![6-ஆம் கட்டத் தேர்தல்: 61% வாக்குப் பதிவு](https://cdn.magzter.com/1574665526/1716674980/articles/Yzd5sguUg1716687693027/1716689056744.jpg)
இத்தேர்தலில் சுமார் 61 சதவீத வாக்குகள் பதிவானதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
மேற்கு வங்கத்தில் சில இடங்களில் வன்முறைச் சம்பவங்கள் நிகழ்ந்தன. மற்ற மாநிலங்களில் பர வலாக அமைதியான முறையில் தேர்தல் நடைபெற்றது.
வடமாநிலங்களில் வெயில் வாட்டி வதைப்பதால், வாக்குச்சா வடிகளில் குளிர்ந்த நீர், குளிர்சாதன வசதி, மின்விசிறி, நிழல் கூடாரம் போன்ற வசதிகள் ஏற்படுத்தப்பட்டிருந்தன.
தற்போதைய மக்களவைத் தேர் தலில் 6-ஆம் கட்டமாக உத்தரபிர தேசத்தில் 14, ஹரியாணாவில் 10, பிகார், மேற்கு வங்கத்தில் தலா 8, தில்லியில் 7, ஒடிஸாவில் 6, ஜார்க் கண்டில் 4, ஜம்மு-காஷ்மீரில் 1 என 58 தொகுதிகளில் சனிக்கிழமை வாக்குப் பதிவு நடைபெற்றது.
தில்லியில் மொத்தமுள்ள 7 தொகுதிகளுக்கும், ஹரியாணாவில் மொத்தமுள்ள 10 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக வாக்குப் பதிவு நடைபெற்றது.
இத்தேர்தலில் 11.13 கோடிக்கும் மேற்பட்ட வாக்காளர்கள் (5.84 கோடி ஆண்கள், 5.29 கோடி பெண்கள், 5,120 மூன்றாம் பாலினத்தவர்) வாக்களிக்கத் தகுதி பெற்றிருந்தனர். இவர்களுக்காக 1.14 லட்சம் வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டிருந்தன. 11 லட்சத்துக்கும் மேற்பட்ட ஊழியர்கள் தேர்தல் பணியில் ஈடுபட்டனர்.
முக்கியப் பிரமுகர்கள் வாக்களிப்பு: தில்லியில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, குடியரசு துணைத் தலைவர் ஜகதீப் தன்கர், மத்திய அமைச்சர்கள் எஸ்.ஜெய் சங்கர், ஹர்தீப் சிங்புரி, முதல்வர் அரவிந்த் கேஜரிவால், காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி, ராகுல் காந்தி எம்.பி., தலைமைத் தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார், தேர்தல் ஆணையர்கள் ஞானேஷ் குமார், சுக்பீர் சிங் சாந்து உள்ளிட் டோர் வாக்களித்தனர்.
ஹரியாணாவில் பிரபல மல்யுத்த வீரர் யோகேஸ்வர்தத், வீராங்கனைகள் பபிதா போகட், ரித்திகா ஹூடா உள்ளிட்டோர் ஜனநாயக கடமையை நிறைவேற்றினர்.
この記事は Dinamani Chennai の May 26, 2024 版に掲載されています。
7 日間の Magzter GOLD 無料トライアルを開始して、何千もの厳選されたプレミアム ストーリー、8,500 以上の雑誌や新聞にアクセスしてください。
すでに購読者です ? サインイン
この記事は Dinamani Chennai の May 26, 2024 版に掲載されています。
7 日間の Magzter GOLD 無料トライアルを開始して、何千もの厳選されたプレミアム ストーリー、8,500 以上の雑誌や新聞にアクセスしてください。
すでに購読者です? サインイン
![சூப்பர் 8-இல் நுழைந்தது இங்கிலாந்து](https://reseuro.magzter.com/100x125/articles/20345/1735265/D53rKffNp1718590970065/1718591160898.jpg)
சூப்பர் 8-இல் நுழைந்தது இங்கிலாந்து
ஐசிசி டி20 உலகக் கோப்பை போட்டியின் குரூப் பி பிரிவு ஆட்டத்தில் ஸ்காட்லாந்தை 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது ஆஸ்திரேலியா.
![பிரான்ஸில் வலதுசாரிகளுக்கு எதிராக தீவிர போராட்டம்](https://reseuro.magzter.com/100x125/articles/20345/1735265/k0aFoz93_1718590786244/1718590963124.jpg)
பிரான்ஸில் வலதுசாரிகளுக்கு எதிராக தீவிர போராட்டம்
பிரான்ஸில் வலதுசாரிகளுக்கு எதிராக பிரெஞ்சு தொழிற்சங்கங்கள், இடதுசாரிகள் கூட்டணியான மக்கள் முன்னணி, இனவாதத்துக்கு எதிரான குழுக்கள் சனிக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.
