कोशिश गोल्ड - मुक्त
வாட்ஸ் கரையைப் பாதுகாப்போம்!
Dinamani Ramanathapuram & Sivagangai
|April 12, 2025
கோடிக்கணக்கான மக்கள் தங்களுடைய வாழ்வாதாரத்துக்கு இந்த வாட்ஸ் கரையையே சார்ந்திருக்கின்றனர். இந்தப் பகுதியில் எண்ணெய் மற்றும் எரிவாயுவை அகழ்ந்தெடுப்பது கார்ப்பரேட்டுகளுக்கு வேண்டுமானால் செழிப்பைக் கொடுக்கலாம்; ஆனால், சாதாரண மக்களுக்கு அது அழிவையே தரும்.
‘கரை’ என்ற சொல் புவியியலின் பல்வேறு துறைகளில் உள்ள பல்வேறு கட்டமைப்புகளைக் குறிக்கிறது. எடுத்துக்காட்டாக, லிம்னாலஜியில் (உள்நாட்டு நீர் பற்றிய ஆய்வு), கரை என்பது ஒரு நீரோடை அல்லது நதியின் படுகையை ஒட்டிய நிலப்பரப்பைக் குறிக்கிறது. நன்னீர் சூழலியலில், கரை என்பது கரையோர வாழ்விடங்களின் இருப்பிடத்தைக் குறிக்கிறது. கடற்பயணத்தில் இந்த சொல் ஒரு தடைத் தீவை அல்லது நீரில் மூழ்கியிருக்கும் பீடபூமியைக் குறிக்கிறது.
தடைத் தீவு என்பது மணலால் ஆன ஒரு நீண்ட குறுகிய தீவு. இது கடற்காயல் மற்றும் கடலுக்கு இடையில் ஒரு தடையை உருவாக்குகிறது. நீரில் மூழ்கிய பீடபூமி என்பது 200 மீட்டருக்கும் குறைவான ஆழத்தில் கடல் தளத்தில் அமைந்திருக்கும் தட்டையான மேட்டுப் பகுதி. கடலுக்குள் அமைந்திருக்கும் மலையின் உச்சி போன்ற பகுதி, அதைச் சுற்றியுள்ள பகுதியுடன் ஒப்பிடும்போது ஆழமற்ற கடற்பரப்பாகத் தோன்றும், இதைக் கடல் திட்டு என்றழைக்கிறோம்.
இப்படியாக, கரை என்பது மணல் மற்றும் பிற ஒருங்கிணைக்கப்படாத பொருள்களைக் கொண்ட, நீரில் மூழ்கிய முகடு, அல்லது கரை அல்லது பட்டை ஆகும். ஒரு நீர்நிலையின் படுகையிலிருந்து உயர்ந்து மேற்பரப்புக்கு அருகில் அல்லது அதற்கு மேலே நிற்கும் பகுதியைத்தான் கரை என்கிறோம்.
சுருக்கமாகச் சொல்வதென்றால், கரை என்பது நீருக்கடியில் உள்ள ஒரு நிலப்பரப்பு. இதை ஊட்டச்சத்து நிறைந்த நீரோட்டங்கள் தொடர்ந்து தழுவும் போது, அது ஒரு வளமான மீன்பிடிப் பகுதியாக மாறும். உலகில் இம்மாதிரியான இருபதுக்கும் மேற்பட்ட பெரிய கரைகள் உள்ளன. அவற்றில் நியூஃபவுண்ட்லேண்டின் கிராண்ட் பேங்க்ஸ் (2,80,000 சதுர கி.மீ.), அகுல்ஹாஸ் பேங்க் (1,16,000 சதுர கி.மீ.), டோகர் பேங்க் (17,600 சதுர கி.மீ.), கிளீவர் பேங்க் (1,235 சதுர கி.மீ.) போன்றவை குறிப்பிடத்தக்கவையாகும்.
டோகர் பேங்க் என்பது பிரிட்டனின் கிழக்கு கடற்கரையிலிருந்து சுமார் 100 கிலோமீட்டர் (55 கடல் மைல்) தொலைவில் வட கடலின் ஆழமற்ற பகுதியில் உள்ள ஒரு பெரிய மணல் திட்டாகும். இது காட் எனப்படும் பண்ணா மீன்களைப் பிடிக்கப் பயன்படுத்தப்பட்ட டச்சு மீன்பிடிப் படகுகளான ‘டாக்கர்ஸ்’ நினைவாகப் பெயரிடப்பட்டிருக்கிறது.
यह कहानी Dinamani Ramanathapuram & Sivagangai के April 12, 2025 संस्करण से ली गई है।
हजारों चुनिंदा प्रीमियम कहानियों और 10,000 से अधिक पत्रिकाओं और समाचार पत्रों तक पहुंचने के लिए मैगज़्टर गोल्ड की सदस्यता लें।
क्या आप पहले से ही ग्राहक हैं? साइन इन करें
Dinamani Ramanathapuram & Sivagangai से और कहानियाँ
Dinamani Ramanathapuram & Sivagangai
படகுகள் மீதான அமெரிக்க தாக்குதல் சட்டவிரோத படுகொலை: ஐ.நா.
