நாடு முழுவதும் 12 மாநிலங்கள் மற்றும் ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேசம் ஆகியவற்றில் இடம்பெற்றுள்ள 88 மக்களவைத்தொகுதிகளுக்கு வெள்ளிக் கிழமை நடைபெற்ற இரண்டாம் கட்ட தேர்தலில் இரவு 7 மணி நிலவரப்படி 60.96 சதவீத வாக்குகள் பதிவாகின.
கேரளத்தில் 20 தொகுதிகளிலும், கர்நாடகத்தில் 14 தொகுதிகளிலும் வாக்குப் பதிவு விறுவிறுப்பாக நடைபெற்றது.
அதிகபட்சமாக திரிபுரா மாநிலத்தில் 78.53 சதவீத வாக்குகளும், குறைந்தபட்சமாக உத்தரபிரதேசத்தில் 53.71 சதவீத வாக்குகளும் பதிவாகியிருப்பதாகவும், வாக்குப்பதிவு அமைதியாக நடைபெற்றதாகவும் தேர்தல் ஆணைய அதிகாரிகள் தெரிவித்தனர்.
மக்களவைக்கு ஏழு கட்டங்களாக தேர்தல் நடத்தப்பட்டு வருகிறது. முதல் கட்டமாக தமிழகம் (39), புதுச்சேரி (1) உள்பட 21 மாநிலங்கள்-யூனியன் பிர தேசங்களில் அடங்கிய 102 தொகுதிகளுக்கு ஏப்ரல் 19-ஆம் தேதி வாக்குப் பதிவு நடைபெற்றது. இதில் சுமார் 65.5 சதவீத வாக்குகன் பதிவாகின.
கேரளத்தில் மொத்தமுள்ள 20 தொகுதிகளுக்கு ஒரே கட்டமாகவும், கர்நாடகத்தில் மொத்தமுள்ள 28 தொகுதிகளில் 14 தொகுதிகளுக்கும், ராஜஸ்தானில் 13. மகாராஷ்டிரம், உத்தரபிரதேசத்தில் தலா 8, மத்திய பிரதேசத்தில் 6, அஸ்ஸாம், பிகாரில் தலா 5, சத்தீஸ்கர், மேற்கு வங்கத்தில் தவா 3, மணிப்பூர், திரிபுரா, ஜம்மு-காஷ்மீரில் தலா ஒரு தொகுதியிலும் வெள்ளிக்கிழமை காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது.
கேரளம், கர்நாடகத்தில் காலையிலேயே வாக்காளர்கள் நீண்ட வரிசையில் தின்று வாக்குசுனைப் பதிவு செய்தனர்.
2-ஆம் கட்டத் தேர்தல் களத்தில் மொத்தம் 1,202 வேட்பாளர்கள் உள்ளனர். இதில் பெண் வேட்பாளர்கள் 102 பேர். மூன்றாம் பாலினத்தைச் சேர்ந்தவர்கள் இருவர்.
この記事は Dinamani Chennai の April 27, 2024 版に掲載されています。
7 日間の Magzter GOLD 無料トライアルを開始して、何千もの厳選されたプレミアム ストーリー、8,500 以上の雑誌や新聞にアクセスしてください。
すでに購読者です ? サインイン
この記事は Dinamani Chennai の April 27, 2024 版に掲載されています。
7 日間の Magzter GOLD 無料トライアルを開始して、何千もの厳選されたプレミアム ストーリー、8,500 以上の雑誌や新聞にアクセスしてください。
すでに購読者です? サインイン
காங்கிரஸ் உறவை துண்டிக்குமா திமுக?
