कोशिश गोल्ड - मुक्त
டெஸ்ட்: சொந்த மண்ணில் சறுக்கும் இந்தியா
Dinamani Tirunelveli
|November 28, 2025
சொந்த மண்ணில் மீண்டும் ஒரு சறுக்கலைச் சந்தித்திருக்கிறது இந்திய அணி. தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடரை 0-2 என முழுமையாக இழந்து, கடுமையான விமர்சனங்களுக்கு உள்ளாகியிருக்கிறது.
25 ஆண்டுகளில் முதல் முறையாக, சொந்த மண்ணில் டெஸ்ட் தொடரை முழுமையாக (0-3) நியூஸிலாந்திடம் கடந்த ஆண்டு நவம்பரில் இழந்தது இந்தியா. சரியாக ஓராண்டிலேயே, மீண்டும் அதே போன்ற முழுமையான தோல்வியை தற்போது தென்னாப்பிரிக்காவிடம் சந்தித்திருக்கிறது. இந்தியா தனது மண்ணிலேயே ஒரு டெஸ்ட் தொடரை முழுமையாக இழந்தது இது 3-ஆவது முறை.
இந்தத் தொடரில் தென்னாப்பிரிக்கா வென்றது என்பதை விட, இந்தியா தானாகவே தோல்வியை நோக்கி சறுக்கியது என்றால் பொருத்தமாக இருக்கும். தொடரை முழுமையாக வெல்வோம் என எதிர்பார்க்கவில்லை என்று தென்னாப்பிரிக்க கேப்டன் பவுமா கூறும் அளவுக்கு, சவாலே இல்லாமல் தொடரை தென்னாப்பிரிக்காவுக்கு வாரிக் கொடுத்திருக்கிறது இந்திய அணி.
சர்வதேச களத்தில் சவால் மிக்கதாக இருக்கும் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து உள்பட எந்த அணியாக இருந்தாலும், இந்தியாவை அதன் மண்ணிலேயே டெஸ்ட் தொடரில் சந்திக்கும்போது தடுமாறிப் போனதுதான் வரலாறு. 'ஒயிட்வாஷ்' என்ற முழுமையான வெற்றி மூலமாக, அந்த அணிகளையுமே இந்தியா அடக்கியாண்டதுண்டு.
அவற்றில் எல்லாம் இந்தியாவின் பிரம்மாஸ்திரம், 'ரேங்க் டர்னர்கள்' எனப்படும் சுழற்பந்துவீச்சுக்கு சாதகமான ஆடுகளங்கள்தான். எனவே, சொந்த மண்ணில் இந்தியாவின் டெஸ்ட் வெற்றிகளில் சுழற்பந்துவீச்சாளர்கள் முக்கியமாக இருந்திருக்கின்றனர்.
தென்னாப்பிரிக்க தொடரில் நிகழ்ந்ததும் அதுதான். ஆனால், வெற்றியின் பக்கம் தென்னாப்பிரிக்காவும், அதைப் பெற்றுத் தந்தவர்களாக அதன் சுழற்பந்துவீச்சாளர்களும் இருந்ததுதான் வித்தியாசம். 'எதிரியின் ஆயுதத்தைக் கொண்டே திருப்பி அடிப்பது' என்பதை இந்தத் தொடரில் தென்னாப்பிரிக்கா செய்து காட்டிவிட்டது.
यह कहानी Dinamani Tirunelveli के November 28, 2025 संस्करण से ली गई है।
हजारों चुनिंदा प्रीमियम कहानियों और 10,000 से अधिक पत्रिकाओं और समाचार पत्रों तक पहुंचने के लिए मैगज़्टर गोल्ड की सदस्यता लें।
क्या आप पहले से ही ग्राहक हैं? साइन इन करें
Dinamani Tirunelveli से और कहानियाँ
Dinamani Tirunelveli
அசோக் லேலண்ட் விற்பனை 29% உயர்வு
இந்தியாவின் முன்னணி வாகன நிறுவனங்களில் ஒன்றான அசோக் லேலண்டின் மொத்த விற்பனை கடந்த நவம்பர் மாதத்தில் 29 சதவீதம் உயர்ந்துள்ளது.
