமெரிக்கா தாக்குதல் நடத்துவது சட்டவிரோத மனிதப் படுகொலைகள் என்று ஐ.நா. கண்டனம் தெரிவித்துள்ளது.

time to read

1 min

November 01, 2025

Dinamani Cuddalore

யுபிஐ சர்க்கிள்: அமேஸானின் புதிய வசதிகள்

தனது பணப்பட்டுவாடா செயலி மூலம் குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுக்கு உடனடியாக பணம் அனுப்புவதற்கான யுபிஐ சர்க்கிள் முறையில் புதிய வசதிகளை அமேஸான் அறிமுகப்படுத்தியுள்ளது.

time to read

1 min

November 01, 2025

Translate

Share

-
+

Change font size