![கலந்தாலோசனைக்குப் பிறகே நாடாளுமன்றத்தில் சிலைகள் இடமாற்றம்](https://reseuro.magzter.com/100x125/articles/20345/1735265/2Mp1wH3mF1718590632046/1718590767549.jpg)
கலந்தாலோசனைக்குப் பிறகே நாடாளுமன்றத்தில் சிலைகள் இடமாற்றம்
நாடாளுமன்ற வளாகத்தில் அமைந்த மகாத்மா காந்தி, அம்பேத்கா், சத்ரபதி சிவாஜி ஆகியோரின் சிலைகள் பல்வேறு தரப்பினருடன் கலந்தாலோசனைக்குப் பிறகே வேறு இடத்துக்கு மாற்றப்பட்டதாக மக்களவைத் தலைவா் ஓம் பிா்லா ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தாா்.
![ராகுல் பிரசாரம் எதிரொலி: அரசமைப்புச் சட்டத்தின் கையடக்கப் பிரதியை வாங்க மக்கள் ஆர்வம்!](https://reseuro.magzter.com/100x125/articles/20345/1735265/qWr7Kf28i1718590463304/1718590618365.jpg)
ராகுல் பிரசாரம் எதிரொலி: அரசமைப்புச் சட்டத்தின் கையடக்கப் பிரதியை வாங்க மக்கள் ஆர்வம்!
மக்களவைத் தோ்தல் பிரசாரத்தில் காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி பயன்படுத்திய அரசமைப்புச் சட்டத்தின் கையடக்கப் பிரதியை வாங்குவதற்கு மக்கள் ஆா்வம் காட்டுவதாக உத்தர பிரதேசம், லக்னௌச் சோ்ந்த அதன் பதிப்பு நிறுவனமான ‘ஈஸ்டா்ன் புக்’ குழுமம் தெரிவித்துள்ளது.
![வாக்குப் பதிவு இயந்திர முறையில் வெளிப்படைத்தன்மை இல்லை](https://reseuro.magzter.com/100x125/articles/20345/1735265/fAYMZ1wYV1718590195011/1718590452198.jpg)
வாக்குப் பதிவு இயந்திர முறையில் வெளிப்படைத்தன்மை இல்லை
வாக்குப் பதிவு இயந்திர முறையில் வெளிப்படைத்தன்மை இல்லை என காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி ஞாயிற்றுக்கிழமை குற்றஞ்சாட்டினாா்.
![நாடு முழுவதும் பொது சிவில் சட்டம் அமல்படுத்தப்படும்](https://reseuro.magzter.com/100x125/articles/20345/1735265/0IOrCRhnt1718590023628/1718590194940.jpg)
நாடு முழுவதும் பொது சிவில் சட்டம் அமல்படுத்தப்படும்
‘நாடு முழுவதும் பொது சிவில் சட்டம் அமல்படுத்தப்படும்’ என்று மத்திய சட்டம் மற்றும் நீதித் துறை அமைச்சா் அா்ஜுன் ராம் மேக்வால் ஞாயிற்றுக்கிழமை நம்பிக்கை தெரிவித்தாா்.
![விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் திமுகவுக்கு பாடம் புகட்ட வேண்டும்](https://reseuro.magzter.com/100x125/articles/20345/1735265/j9M4m2EFo1718589813191/1718589963852.jpg)
விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் திமுகவுக்கு பாடம் புகட்ட வேண்டும்
வன்னியா் இடஒதுக்கீடு விவகாரத்தில் துரோகம் இழைத்த திமுகவுக்கு விக்கிரவாண்டி இடைத்தோ்தலில் பாடம் புகட்ட வேண்டும் என்று கட்சியினரை பாமக நிறுவனா் ராமதாஸ் கேட்டுக் கொண்டுள்ளாா்.
![நெல்லை ரயில் நிலையத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்: ஒருவர் கைது](https://reseuro.magzter.com/100x125/articles/20345/1735265/TYgTcpCRw1718589634306/1718589807989.jpg)
நெல்லை ரயில் நிலையத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்: ஒருவர் கைது
திருநெல்வேலி சந்திப்பு ரயில் நிலையத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்ததாக ஒருவரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.
![முதல்வர் ஸ்டாலினின் கனவு பலிக்காது](https://reseuro.magzter.com/100x125/articles/20345/1735265/Imv3LuIz51718589511555/1718589634091.jpg)
முதல்வர் ஸ்டாலினின் கனவு பலிக்காது
2026 சட்டப்பேரவைத் தோ்தலில் 200 இடங்களை திமுக கைப்பற்றும் என்ற முதல்வா் மு.க. ஸ்டாலினின் கனவு பலிக்காது; திமுகவின் வெற்றி தொடராது என அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி கே. பழனிசாமி தெரிவித்தாா்.
![இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய பேருந்து நிலையம் : பயணிகள் கடும் அவதி](https://reseuro.magzter.com/100x125/articles/20345/1735265/_WaXP07Cu1718589185670/1718589447051.jpg)
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய பேருந்து நிலையம் : பயணிகள் கடும் அவதி
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய திருவேற்காடு பேருந்து நிலையத்தால் பயணிகள், மாநகர பேருந்து ஓட்டுநர்கள், நடத்துநர்கள் கடும் அவதியுற்று வருகின்றனர்.