कोशिश गोल्ड - मुक्त
323 கொள்கலன்கள் விடுவிக்கப்பட்டதில் எந்த அரசியல் தலையீடும் கிடையாது
Thinakkural Daily
|July 09, 2025
323 கொள்கலன்கள் விடுவிப்பில் எந்த அரசியல் தலையீடும் கிடையாது என மீண்டும் மறுத்துள்ள அரசு, சமூக வலைத்தளங்களில் பரிமாற்றப்படும் அறிக்கையையே பிரதி அமைச்சர் அனில் ஜயந்த பெர்னாண்டோ எதிர்க்கட்சி உறுப்பினர் சபைக்கு சமர்ப்பித்தார். ஜனாதிபதிக்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ள அறிக்கை வெகுவிரைவில் சபைக்கு சமர்ப்பிக்கப்படும் எனவும் அறிவித்தது.
பாராளுமன்றத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை 323 கொள்கலன்கள் விடுவிப்பு தொடர்பில் 2%/2 இன் கீழ் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச முன்வைத்த கேள்விகளுக்கு பொருளாதார அபிவிருத்தி திட்டமிடல் பிரதி அமைச்சர் அனில் ஜயந்த பெர்னாண்டோ பதிலளிக்கும்போதே இவ்வாறு தெரிவித்ததுடன் மேலும் கூறுகையில்,
கடந்த ஜனவரி மாதம் சுங்கத்தில் இருந்து கொள்கலன்களை விடுவிக்கும் போது ஏற்பட்ட நெரிசலுக்கு தீர்வு காண்பதற்கு சுங்கத் திணைக்களத்துக்கு தேவையான வசதிகள் நிதியமைச்சினால் ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டன. சுயாதீனமான முறையில் தீர்மானங்கள் எடுப்பதற்கு முழுமையாக அதிகாரமளிக்கப்பட்டது.
இவ்வாறான பின்னணியில் பரிசோதனைகள் ஏதுமின்றி சுங்கத்தில் இருந்து 323 கொள்கலன்கள் விடுவிக்கப்பட்டதாக எதிர்க்கட்சியினர் குற்றம்சாட்டுகின்றனர். இவ்விடயத்தின் உண்மையை ஆராய்வதற்கு 2025.01.30 ஆம் திகதியன்று ஜனாதிபதியின் பணிப்புக்கு அமைய நிதியமைச்சின் செயலாளர் ஐந்து உறுப்பினர்களை உள்ளடக்கிய வகையில் குழு ஒன்றை நியமித்தார்.
அரசியல் தலையீட்டுடன் இந்த 323 கொள்கலன்கள் பரிசோதனையின்றி விடுவிக்கப்பட்டுள்ளதாக எதிர்க்கட்சியினர் முன்வைக்கும் குற்றச்சாட்டை ஏற்க முடியாது. இந்த கொள்கலன்கள் விடுவிப்பில் ஏதேனும் முறைகேடுகள் இடம்பெற்றிருக்குமானால் அதற்குரிய நடவடிக்கைகளை உரிய முறையில் முன்னெடுப்போம்.
ஜனாதிபதியின் செயலாளரால் நியமிக்கப்பட்ட குழுவின் அறிக்கை ஜனாதிபதிக்கு கையளிக்கப்பட்டுள்ளது. சமூக வலைத்தளங்களில் பரிமாற்றப்படும் அறிக்கையின் பிரதியையே எதிர்க்கட்சியின் உறுப்பினர் சபைக்கு சமர்ப்பித்தார். ஆனால் நாங்கள் ஜனாதிபதிக்கு கையளித்த அறிக்கையை பாராளுமன்றத்துக்கு வெகுவிரைவில் சமர்ப்பிப்போம் என்றார்.
சோதனை இல்லாமல்.....
