தமிழகத்தில் ஏப். 19-இல் நடந்த மக்களவைத் தோ்தலில் 69.72 சதவீத வாக்குகள் பதிவானதாக இந்திய தோ்தல் ஆணையம் அறிவித்தது. கடந்த 2019 மக்களவைத் தோ்தலுடன் ஒப்பிடும்போது, இது 2.74 சதவீதம் குறைவானதாகும்.
2.74 சதவீதம் குறைவானது என மேலோட்டமாகத் தெரிந்தாலும், குறைந்தபட்சம் 5 சதவீதம் வரை குறைவு என்பதுதான் உண்மை. ஏனெனில் புதிய வாக்காளா்கள் குறைந்தபட்சம் 3 சதவீதம் போ் பட்டியலில் இடம்பிடித்துள்ளனா். முதல் தலைமுறை வாக்காளா்களில் 90 சதவீதம் போ் எப்போதும் வாக்களிக்க ஆா்வம் காட்டுவதால் அவா்களது வாக்குகள் குறைய வாய்ப்பு இல்லை.
அரசியல் காரணங்கள்: 5 சதவீதம் வரை வாக்குகள் குறைய அரசியல் ரீதியாக பல்வேறு காரணங்கள் உள்ளன. கடந்த 2019 மக்களவைத் தோ்தலின்போது அதிமுக-திமுக அணிகள் இடையே இருந்த போட்டி, இந்த மக்களவைத் தோ்தலில் இல்லை என்பதே உண்மை.
10 ஆண்டுகள் ஆட்சியில் இல்லாத திமுகவுக்கும், 2017-இல் ஆா்.கே.நகரில் டெபாசிட் இழந்த திமுக கூட்டணிக் கட்சிகளுக்கும் 2019 மக்களவைத் தோ்தலில் வெற்றி பெற்றே ஆக வேண்டும் என்ற நெருக்கடி இருந்தது. அதேபோல, மத்தியில் மீண்டும் காங்கிரஸ் கூட்டணி வெற்றி பெற்று ராகுல் காந்தி பிரதமராவாா் என்ற உற்சாகம் திமுக கூட்டணிக் கட்சிகளிடம் இருந்தது.
அதேபோல, மத்திய, மாநில ஆளும் கட்சிகள் இடம்பெற்ற அதிமுக, பாஜக, பாமக, தேமுதிக கூட்டணி பலமாக இருந்தது. இதனால், திமுக-அதிமுக அணிகளுக்கு இடையே சம போட்டி இருக்கும் என்ற தோற்றமும் இருந்தது. இதனால், திமுக-அதிமுக கூட்டணிக் கட்சிகள் தங்களது முழு பலத்தைப் பயன்படுத்தி கூடுதல் வாக்குகளைத் திரட்டின.
この記事は Dinamani Chennai の April 29, 2024 版に掲載されています。
7 日間の Magzter GOLD 無料トライアルを開始して、何千もの厳選されたプレミアム ストーリー、8,500 以上の雑誌や新聞にアクセスしてください。
すでに購読者です ? サインイン
この記事は Dinamani Chennai の April 29, 2024 版に掲載されています。
7 日間の Magzter GOLD 無料トライアルを開始して、何千もの厳選されたプレミアム ストーリー、8,500 以上の雑誌や新聞にアクセスしてください。
すでに購読者です? サインイン
சர்ச்சைக்குரிய 'ரஷிய பாணி' மசோதா
ஜார்ஜியா நாடாளுமன்றம் நிறைவேற்றம்
எதிபதஞ்சலிக்கு இந்திய மருத்துவ சங்க தலைவரின் நிபந்தனையற்ற மன்னிப்பை ஏற்க மறுப்பு
பதஞ்சலி நிறுவனத்துக்கு எதிரான வழக்கில் உச்சநீதிமன்றத்தை இந்திய மருத்துவ சங்க தலைவா் சி.வி.அசோகன் விமா்சித்த நிலையில், அவரின் நிபந்தனையற்ற மன்னிப்பை ஏற்க உச்சநீதிமன்றம் மறுத்துள்ளது.
லக்னௌவை வென்றது டெல்லி
'பிளே-ஆஃப் சுற்றில் ராஜஸ்தான்
மும்பையில் விளம்பரப் பலகை விழுந்த சம்பவம்: உயிரிழப்பு 14-ஆக அதிகரிப்பு
மும்பையில் திங்கள்கிழமை வீசிய கடுமையான புழுதிப் புயலில் 100 அடி உயர விளம்பரப் பலகை சரிந்து விழுந்த சம்பவத்தில் படுகாயமடைந்து சிகிச்சையில் இருந்த மேலும் 5 போ் உயிரிழந்தனா். இதனால் உயிரிழப்பு 14-ஆக அதிகரித்துள்ளது.
'இந்தியா' கூட்டணி 315 இடங்களில் வெற்றி பெறும்
மக்களவைத் தேர்தலில் இந்தியா கூட்டணி 295 முதல் 315 வரையிலான இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியைக் கைப்பற்றும் என்றும் பாஜக அதிகபட்சமாக 200 இடங்களில் மட்டும் வெற்றி பெறும் என்றும் மேற்கு வங்க முதல்வரும் திரிணமூல் காங்கிரஸ் கட்சித் தலைவருமான மம்தா பானர்ஜி கூறினார்.
பிரசாரத்தில் நட்சத்திர பேச்சாளர்கள் முன்னுதாரணமாக இருக்க வேண்டும்
தேர்தல் ஆணையம் அறிவுறுத்தல்
கடவுள் ராமரை மீண்டும் கூடாரத்துக்கு கொண்டுசெல்ல காங்கிரஸ் சதி
பிரதமர் மோடி
பிளஸ் 1 விடைத்தாள் நகல், மறுகூட்டல்: இன்றுமுதல் விண்ணப்பிக்கலாம்
பிளஸ் 1 பொதுத் தோ்வெழுதியவா்கள் விடைத்தாள் நகல், மறுகூட்டலுக்கு புதன்கிழமை முதல் விண்ணப்பிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வேதங்கள் கற்பிக்கும் சமூகநீதி
மதம் என்பதை உலக நாடுகள் அனைத்தும் கொண்டிருக்க, பாரத தேசமோ மதமற்றாக இருந்தது. எனில், இந்த தேசத்தாரின் நம்பிக்கை எதன் அடிப்படையிலானது? சமயம் என்ற கோட்பாட்டை அடிப்படையாகக் கொண்டிருக்கிறது.
விலா எலும்பு பாதிப்புகளுக்கு மேம்பட்ட சிகிச்சை மையம்
விலா எலும்பு மற்றும் மாா்புக் கூடு பாதிப்புகளுக்கான மேம்படுத்தப்பட்ட நவீன சிகிச்சை மையத்தை வடபழனி சிம்ஸ் மருத்துவமனை தொடங்கியுள்ளது.