कोशिश गोल्ड - मुक्त
இன்று (மார்ச் 28) அஞ்சாநெஞ்சன் அழகிரியின் நினைவு நாள்!
Viduthalai
|March 28, 2023
தலைவன் - கொள்கை - இயக்கம் இவற்றிற்கு விசுவாசமாக வாழ்ந்து காட்டிய மாவீரன் அழகிரி!
-
இளைஞர்களே, அஞ்சாநெஞ்சன் அழகிரியை முன்னுதாரணமாகக் கொள்வீர்!
மறைந்த அஞ்சாநெஞ்சன் பட்டுக்கோட்டை கே.வி.அழகிரிசாமி அவர்களின் நினைவு நாளில் (மார்ச் 28), தலைமைக்கும், கொள்கைக்கும், இயக்கத்திற்கும் அவர் விசுவாசமாக, கட்டுப்பாடாக நடந்துகாட்டிய முறையை, இளைஞர்கள் பின்பற்ற வேண்டும் என்ற சூளுரையை மேற்கொள்வோம் என்று திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:
திராவிடர் இயக்க வரலாற்றில், சுயமரியாதை இயக்க வளர்ச்சியில் தளபதி அஞ்சாநெஞ்சன் பட்டுக்கோட்டை அழகிரிசாமி அவர்களின் தொண்டறமும், பிரச்சாரப் போர் முறையும் ஒப்புவமையற்ற ஒன்றாகும்!
அவருடைய நினைவு நாள் இன்று (மார்ச் 28). அஞ்சாநெஞ்சன் அழகிரியின் கழகக் கட்டுப்பாடு!
ஒரே தலைமை, ஒரே கொள்கை, எவ்வளவு சோதனைகளும், காசநோய் போன்ற கொடுமைகள் இறுதிக் காலத்தில் அவரை வாட்டியபோதும், நிலைகுலையாதது மட்டுமல்ல, தனது தலைவர் தந்தை பெரியாரிடம் அவருக்குக் கருத்து வேறுபாடு இருந்ததுபோல் காட்டிடும் ஒரு முயற்சியை, திராவிடர் கழகத்தைவிட்டு அப்போது வெளியே வந்த சிலர் முயற்சித்தபோது, அவர்களை வெட்கப்படும்படி செய்தவர். அவர் மரணத்தின் வாயிலில் நின்று கொண்டிருந்த நிலையிலும், சபலமோ, சலனமோ, சஞ்சலமோ சிறிதும் கொள்ளாத உறுதிமிக்க பெரியார் தொண்டனாக, பெரியாரின் தோழனாகத் திகழ்ந்தவர். இயக்க வளர்ச்சிக்கு இவர்போல் உழைத் தவர் எவர் உண்டு என்பதை இன்னமும் சரித்திரம் பதிய வைத்துள்ளது!
புத்தம் சரணம், தம்மம் சரணம், சங்கம் சரணம்,
தனது தலைவன், தமது கொள்கை, தமது இயக்கம் - இம்மூன்றையும் தனது மூச்சிருக்கும் வரை துளிகூட மாறாது கடைப்பிடித்து, பின்பற்றி, விசுவாசம் - கட்டுப்பாடு குலையாது நடக்க - தன்னைப் பின்னுக்குத் தள்ளி, தனது தலைவனையே, தலைமையையே, தந்தை பெரியாரையே முதன்மைப்படுத்திய ஒரு மகத்தான ஒப்புவமையற்ற உணர்வுள்ள சுயமரியாதை இயக்கத்தளநாயகராக, தன்னேரில்லாத் தகைமையாளராக, இயக்கத்தை தனது வாழ்வுக்கோ, வசதிக்கோ பயன்படுத்தத் துளியும் விரும்பாத, தூய்மைமிகு தொண்டறத் தோழனாகவே கண்மூடும்வரை கடமையாற்றிய கைமாறு கருதாத சுயமரியாதைச் சுடரொளி!
यह कहानी Viduthalai के March 28, 2023 संस्करण से ली गई है।
हजारों चुनिंदा प्रीमियम कहानियों और 10,000 से अधिक पत्रिकाओं और समाचार पत्रों तक पहुंचने के लिए मैगज़्टर गोल्ड की सदस्यता लें।
क्या आप पहले से ही ग्राहक हैं? साइन इन करें
Viduthalai से और कहानियाँ
Viduthalai
தமிழ்நாடு முழுவதும் மாற்றுத்திறனாளிகள் கணக்கெடுப்புப் பணி; ஆகஸ்டு மாதம் முடித்திட உதவித் தொகை வாய்ப்பு
தமிழ்நாடு முழுவதும் மாற்றுத்திறனாளிகள் கணக்கெடுப்புப் பணி தொடங்கி நடைபெற்று வருகிறது. இதன் மூலம் உதவித்தொகைக்காக காத்திருக்கும் மாற்றுத் திறனாளிகளுக்கு பலன் கிடைக்குமா? என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. இப்பணியை ஆகஸ்டு மாத இறுதிக்குள் முடிக்க திட்டமிட்டுள்ளது.