முன் பக்கத் தொடர்ச்சி
यह कहानी Thinakkural Daily के July 09, 2025 संस्करण से ली गई है।
हजारों चुनिंदा प्रीमियम कहानियों और 10,000 से अधिक पत्रिकाओं और समाचार पत्रों तक पहुंचने के लिए मैगज़्टर गोल्ड की सदस्यता लें।
क्या आप पहले से ही ग्राहक हैं? साइन इन करें
Thinakkural Daily से और कहानियाँ
Thinakkural Daily
கண்டி மாவட்ட சிறு, நடுத்தர தொழில்களுக்கு தேவையான புதிய திட்டங்கள் உருவாக்கப்படும்
அமைச்சர் சுனில் ஹந்துனெத்தி
1 min
October 14, 2025
Thinakkural Daily
எந்தவொரு மத்திய வங்கியாலும் பணவீக்கத்தைக்கட்டுப்படுத்த முடியாது
நவீன பொருளாதார வரலாறு பதிவு செய்யும் வரை, பணவீக்கத்திற்கு எதிரான போர் மத்திய வங்கிகளுக்கும் சந்தை சக்தி களுக்கும் இடையே ஒன்றாக விவரிக்கப்படு கிறது. கொள்கை வகுப்பாளர்கள், வட்டி வீ த உயர்வு, இருப்புநிலை சரிசெய்தல் மற்றும் பணப்புழக்கக் கட்டுப்பாடுகளுடன் ஆயுதம் ஏந் தியவர்களெனவும், நீண்ட காலமாக 'பணவீக் கத்தைக் கட்டுப்படுத்துபவர்கள்' என்று ம் சி த்தரிக்கப்படுகிறார்கள். 1980களில் பணவீக்கத் தைத் தணித்ததற்காக அமெரிக்காவில் உள்ள போல் வோல்க்கர் போன்ற ஆட்களை பிரப லமாக சொற்பொழிவுகள் அடிக்கடி எடுத் துக்காட்டுகின்றன. மேலும் பெடரல் ரிசர்வ், ஐரோப்பிய மத்திய வங்கி மற்றும் வளர்ந்து வரும் பொருளாதாரங்களில் மத்திய வங்கிக ளின் சமீபத்திய இறுக்கமான நடவடிக்கைக ளுடன் இரட்டை இலக்க விலை வளர்ச்சியைக் கட்டுப்படுத்தும் நோக்கில். இருப்பினும், இந்த கதை ஏமாற்றமளிக்கிறது. மத்திய வங்கிகள், பண நிலைமைகளை அமைப்பதில் அவற்றின் சக்திவாய்ந்த பங்கு இருந்தபோதிலும், உண்மை யில் பணவீக்கத்தைக் கட்டுப்படுத்தவில்லை. பணவீக்கம், அதன் வாழ்க்கை அனுபவத்தில், குடும்பங்களின் செயல்களால் கட்டுப்படுத்தப் படுகிறது, குறிப்பாக நிலையான - வருமா னக் குழுக்கள் செலவுகளைக் குறைக்கவும், நுகர்வுகளை சுருக்கவும் மற்றும் புதிய விலை உண்மைகளுக்கு ஏற்பவும் கட்டாயப்படுத்தப் படுகின்றன. காலப்போக்கில், இத்தகைய சரிசெய்தல் பழக்கமாக மாறுகிறது. பணவீக்க வித்தையால் மட்டும் பணவீக்கம் சரிவதில்லை. மாறாக சமுதாயம்-குறிப்பாக விலை நிர்ணயம் செய்யாதவர்கள் - தன் வாழ்க்கை முறையை பணவீக்கத்தின் எடைக்கு வளைப்பதால். கட் டுப்படுத்தப்படுகிறது
2 mins
October 14, 2025
Thinakkural Daily
காணி,வீடு இல்லாத, காது குத்தி கல்யாணம் நடத்தி அனுரவுக்கு அவரது மலையக அமைச்சர்களே காது குத்தி உள்ளார்கள்
மனோ கணேசன் எம்.பி.சாடுகிறார்
1 mins
October 14, 2025
Thinakkural Daily
பீபா அபிவிருத்திக் குழுவில் ஜஸ்வர் உமர்
சர்வதேச கால் பந் தாட்ட சம் மேளனங்களின் சங்கத்தின் (FIFA) அடிமட்ட மற்றும் ஆரம்பவியலாளர் கால் பந்தாட்ட அபிவிருத்தி குழு உறுப்பினராக இலங்கை கால் பந்தாட்ட சம்மேளனத் தலைவர் ஜஸ்வர் உமர் நியமிக்கப்பட் டுள்ளார். இது இலங்கைக்கு கிடைத்த பெருமையாகும்.