தங்கள் நாட்டுக்குள் போதைப் பொருள்களை ஏற்றிவருவதாகக் கூறி, கரீபியன் தென் அமெரிக்க பகுதிகளில் இருந்து கரீபியன் மற்றும் பசிபிக் கடல் வழியாக வரும் படகுகள் (படம்) மீது அமெரிக்கா தாக்குதல் நடத்துவது சட்டவிரோத மனிதப் படுகொலைகள் என்று ஐ.நா. கண்டனம் தெரிவித்துள்ளது.
1 min
November 01, 2025
Dinamani Ramanathapuram & Sivagangai
எண்ம வியூகம்!
அடுக்கு மொழிகள், அலங்கார மேடைகள், வானுயர்ந்த கட்-அவுட்கள், வகை வகையான வண்ணச் சுவரொட்டிகள் இவை யாவும் பழைய அரசியல் களத்தின் சிதைந்த எச்சங்கள். இப்போதோ இணைய வழியில் சமூக ஊடகங்களே நவீன அரசியலின் புதிய சிம்மாசனமாக மாறியுள்ளன. அதிலும் குறிப்பாக, தனி மனிதனின் அறிதிறன்பேசியே இன்றைய அரசியல் போர்க்களத்தின் அதிமுக்கிய ஆயுதம்.
2 mins
November 01, 2025
Dinamani Ramanathapuram & Sivagangai
அன்புள்ள ஆசிரியருக்கு...
கட்டுப்பாடு வேண்டும்
1 min
November 01, 2025
Dinamani Ramanathapuram & Sivagangai
‘நெடுந்தொடர்’ பரிதாபங்கள்!
உண்மையில் நெடுந்தொடரில் வில்லத்தனம் புரியும் சின்னத்திரை நடிகர், நடிகைகளும் அதன் பார்வையாளர்களுமாக எதிரெதிரே அமர்ந்து விவாதிக்கும் ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியைக் காண நேர்ந்தது. நிகழ்ச்சியின் கருப்பொருள் சாதாரணமானதாக இருந்தாலும் எளிய மக்களின் வார்த்தைகள் அந்த நிகழ்ச்சிக்கு மிகவும் வலிமையாக இருந்தன. ஒரு கட்டத்தில் தாம் பார்க்கும் நெடுந்தொடர் வில்லிகளைப் பார்த்து எதிரே இருந்த பார்வையாளர்கள் ஆவேசமாகக் கேள்வி கேட்டுக் கொண்டே இருந்தார்கள்.
3 mins
November 01, 2025
Dinamani Ramanathapuram & Sivagangai
இரண்டாவது நாளாக பங்குச் சந்தை சரிவு
சர்வதேச மற்றும் உள்நாட்டு சந்தைகளில் நிலவிய பலவீனமான போக்கு காரணமாக, இந்திய பங்குச் சந்தைகள் தொடர்ந்து இரண்டாவது நாளாக வெள்ளிக்கிழமை சரிவைக் கண்டன.
1 min
November 01, 2025
Dinamani Ramanathapuram & Sivagangai
யுபிஐ சர்க்கிள்: அமேஸானின் புதிய வசதிகள்
தனது பணப்பட்டுவாடா செயலி மூலம் குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுக்கு உடனடியாக பணம் அனுப்புவதற்கான யுபிஐ சர்க்கிள் முறையில் புதிய வசதிகளை அமேஸான் அறிமுகப்படுத்தியுள்ளது.
1 min
November 01, 2025
Dinamani Ramanathapuram & Sivagangai
செங்கோட்டையன் மீது நடவடிக்கை எடுக்கத் தயக்கம் இல்லை
முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் மீது நடவடிக்கை எடுக்க எந்தவிதத் தயக்கமும் இல்லை என அதிமுக பொதுச் செயலர் எடப்பாடி கே. பழனிசாமி தெரிவித்தார்.
1 min
October 31, 2025
Dinamani Ramanathapuram & Sivagangai
சீன பொருள்களுக்கு 10% வரி குறைப்பு
ஷி ஜின்பிங்கை சந்தித்த பிறகு டிரம்ப் அறிவிப்பு
1 mins
October 31, 2025
Dinamani Ramanathapuram & Sivagangai
தெலங்கானா அமைச்சராகிறார் அசாருதீன்
தெலங்கானா மாநில அமைச்சராக இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் முகமது அசாருதீன் வெள்ளிக்கிழமை பதவியேற்கவுள்ளதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
1 min
October 31, 2025
Dinamani Ramanathapuram & Sivagangai
கடன் பிரச்னை தீர்க்கும் தலம்!
பொதுவாக சிவாலயங்களை தரிசிப்பவர்கள் சிவலோகம் போல இருக்கிறது என்று மகிழ்வுடன் கூறுவது இயல்பு. உண்மையிலேயே அப்படிப்பட்ட சிவலோகத்தை தரிசித்து புண்ணியம் பெற வேண்டுபவர்கள் அவசியம் செல்லவேண்டிய தலம், மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள திருமால்குடி. திருக்கடையூர் ஆயுள்நலன் பிரார்த்தனைக்காகச் செல்பவர்கள் அருகிலேயே உள்ள இந்த சிவலோகநாதரை தரிசிக்கக் கூடுதல் பலன் கிடைத்திடும் என்பது பலரும் அறிந்திராத ஒன்று.
1 mins
October 31, 2025
Translate
Change font size