1 min
JUNE 06,2025
Viduthalai
நூறாண்டுகளுக்கு முன்பே ஜாதியை தூக்கியெறிந்தவர் தந்தைபெரியார்
மறைந்தவர்கள் மீண்டும் பிறக்க முடியாது என்பது உண்மை. ஆனால் ஒரு மகத்தான சிந்தனையாளரின் கருத்துகள், அவரது சீடர்கள் மூலமாகத் தொடர்ந்து வாழ்கின்றன. தத்துவஞானி சாக்ரடீஸின் சிந்தனைகள் பிளாட்டோ, அரிஸ்டாட்டில் போன்றோர் மூலம் உலகிற்கு கிடைத்ததுபோல், தந்தை பெரியாரின் சமூக நீதிக் கொள்கைகள் அறிஞர் அண்ணா, கலைஞர், முதல்வர் ஸ்டாலின் போன்றோர் மூலம் தமிழகத்தில் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றன.
1 mins
JUNE 06,2025
Viduthalai
அரசுப் போக்குவரத்துக் கழக ஊழியர்களுக்கு 6 சதவீத ஊதிய உயர்வு
அதிகபட்சம் ரூ.6,460 வரை கிடைக்கும்
1 min
JUNE 06,2025
Viduthalai
முதலாளிகள்மீது கவனம் செலுத்தாமல் சாமானியருக்கான பொருளாதாரத்தை ஒன்றிய அரசு உருவாக்கவேண்டும்: ராகுல் காந்தி கருத்து
காங்கிரஸ் கட்சித் தலைவரும், மக்களவை எதிர்க்கட்சி தலைவருமான ராகுல் காந்தி 'எக்ஸ்' தளத்தில் ஒரு பதிவு வெளியிட்டார். அதில் அவர் கூறியதாவது:-
1 min
JUNE 06,2025
Viduthalai
தமிழ்நாட்டில் முதல்முறையாக செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்துடன் கழிவு மேலாண்மை ஊட்டி நகராட்சியில் செயல்படுத்த நடவடிக்கை
தமிழ்நாட்டில் முதன்முறையாக செயற்கை நுண்ணறிவு (ஏ.அய்.) தொழில்நுட்பத்துடன் கழிவு மேலாண்மை ஊட்டி நகராட்சியில் மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப் பட்டுள்ளது.
1 min
JUNE 06,2025
Viduthalai
சிறப்பு மிக்க தீர்ப்புகளை வழங்கிய சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஆர்.எம்.டி. டீக்காராமன் இன்று பணி ஓய்வு பெறுகிறார்
வயதான பெற்றோரை பராமரிக்காத பிள்ளைகளுக்கு பெற்றோர் எழுதி வைத்த தானபத்திரத்தை வருவாய் கோட்டாட்சியரே விசாரணை நடத்தி ரத்து செய்யலாம் என தீர்ப்பளித்த சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஆர்.எம்.டி. டீக்காராமன் இன்றுடன் பணி ஓய்வு பெறுகிறார்.
1 min
JUNE 06,2025
Viduthalai
தொடக்கப் பள்ளி ஆசிரியர்களுக்கான எண்ணும்—எழுத்தும் பயிற்சி ஜூன் ஒன்பதாம் தேதி தொடங்குகிறது
தொடக்கப் பள்ளி ஆசிரியர்களுக்கான எண்ணும் எழுத்தும் பயிற்சி, ஜூன் 9 முதல் 13-ஆம் தேதி வரை நடத்தப்பட உள்ளதாக பள்ளிக்கல்வித் துறை தெரிவித்துள்ளது.
1 min
JUNE 06,2025
Viduthalai
ரூ.1,538 கோடியில் ஓட்டுநர் இல்லாத 32 மெட்ரோ ரயில்களை தயாரிக்க ஒப்பந்தம்
சென்னை, ஜூன் 6 இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டத்தில் இயக்குவதற்காக, ரூ.1,538.35 கோடியில் தலா 3 பெட்டிகளை கொண்ட 32 ஓட்டுநர் இல்லாத மெட்ரோ ரயில்களை தயாரிப்பதற்கான ஒப்பந்தம் அல்ஸ்டோம் டிரான்ஸ்போர்ட் இந்தியா நிறுவனத்துக்கு சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் வழங்கி யுள்ளது.
1 min
JUNE 06,2025
Viduthalai
2027இல் மக்கள் தொகை கணக்கெடுப்பு — தென்மாநிலங்களுக்கு எதிரான சதி:
வரும் 2027 இல் மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்போவதாக ஒன்றிய அரசு அறிவித்து இருப்பது தென்மாநிலங்க ளுக்கு எதிரான சதி என்று மேனாள் ஒன்றிய நிதியமைச்சர் ப.சிதம்பரம் குற்றம் சாட்டியுள்ளார்.
1 min
JUNE 06,2025
Viduthalai
காவல்துறையின் அதிரடி செயல்பாடு தமிழ்நாடு முழுவதும் ஒரே நாளில் 136 சைபர் குற்றவாளிகள் கைது
இணையதளங்கள் வழியாக கவர்ச்சியான விளம்பரங்களை கொடுத்து, பொதுமக்களை ஏமாற்றி லட்சக்கணக்கிலும், கோடிக்கணக்கிலும் சைபர் குற்றவாளிகள் நூதனமான முறையில் கொள்ளை அடித்து வருகிறார்கள்.
1 min
JUNE 06,2025
Translate
Change font size