பிரதமர் நரேந்திர மோடி சவால்
‘கோவிஷீல்டு' தடுப்பூசி சர்வதேச அளவில் வாபஸ்
பிரிட்டனைச் சேர்ந்த பிரபல மருந்து தயாரிப்பு நிறுவனமான அஸ்ட்ராசெனகா வர்த்தக காரணங்களுக்காக தனது கரோனா தடுப்பூசியை (கோவிஷீல்டு) சர்வதேச அளவில் அனைத்து நாடுகளில் இருந்தும் திரும்பப் பெறுவதாக அறிவித்துள்ளது.
தள்ளாடிய சந்தையில் சென்செக்ஸ் 45 புள்ளிகள் சரிவு
இந்த வாரத்தின் மூன்றாவது வர்த்தக தினமான புதன்கிழமையும் பங்குச்சந்தை எதிர்மறையாக முடிந்தது. இதைத் தொடர்ந்து, மும்பை பங்குச் சந்தைக் குறியீட்டு எண் சென்செக்ஸ் 45 புள்ளிகளை இழந்தது.
ராஃபா படையெடுப்பு விவகாரம் இஸ்ரேலுக்கு ஆயுத விநியோகத்தை நிறுத்திய அமெரிக்கா
காஸாவின் ராஃபா நகரில் தாக்குதல் நடத்தப் பயன்படுத்தப்படலாம் என்ற அச்சத்தில் இஸ்ரேலுக்கான ஆயுத விநியோகத்தை அமெரிக்கா நிறுத்திவைத்துள்ளது.
தாயகத்துக்கு ரூ.9 லட்சம் கோடி: இந்தியர்கள் உலக சாதனை
கடந்த 2022-ஆம் ஆண்டு வெளிநாடுகளில் இருந்து தாயகத்துக்கு 111.22 பில்லியன் டாலர்கள் (சுமார் ரூ.9.28 லட்சம் கோடி) அனுப்பி, உலக அளவில் இந்தியர்கள் சாதனை படைத்துள்ளனர்.
பிரான்ஸ் வந்தடைந்தது பாரீஸ் ஒலிம்பிக் தீபம்
பாரீஸ் ஒலிம்பிக் போட்டிக்காக கீரிஸில் ஏற்றப்பட்ட தீபம், பிரான்ஸின் மாா்சியெல் நகரை புதன்கிழமை வந்தடைந்தது. பல்வேறு வரவேற்பு நிகழ்ச்சிகள் மற்றும் கொண்டாட்டங்களுடன் ஒலிம்பிக் தீபத்தை பிரான்ஸ் வரவேற்றது.
அபிஷேக், டிராவிஸ் அதிரடி: ஹைதராபாத் அபார வெற்றி
ஐபிஎல் போட்டியின் 57-ஆவது ஆட்டத்தில் சன்ரைசா்ஸ் ஹைதராபாத் 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் லக்னௌ சூப்பா் ஜயன்ட்ஸை புதன்கிழமை வீழ்த்தியது.
ஜாதி, மதம், கோயில்-மசூதி மட்டும்தான் பாஜகவின் பிரசார உத்தி
ரேபரேலியில் பிரியங்கா பிரசாரம்
சமூக வலைத்தள பதிவு விவகாரம் பாஜக தலைவர் ஜெ.பி.நட்டா ஆஜராக பெங்களூரு போலீஸில் சம்மன்
வாக்காளர்களிடையே பகைமையை உருவாக்கும் வகையில் சமூக வலைத்தளத்தில் பதிவிட்டிருந்தது தொடர்பாக வழக்குப் பதிவுசெய்துள்ள பெங்களூரு போலீஸார், விசாரணைக்கு நேரில் ஆஜராகும்படி, பாஜக தேசியத் தலைவர் ஜெ.பி.நட்டா, கட்சியின் தகவல் தொழில்நுட்பப் பிரிவு தலைவர் அமித் மாளவியா ஆகியோருக்கு சம்மன் அனுப்பியுள்ளனர்.
ஹரியாணா: பாஜக அரசை கவிழ்க்க காங்கிரஸுக்கு ஆதரவு
ஜனநாயக ஐனதா கட்சி அறிவிப்பு