அவர் இந்தியப்பிரதமராக உயர்ந்த போதிலும் அவரது பார்வை கர்நாடக பொதுப்பணித்துறை அமைச்சரின் கண்ணோட்டமாகவே இருந்தது. அதை தாண்டி அவரால் நோக்க முடியவில்லை.
ஒரு கட்சியின் தலைவராக இருந்த போதிலும் தனது குடும்பத்தின் நலனைத்தாண்டி வேறு எதையும் அவரால் சிந்திக்க முடியவில்லை. அவரது மகன் குமாரசாமி முன்னாள் முதலமைச்சர் ஆவார். அவர் சென்னப்பட்டினா தொகுதியில் மதச்சார்பற்ற ஜனதாதளம் சார்பில் போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து இத்தொகுதியில் பா.ஜ.க. சார்பில் சி.பி.யோகஸ்வர் போட்டியிடுகிறார். அவரது சகோதரர் எச்.டி ரேவண்ணாவும் களத்தில் உள்ளார். அதுமட்டுமல்லாமல் குமாரசாமியின் மனைவி அனிதா குமாரசாமி, மகன் நிகில் குமாரசாமி ஆகியோரும் மதச்சார்பற்ற ஜனதாதளத்தில் வலுவான ஆதிக்கத்தை செலுத்தி வருகிறார்கள்.
நிகில் குமாரசாமி இத்தேர்தலில் ராமநகரம் தொகுதியில் வேட்பாளராக போட்டியிடுகிறார். ரேவண்ணாவின் மனைவி பவானி, மகன் சுரேஜ் ரேவண்ணா எம்.எல்.சி, மற்றொரு மகன் பிரஜ்வால் ரேவண்ணா எம்.பி. ஆகியோரும் மதச்சார்பற்ற ஜனதாதளத்தின் முக்கிய புள்ளிகளாக செயல்பட்டு வருகின்றனர். ஒட்டுமொத்தமாக பார்த்தால் தேவகவுடா குடும்பத்தைச் சேர்ந்த 8 பேர் அஷ்ட திசை எங்கும் ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர்.
குடும்ப அரசியலை ஏற்காத கட்சி பா.ஜ.க. என்று பிரதமர் மோடியும் உள்துறை அமைச்சர் அமித்ஷாவும் வாய்நோகாமல் வார்த்தை பந்தல் போட்டாலும் உண்மை இதற்கு புறம்பானது. அநேகமாக எல்லா மாநிலங்களிலும் பா.ஜ.க.வில் வாரிசு அரசியல் கொடி கட்டிப்பறக்கிறது. இதற்கு கர்நாடகாவும் விதிவிலக்கு அல்ல.
கர்நாடகாவில் இப்போது முதலமைச்சராக உள்ள பசவராஜ் பொம்மையின் தந்தை சோமப்ப ராயப்ப பொம்மையும் கர்நாடக முதலமைச்சராக செயல்பட்டுள்ளார். ஆனால் அவர் பா.ஜ.க.வைச் சேர்ந்தவர் கிடையாது. தனது தந்தை மறைந்து பல ஆண்டுகளான பிறகே பா.ஜ.க. பசவராஜ் பொம்மை சேர்ந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
この記事は Kanmani の May 10, 2023 版に掲載されています。
7 日間の Magzter GOLD 無料トライアルを開始して、何千もの厳選されたプレミアム ストーリー、8,500 以上の雑誌や新聞にアクセスしてください。
すでに購読者です ? サインイン
この記事は Kanmani の May 10, 2023 版に掲載されています。
7 日間の Magzter GOLD 無料トライアルを開始して、何千もの厳選されたプレミアム ストーリー、8,500 以上の雑誌や新聞にアクセスしてください。
すでに購読者です? サインイン
உங்கள் வாக்கு விற்பனைக்கல்ல....
சிறுமியாக இருந்த நாட்களில் தேர்தல், அரசியல் இதெல்லாம் தெரிந்து கொண்டபோது தேர்தலை முன்னிட்டு நடக்கும் குளறுபடிகள், விதிமீறல்களைப் பார்த்திருக்கிறேன்.
