தமிழகத்தில் ஏற்பட்ட புயல், மழை வெள்ள பாதிப்பு நிவாரணமாக தேசிய பேரிடர் நிவாரண நிதியில் இருந்து ரூ.276 கோடியை மத்திய அரசு விடு வித்துள்ளது.
கர்நாடகத்துக்கு வறட்சி நிவாரணமாக ரூ.3,454 கோடியை விடுவித்துள்ளது.
தமிழகத்தில் கடலோரப் பகுதிகளையும், பிற மாவட்டங்களையும் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் மிக்ஜம் புயல் தாக்கியது. இதைத் தொடர்ந்து, வட மாவட்டங்களிலும், தென் மாவட்டங்களிலும் முன்னெப்போதும் இல்லாத வகையில் பெருமழை பெய்தது. இதில் தென் மாவட்டங்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டன.
இதைத் தொடர்ந்து, மத்திய அமைச்சர்கள் மற்றும் மத்திய அமைச்சகங்களுக்கு இடையிலான குழு தமிழகத்தில் புயல், மழை சேதங்களைப் பார்வையிட்டது.
இதையடுத்து, தில்லி வந்த முதல்வர் மு.க.ஸ்டாலின் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து தற்காலிக தீர்வு மற்றும் நிரந்தர தீர்வுகளுக்காக ரூ.19,692 கோடி நிவாரண நிதி கோரினார். பின்னர், கடந்த ஜனவரி மாதமும் மத்திய குழு தென் மாவட்டங்ளைப் பார்வையிட்டது. அதன்பிறகு தமிழக எம்.பி.க்கள் குழு உள்துறை அமைச்சரை சந்தித்து ரூ.37,907 கோடி நிவாரண நிதி கோரியது.
இந்நிலையில், தற்போது பேரிடர் நிவாரணப் பணிகளுக்கான நிதியை மத்திய அரசு விடுவித்துள்ளது. இதன்படி, கடந்த டிசம்பர் மாதம் ஏற்பட்ட மிக்ஜம் புயல் பாதிப்புகளுக்கு தேசிய பேரிடர் நிவாரண நிதியிலிருந்து ரூ.285.54 கோடியை ஒதுக்க மத்திய உள்துறையின் உயர்நிலைக் குழு பரிந்துரை செய்தது. மேலும், பல்வேறு மாவட்டங்களில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் ஏற்பட்ட மிதமிஞ்சிய மழை வெள்ள பாதிப்புக்கு ரூ.397.13 கோடியை விடுவிக்கவும் மத்திய உள்துறையின் உயர்நிலைக் குழு பரிந்துரைத்தது. அந்த வகையில் தேசிய பேரிடர் நிவாரண நிதியாக மொத்தம் ரூ.682.67 கோடி தமிழகத்துக்கு ஒதுக்க பரிந்துரைத்துள்ளது.
この記事は Dinamani Chennai の April 28, 2024 版に掲載されています。
7 日間の Magzter GOLD 無料トライアルを開始して、何千もの厳選されたプレミアム ストーリー、8,500 以上の雑誌や新聞にアクセスしてください。
すでに購読者です ? サインイン
この記事は Dinamani Chennai の April 28, 2024 版に掲載されています。
7 日間の Magzter GOLD 無料トライアルを開始して、何千もの厳選されたプレミアム ストーリー、8,500 以上の雑誌や新聞にアクセスしてください。
すでに購読者です? サインイン
அமித் ஷாவை பிரதமராக்க மோடி திட்டம்-அரவிந்த் கேஜரிவால்
மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை அடுத்த பிரதமராக்கும் திட்டத்துடன் தற் போது பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார் பிரதமர் மோடி என்று தில்லி முதல்வரும் ஆம் ஆத்மி தேசிய அமைப்பாளருமான அரவிந்த் கேஜரிவால் சனிக்கிழமை கூறினார்.
நாட்டை பிரதமர் மோடி தொடர்ந்து வழிநடத்துவார்
'மக்களவைத் தேர்தல் முடிவில், பாஜக ஆட்சியமைக்கும். பிர தமர் நரேந்திர மோடி நாட்டை தொடர்ந்து வழிநடத்துவார்' என மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா சனிக்கிழமை தெரிவித்தார்.
மத்திய ராஃபாவிலிருந்தும் பொதுமக்கள் வெளியேற இஸ்ரேல் உத்தரவு
போரால் பாதிக்கப்பட்டுள்ள காஸாவில் பாலஸ்தீனா்களின் கடைசி புகலிடமாகத் திகழ்ந்த ராஃபா நகரின் மத்தியப் பகுதிகளில் இருந்தும் பொதுமக்கள் வெளியேற வேண்டும் என்று இஸ்ரேல் ராணுவம் உத்தரவிட்டுள்ளது.
பாலஸ்தீனத்துக்கு முழு உறுப்பினர் அந்தஸ்து: ஐ.நா.வில் தீர்மானம் நிறைவேற்றம்
பாலஸ்தீனத்தை ஐ.நா.வின் முழுமையான உறுப்பு நாடாக்க வழிவகுக்கும் தீா்மானம் ஐ.நா. பொதுச் சபையில் நிறைவேற்றப்பட்டுள்ளது.
பிளே ஆஃப் சுற்றில் கொல்கத்தா
மும்பை இண்டியன்ஸ் அணியை 18 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி கொல்கத்தா நைட் ரைடா்ஸ் அணி பிளே ஆஃப் சுற்றுக்கு முதல் அணியாக தகுதி பெற்றது.
இந்திரா காந்தியிடம் பிரதமர் மோடி பாடம் கற்க வேண்டும்
முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியிடம் இருந்து வீரம், துணிவு, மன உறுதி ஆகிய வற்றை தற்போதைய பிரதமரான மோடி கற்க வேண்டும் என்று காங்கிரஸ் பொதுச் செயலர் பிரியங்கா காந்தி தெரிவித்துள்ளார்.
மக்களவைத் தேர்தல் பற்றி பொது விவாதம்: முன்னாள் நீதிபதிகளின் அமைப்பை ஏற்ற காங்கிரஸ்
மக்களவைத் தேர்தல் குறித்த பொது விவா தத்துக்கான ஓய்வு பெற்ற நீதி பதிகளின் அழைப்பை காங் கிரஸ் ஏற்பதாக அக்கட்சி எம்.பி. ராகுல் காந்தி சனிக்கிழமை தெரிவித்தார்.
பாஜக இல்லாத பாரதம்
நாட்டில் பாஜக இருக்கக் கூடாது என்று தெலங்கானா முதல்வா் ரேவந்த் ரெட்டி தெரிவித்துள்ளாா்.
முஸ்லிம்களுக்கு பாதுகாப்பற்ற உணர்வு ஏற்பட எந்தக் காரணமும் இல்லை
‘இந்தியாவில் முஸ்லிம்களின் எண்ணிக்கை அதிகரித்திருப்பதோடு, அரசுத் திட்டங்களில் அவா்களும் சமமாக பலனடைகின்றனா். எனவே, அவா்கள் பாதுகாப்பற்க உணர எந்தக் காரணமும் இல்லை’ என்றாா் மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத் துறை அமைச்சா் அனுராக் தாக்குா்.
முருக பக்தர்கள் மாநாடு குறித்த ஆலோசனைக் கூட்டம்
பழனியில் முருக பக்தா்கள் மாநாடு நடத்துவது தமிழக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சா் சேகா்பாபு தலைமையில் சனிக்கிழமை ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.