कोशिश गोल्ड - मुक्त

தமிழர் பெருமையைப் பறைசாற்றும் கீழடி!

Dinamani Virudhunagar

|

July 03, 2025

வரலாறுகள் அறியப்பட்டவரை சுமேரிய நாகரிகம்தான் நீண்ட மூத்தது என்று அறியப்பட்டது. இத்தகைய நாகரிகத்தின் தொடர் நீட்சியாக இதன் பண்பாடு, பழக்கவழக்கம், வழிபாட்டு முறைகளில் தமிழர் அடையாளங்களைக் கண்டறிந்ததாக மொழிவழியாகவும், நாகரிகத்தின் வழியாகவும் நிரூபிக்கப்பட்டது.

- முனைவர் வைகைச்செல்வன்

இந்திய வரலாற்றை இனிமேல் தெற்கில் இருந்து பார்க்க வேண்டும் என்கிற அளவுக்கு ஆதாரபூர்வமான வரலாற்றுத் தடயங்கள் நமக்குக் கிடைத்திருக்கின்றன. விந்திய மலைக்குக் கீழே வாழும் தக்காணப் பீடபூமியில் வாழ்பவர்கள் மிக உயர்ந்த நாகரிக வாழ்க்கைக்கு சொந்தக்காரர்கள் என்பதற்கான ஆதாரங்கள் கிடைத்துள்ளன. அந்த வகையில் உலகத்துக்கு அழுத்தமாக எடுத்துச் சொல்லப்படும் தொல்பொருள் ஆய்விடம்தான் கீழடி.

கீழடியில் கிடைத்த 6 கரிம மாதிரிகள் ஆக்சலரேட்டட் மாஸ் ஸ்பெக்ட்ரோமெட்ரி ஆய்வுக்காக, அமெரிக்காவின் ப்ளாரிடோவில் உள்ள பீட்டா அனலிடிகல் பரிசோதனைக்கூடத்துக்கு அனுப்பப்பட்டன. அதில் கிடைத்த முடிவுகளின்படி அந்தப் பொருள்கள் கி.மு மூன்றாம் நூற்றாண்டுக்கும், கி.மு. ஆறாம் நூற்றாண்டுக் கும் இடைப்பட்ட காலத்தைச் சேர்ந்தவை எனக் கண்டறியப்பட்டுள்ளது.

கீழடியில் 353 செ.மீ. ஆழத்தில் கிடைத்த பொருள் கி.மு. 580-ஆவது ஆண்டையும், 200 செ.மீ. ஆழத்தில் கிடைத்த பொருள் கி.மு. 205-ஆவது ஆண்டையும் சேர்ந்தவை என்று கண்டறியப்பட்டுள்ளன. இந்த இரு மட்டங்களுக்குக் கீழேயும், மேலேயும் பொருள்கள் இருப்பதால் கீழடியின் காலகட்டம் கி.மு. ஆறாம் நூற்றாண்டு முதல் கி.மு. ஒன்றாம் நூற்றாண்டு வரை என்று தொல்லியல் துறை முடிவுக்கு வந்துள்ளது.

இவற்றை அங்கீகரிக்கும் பொருட்டு, தொல் தாவரவியல், மூலக்கூறு உயிரியல், மக்கள் மரபியல், சுற்றுச்சூழல்தொல்லியல் மற்றும் மொழியியல் தொல்லியல் ஆகிய துறைகளின் வல்லுநர்களும் இவற்றை ஏற்றுக் கொண்டுள்ளனர்.

தமிழ்நாட்டைப் பொருத்தவரை வரலாற்றுக் காலம் என்பது கி.மு. மூன்றாம் நூற்றாண்டில் இருந்துதான் தொடங்குகிறது. ஆகவே, கங்கைச் சமவெளியில் நடந்ததைப் போல இரண்டாவது நகர நாகரிகம் இங்கு நிகழவில்லை என்று கருதப்பட்டு வந்தது.

ஆனால், கீழடியில் கிடைத்த பொருள்களை வைத்து கி.மு. ஆறாம் நூற்றாண்டிலேயே இரண்டாவது நகர நாகரிகம் தொடங்கியுள்ளது என்ற முடிவுக்கு தொல்லியல் துறை வந்துள்ளது. கங்கைச் சமவெளியிலும், இதே காலகட்டத்தில்தான் நகர நாகரிகம் உருவாகியுள்ளது.

கொடுமணல், அழகன்குளம் ஆகிய இடங்களில் கிடைத்த எழுத்தின் மாதிரிகளை வைத்து தமிழ் பிராமி எழுத்தின் காலம் கி.மு. மூன்றாம் நூற்றாண்டாகக் கருதப்பட்டது. ஆனால், தற்போது கீழடியில் கிடைத்த ஆய்வு முடிவுகளின்படி தமிழ் பிராமி கி.மு. ஆறாம் நூற்றாண்டைச் சேர்ந்ததாகக் கருதப்படுகிறது.