விரயமாகும் உணவுகள்.... தடுப்பது எப்படி?
இன்றை நவீன யுகத்தில் பசித்தவனுக்கு உணவு அளிப்பதை விட அதை வீணாக்குவதை சாதாரணமாக செய்வதுதான் வேதனை அளிக்கிறது. நல்ல உணவைச் சமைத்து அதைக் கொட்டுவது என்பது பல்வேறு நாடுகளுக்கும் பழகிப்போன விஷயமாகவே உள்ளது.
வாழ்க்கையை முழுமையாக ரசிக்கிறேன்!
டாப்ஸி... தன்னம்பிக்கை மிகுந்தவர், விரைந்து தெளிவாக முடிவெடுக்கும் திறன் வாய்ந்தவர், தன் கோணங்களை அறிந்தவர், தனக்கு என்ன வேண்டும், எது தேவையில்லை என்பதை வெளிப்படுத்த அஞ்சாதவர்... இப்படி சொல்லிக் கொண்டே போகலாம்.
ஐ.ஐ.டி. படித்தாலும் வேலை இல்லை!
அங்கு, ஃபெயில் ஆகாமல் பாஸ் மார்க் எடுக்கவே கடினமாக உழைக்க வேண்டும்.எனவே, 4 வருடங்கள் முடிந்த பிறகு அதிலிருந்து தேர்வான மாணவர்களின் தரமும், சிந்திக்கும் திறனும் மற்ற கல்லூரி மாணவர்களை விட தரமானதாக இருக்கும்.
அதிகரிக்கும் சிசேரியன்...
பிள்ளைப்பேறு என்பது செத்துப் பிழைப்பது போன்றது. ஆனாலும், நவீன மருத்துவத்துக்கு முன்பு சுகப்பிரசவத்துக்கு அதிக வாய்ப்பிருந்தது. மக்களின் உணவுப்பழக்கம், வாழ்க்கை முறை, உடல் உழைப்பு காரணமாக அது நடந்தது.
கிராமத்து ராசாக்கள்
ஊரில் இருந்து கொண்டுக்கிட்டு வந்த காசும் அடுத்த மாசக் கச்சேரிக்கு வாங்கியிருந்த அட்வான்சும் தீர்ந்த பெறகு, இந்தக் கச்சேரிக் குடும்பத்தோட அம்மா சின்னத்தாயி, தன்னோட காதில் போட்டு வச்சிருக்கற தண்டட்டியக் கழற்றி கரியணம்பட்டிகிட்டே அடகு வச்சு மறுபடியும் கச்சேரி செய்ய ஊருக்குத் தள்ளிவிடுவாங்க.
என்னைப் பற்றி..
நான் கோபிசெட்டிபாளையம் கொளப்பலூரைச் சேர்ந்தவள். பொறியியல் படித்துள்ள எனக்கு எழுத்தின் மீது ஆர்வம் இருந்ததால், அதையே எனது துறையாகத் தேர்ந்தெடுத்துக் கொண்டேன்.
தேர்தல் களத்தில் கங்கனா பன்சூரி!
இமாச்சல பிரதேசத்தில் பிறந்த கங்கனா ரணாவத், தனது 16 வயதில் நடிக்க வேண்டும் என்று விரும்பி டெல்லியில் நாடக இயக்குநர் அர்விந்த் கவுரிடம் நடிப்பை கற்றுக் கொண்டார்.
தவிக்கவிடுவது சரியா?
மனிதன் ஒரு சமூக விலங்கு என்றார்கள் சமூகவியல் ஆய்வாளர்கள். அவன் சுயநலமான விலங்கு என்பதையும் சொல்லியாக வேண்டும்.
அழகுக்கு அளவு கோல் கிடையாது!
சீதா ராமம் ஹிட் அடித்ததைத் தொடர்ந்து பான் இந்தியா நடிகையாக மாறி விட்ட நடிகை மிருணாள் தாக்கூர், தெலுங்கு, இந்தி, தமிழ், மராத்தி படங்களில் இடைவிடாமல் நடித்து வருகிறார்.