कोशिश गोल्ड - मुक्त

போர் அல்ல; எச்சரிக்கை!

Dinamani Ramanathapuram & Sivagangai

|

May 16, 2025

பாகிஸ்தானுக்கு எதிரான தாக்குதலை போர் என்று இந்தியா எந்த இடத்திலும் சொல்லவில்லை. துல்லியமான இந்த தாக்குதல்கள் போர் என்றால் எப்படி இருக்கும் என்பதை ஊகித்துக் கொள்ள பயங்கரவாதச் செயல்களில் ஈடுபடுவோருக்கும் அதை ஆதரிப்போருக்குமான எச்சரிக்கை மட்டுமே.

- கட்டுரையாளர்: ஊடகவியலாளர்.

நரேந்திர மோடி நாட்டு மக்களுக்கு அண்மையில் (மே 12) உரை யாற்றும்போது ஆபரேஷன் சிந்தூர் பாரதத்தின் தாய்மார்களுக்கும் சகோதரிகளுக்கும் மகள்களுக்கும் அர்ப்பணம் என்று தேசத்தின் பெண்களுக்கு சமர்ப்பித்தார். பாரதத்தில் பெண்கள் போற்றுதலுக்கு உரியவர்கள், அவர்களுக்கான நீதியைப் பெற்றுத்தருவதில் எந்த சமரசமும் இல்லை என்பதை மீண்டும் நிரூபித்திருக்கிறது தேசம். 'ஆபரேஷன் சிந்தூர்' என்பது நாட்டின் பல கோடி மக்களின் ஒருமித்த சிந்தனையின் பிரதிபலிப்பு. நியாயத்தை நிலைநாட்டுவதற்கான சபதம்.

குடும்பத்தினருடன் காஷ்மீரில் உள்ள பஹல்காமுக்கு சுற்றுலா சென்றவர்களைக் குறிவைத்து ஏப்ரல் 22-இல் பயங்கரவாதத் தாக்குதல் நடத்தப்பட்டது. குடும்பப் பெண்களின் கண்ணெதிரில் அவர்களது கணவர்கள் கொல்லப்பட்டனர். பாகிஸ்தான் ஆதரவு பெற்ற லஷ்கர்-ஏ-தொய்பா பயங்கரவாத அமைப்பின் துணை அமைப்பான 'தி ரெசிஸ்டன்ஸ் ஃப்ரன்ட்' பஹல்காமில் இந்தக் கொடூரத்தைச் செய்தது.

பயங்கரவாதிகள் மீது நடவடிக்கை எடுக்குமாறு பாகிஸ்தானை இந்தியா வலியுறுத்தியபோதும் ஏதும் பயனில்லை. பொறுமையாய் தனது ராஜீய நகர்வுகளைச் செய்து கொண்டிருந்த இந்தியா 'ஆபரேஷன் சிந்தூர்' என்ற தாக்குதல் நடவடிக்கையை திட்டமிட்டது.

கடந்த மே 7-ஆம் தேதி அதிகாலை இந்தத் தாக்குதல் வெற்றிகரமாக நிகழ்த்தப்பட்டது. இறந்தவர்களின் ஆன்மா பதினாறாம் நாள் மோட்சம் அடையும் என்பது இந்தியர்களின் நம்பிக்கை. அந்த நாளில் இந்தத் தாக்குதல் இறந்தவர்களுக்கான அஞ்சலியாகவும் கணவரை இழந்த பெண்களுக்கான ஆறுதலாகவும் அமைந்தது.

மே 7-ஆம் நாள் அதிகாலை பாகிஸ்தானுக்குள் ஊடுருவிய இந்தியப் போர் விமானங்கள் 25 நிமிஷங்களில் பஹவல்பூர், முஸாஃபர்பாத், முரித்கே, சியால்கோட், கோட்லி, பர்னாலா ஆகிய 6 இடங்களில் இருந்த 9 பயங்கரவாதிகளின் பயிற்சி மையங்களை 24 ஏவுகணைகளைப் பயன்படுத்தி அழித்தன.

'ஆபரேஷன் சிந்தூர்' தாக்குதலில் சுமார் 100 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். பொதுமக்களுக்கு எந்த இடையூறும் இல்லை. பாகிஸ்தான் ராணுவத்துடனும் எந்த மோதலும் இல்லை.

Dinamani Ramanathapuram & Sivagangai से और कहानियाँ

Dinamani Ramanathapuram & Sivagangai

படகுகள் மீதான அமெரிக்க தாக்குதல் சட்டவிரோத படுகொலை: ஐ.நா.

தங்கள் நாட்டுக்குள் போதைப் பொருள்களை ஏற்றிவருவதாகக் கூறி, கரீபியன் தென் அமெரிக்க பகுதிகளில் இருந்து கரீபியன் மற்றும் பசிபிக் கடல் வழியாக வரும் படகுகள் (படம்) மீது அமெரிக்கா தாக்குதல் நடத்துவது சட்டவிரோத மனிதப் படுகொலைகள் என்று ஐ.நா. கண்டனம் தெரிவித்துள்ளது.

time to read

1 min

November 01, 2025

Dinamani Ramanathapuram & Sivagangai

எண்ம வியூகம்!