1 min
October 14, 2025
Thinakkural Daily
இலங்கைத் தேயிலைக்கு உலகளவில் தங்க விருது உழைத்த தொழிலாளர்களுக்கு என்ன விருது?
ஸ்ரீநேசன் எம்.பி. கேள்வி
1 min
October 14, 2025
Thinakkural Daily
கெமுனு போதிராஜ விகாரையின் அரச மரத்தினை சேதப்படுத்திய யானைகள்
வெல்லவாய பிரதேச செயலகப் பொலிஸ் பிரதேசத்துக்குட்பட்ட ஹந்தப்பானாகலை கெமுனு போதிராஜ விகாரையின் பாரிய அரச மரத்தினை காட்டு யானைகள் தாக்கி சேதப்படுத்தி உள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
1 min
October 14, 2025
Thinakkural Daily
மரண வீட்டுக்கு சென்ற முச்சக்கர வண்டி 50அடி பள்ளத்தில் கவிழ்ந்தது
இரத்தினபுரி காவத்தை பகுதியில் இருந்து தலவாக்கலை பகுதிக்கு சென்ற முச்சக்கர வண்டி ஒன்று ஹட்டன் பொகவந்தலாவ பிரதான வீதியின் நோர்வூட் பகுதியில் வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளாகியதாக நோர்வூட் பொலிஸார் தெரிவித்தனர். இந்தச் சம்பவம் ஞாயிற்றுக்கிழமை மாலை 4.30 மணியளவில் இடம் பெற்றதாக பொலிஸார் தெரிவித்தனர்.
1 min
October 14, 2025
Thinakkural Daily
எசட்லைன் ஃபினான்ஸ் தனது 60 ஆவது கிளையை ஜா-எலவில் திறந்து சேவை விஸ்தரிப்பு
டேவிட் பீரிஸ் ஹோல்டிங்ஸின் நிதிச் சேவைகள் பிரிவான எசட்லைன் ஃபினான்ஸ் லிமிடெட் பிஎல்சி (AFL), தனது விரிவாக்க செயற்பாடுகளில் முக்கியமான மைல்கல்லை அண்மையில் கொண்டாடியது. தனது 60ஆவது கிளையை ஜா-எலவில் திறந்துள்ளது. இலங்கையின் மக்களுக்கு இலகுவாக பெற்றுக் கொள்ளக்கூடிய நிதிச் சேவைகளை வாடிக்கையாளர்களை மையப்படுத்தி வழங்கும் நிறுவனத்தின் அர்ப்பணிப்பை மேலும் உறுதி செய்யும் வகையில் இந்தப் புதிய கிளை திறந்து வைக்கப்பட்டுள்ளது.
1 min
October 14, 2025
Thinakkural Daily
வீடமைப்பு அமைச்சு செயலராக குமுது லால் போகஹவத்த நியமனம்
வீடமைப்பு, நிர்மாணத்துறை மற்றும் நீர் வழங்கல் அமைச்சின் செயலாளராக பொறியியலாளர் எல். குமுது லால் போகஹவத்த நியமிக்கப்பட்டுள்ளார்.
1 min
October 14, 2025
Thinakkural Daily
2000 வீடுகள் அல்ல, 2000 காகித தாள்களை கையளிக்கும் விளம்பரம்
ஜீவன் தொண்டமான் கூறுகின்றார்
1 min
October 14, 2025
Translate
Change font size