Dinamani Virudhunagar से और कहानियाँ

Dinamani Virudhunagar

Dinamani Virudhunagar

முதல் பெண்ணாக ஆசை

காஷ்மீரைச் சேர்ந்த பத்து வயதாகும் அதீகா மிர். 'ஃபார்முலா 1' (எஃப் 1) அகாதெமியின் 'டிஸ்கவர் யுவர் டிரைவ்' திட்டத்துக்கு உலகளவில் தேர்ந்தெடுக்கப்பட்ட மூன்று பெண்களில் ஒருவர், இதுவரை இப்படித் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களில் வயது குறைந்தவரும் இவர்தான்.

time to read

2 mins

November 02, 2025

Dinamani Virudhunagar

புறநானூற்றில் தந்தை-மகன் சண்டை

இலக்கியம் என்பது வாழ்வை எதிரொலிப்பதாகப் படைக்கப்படுவது! அதில் கற்பனை, உவமை, அணி இலக்கணங்கள் எல்லாம் சேரப் படைக்கப்படுங்கால் அவற்றை விஞ்சிய மனித வாழ்வின் பதிவே காலக்கண்ணாடியாக நவில்தொறும் நயப்பாடுடைய இறவாப் பதிவிறக்கமாக எப்போதும் ஒளிர்வதாகும்.

time to read

1 min

November 02, 2025

Dinamani Virudhunagar

தங்கம் பவுனுக்கு ரூ.80 உயர்வு

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சனிக்கிழமை பவுனுக்கு ரூ.80 உயர்ந்து ரூ.90,480-க்கு விற்பனையானது.

time to read

1 min

November 02, 2025

Dinamani Virudhunagar

நடமாடும் உயிர்க்காவலர்

எனது இருபத்தைந்து வயதில் உயிர்காக்கும் முதலுதவி சேவையைத் தொடங்கி, நாற்பது ஆண்டுகளாக இடைவிடாது இயங்கி வருகிறேன்\" என்கிறார் ஸ்ரீரங்கத்தைச் சேர்ந்த அறுபத்தைந்து வயதான டி. சீனிவாச பிரசாத்.

time to read

2 mins

November 02, 2025

Dinamani Virudhunagar

Dinamani Virudhunagar

கடல் கடந்தும் தமிழ்...

புதுக்கோட்டை மாவட்டத்தில் 1924-இல் பிறந்த முருகு. சுப்ரமணியம் 1950-களில் மலேசியாவுக்குச் சென்றார். மலேசியா, சிங்கப்பூரில் வெளியாகும் தமிழ் நாளிதழ்களில் ஆசிரியராகப் பணியாற்றிய இவர், கடல் கடந்து தமிழ் வளர்த்த பத்திரிகையாளர். இவரது குடும்பத்தினரது முன்னெடுப்பில், கண்ணதாசன் அறவாரியம், மலேசிய எழுத்தாளர் சங்கம் ஆகியன இணைந்து அவரது நூற்றாண்டு விழாவை மலேசியாவில் அண்மையில் கொண்டாடியது.

time to read

1 mins

November 02, 2025

Dinamani Virudhunagar

குருவின் கனவு நிறைவேற வேண்டும்: தருமபுரம் ஆதீனம்

'தருமபுரம் ஆதீனம் 26-ஆவது குருமகா சந்நிதானத்தின் கனவு நிறைவேற வேண்டும்' என தருமபுரம் ஆதீனம் 27-ஆவது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் குறிப்பிட்டார்.

time to read

1 mins

November 02, 2025

Dinamani Virudhunagar

ஊடல் கொள்ள நேரமில்லை!

சங்க இலக்கியங்கள் மனித வாழ்வின் அடையாளங்கள்; உயர் வாழ்வை உணர்த்தும் வழிகாட்டிகள். விருந்தோம்பல் உலகம் முழுவதற்குமான பொதுப் பண்புகளில் ஒன்று. ஆனால், தமிழ்நெறி 'இல்வாழ்வது என்பதே விருந்தோம்புவதற்கே' என்ற கொள்கையை உடையது. தமிழன் இல்வாழ்வு என்று கூறவில்லை. 'இல்லறம்' என்றான். இல்லத்திலிருந்து செய்யும் சீரிய அறம் தான் விருந்தோம்பல்.

time to read

2 mins

November 02, 2025

Dinamani Virudhunagar

கோமாரிக்கல்

கால்நடைகளின் காவலன்!

time to read

1 mins

November 02, 2025

Dinamani Virudhunagar

உள்ளாட்சி அமைப்புகளுக்கு அதிகாரப் பகிர்வை மறுக்கும் மாநிலங்கள்

பிரதமரின் பொருளாதார ஆலோசனைக் குழுத் தலைவர் கவலை

time to read

1 min

November 02, 2025

Dinamani Virudhunagar

கவனம் ஈர்த்த பயோபிக் சினிமாக்கள்!

'பயோபிக்' என்ற வார்த்தையைச் சொன்னதும் நம் நினைவுக்குச் சட்டென வருவது பாலிவுட்தான். அந்தளவிற்கு எண்ணில் அடங்காத அளவிற்கு பயோபிக் திரைப்படங்களை எடுத்து பாலிவுட் சோபிக்கவும் செய்திருக்கிறது. சோதிக்கவும் செய்திருக்கிறது. இந்திய சினிமாவிலேயே தொடர்ந்து அதிகமாக பயோபிக் திரைப்படங்கள் வருவது பாலிவுட்டில்தான்.

time to read

2 mins

November 02, 2025

Translate

Share

-
+

Change font size