1 min
December 02, 2025
Dinamani Tirunelveli
இடைவிடாத மழை: தத்தளிக்கும் சென்னை
4 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை
2 mins
December 02, 2025
Dinamani Tirunelveli
தமிழக அரசின் தில்லி சிறப்பு பிரதிநிதி வீட்டில் 87 பவுன் நகைகள் திருட்டு
தஞ்சாவூரில் தமிழக அரசின் தில்லி சிறப்பு பிரதிநிதியும், முன்னாள் மக்களவை திமுக உறுப்பினருமான ஏ.கே.எஸ். விஜயன் வீட்டில் பூட்டை உடைத்து 87 பவுன் நகைகளை மர்மநபர்கள் திருடிச் சென்றனர். இதுதொடர்பாக போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
1 min
December 02, 2025
Dinamani Tirunelveli
மெளனம் கலைக்கப்பட வேண்டும்!
விற்று, வாங்கும் பொருளாக வாக்கு மாறியபோது, எந்த அரசியல் கட்சியும், எந்தத் தலைவரும் கவலை கொள்ளவில்லை. ஆனால், இன்று வாக்கு திருட்டு என்றும் வாக்குப் பறிப்பு என்றும் முழக்கங்கள் அரசியல் களத்தில் ஓங்கி ஒலிக்கின்றன. இந்த முழக்கங்களால் அடுத்த தேர்தலில் கூடுதலாக தங்கள் கட்சிகளுக்கு வாக்குகளைப் பெறலாமே தவிர வாக்கைப் பாதுகாக்க முடியுமா என்பதுதான் பெரும் கேள்வி.
3 mins
December 02, 2025
Dinamani Tirunelveli
உச்சங்களைத் தொட்டும் சரிவில் முடிந்த பங்குச் சந்தை
நிதி மற்றும் எஃப்எம்சிஜி பங்குகளில் லாப நோக்க விற்பனை மற்றும் அந்நிய முதலீடுகள் வெளியேற்றம் காரணமாக, இந்திய பங்குச் சந்தைகள் திங்கள்கிழமை புதிய உச்சங்களை எட்டிய பிறகும் லேசான சரிவுடன் நிறைவடைந்தன.
1 min
December 02, 2025
Dinamani Tirunelveli
கேரள முதல்வருக்கு அமலாக்கத் துறை நோட்டீஸ்
கேரள உள்கட்டமைப்பு முதலீட்டு நிதி வாரியத்துக்கு (கேஐஐஎஃப்பி) மாநில அரசு கடன் பத்திரங்கள் மூலம் பெற்ற வெளிநாட்டு முதலீடுகளில் பண முறைகேடு நடந்ததாக கூறி, முதல்வர் பினராயி விஜயன், முன்னாள் அமைச்சர் தாமஸ் ஐசக் மற்றும் முதல்வரின் முதன்மைச் செயலர் கே.எம். ஆப்ரகாம் ஆகியோருக்கு அமலாக்கத் துறை நோட்டீஸ் அனுப்பியது.
1 min
December 02, 2025
Dinamani Tirunelveli
நமீபியாவை பந்தாடிய இந்திய மகளிர் அணி
ஜூனியர் மகளிர் உலகக் கோப்பை ஹாக்கி போட்டியில் இந்தியா தனது முதல் ஆட்டத்தில் 13-0 கோல் கணக்கில் நமீபியாவை திங்கள்கிழமை அபார வெற்றி கண்டது.
1 min
December 02, 2025
Dinamani Tirunelveli
இரு தரப்புக்கும் பொதுவாக செயல்பட வேண்டும்
மாநிலங்களவைத் தலைவரிடம் கார்கே வலியுறுத்தல்
1 min
December 02, 2025
Dinamani Tirunelveli
எச்ஐவி தொற்று இல்லாத நிலையை உருவாக்குவோம்
நிலையை உருவாக்க உறுதியேற்போம் என முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
1 mins
December 01, 2025
Dinamani Tirunelveli
சபரிமலை தங்க மோசடி வழக்கு: கோயிலில் தந்திரியிடம் மீண்டும் விசாரணை
சபரிமலையில் தங்கம் மாயமான வழக்கில், கோயில் தந்திரி கண்டரரு மகேஷ் மோகனருவிடம் மீண்டும் விசாரணை நடத்தி, அவரின் வாக்கு மூலத்தை சிறப்புப் புலனாய்வுக் குழு (எஸ்ஐடி) அதிகாரிகள் பதிவு செய்துள்ளனர்.
1 min
December 01, 2025
Listen
Translate
Change font size