அடுக்கு மொழிகள், அலங்கார மேடைகள், வானுயர்ந்த கட்-அவுட்கள், வகை வகையான வண்ணச் சுவரொட்டிகள் இவை யாவும் பழைய அரசியல் களத்தின் சிதைந்த எச்சங்கள். இப்போதோ இணைய வழியில் சமூக ஊடகங்களே நவீன அரசியலின் புதிய சிம்மாசனமாக மாறியுள்ளன. அதிலும் குறிப்பாக, தனி மனிதனின் அறிதிறன்பேசியே இன்றைய அரசியல் போர்க்களத்தின் அதிமுக்கிய ஆயுதம்.

time to read

2 mins

November 01, 2025

Dinamani Ramanathapuram & Sivagangai

அன்புள்ள ஆசிரியருக்கு...

கட்டுப்பாடு வேண்டும்

time to read

1 min

November 01, 2025

Dinamani Ramanathapuram & Sivagangai

Dinamani Ramanathapuram & Sivagangai

‘நெடுந்தொடர்’ பரிதாபங்கள்!

உண்மையில் நெடுந்தொடரில் வில்லத்தனம் புரியும் சின்னத்திரை நடிகர், நடிகைகளும் அதன் பார்வையாளர்களுமாக எதிரெதிரே அமர்ந்து விவாதிக்கும் ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியைக் காண நேர்ந்தது. நிகழ்ச்சியின் கருப்பொருள் சாதாரணமானதாக இருந்தாலும் எளிய மக்களின் வார்த்தைகள் அந்த நிகழ்ச்சிக்கு மிகவும் வலிமையாக இருந்தன. ஒரு கட்டத்தில் தாம் பார்க்கும் நெடுந்தொடர் வில்லிகளைப் பார்த்து எதிரே இருந்த பார்வையாளர்கள் ஆவேசமாகக் கேள்வி கேட்டுக் கொண்டே இருந்தார்கள்.

time to read

3 mins

November 01, 2025

Dinamani Ramanathapuram & Sivagangai

இரண்டாவது நாளாக பங்குச் சந்தை சரிவு

சர்வதேச மற்றும் உள்நாட்டு சந்தைகளில் நிலவிய பலவீனமான போக்கு காரணமாக, இந்திய பங்குச் சந்தைகள் தொடர்ந்து இரண்டாவது நாளாக வெள்ளிக்கிழமை சரிவைக் கண்டன.

time to read

1 min

November 01, 2025

Dinamani Ramanathapuram & Sivagangai

யுபிஐ சர்க்கிள்: அமேஸானின் புதிய வசதிகள்

தனது பணப்பட்டுவாடா செயலி மூலம் குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுக்கு உடனடியாக பணம் அனுப்புவதற்கான யுபிஐ சர்க்கிள் முறையில் புதிய வசதிகளை அமேஸான் அறிமுகப்படுத்தியுள்ளது.

time to read

1 min

November 01, 2025

Dinamani Ramanathapuram & Sivagangai

Dinamani Ramanathapuram & Sivagangai

செங்கோட்டையன் மீது நடவடிக்கை எடுக்கத் தயக்கம் இல்லை

முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் மீது நடவடிக்கை எடுக்க எந்தவிதத் தயக்கமும் இல்லை என அதிமுக பொதுச் செயலர் எடப்பாடி கே. பழனிசாமி தெரிவித்தார்.

time to read

1 min

October 31, 2025

Dinamani Ramanathapuram & Sivagangai

சீன பொருள்களுக்கு 10% வரி குறைப்பு

ஷி ஜின்பிங்கை சந்தித்த பிறகு டிரம்ப் அறிவிப்பு

time to read

1 mins

October 31, 2025

Dinamani Ramanathapuram & Sivagangai

தெலங்கானா அமைச்சராகிறார் அசாருதீன்

தெலங்கானா மாநில அமைச்சராக இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் முகமது அசாருதீன் வெள்ளிக்கிழமை பதவியேற்கவுள்ளதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

time to read

1 min

October 31, 2025

Dinamani Ramanathapuram & Sivagangai

கடன் பிரச்னை தீர்க்கும் தலம்!

பொதுவாக சிவாலயங்களை தரிசிப்பவர்கள் சிவலோகம் போல இருக்கிறது என்று மகிழ்வுடன் கூறுவது இயல்பு. உண்மையிலேயே அப்படிப்பட்ட சிவலோகத்தை தரிசித்து புண்ணியம் பெற வேண்டுபவர்கள் அவசியம் செல்லவேண்டிய தலம், மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள திருமால்குடி. திருக்கடையூர் ஆயுள்நலன் பிரார்த்தனைக்காகச் செல்பவர்கள் அருகிலேயே உள்ள இந்த சிவலோகநாதரை தரிசிக்கக் கூடுதல் பலன் கிடைத்திடும் என்பது பலரும் அறிந்திராத ஒன்று.

time to read

1 mins

October 31, 2025

Translate

Share

-
+

Change font size